Total Pageviews

Monday, March 12, 2007

மழை

(இன்று எங்கள் ஊரில், மதியம் அடைமழை பெய்தது. அலுவலகத்தின் ஜன்னலோரம் மழையை எட்டி பார்த்துகொண்டிருந்த எனக்குள், வைரமுத்து வந்துவிட்டார்.)

வானின் மழை
தண்ணீர் பந்தல்

காதல் மழை
ஆயிரம் முத்தம்

அன்பின் மழை
கண்ணீர் துளிகள்

அறிவின் மழை
ஆன்றோர் சொற்கள்

கற்பனை மழை
காதல் கவிதை

விற்பனை மழை
தள்ளுபடி திருவிழா

கவிதைகள் மழை
இலக்கியப் படைப்பு

அழகின் மழை
குழந்தையின் சிரிப்பு

அரசியல் மழை
தேர்தல் வாக்கு

மரங்களின் மழை
இலையுதிர் காலம்.

Wednesday, March 07, 2007

பருத்திவீரன்

வெகுநாட்களுக்கு பிறகு ஒரு மண் வாசனை மணக்க ஒரு கிராமத்துப்படம். கிழக்குச்சீமையிலேக்கு பிறகு நேட்டிவிட்டியுடன் வந்திருக்கும் படம். சூர்யா தம்பி கொடுத்து வைத்தவர், சூர்யாவுக்கு பத்துப்படம் பிறகு நந்தாவில் வந்த வாய்ப்பு இவருக்கு முதல் படத்திலேயே நடிப்பதற்கு கிடைத்திருக்கிறது. கதாப்பாத்திரப்படைப்பு தான் படத்திற்கு பலமே. கார்த்தியும் சரவனனும் அடிக்கும் லந்துகள், கவுண்டர் சத்யராஜுக்கு பிறகு திரையில் பார்க்க முடிகிறது. அதிலும் ஜெயிலுக்கு போய் வந்து ஒரு நாட்டுப்புற கலைஞர்களுடன் அவர்கள் அடிக்கும் லூட்டி, முள்ளும் மலரும் படத்தில் தலைவர் குடித்துவிட்டு நாதஸ்வர கோஷ்டியை வாசிக்கி சொல்லி அடம்பிடிக்கும் காட்சியை ஞாபகப்படுத்துகிறது. சாதாரண ஒரு கதையை, காதல் படம் போல் காட்சியமைப்புகளாலும், பாத்திரப்படைப்புகளாலும் மெருகேற்றி, அருமையான ஒரு படமாய் தந்திருக்கிறார் அமீர்.