மீண்டும் நான் பதிவு செய்ய வந்திருக்கிறேன்.என் கடைசி வலைப்பதிவு 2007 செப்டம்பரில், ஏன் இவ்வளவு இடைவெளி? பதில் ரொம்ப சுலபம். செப்டம்பர் அடுத்து அக்டோபரில் தான் "என்ன என்ன்...தேடி வந்த அஞ்சலயை".. "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்". அக்டோபரில் ஆரம்பித்த உறவு நவம்பர் 15ல் நிச்சயமாகி உறுதியாச்சு..பிறகு அடுத்த ஆறுமாதம் இமெயில், SMS,web chat, voice chat, twitter, orkut, அவரைக்காய்..என்ன இன்னபிற இத்தியாதிகளால் இரவு பகல் பாராமல், இரவு எது பகல் எது என்று தெரியாமல் கழிந்தது. "மே மாதம் 2008ல்" மேஜர் ஆனேனோ இல்லையோ, பேஜாராய் மாப்பிள்ளையானேன். கல்யாணம் ஆகி பிறகு இல்லறம் வளர்க்க, நல்ல நேரமெல்லாம் செலவாயிற்று..."அப்புறம் எப்படி இப்ப blog எழுத வந்திருக்கே"ன்னு நீங்க கேட்டா..."வாழ்க்கை ஒரு வட்டம்"ம்னு தான் என்னால சொல்ல முடியும்..ஹிஹி..
Anyway, இந்த இடைப்பட்ட காலத்தில் மேற்சொன்ன விஷயங்களை தவிர, பல விஷயங்களும் நடந்தது...என் வேலையைவிட்டு..மீண்டும் இருந்த இடத்துக்கே வந்துவிட்டேன்...குளிர் கொளுத்துற (அட நல்லாயிருக்கே..)..wisconsin வந்தாச்சு.., அமேரிக்க தேர்தல் முடிஞ்சாச்சு, பொருளாதாரம் பொருள் அற்ற ஆதாரமாச்சு...நிறைய நடந்தாச்சு. சரி, இனிமே கொஞ்சம் வலைப்போம்னு..முடிவுக்கு வந்துட்டேன்...ஏன்னா என் கற்பனைக் குதிர லொள்ளு தாங்க முடியல.."எப்படா என்ன வெளிய விடுவே"ன்னு மிரட்ட ஆரம்பிச்சிடுச்சு..சரி என்ன எழுதலாம்?...என்ன எழுதினாலும் கொஞ்சம் சுவாரஸ்யமா எழுதலாம்னு முடிவுக்கு வந்துட்டேன்..officialஆ என்னோட வலைப்பதிவு பெயர மாத்திட்டேன்..நம்ம taglineஏ வலைப்படிவு பெயரா வச்சிட்டேன்...பார்க்கலாம்