இன்று ABCD என்று சமீபத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம் பார்த்தேன். எப்படி இந்த டைட்டிலை தமிழ் காப்பாற்றும், துடைப்பமும் செருப்பும் எடுப்பவர்கள் விட்டு வைத்தார்களோ. எப்படியோ நீண்ட நாளைக்கு பிறகு எழுபதுகளில் வெளியான பாலச்சந்தர் படத்தை கலரில் பார்த்தது போல் இருந்தது (store outline பாலச்சந்தரின் சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தை ஞாபகம் படுத்துகிறது). A for anand வேலைத் தேடும் ஒரு ரொம்பவே நல்ல ஹீரோ. B for bharathi 'அவள் ஒரு தொடர்கதை' சுஜாதாவை போல் நடுத்தர குடும்பத்துகாகவே பாடுபடும் ரொம்பவே ஆக்ரஷமான ஹீரோயின் நம்பர் 1. C for chandra வக்கிர புத்தி கொண்ட, கனவனை இழந்த ஒரு விதவை, ஹீரோயின் நம்பர் 2. D for Daisy அனாதை + churchஇல் வளர்ந்த யதார்த்தமான பெண், ஹீரோயின் நம்பர் 3. இவர்கள் நால்வரை சுற்றி நகர்கிறது கதை. எல்லோரும் யூகித்தபடியே மூன்று ஹீரோயின்களும் கதாநாயகன் ஆனந்தை காதலிக்கிறார்கள். வழக்கமான தமிழ் படத்தில் வரும் கண்டதும் காதல் போல் இல்லாமல், எல்லோரும் காதல் வசப்படும் சந்தர்ப்பத்தை விவரிக்கும் யதார்த்தமான காட்சியமைப்புக்கு ஒரு ஜே. இந்த நால்வரின் பின்னனியும் கதாபாத்திரத்தையும் விளக்கி இந்த கதாபாத்திரங்களின் குணாதிசியங்களை வைத்து காட்சி அமைத்தது நல்லதொரு screenplay முயற்சி. மூன்று பேரில் முடிவில் ஹீரோ யாரை கைப்பிடிக்கிறார் என்பதே கதை. முடிவு நாம் நினைப்பது போல் இருந்தாலும், அதை சொல்லிய விதமும் அருமை. எல்லோரும் அவரவர் சொந்த குரலில் பேசியது, யதார்த்த தன்மைக்கு மேலும் வளம் சேர்க்கிறது. இவ்வளவு நல்லது இருந்தும் படத்திற்கு ஒரே திருஷ்டி, படத்தின் இசை. இயல்பாகவே பின்னனி இசைக்கு scope உள்ள திரைக்கதை, ஆனால் இசை அமைக்க தினறியிருக்கிறார் இசையமைப்பாளர். ராஜாவிடம் கொடுத்து இருந்தால் பிய்த்து உதறியிருப்பார். படத்தின் நடுவே தேவை இல்லாமல் தினிக்கப்படும் பாடல்கள் ஆவ்... 'மஞ்சள் முகம்' என்னும் பாடல் தேவலாம். படத்தோடு ஒட்டாமல் இருந்தாலும் வடிவேலுவின் காமெடி ட்ராக் கலக்கல். வர வர வைகைப்புயல் graph ஏறிக்கொண்டே போகிறது. அதிரடி மசாலா படங்களின் ஆக்ரமிப்பில் இப்படியொரு படம் பூப்பது அதிசயமே.
சன் டிவியின் ஸ்டைலில் சொன்னால் "ABCD, கண்டிப்பாய் வாசிக்கலாம்".
Total Pageviews
Wednesday, November 30, 2005
Friday, November 25, 2005
நீ பெரியவனா ஆனா...(சிறுகதை)
ரகுபதி - வயது 6 மணி நேரம்..
ரகுபதி பிறந்து அழுத களைப்பில் சுவாமிநாதன் கையில் கிடந்தான். சோர்வு இருந்தாலும், கண்ணில்
ஈன்ற பெருமை தெரிய அருகில் மீனாட்சி. டாக்சியில் ஏறியவுடன் மீண்டும் ரகுபதியின் பிஞ்சு முகத்தை ஒருமுறை பார்த்தான் சுவாமிநாதன்.
"என் ராசா....நான் தவங்கிடந்து பெத்து எடுத்த தங்கமே....எங்க அப்பன போலவே ராஜகள...நீ வேனாம்
பாரேன் மீனாட்சி என் மவன் பெரியவனா ஆனதும் இந்த சீமையே கட்டி ஆளப் போறான்"
உடனே ஒரு வறட்சியான சிரிப்பு சத்தம் முன்னிருந்து கேட்டது. சுவாமிநாதனும் மீனாட்சியும் நிமிர்ந்து பார்க்க ரியர் வியூ மிரரில் டாக்சி ட்ரைவர் இவர்களை பார்த்து
சிரித்துக் கொண்டிருந்தான்.
"ஏம்பா சிரிக்கிற" சுவாமிநாதன் குழப்பத்துடன் கேட்டான்
ரகுபதி - வயது 2
"கூ.. கூ..." ரயில்வே ஸ்டேஷனில் ரகுபதி. தூரத்தில் வரும் புகைவண்டி கரி என்ஜினைப் பார்த்து, வாயில் கட்டை விரலை வைத்தபடி கூவிக்கொண்டிருந்தான்.
"ஏங்க கேளுங்க... நேத்து அவன் அப்பத்தாக்கிட்ட கூட சொன்னாங்க.."
சுவாமிநாதன் வயர் கூடையை பிடித்தபடி தன் பேரனையே பார்த்துக்கொண்டிருக்கும் தன் தாயைப் பார்த்துக் கேட்டான்
"நெசமா தானா"
"ஆமால சாமிநாதா...என் கையை நாடி பாக்கிறா மாதிரி புடிச்சிகிட்டே சொன்னாங்கிறன்...'நான் டாக்டராவேன் அப்பத்தா'ன்னு நெசமாத்தான் சொன்னான்"
"என் தங்கமே" சுவாமிநாதன் ரகுபதயை அள்ளி வாரி முத்தம் மழை பொழிந்தான். ரகுபதியின் கவனமெல்லாம் அவன் அருகே வந்து கொண்டிருக்கும் ரயில் என்ஜின்னிடமே இருந்தது.
"என் ராசா... எங்க சொல்லு நீ பெரியவனா ஆனதும் என்னவா வருவே"
"கூ...கூ..." ரகுபதி சுவாமிநாதனை கவனித்தாற் மாதிரி தெரியவில்லை.
"சொல்லுப்பா... என் தங்கம் இல்ல...என் செல்லம் இல்ல..சொல்லுப்பா"
"நான் பெரிவனா ஆனா..ஆங்..ஆங் வந்து...வந்து..."
"ம்ம் சொல்லுப்பா"
"நான் அதோ அந்த என்ஜின் ஓட்ட போறேன்..."
ரகுபதி - வயது 10
"உங்க ஒவ்வொருத்தருக்கும் நீங்க என்னவா ஆகப்போறீங்கன்னு ஒரு ஆசை இருக்கும்...அந்த ஆசைய அடைய நீங்களே ஒரு லட்ச்சியத்த வளத்துக்கனும்.. கல்விக்கூடங்கிறது அந்த லட்சியத்த நீங்க அடைய உங்கள நீங்களே தயார் செஞ்சுக்கிறதுக்கான ஒரு பயிற்சி களம்" ஆறாம் வகுப்பின் தமிழ் டீச்சரின் முதல் நாள் வகுப்பு.
"எங்க சொல்லுங்க நீங்க ஒவ்வொருத்தரும் பெரியவனா ஆனா என்னவா ஆகபோறீங்க"
"டாக்டர், இன்ஜினியர், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஸயின்டிஸ்ட்" சொல்லி வைத்தாற் போல் எல்லா மாணவர்களும் முறை மாற்றி சொன்னனர். ஒரு மாணவன் "எங்க தலைவர போல பெரிய ஸ்டார் ஆவேன் டீச்சர்" என்று சொல்ல டீச்சரிடம் ஒரு முறைப்பு வந்தது. ரகுபதியின் முறை வந்தது
"நான் மிலிட்டிரியில சேரப் போறேன் டீச்சர்..சேர்ந்து நம்ம நாட்டு எதிரிய எல்லாம் சுட்டு தள்ளப்போறேன்" சதீஷ் ஆச்சர்யமாக தன் நன்பன் ரகுபதியை பார்த்தான்.
"என்னடா நேத்து வரைக்கும் பெரிய என்ஜினியராக போறேன்னு சொல்லிக்கிட்டு இருந்த.. இன்னைக்கு என்னடா ஆச்சு"
"நேத்து ஒரு இங்கிலிஷ் படம் பாத்தேண்டா.. ஸ்டலோன்னு மிலிட்டரியில சேர்ந்து என்னமா சன்ட போட்டார் தெரியுமா...இவ்வளவு பெரிய கன்னு, எதிரிங்க பாம்
போடறாங்க, ப்ளைட்ல இருந்து சுடறாங்க, ஆனா நம்ம ஸ்டலோன்னு ஒரு குண்டு கூட படாம அவங்க எல்லாரையும் சுட்டாரு பாரு சூப்பர்டா...மிலிட்டரியில சேரலாம்டா..அப்பதான் கன்னு, பாம் எல்லாம் தருவாங்க" கண்கள் படபடக்க ரகுபதி விவரித்தான்.
ரகுபதி - வயது 15
"ரகுபதி...congrats..கிரிக்கெட்டுல உனக்கு பெரிய எதிர்காலம் இருக்கு..இந்த மாதிரியே நல்லா விளையாடனும்.. நீ தான் அடுத்த டெண்டுல்கர்" கிரிக்கெட் கோச் சொன்ன
வார்த்தைகள் ரகுபதியால் நம்ப முடியவில்லை. வெற்றிக்களிப்புடன் கோப்பையை வாங்கி வீட்டிற்கு வந்தான். ரகுபதி ஒரு கையில் கோப்பையுடனும் மறுகையில் கிரிக்கெட் மட்டையுடனும் வீட்டினுள் நுழைந்தான். உள்ளே சுவாமிநாதன் கண்ணில் கோபம் தெறிக்க ரகுபதியை பார்த்தான், அவன் கையில் ரகுபதியின் ப்ரொக்ரஸ் கார்ட்.
"ஏண்டா காடு கரைய வித்து உன்னைய படிக்க வச்சா...என்னடா மார்க் வாங்கியிருக்குற"
"இல்லப்பா...அடுத்த தடவ கண்டிப்பா..."
"எலெ நிறுத்துடா...இதயேதாண்டா போன தடவையும் சொன்னே...இந்த முறையும் அஞ்சு சப்ஜெக்டலையும் பெயிலாயி இருக்குற.....இந்த வருஷம் SSLC தெரியும்ல..."
ரகுபதி தலையசைத்தான்
"உன்னெடுத்த பசங்க எல்லாம் ஒழுங்கு மருவாதையா வீடே கெதின்னு படிக்கிறானுவோ..நீ என்னடான்னா ஊர் சுத்திகிட்டு திரியுறவ...அது என்னடா கையில"
"கிரிக்கெட்டுல இன்னைக்கு நான்தாம்பா man of the match"
"உன்னைய படிக்க சொன்னா... என்னடா கிரிக்கெட் வேண்டி கெடக்குது...நீ என்ன சொன்னாலும் திருந்த மாட்டே...இரு உன்னைய..." ரகுபதி கயில் இருந்த கோப்பைய
வாங்கி தூர எறிந்தான், அவன் மட்டையை பிடுங்கி ரகுபதியை அடிக்க கை ஓங்கினான். ரகுபதி இரு கைகளாலும் அழுதவாறே தன் தகப்பனை அடிக்க விடாமல் தடுத்தான். இரண்டு அடி அடித்தும் கோபம் தீராதவனாய் சுவாமிநாதன் கிரிக்கெட் மட்டையை ஒங்கி தூணில் போட்டு உடைத்தான். மீனாட்சி ரகுபதியை அனைத்து அவனை
தேற்றிக்கொண்டிருந்தாள்.
ரகுபதி - வயது 17
ரகுபதி திரும்பத் திரும்ப நன்றாய் தேடிப் பார்த்தான். ம்ஹ¥ம்..அவன் நம்பர் தெரிந்தபாடில்லை. அவன் நன்பர்களெல்லாம் தங்கள் நம்பரை பார்த்த சந்தோஷத்தில் வீட்டிற்கு
விரைந்து கொண்டிருந்தனர். ப்ளஸ் டூ ரிசல்ட் வந்துவிட்டது. இது ரகுபதிக்கு ஒன்றும் ஆச்சர்யம் தரவில்லை. இருந்தாலும் வீட்டிற்கு போனால் இந்த அப்பனை எப்படி
சமாளிப்பது. தீவிர யோசனைக்கு பிறகு தன் திருட்டு சிகரெட்டை அனைத்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்தவனாய் வீட்டை நோக்கி நடந்தான். வீட்டின் முன் ஒரு ஐம்பது அடி வந்து கொண்டிருக்கும் போது, சுவாமிநாதன் குரல் தெருவெங்கும் கேட்டது, கூடவே மீனாட்சியின் அழுகுரல்.
"இன்னைக்கும் வரட்டும் அவன்... புள்ளையாடி பெத்து இருக்க புள்ள... ஒன்னுத்துக்கும் உருப்படாத பய"
"எம்புள்ளைய ஒன்னும் செய்யாதீங்க"
சுருட்டிய தினத்தந்தியுடன் வீட்டினுள் நுழைந்தான் ரகுபதி.
"வாங்க தொர... என்ன ஜில்லாவில்லே மொத மார்க்காமே..." நக்கல் + கோபத்துடன் சுவாமிநாதன்.
"அப்பா...கோபப்படாதீங்க... நான் தான் எனக்கு படிப்பு வரல..படிப்பு வரலன்னு சொன்னேனே...இப்ப நீங்க டென்ஷனாகி என்ன ஆகப்போவது"
"டேய் படிக்காம என்னடா பன்ன போற"
"ஏதாவது செய்யறன்... உலகத்துல பொழைக்க வழியா இல்ல"
ரகுபதி - வயது 25
அந்த தனியார் மருத்துவமனையின் வாசலில் அந்த வெள்ளை அம்பாசிடர் கார் நின்று கொண்டிருந்தது. அதன் பின் கண்ணாடியில் மஞ்சள் நிறத்தில் "raghu cabs" என்று ஸ்டிக்கர் மின்னிக்கொண்டிருந்தது. மெல்ல அந்த தம்பதியினர் அம்பாசிடர் கார் கதவை திறந்து உள்ளே கைக்குழந்தையுடன் உட்கார்ந்தனர்.
"ட்ரைவர் போகலாம்பா"
"சரி சார்" சிக்னல் போட்டு ரகுபதி வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
"ஜ்ஜூக்குட்டி...செல்லக்குட்டி....மங்கலம் நாம ஆசப்பட்ட மாதிரியே சிங்கக்குட்டி பொறந்திருக்கான்டி.....என்னால தான் ஆக முடியல...இவனை எப்படியாவது ஒரு கலெக்டரா ஆக்கி காமிக்கிறேன்"
ரகுபதி சிரித்தான், தம்பதியினர் நிமிர்ந்து பார்த்தனர்.
ரகுபதி பிறந்து அழுத களைப்பில் சுவாமிநாதன் கையில் கிடந்தான். சோர்வு இருந்தாலும், கண்ணில்
ஈன்ற பெருமை தெரிய அருகில் மீனாட்சி. டாக்சியில் ஏறியவுடன் மீண்டும் ரகுபதியின் பிஞ்சு முகத்தை ஒருமுறை பார்த்தான் சுவாமிநாதன்.
"என் ராசா....நான் தவங்கிடந்து பெத்து எடுத்த தங்கமே....எங்க அப்பன போலவே ராஜகள...நீ வேனாம்
பாரேன் மீனாட்சி என் மவன் பெரியவனா ஆனதும் இந்த சீமையே கட்டி ஆளப் போறான்"
உடனே ஒரு வறட்சியான சிரிப்பு சத்தம் முன்னிருந்து கேட்டது. சுவாமிநாதனும் மீனாட்சியும் நிமிர்ந்து பார்க்க ரியர் வியூ மிரரில் டாக்சி ட்ரைவர் இவர்களை பார்த்து
சிரித்துக் கொண்டிருந்தான்.
"ஏம்பா சிரிக்கிற" சுவாமிநாதன் குழப்பத்துடன் கேட்டான்
ரகுபதி - வயது 2
"கூ.. கூ..." ரயில்வே ஸ்டேஷனில் ரகுபதி. தூரத்தில் வரும் புகைவண்டி கரி என்ஜினைப் பார்த்து, வாயில் கட்டை விரலை வைத்தபடி கூவிக்கொண்டிருந்தான்.
"ஏங்க கேளுங்க... நேத்து அவன் அப்பத்தாக்கிட்ட கூட சொன்னாங்க.."
சுவாமிநாதன் வயர் கூடையை பிடித்தபடி தன் பேரனையே பார்த்துக்கொண்டிருக்கும் தன் தாயைப் பார்த்துக் கேட்டான்
"நெசமா தானா"
"ஆமால சாமிநாதா...என் கையை நாடி பாக்கிறா மாதிரி புடிச்சிகிட்டே சொன்னாங்கிறன்...'நான் டாக்டராவேன் அப்பத்தா'ன்னு நெசமாத்தான் சொன்னான்"
"என் தங்கமே" சுவாமிநாதன் ரகுபதயை அள்ளி வாரி முத்தம் மழை பொழிந்தான். ரகுபதியின் கவனமெல்லாம் அவன் அருகே வந்து கொண்டிருக்கும் ரயில் என்ஜின்னிடமே இருந்தது.
"என் ராசா... எங்க சொல்லு நீ பெரியவனா ஆனதும் என்னவா வருவே"
"கூ...கூ..." ரகுபதி சுவாமிநாதனை கவனித்தாற் மாதிரி தெரியவில்லை.
"சொல்லுப்பா... என் தங்கம் இல்ல...என் செல்லம் இல்ல..சொல்லுப்பா"
"நான் பெரிவனா ஆனா..ஆங்..ஆங் வந்து...வந்து..."
"ம்ம் சொல்லுப்பா"
"நான் அதோ அந்த என்ஜின் ஓட்ட போறேன்..."
ரகுபதி - வயது 10
"உங்க ஒவ்வொருத்தருக்கும் நீங்க என்னவா ஆகப்போறீங்கன்னு ஒரு ஆசை இருக்கும்...அந்த ஆசைய அடைய நீங்களே ஒரு லட்ச்சியத்த வளத்துக்கனும்.. கல்விக்கூடங்கிறது அந்த லட்சியத்த நீங்க அடைய உங்கள நீங்களே தயார் செஞ்சுக்கிறதுக்கான ஒரு பயிற்சி களம்" ஆறாம் வகுப்பின் தமிழ் டீச்சரின் முதல் நாள் வகுப்பு.
"எங்க சொல்லுங்க நீங்க ஒவ்வொருத்தரும் பெரியவனா ஆனா என்னவா ஆகபோறீங்க"
"டாக்டர், இன்ஜினியர், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஸயின்டிஸ்ட்" சொல்லி வைத்தாற் போல் எல்லா மாணவர்களும் முறை மாற்றி சொன்னனர். ஒரு மாணவன் "எங்க தலைவர போல பெரிய ஸ்டார் ஆவேன் டீச்சர்" என்று சொல்ல டீச்சரிடம் ஒரு முறைப்பு வந்தது. ரகுபதியின் முறை வந்தது
"நான் மிலிட்டிரியில சேரப் போறேன் டீச்சர்..சேர்ந்து நம்ம நாட்டு எதிரிய எல்லாம் சுட்டு தள்ளப்போறேன்" சதீஷ் ஆச்சர்யமாக தன் நன்பன் ரகுபதியை பார்த்தான்.
"என்னடா நேத்து வரைக்கும் பெரிய என்ஜினியராக போறேன்னு சொல்லிக்கிட்டு இருந்த.. இன்னைக்கு என்னடா ஆச்சு"
"நேத்து ஒரு இங்கிலிஷ் படம் பாத்தேண்டா.. ஸ்டலோன்னு மிலிட்டரியில சேர்ந்து என்னமா சன்ட போட்டார் தெரியுமா...இவ்வளவு பெரிய கன்னு, எதிரிங்க பாம்
போடறாங்க, ப்ளைட்ல இருந்து சுடறாங்க, ஆனா நம்ம ஸ்டலோன்னு ஒரு குண்டு கூட படாம அவங்க எல்லாரையும் சுட்டாரு பாரு சூப்பர்டா...மிலிட்டரியில சேரலாம்டா..அப்பதான் கன்னு, பாம் எல்லாம் தருவாங்க" கண்கள் படபடக்க ரகுபதி விவரித்தான்.
ரகுபதி - வயது 15
"ரகுபதி...congrats..கிரிக்கெட்டுல உனக்கு பெரிய எதிர்காலம் இருக்கு..இந்த மாதிரியே நல்லா விளையாடனும்.. நீ தான் அடுத்த டெண்டுல்கர்" கிரிக்கெட் கோச் சொன்ன
வார்த்தைகள் ரகுபதியால் நம்ப முடியவில்லை. வெற்றிக்களிப்புடன் கோப்பையை வாங்கி வீட்டிற்கு வந்தான். ரகுபதி ஒரு கையில் கோப்பையுடனும் மறுகையில் கிரிக்கெட் மட்டையுடனும் வீட்டினுள் நுழைந்தான். உள்ளே சுவாமிநாதன் கண்ணில் கோபம் தெறிக்க ரகுபதியை பார்த்தான், அவன் கையில் ரகுபதியின் ப்ரொக்ரஸ் கார்ட்.
"ஏண்டா காடு கரைய வித்து உன்னைய படிக்க வச்சா...என்னடா மார்க் வாங்கியிருக்குற"
"இல்லப்பா...அடுத்த தடவ கண்டிப்பா..."
"எலெ நிறுத்துடா...இதயேதாண்டா போன தடவையும் சொன்னே...இந்த முறையும் அஞ்சு சப்ஜெக்டலையும் பெயிலாயி இருக்குற.....இந்த வருஷம் SSLC தெரியும்ல..."
ரகுபதி தலையசைத்தான்
"உன்னெடுத்த பசங்க எல்லாம் ஒழுங்கு மருவாதையா வீடே கெதின்னு படிக்கிறானுவோ..நீ என்னடான்னா ஊர் சுத்திகிட்டு திரியுறவ...அது என்னடா கையில"
"கிரிக்கெட்டுல இன்னைக்கு நான்தாம்பா man of the match"
"உன்னைய படிக்க சொன்னா... என்னடா கிரிக்கெட் வேண்டி கெடக்குது...நீ என்ன சொன்னாலும் திருந்த மாட்டே...இரு உன்னைய..." ரகுபதி கயில் இருந்த கோப்பைய
வாங்கி தூர எறிந்தான், அவன் மட்டையை பிடுங்கி ரகுபதியை அடிக்க கை ஓங்கினான். ரகுபதி இரு கைகளாலும் அழுதவாறே தன் தகப்பனை அடிக்க விடாமல் தடுத்தான். இரண்டு அடி அடித்தும் கோபம் தீராதவனாய் சுவாமிநாதன் கிரிக்கெட் மட்டையை ஒங்கி தூணில் போட்டு உடைத்தான். மீனாட்சி ரகுபதியை அனைத்து அவனை
தேற்றிக்கொண்டிருந்தாள்.
ரகுபதி - வயது 17
ரகுபதி திரும்பத் திரும்ப நன்றாய் தேடிப் பார்த்தான். ம்ஹ¥ம்..அவன் நம்பர் தெரிந்தபாடில்லை. அவன் நன்பர்களெல்லாம் தங்கள் நம்பரை பார்த்த சந்தோஷத்தில் வீட்டிற்கு
விரைந்து கொண்டிருந்தனர். ப்ளஸ் டூ ரிசல்ட் வந்துவிட்டது. இது ரகுபதிக்கு ஒன்றும் ஆச்சர்யம் தரவில்லை. இருந்தாலும் வீட்டிற்கு போனால் இந்த அப்பனை எப்படி
சமாளிப்பது. தீவிர யோசனைக்கு பிறகு தன் திருட்டு சிகரெட்டை அனைத்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்தவனாய் வீட்டை நோக்கி நடந்தான். வீட்டின் முன் ஒரு ஐம்பது அடி வந்து கொண்டிருக்கும் போது, சுவாமிநாதன் குரல் தெருவெங்கும் கேட்டது, கூடவே மீனாட்சியின் அழுகுரல்.
"இன்னைக்கும் வரட்டும் அவன்... புள்ளையாடி பெத்து இருக்க புள்ள... ஒன்னுத்துக்கும் உருப்படாத பய"
"எம்புள்ளைய ஒன்னும் செய்யாதீங்க"
சுருட்டிய தினத்தந்தியுடன் வீட்டினுள் நுழைந்தான் ரகுபதி.
"வாங்க தொர... என்ன ஜில்லாவில்லே மொத மார்க்காமே..." நக்கல் + கோபத்துடன் சுவாமிநாதன்.
"அப்பா...கோபப்படாதீங்க... நான் தான் எனக்கு படிப்பு வரல..படிப்பு வரலன்னு சொன்னேனே...இப்ப நீங்க டென்ஷனாகி என்ன ஆகப்போவது"
"டேய் படிக்காம என்னடா பன்ன போற"
"ஏதாவது செய்யறன்... உலகத்துல பொழைக்க வழியா இல்ல"
ரகுபதி - வயது 25
அந்த தனியார் மருத்துவமனையின் வாசலில் அந்த வெள்ளை அம்பாசிடர் கார் நின்று கொண்டிருந்தது. அதன் பின் கண்ணாடியில் மஞ்சள் நிறத்தில் "raghu cabs" என்று ஸ்டிக்கர் மின்னிக்கொண்டிருந்தது. மெல்ல அந்த தம்பதியினர் அம்பாசிடர் கார் கதவை திறந்து உள்ளே கைக்குழந்தையுடன் உட்கார்ந்தனர்.
"ட்ரைவர் போகலாம்பா"
"சரி சார்" சிக்னல் போட்டு ரகுபதி வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
"ஜ்ஜூக்குட்டி...செல்லக்குட்டி....மங்கலம் நாம ஆசப்பட்ட மாதிரியே சிங்கக்குட்டி பொறந்திருக்கான்டி.....என்னால தான் ஆக முடியல...இவனை எப்படியாவது ஒரு கலெக்டரா ஆக்கி காமிக்கிறேன்"
ரகுபதி சிரித்தான், தம்பதியினர் நிமிர்ந்து பார்த்தனர்.
Sunday, November 20, 2005
பெண்ணாய் பிறந்ததாலே..(சிறுகதை)
(இன்றிலிருந்து இருபது வருடங்களுக்கு முன்பு...)
மணி இரவு பதினொன்றை நெருங்கும் நேரம், அந்த ஆட்டோ கொட்டும் மழையையும் பொருட்டாது தார் ரோட்டில் பறந்து கொண்டிருந்தது. உள்ளே நிறைமாத கர்ப்பினி சுகந்தி வலி பொறுக்க முடியாமல் துடிக்கிறாள், காசிக்கு கண்ணில் பயம் கொஞ்சம் இயலாமை கொஞ்சம், சுகந்தியை தோளோடு தழுவி வெளியே பார்த்தான். கண்ணுக்கு தெரிந்த வரையில் எந்த ஒரு பெரிய ஆஸ்பத்திரியும் தெரிவதாய் இல்லை. "ஏம்பா இன்னும் எவ்வளவு தூரம் போகனும்"
"இன்னும் கொஞ்சம் தொலவு போகனும் சார்.....ஒரு அரை மணி நேரமாவது ஆகும்.... அடிக்கிற மழையில வண்டி ஓட்டறது வேற கஷ்டமா இருக்குது"
"சரி பக்கத்துல எங்கயாவது சின்ன ஆஸ்பத்திரி இருக்கா"
"இந்த ஊருக்குல்ல போனா ஒரு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கு சார்... வேனும்னா அங்க வண்டிய திருப்பத்துமா"
"சரிப்பா...இவ ரொம்ப துடிக்கிறா.. அங்கேயே போவோம்" அரை மனதுடன் காசி சொன்னான். பேருக்கு பெரிய ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவை போக சொன்னாலும், அங்கே ஆகும் செலவை நினைத்து பாதி வழியிலே கவலைப்பட ஆரம்பித்தான். கையில் ஆட்டோவிற்கே பணம் இருப்பதாய் தெரியவில்லை. தன் வாரிசை இப்படியெல்லாம் பெறப்போகிறோம் என்று சில வருடம் முன்பு அவன் கனவுகூட கண்டிருக்க மாட்டான். தன் பரம்பரை வசதிக்கும், பாரம்பரியத்திற்கும் இந்நேரம் ஆஸ்பத்திரியே அவன் அரண்மனை வீட்டிற்கு வந்திருக்கும். இதெல்லாம் ஏன் நடக்கவில்லை! எல்லாம் இந்த பாழாய்போன காதலால் வந்த வினை. பக்கத்து ஊர் பழைய ஜமீன்தார் பெண்ணை தனக்காக தன் தாய் நாச்சியார் பார்த்து வைத்திருக்க, காசியோ திடுப்பென தன் காதலைப் பற்றி தாயிடம் வாய் திறந்தான். பிறகு என்ன, காதலா பரம்பரை சொத்தா என்று வந்தவுடன், காசி காதலே ஜெயம் என்று வீட்டை விட்டு வெளியே வந்தான். அந்த நேரத்திற்கு நன்பர்களின் துணை இருந்தது, அவர்களின் ஆதரவோடு சுகந்தியின் கரம் பிடித்தான். வாழ்க்கை இனித்தது நம்பிக்கை என்னும் மூலதனத்தை வைத்து வாழ்க்கையைத் தொடங்கினான். எல்லாம் கொஞ்சம் காலம் தான். உலகம் காசிக்கு மெல்ல புரிந்தது, பணத்தின் அருமை புரிந்தது, வாழ்க்கை மெல்ல வலித்தது.
"சார்..ஆஸ்பத்திர் வந்தாச்சு. அம்மாவ மெல்ல இறக்குங்க"
ஆட்டோ ட்ரைவரின் குரல் காசியின் நினைவை தற்காலத்திற்கு கொண்டு வந்தது. சுகந்தியை கைதாங்கலாய் உள்ளே கொண்டு சென்று படுக்கவைத்தான். சுகந்தியின் அருகே இரண்டு மூன்று பெண்கள் பிரசுவிக்க தயாராய் இருந்தனர்.
"ஆம்பளைங்க எல்லாம் வெளியே போங்க" நர்ஸ் ஒருத்தியின் குரல் அதட்டியது
"டாக்டர் எப்ப வருவாங்க" காசி நர்ஸிடம் கேட்டான்
"எல்லாம் சொல்லியிருக்கு வருவாங்க...அப்படியே வர்லேன்னாலும் என்ன...பெரிய எலிசபெத்து ராணியா உம்பொண்டாட்டி...ஏன் நாங்க பிரசவம் பாத்தா உனக்கு ஆகாதா"
இதற்கு மேல் அரசாங்க சுகாதார நிலையத்தில் கவனிப்பை எதிர்பார்ப்பது தவறு. காசி வெளியே வந்தான். அப்போது தான் ஆட்டோ அங்கே இருப்பதை பார்த்தான்.
"சாரிப்பா...நீ இருக்கிறதை மறந்துட்டேன்... எவ்வளவு ஆச்சு" சட்டை பையை துலாவியபடியே கேட்டான்
"பரவாயில்ல சார்... என் ஆட்டோ பிரசவத்துக்கெல்லாம் இலவசம் சார்...அம்மா எப்படி இருக்காங்கன்னு கேக்க தான் சார் நின்னுகிட்டு இருந்தேன்....கவல படாதீங்க சார் எல்லாம் நல்லபடியா நடக்கும்" ஆட்டோ திரும்பி சென்றது. காசி அப்போது தான் கவனித்தான் "பிரசவத்திற்கு இலவசம்" என்று எழுதியிருப்பதை.
"சே என்ன இது... எப்படியாவது ஒரு அம்பது ரூபாவது கொடுத்திருக்கனும்" சட்டைப் பையை பிரித்து பார்த்தான், உள்ளே கசங்கிய இரண்டு ஐந்து ருபாய் நோட்டும் ஒரு இன்லாந்து லெட்டரும் தெரிந்தது, காசியின் கண்ணீர் மழையில் கரைந்தது.
காசி திரும்பவும் அந்த இன்லாந்து லெட்டரை பார்த்தான், இரண்டு நாட்களுக்கு முன் வந்த கடிதம், தன் மாமா எழுதிய கடிதம். தன் தாய் சுகமில்லாமல் இருப்பதாகவும், மெல்ல மெல்ல காசியின் மேல் உள்ள கோபம் கரைவதாகவும் எழுதி இருந்தார். ஆனால் கடைசியில் அவர் எழுதி இருந்தது தான் காசிக்கு கவலையை அதிகரித்தது
"..மேலும் சுகந்தி முழுகாமல் இருப்பதாய் செய்தி வந்தது, நாச்சியாளுக்கு சந்தோஷம். பரம்பரை குலம் காக்க உனக்கும் தலைப்பிள்ளை ஆணாக பிறப்பான் என்று
குலதெய்வத்திற்கு வேண்டிக் கொள்கிறாள். நீயும் அவ்வாறே வேண்டிக்கொள் எனென்றால் உனக்கு பிறக்கும் ஆண்பிள்ளைக்கு தான் பரம்பரை சொத்து முழுவதும் சேரும் என்றும், அப்போது தான் அதை அனுபவிக்கும் பாக்கியதை உனக்கு இருக்கும் என்றும் ஏற்கனவே வக்கீல் வைத்து உயில் எழுதி வைத்து விட்டாள். நீ வேண்டுமானால் சொத்து வேண்டாம் என்று வீட்டை விட்டு போயிருக்கலாம், ஆனால் உனக்கு மூத்த குழந்தை ஆணாக பிறக்கும் பட்சத்தில் அவன் தான் இந்த சொத்துக்கெல்லாம் அதிபதி"
சுகந்தியை கைப்பிடித்த பொழுதில் இந்த மாதிரி ஒரு கடிதத்தைப்பார்த்தால் அதை அப்போதே கிழித்து எறிந்திருப்பான். ஆனால் காதல் வாழ்க்கையின் நிஜம் இப்போது
காசியை வேறு விதமாக யோசிக்க வைத்தது. "உன்ன ராணிய போல வச்சிருப்பேன்..." காதலிக்கும்போது காசியின் வசீகர வார்த்தைகள்..."பெரிய எலிசபெத்து ராணியா உம்பொண்டாட்டி" சற்று முன் கேட்ட யதார்த்த வார்த்தைகள்.
"முடியாது...என்னால் முடியாது.....இனிமேல் இந்த வாழ்க்கை வாழ என்னால் முடியாது... எனக்கு என் சொத்து வேண்டும்.. நமக்கு பணம் வேண்டும்... சுகந்தி எப்படியாவது ஒரு ஆண் வாரிசை கொடுத்துவிடு" சுகந்தியோடு சேர்த்து கடவுளையும் வேண்டினான்.
மழை சற்று விட்டிருந்தது, காசி அப்போது தான் தன்னை சுற்றி இருப்பவற்றை பார்த்தான். ஆரம்ப சுகாதர நிலையத்தின் தின்னையின் ஒரு ஓரத்தில் ஒருவன் மிக
வித்தியாசமாய் காட்சியளித்தான். வாய் நிறைய வெற்றிலையை குதைத்தபடியே கிழே தரையில் படுத்திருந்த ஒருத்தியுடன் பேசிக்கொண்டிருந்தான். அடிக்கடி வெற்றிலை
எச்சியை துப்பியபடியே இருந்தான். அவன் அருகில் படுத்திருப்பவளுக்கு நடுத்திர வயது இருக்கும், பக்கத்தில் சில ஆண்கள் இருந்தும், அவள் அதையெல்லாம் சட்டைசெய்யாமல் தன் முந்தானையை தரையில் விரித்து படுத்திருந்ததை பார்த்தபோது காசிக்கு என்னவோ போல் இருந்தது. எண்ணெய் படாத தலை, அழுக்கான துனியென ஏழைத்தனம்
அவர்களிடம் தாண்டவமாடியது.
"அடுத்த வேளை சோத்துக்கே வழி இருப்பதாய் தெரியவில்லை.. இவங்க எல்லாம் புள்ள பெத்துக்கலன்னு எவன் அழுதான்" காசி தனக்குள்ளே முனகி கொண்டிருந்தான்.
பின்னர் தன் நிலையை உணர்ந்து, தான் அப்படி அவர்கள் பற்றி யோசித்ததற்கு தன்னைத்தானே நொந்துகொண்டான்.
நேரம் நடுநிசியை தாண்டி ஓடிக்கொண்டிருந்தது, களைப்பாய் இருந்த காசி சற்று கண் அயர்ந்தவனாய் தூங்கிக்கொண்டு இருந்தான். சில நேரம் கழித்து, குழந்தை அழும் சத்தம் அவனை எழுப்பியது. உள்ளேயிருந்து அந்த நர்ஸ் வெளியே வந்தாள்.
"சுகந்தி புருஷன் நீயா...போ உள்ள போயி உன் குழந்தைய பாரு...எங்க அந்த காத்தாயி புருஷன்... அதாம்பா இங்க உக்காந்து இருந்தானே"
காசி அந்த எழை ஜீவன்கள் இருந்த இடத்தை பார்த்தான், ஒரு பழைய மஞ்சள் பை மட்டும் அவர்கள் அங்கே இருந்ததற்கு அத்தாட்சியாய் இருந்தது. அவர்களை கானோம். காசி அதை பொருட்படுத்தாமல் உள்ளே சுகந்தியை பார்க்க சென்றான். உள்ளே சுகந்தி மயக்க நிலையில் இருந்தால், பக்கத்தில் வெள்ளைதுணி போர்த்தியிருக்க ஒரு பிஞ்சு. காசி மெல்ல சென்று, தன் மகராணிக்கு நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்
"சுகந்தி, நம்ம கஷ்டமெல்லாம் போக போகுது...உன்ன நிஜமாகவே ராணி போல வச்சிருக்க போறேன்" அவள் காதில் மெல்ல கிசுகிசுத்தான். திரும்பி தன் குழந்தையை
பார்த்தான், அந்த நொடியில் தன்னையே மறந்தான், கண்ணில் நீர் முட்டியது.
"என் ராஜகுமாரா...என் செல்லம்" தன் இஷ்ட தெய்வத்தை வேண்டியபடி குழந்தையை தூக்கினான். மெல்ல குழந்தையின் துணியை விலக்கிப்பார்த்தான். வெளியே ஒரு மின்னல் வெட்டு, அதன் வெளிச்சம் காசியின் மேல் பட்டு தெறிக்க, அதிர்ச்சியில் காசி நின்றுகொண்டிருந்தான். ஆம், காசியின் இஷ்ட தெய்வத்தின் வரம் வேறாய் இருந்தது. காசியின் கையில் பால்வன்னம் மாறாத அழகான பெண் தேவதை. மீண்டும் ஒண்டி குடுத்தனம், ரேஷன் க்யூ, வாடகை கட்ட முடியாமல் வீட்டுக்காரனின் ஏச்சு. காசியின் முன்
ஒவ்வொன்றாய் வந்து கொண்டிருந்தது. சற்றுமுன் அவன் கட்டிய கனவு கோட்டை சிதறிக் கொண்டிருந்தது. அப்போது தான் அவன் கவனித்தான், சுகந்தியின் பக்கத்தில் காத்தாயி, அவள் அருகில் அழகான ஆண் குழந்தை. காத்தாயி சுகந்தி போலவே மயக்க நிலையில் இருந்தாள். காசிக்கு இப்போது என்ன செய்வது என்று புரிந்துவிட்டது,
நல்லது கெட்டது அவன் யோசிக்கவில்லை, சுகந்தியை பற்றியும் அவன் யோசிக்கவில்லை. தன் குழந்தையை சுகந்தி அருகே வைத்து திரும்பி யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தான். வெளியே அந்த நர்ஸ் எங்கயோ போய்க்கொண்டிருந்தாள், உள்ளே இருந்த இன்னொரு நர்சும் இப்போது இல்லை. கன நேரத்தில் காசி அந்த காரியத்தை செய்தான், அவன் பெண் குழந்தை இப்போது காத்தாயி பக்கத்தில், இப்போது கண்ணை திறந்து காசியை பார்த்தது, அதை பார்க்க கூட திரானியற்றவனாய் காசி
திரும்பி கொண்டான். சுகந்திக்கு நினைவு வந்தது, தன் குழந்தையை பார்த்தாள், அருகில் இருந்த காசியை பார்த்து லேசாய் சிரித்தாள் அவள் கண்ணில் நீர்.
நேரம் விடியலை நெருங்கி கொண்டிருந்தது. காசி வெளியே உட்கார்ந்திருந்தான். உள்ளேயிருந்து நேற்று அவன் பார்த்த அந்த ஏழை ஜீவனில் ஒருத்தி காத்தாயியை கைத்தாங்கலாய் வெளியே நடத்தி கொண்டு வந்திருந்தாள், அவர்கள் பின்னே அந்த வெற்றிலை மனிதன் குழந்தையை ஏந்தி வந்தான். அவன் முகத்தில் ஒருவித மகிழ்ச்சி. காசிக்கு கடைசியாய் தன் குழந்தையை பார்க்கும் ஆசை வந்தது.
"ஐயா ஒரு நிமிஷம்"
வெற்றிலை மனிதன் நின்றான், காசி அவன் அருகே வந்து குழந்தையை வாங்கினான். குழந்தை தூங்கிகொண்டிருந்தது
"என்ன மன்னிச்சிடுமா... நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்ப...நீ கண்டிப்பா நல்லா வருவ....பெரிய படிப்பெல்லாம் படிப்ப.." காசியின் மனசாட்சி குழந்தையிடம் பேசியது. குழந்தையை அவனிடம் கொடுத்து தன் சட்டைபையில் கைவிட்டு பார்த்தான், நேற்று இருந்த இருபது ருபாயும் சுகந்தியின் மருந்திற்கு செலவானதை மறந்தவனாய். அவனிடம் இருந்தது அவன் மாமா எழுதிய அந்த கடிதம் மட்டுமே, அது வேறு அவன் மனதை மேலும் கிழித்தது.
"ஆண்டவா...." தன் கழுத்தை தொட்டான், கையில் அவன் சிறுவயதிலிருந்து போட்டு கொண்டிருக்கும் தங்க செயின் பட்டது. அதை எடுத்து குழந்தையின் கழுத்தில் போட்டான்.
"ஐயோ சாமி.. என்ன சாமி இதெல்லாம்... வேண்டாம் சாமி"
"இல்லைங்க... பரவாயில்ல என் குழந்தை பிறந்த நேரம் பிறந்திருக்கா..அந்த ஞாபகத்துக்கு இருக்கட்டும்... இதான் உங்க முதல் குழந்தையா"
"ஆமா சாமி... இது என் ரெண்டாவது சம்சாரத்துக்கு பொறந்தது...அதோ என் சம்சாரத்த கூட்டிக்கிட்டு போறாளே அவதான் என் மொத சம்சாரம்...அவளுக்கு கொழந்த இல்லாததால....நான் தவமா தவம் கிடந்து பெத்ததுங்க இது"
"முதல் குழந்தயா.. ஆம்பிள்ளையா இருந்தா நல்லா இருந்திருக்கும்"
"ஐயோ என்ன சாமி அப்படி சொல்லிட்டீங்க... எங்க தொழிலுக்கு பொம்பள குழந்த பொறந்தா..தாங்க நல்லது"
காசி பேச்சற்றவனாய் நின்றான்...குழந்தையுடன் தூரத்தில் காத்தாயியும் அவர்களும் போய்க்கொன்டிருந்தனர்.
"எங்க தொழிலுக்கு பொம்பள குழந்த பொறந்தா..தாங்க நல்லது"
அவன் கடைசியாய் சொன்ன அந்த வார்த்தைகள் காசியின் வாழ்நாள் முழுவதும் வலித்தது.
மணி இரவு பதினொன்றை நெருங்கும் நேரம், அந்த ஆட்டோ கொட்டும் மழையையும் பொருட்டாது தார் ரோட்டில் பறந்து கொண்டிருந்தது. உள்ளே நிறைமாத கர்ப்பினி சுகந்தி வலி பொறுக்க முடியாமல் துடிக்கிறாள், காசிக்கு கண்ணில் பயம் கொஞ்சம் இயலாமை கொஞ்சம், சுகந்தியை தோளோடு தழுவி வெளியே பார்த்தான். கண்ணுக்கு தெரிந்த வரையில் எந்த ஒரு பெரிய ஆஸ்பத்திரியும் தெரிவதாய் இல்லை. "ஏம்பா இன்னும் எவ்வளவு தூரம் போகனும்"
"இன்னும் கொஞ்சம் தொலவு போகனும் சார்.....ஒரு அரை மணி நேரமாவது ஆகும்.... அடிக்கிற மழையில வண்டி ஓட்டறது வேற கஷ்டமா இருக்குது"
"சரி பக்கத்துல எங்கயாவது சின்ன ஆஸ்பத்திரி இருக்கா"
"இந்த ஊருக்குல்ல போனா ஒரு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கு சார்... வேனும்னா அங்க வண்டிய திருப்பத்துமா"
"சரிப்பா...இவ ரொம்ப துடிக்கிறா.. அங்கேயே போவோம்" அரை மனதுடன் காசி சொன்னான். பேருக்கு பெரிய ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவை போக சொன்னாலும், அங்கே ஆகும் செலவை நினைத்து பாதி வழியிலே கவலைப்பட ஆரம்பித்தான். கையில் ஆட்டோவிற்கே பணம் இருப்பதாய் தெரியவில்லை. தன் வாரிசை இப்படியெல்லாம் பெறப்போகிறோம் என்று சில வருடம் முன்பு அவன் கனவுகூட கண்டிருக்க மாட்டான். தன் பரம்பரை வசதிக்கும், பாரம்பரியத்திற்கும் இந்நேரம் ஆஸ்பத்திரியே அவன் அரண்மனை வீட்டிற்கு வந்திருக்கும். இதெல்லாம் ஏன் நடக்கவில்லை! எல்லாம் இந்த பாழாய்போன காதலால் வந்த வினை. பக்கத்து ஊர் பழைய ஜமீன்தார் பெண்ணை தனக்காக தன் தாய் நாச்சியார் பார்த்து வைத்திருக்க, காசியோ திடுப்பென தன் காதலைப் பற்றி தாயிடம் வாய் திறந்தான். பிறகு என்ன, காதலா பரம்பரை சொத்தா என்று வந்தவுடன், காசி காதலே ஜெயம் என்று வீட்டை விட்டு வெளியே வந்தான். அந்த நேரத்திற்கு நன்பர்களின் துணை இருந்தது, அவர்களின் ஆதரவோடு சுகந்தியின் கரம் பிடித்தான். வாழ்க்கை இனித்தது நம்பிக்கை என்னும் மூலதனத்தை வைத்து வாழ்க்கையைத் தொடங்கினான். எல்லாம் கொஞ்சம் காலம் தான். உலகம் காசிக்கு மெல்ல புரிந்தது, பணத்தின் அருமை புரிந்தது, வாழ்க்கை மெல்ல வலித்தது.
"சார்..ஆஸ்பத்திர் வந்தாச்சு. அம்மாவ மெல்ல இறக்குங்க"
ஆட்டோ ட்ரைவரின் குரல் காசியின் நினைவை தற்காலத்திற்கு கொண்டு வந்தது. சுகந்தியை கைதாங்கலாய் உள்ளே கொண்டு சென்று படுக்கவைத்தான். சுகந்தியின் அருகே இரண்டு மூன்று பெண்கள் பிரசுவிக்க தயாராய் இருந்தனர்.
"ஆம்பளைங்க எல்லாம் வெளியே போங்க" நர்ஸ் ஒருத்தியின் குரல் அதட்டியது
"டாக்டர் எப்ப வருவாங்க" காசி நர்ஸிடம் கேட்டான்
"எல்லாம் சொல்லியிருக்கு வருவாங்க...அப்படியே வர்லேன்னாலும் என்ன...பெரிய எலிசபெத்து ராணியா உம்பொண்டாட்டி...ஏன் நாங்க பிரசவம் பாத்தா உனக்கு ஆகாதா"
இதற்கு மேல் அரசாங்க சுகாதார நிலையத்தில் கவனிப்பை எதிர்பார்ப்பது தவறு. காசி வெளியே வந்தான். அப்போது தான் ஆட்டோ அங்கே இருப்பதை பார்த்தான்.
"சாரிப்பா...நீ இருக்கிறதை மறந்துட்டேன்... எவ்வளவு ஆச்சு" சட்டை பையை துலாவியபடியே கேட்டான்
"பரவாயில்ல சார்... என் ஆட்டோ பிரசவத்துக்கெல்லாம் இலவசம் சார்...அம்மா எப்படி இருக்காங்கன்னு கேக்க தான் சார் நின்னுகிட்டு இருந்தேன்....கவல படாதீங்க சார் எல்லாம் நல்லபடியா நடக்கும்" ஆட்டோ திரும்பி சென்றது. காசி அப்போது தான் கவனித்தான் "பிரசவத்திற்கு இலவசம்" என்று எழுதியிருப்பதை.
"சே என்ன இது... எப்படியாவது ஒரு அம்பது ரூபாவது கொடுத்திருக்கனும்" சட்டைப் பையை பிரித்து பார்த்தான், உள்ளே கசங்கிய இரண்டு ஐந்து ருபாய் நோட்டும் ஒரு இன்லாந்து லெட்டரும் தெரிந்தது, காசியின் கண்ணீர் மழையில் கரைந்தது.
காசி திரும்பவும் அந்த இன்லாந்து லெட்டரை பார்த்தான், இரண்டு நாட்களுக்கு முன் வந்த கடிதம், தன் மாமா எழுதிய கடிதம். தன் தாய் சுகமில்லாமல் இருப்பதாகவும், மெல்ல மெல்ல காசியின் மேல் உள்ள கோபம் கரைவதாகவும் எழுதி இருந்தார். ஆனால் கடைசியில் அவர் எழுதி இருந்தது தான் காசிக்கு கவலையை அதிகரித்தது
"..மேலும் சுகந்தி முழுகாமல் இருப்பதாய் செய்தி வந்தது, நாச்சியாளுக்கு சந்தோஷம். பரம்பரை குலம் காக்க உனக்கும் தலைப்பிள்ளை ஆணாக பிறப்பான் என்று
குலதெய்வத்திற்கு வேண்டிக் கொள்கிறாள். நீயும் அவ்வாறே வேண்டிக்கொள் எனென்றால் உனக்கு பிறக்கும் ஆண்பிள்ளைக்கு தான் பரம்பரை சொத்து முழுவதும் சேரும் என்றும், அப்போது தான் அதை அனுபவிக்கும் பாக்கியதை உனக்கு இருக்கும் என்றும் ஏற்கனவே வக்கீல் வைத்து உயில் எழுதி வைத்து விட்டாள். நீ வேண்டுமானால் சொத்து வேண்டாம் என்று வீட்டை விட்டு போயிருக்கலாம், ஆனால் உனக்கு மூத்த குழந்தை ஆணாக பிறக்கும் பட்சத்தில் அவன் தான் இந்த சொத்துக்கெல்லாம் அதிபதி"
சுகந்தியை கைப்பிடித்த பொழுதில் இந்த மாதிரி ஒரு கடிதத்தைப்பார்த்தால் அதை அப்போதே கிழித்து எறிந்திருப்பான். ஆனால் காதல் வாழ்க்கையின் நிஜம் இப்போது
காசியை வேறு விதமாக யோசிக்க வைத்தது. "உன்ன ராணிய போல வச்சிருப்பேன்..." காதலிக்கும்போது காசியின் வசீகர வார்த்தைகள்..."பெரிய எலிசபெத்து ராணியா உம்பொண்டாட்டி" சற்று முன் கேட்ட யதார்த்த வார்த்தைகள்.
"முடியாது...என்னால் முடியாது.....இனிமேல் இந்த வாழ்க்கை வாழ என்னால் முடியாது... எனக்கு என் சொத்து வேண்டும்.. நமக்கு பணம் வேண்டும்... சுகந்தி எப்படியாவது ஒரு ஆண் வாரிசை கொடுத்துவிடு" சுகந்தியோடு சேர்த்து கடவுளையும் வேண்டினான்.
மழை சற்று விட்டிருந்தது, காசி அப்போது தான் தன்னை சுற்றி இருப்பவற்றை பார்த்தான். ஆரம்ப சுகாதர நிலையத்தின் தின்னையின் ஒரு ஓரத்தில் ஒருவன் மிக
வித்தியாசமாய் காட்சியளித்தான். வாய் நிறைய வெற்றிலையை குதைத்தபடியே கிழே தரையில் படுத்திருந்த ஒருத்தியுடன் பேசிக்கொண்டிருந்தான். அடிக்கடி வெற்றிலை
எச்சியை துப்பியபடியே இருந்தான். அவன் அருகில் படுத்திருப்பவளுக்கு நடுத்திர வயது இருக்கும், பக்கத்தில் சில ஆண்கள் இருந்தும், அவள் அதையெல்லாம் சட்டைசெய்யாமல் தன் முந்தானையை தரையில் விரித்து படுத்திருந்ததை பார்த்தபோது காசிக்கு என்னவோ போல் இருந்தது. எண்ணெய் படாத தலை, அழுக்கான துனியென ஏழைத்தனம்
அவர்களிடம் தாண்டவமாடியது.
"அடுத்த வேளை சோத்துக்கே வழி இருப்பதாய் தெரியவில்லை.. இவங்க எல்லாம் புள்ள பெத்துக்கலன்னு எவன் அழுதான்" காசி தனக்குள்ளே முனகி கொண்டிருந்தான்.
பின்னர் தன் நிலையை உணர்ந்து, தான் அப்படி அவர்கள் பற்றி யோசித்ததற்கு தன்னைத்தானே நொந்துகொண்டான்.
நேரம் நடுநிசியை தாண்டி ஓடிக்கொண்டிருந்தது, களைப்பாய் இருந்த காசி சற்று கண் அயர்ந்தவனாய் தூங்கிக்கொண்டு இருந்தான். சில நேரம் கழித்து, குழந்தை அழும் சத்தம் அவனை எழுப்பியது. உள்ளேயிருந்து அந்த நர்ஸ் வெளியே வந்தாள்.
"சுகந்தி புருஷன் நீயா...போ உள்ள போயி உன் குழந்தைய பாரு...எங்க அந்த காத்தாயி புருஷன்... அதாம்பா இங்க உக்காந்து இருந்தானே"
காசி அந்த எழை ஜீவன்கள் இருந்த இடத்தை பார்த்தான், ஒரு பழைய மஞ்சள் பை மட்டும் அவர்கள் அங்கே இருந்ததற்கு அத்தாட்சியாய் இருந்தது. அவர்களை கானோம். காசி அதை பொருட்படுத்தாமல் உள்ளே சுகந்தியை பார்க்க சென்றான். உள்ளே சுகந்தி மயக்க நிலையில் இருந்தால், பக்கத்தில் வெள்ளைதுணி போர்த்தியிருக்க ஒரு பிஞ்சு. காசி மெல்ல சென்று, தன் மகராணிக்கு நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்
"சுகந்தி, நம்ம கஷ்டமெல்லாம் போக போகுது...உன்ன நிஜமாகவே ராணி போல வச்சிருக்க போறேன்" அவள் காதில் மெல்ல கிசுகிசுத்தான். திரும்பி தன் குழந்தையை
பார்த்தான், அந்த நொடியில் தன்னையே மறந்தான், கண்ணில் நீர் முட்டியது.
"என் ராஜகுமாரா...என் செல்லம்" தன் இஷ்ட தெய்வத்தை வேண்டியபடி குழந்தையை தூக்கினான். மெல்ல குழந்தையின் துணியை விலக்கிப்பார்த்தான். வெளியே ஒரு மின்னல் வெட்டு, அதன் வெளிச்சம் காசியின் மேல் பட்டு தெறிக்க, அதிர்ச்சியில் காசி நின்றுகொண்டிருந்தான். ஆம், காசியின் இஷ்ட தெய்வத்தின் வரம் வேறாய் இருந்தது. காசியின் கையில் பால்வன்னம் மாறாத அழகான பெண் தேவதை. மீண்டும் ஒண்டி குடுத்தனம், ரேஷன் க்யூ, வாடகை கட்ட முடியாமல் வீட்டுக்காரனின் ஏச்சு. காசியின் முன்
ஒவ்வொன்றாய் வந்து கொண்டிருந்தது. சற்றுமுன் அவன் கட்டிய கனவு கோட்டை சிதறிக் கொண்டிருந்தது. அப்போது தான் அவன் கவனித்தான், சுகந்தியின் பக்கத்தில் காத்தாயி, அவள் அருகில் அழகான ஆண் குழந்தை. காத்தாயி சுகந்தி போலவே மயக்க நிலையில் இருந்தாள். காசிக்கு இப்போது என்ன செய்வது என்று புரிந்துவிட்டது,
நல்லது கெட்டது அவன் யோசிக்கவில்லை, சுகந்தியை பற்றியும் அவன் யோசிக்கவில்லை. தன் குழந்தையை சுகந்தி அருகே வைத்து திரும்பி யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தான். வெளியே அந்த நர்ஸ் எங்கயோ போய்க்கொண்டிருந்தாள், உள்ளே இருந்த இன்னொரு நர்சும் இப்போது இல்லை. கன நேரத்தில் காசி அந்த காரியத்தை செய்தான், அவன் பெண் குழந்தை இப்போது காத்தாயி பக்கத்தில், இப்போது கண்ணை திறந்து காசியை பார்த்தது, அதை பார்க்க கூட திரானியற்றவனாய் காசி
திரும்பி கொண்டான். சுகந்திக்கு நினைவு வந்தது, தன் குழந்தையை பார்த்தாள், அருகில் இருந்த காசியை பார்த்து லேசாய் சிரித்தாள் அவள் கண்ணில் நீர்.
நேரம் விடியலை நெருங்கி கொண்டிருந்தது. காசி வெளியே உட்கார்ந்திருந்தான். உள்ளேயிருந்து நேற்று அவன் பார்த்த அந்த ஏழை ஜீவனில் ஒருத்தி காத்தாயியை கைத்தாங்கலாய் வெளியே நடத்தி கொண்டு வந்திருந்தாள், அவர்கள் பின்னே அந்த வெற்றிலை மனிதன் குழந்தையை ஏந்தி வந்தான். அவன் முகத்தில் ஒருவித மகிழ்ச்சி. காசிக்கு கடைசியாய் தன் குழந்தையை பார்க்கும் ஆசை வந்தது.
"ஐயா ஒரு நிமிஷம்"
வெற்றிலை மனிதன் நின்றான், காசி அவன் அருகே வந்து குழந்தையை வாங்கினான். குழந்தை தூங்கிகொண்டிருந்தது
"என்ன மன்னிச்சிடுமா... நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்ப...நீ கண்டிப்பா நல்லா வருவ....பெரிய படிப்பெல்லாம் படிப்ப.." காசியின் மனசாட்சி குழந்தையிடம் பேசியது. குழந்தையை அவனிடம் கொடுத்து தன் சட்டைபையில் கைவிட்டு பார்த்தான், நேற்று இருந்த இருபது ருபாயும் சுகந்தியின் மருந்திற்கு செலவானதை மறந்தவனாய். அவனிடம் இருந்தது அவன் மாமா எழுதிய அந்த கடிதம் மட்டுமே, அது வேறு அவன் மனதை மேலும் கிழித்தது.
"ஆண்டவா...." தன் கழுத்தை தொட்டான், கையில் அவன் சிறுவயதிலிருந்து போட்டு கொண்டிருக்கும் தங்க செயின் பட்டது. அதை எடுத்து குழந்தையின் கழுத்தில் போட்டான்.
"ஐயோ சாமி.. என்ன சாமி இதெல்லாம்... வேண்டாம் சாமி"
"இல்லைங்க... பரவாயில்ல என் குழந்தை பிறந்த நேரம் பிறந்திருக்கா..அந்த ஞாபகத்துக்கு இருக்கட்டும்... இதான் உங்க முதல் குழந்தையா"
"ஆமா சாமி... இது என் ரெண்டாவது சம்சாரத்துக்கு பொறந்தது...அதோ என் சம்சாரத்த கூட்டிக்கிட்டு போறாளே அவதான் என் மொத சம்சாரம்...அவளுக்கு கொழந்த இல்லாததால....நான் தவமா தவம் கிடந்து பெத்ததுங்க இது"
"முதல் குழந்தயா.. ஆம்பிள்ளையா இருந்தா நல்லா இருந்திருக்கும்"
"ஐயோ என்ன சாமி அப்படி சொல்லிட்டீங்க... எங்க தொழிலுக்கு பொம்பள குழந்த பொறந்தா..தாங்க நல்லது"
காசி பேச்சற்றவனாய் நின்றான்...குழந்தையுடன் தூரத்தில் காத்தாயியும் அவர்களும் போய்க்கொன்டிருந்தனர்.
"எங்க தொழிலுக்கு பொம்பள குழந்த பொறந்தா..தாங்க நல்லது"
அவன் கடைசியாய் சொன்ன அந்த வார்த்தைகள் காசியின் வாழ்நாள் முழுவதும் வலித்தது.
Wednesday, November 09, 2005
கொஞ்ச நேரம்...
வலைப் பதிவித்து பல நாள் ஆகிவிட்டது. முதற் காரணம் வேலைச் சுமை, இரண்டாவது காரணம் தீபாவளிக்கு வந்த தமிழ் படங்கள் எல்லாம் கண்டிப்பாய் பார்த்தாக வேண்டிய கடமை. சிவகாசி, மஜா, அது ஒரு கனாக் காலம் எல்லாம் பார்த்தாகி விட்டது. நான் மிகவும் எதிர்ப் பார்த்த தவமாய் தவமிருந்து வராதது கொஞ்சம் ஏமாற்றமே. பார்த்த படங்களில் என்னைக் கேட்டால் வர்த்தக ரீதியாக சிவகாசி தான் ஜெயிப்பார் என்று தோன்றுகிறது. வழக்கமான விஜய் மார்க் மசாலா தான் ஆனால் போர் அடிக்கவில்லை. அதிக பஞ்ச் டயலாக்குகள் இல்லாதது படத்திற்கு பலம். கஜினியைப் போலவே இதிலும் அசின் அடிக்கும் லூட்டிகள் 'ஜொள்ள'ப்பட வேண்டியவை. அந்நியனுக்கு பிறகு மஜாவாக விக்ரமை பார்க்க உட்கார்ந்தால், கொஞ்சம் எமாற்றமே. மலையாளப் படத்தை, மலையாளப் படமாகவே எடுத்திருக்கிறார்கள். அசின் வந்து போகிறார். "ஐயார் எட்டு நாட்டுக்கட்டை..." என்னும் குட்டுப்பாடல் மட்டுமே ரசிக்கும்படி இருக்கிறது. பார்த்த மூன்று படங்களிலே எனக்கு மிகவும் பிடித்தது பாலு மகேந்திராவின் அது ஒரு கனாக்காலம். தனுஷ், ப்ரியாமணியிடம் யதார்த்த நடிப்பை அழகாய் வாங்கியிருக்கிறார் இயக்குநர். சமீபத்தில் எங்கேயோ ஒரு வலையத்தின் விமர்சனத்தில், இந்தப் படம் ஏற்கனவே பாலு மகேந்திரா எடுத்த யாத்ரா என்னும் மலையாளப் படத்தின் அச்சு அசல் copy என்று படித்தேன். அதில் மோகன்லால் மற்றும் ஷோபா நடித்தார்களாம். இந்த யாத்ராவைப் பற்றி மெலும் அறிய (google) கூகிலிடும் போது, கமல் & மோகன்லாலின் நடிப்பை பற்றி, சென்னையில் வளர்ந்த மலையாள மற்றும் தமிழ் படம் பார்க்கும் ஒருத்தர் எழுதிய rediff article ஒன்றை படித்தேன். அதில் கமல் மோகன்லால் இவர்களின் முத்தான முன்று படங்களாய் (அனைத்தும் அவர்களுக்கு தேசிய விருது வாங்கி கொடுத்த படம்) மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன், கிரீடம், பரதம், வானப்ரஸ்தம் இவற்றை சொல்லியிருந்தார். இதில் ஒரு சோறு பதமாய் நாயகனில் மகனின் சடலத்தை பார்த்து கமல் அழுவதும், பரதம் படத்தில் தன் அண்ணனின் சடலத்தை பார்த்து மோகன்லால் அழுவதையும் compare செய்து, அவர்களின் நடிப்பை பிரமித்து எழுதியிருக்கிறார். இதை படித்தலிருந்து மோகன்லாலின் அந்த படங்களை பார்க்க ஆவலாய் இருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)