
பராசக்தி: நடிகர் திலகம் அறிமுகமான படம் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ரகசியமே. இதற்கு முன் வந்த படங்கள் எல்லாம் பாடல்களால் நிரப்பப்பட்டு, நடிகர்கள் தேமே என்று கேமரா முன் வந்து உணர்ச்சியில்லாமல் நான்கு வரி வசனம் பேசிவிட்டு போவார்கள். உதாரணத்திற்கு ஹரிதாஸ், சாந்தா சக்குபாய் என்று பல படங்கள் சொல்லலாம். பராசக்தி இந்த இலக்கணத்தை உடைத்து, கலைஞரின் அனல் பறக்கும் வசனங்கள், சிவாஜியின் ஒப்பற்ற நடிப்பு என்று ஒரு புதிய பரிமானத்தை கொடுத்தது. இதற்கு பிறகு வந்த படங்கள் எல்லாம் பராசக்தியையே பின்பற்ற தொடங்கின. சிவாஜி அவருக்கு பின் வந்த நடிகர்களுக்கு ஒரு இலக்கனம் வகுத்தார்.

பதினாறு வயதினிலே: ஸ்டுடியோக்குள்ளேயே சுருண்டு கிடந்த தமிழ் சினிமாவை நூறு சதவிகிதம் வெளிப்புற படப்பிடிப்புக்கு இழுத்து வந்த படம். ஹீரோ வில்லன் இமேஜை உடைத்து எல்லா கதாபாத்திரங்களும் இயல்பாக கதையோடு ஒன்றி நடித்த படம். வசனமாக இல்லாமல் காட்சிகளாக சினிமாவில் விஷயங்கள் சொல்லலாம் என்று முதலில் சொன்ன படம். இந்த படத்திற்கு பிறகு தான் கோடம்பாக்கத்திலிருந்து கேமராக்கள் பல வெளியே சென்று, கிராமங்களில் படங்களை எடுத்தது. இயக்குனர் இமயம் பாலச்சந்தரே இந்த படத்தின் பாதிப்பால், கோடம்பாக்கத்திலிருந்தது வெளியே வந்து தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை என நல்ல படங்கள் கொடுத்தார். தமிழ் சினிமாவில் என்பதுகளில் எடுக்கப்பட்ட சினிமாவிற்கு ஒரு முன்னுதாரனமாக இந்த படம் அமைந்தது.

ரோஜா: தொழில்நுட்பத்தால் இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவை இந்தியா முழுதும் திரும்பி பார்க்க வைத்த பெருமை மணிரத்னத்திற்கும் ஏ.ஆர் ரஹ்மானுக்கே சேரும். முக்கியமாக ஒளிப்பதிவு, ஒலிப்பதிவில் இந்த படம் ஒரு மைல்கல்லாய் அமைந்தது. முதன் முதலில் பழைய அலங்கார் தியேட்டரில் இந்த படத்தை பார்த்தேன், எனக்கு நன்றாய் ஞாபகம் இருக்கு, 'ஒரு வெள்ளை மழை' பாடலில் அந்த இசையும், ஒளிப்பதிவும் நம்மை காஷ்மீருக்கே அழைத்து செல்லும். தொன்னூறிலிருந்து இன்று வரை எடுக்கப்பட்ட, எடுக்கபடுகிற படங்களுக்கு ரோஜா தான் trendsetter.
6 comments:
மூன்றாவது...? முழுமையாக ஒத்துக்கொள்ள முடியவில்லை..போPகட்டும்.
அது சரி.."முதன் முதலில் பழைய அலங்கார் தியேட்டரில்.."// காமராசர் சாலை..?
என்னங்க காதல் படத்த விட்டுட்டீங்க. உங்க முதல் இரண்டு படமும் சரிங்க. ஆனா மூணாவது படம். எனக்கென்னவோ மணிரத்னம் நல்ல தொழில் நுட்பக் கலைஞனாத்தான் தெரிகிறார்.
கதை அமைப்பு வாரப்பத்திரிக்கை தொடர்கதை போல இல்லாம நல்ல நாவல் அளவு வேண்டாமா?
பாட்டில்லாம சினிமா வேண்டாம்ன்னு சொல்ல வரலை. பின்னணியில பாட்டு வரலாமே!
சீரியஸா கதை சொல்ல வரும் போது, கிழவி டான்ஸ் எல்லாம் கொஞ்சம் உதைக்குது. பாட்டோட, நடனத்தோட நிறையப் பேர் கதை சொல்லீட்டாங்க.
இவர் இப்பத்தான் ஆயுத எழுத்தில மாறியிருக்கிறார். மனசில பட்டது. தப்பா எடுத்துக்காதீங்க.
அன்புடன்
சாம்
//பாட்டில்லாம சினிமா வேண்டாம்ன்னு சொல்ல வரலை.//
பாட்டில்லாம சினிமா வேணும்னு சொல்ல வரலைன்னு எழுத நினைச்சேன்
அன்புடன்
சாம்
தருமி,
அலங்கார் தியேட்டர், அண்ணா சாலையில் LIC அருகில் இருந்தது.
சாம், தருமி,
நான் சொன்னது போல் ரோஜா படம் தான் முதன் முதலில் இந்திக்காரர்களை நம்மூர் பக்கம்
பார்க்கவைத்தது. ரோஜா படம் பிறகு தான் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் இங்கிருந்து பாலிவுட் போனார்கள். ரோஜா படத்தின் பிறகு தான் ஒலிப்பதிவில் நம் படங்கள் ஒரு standardஐ கடைப்பிடித்தன. தொழில் நுட்ப கோனத்தில் அந்த படத்தை மறுமுறை பாருங்கள், பின்னனி இசை, ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு என எல்லா வகையிலும் நிறைவு தரும் படம். மணிரத்னம் ரோஜாவிற்கு முன்பே தன் படங்களின் தொழில்நுட்பத் திறனில் கவனம் செலுத்தியிருந்தாலும், ரோஜாவில் தான் அதன் ஆழத்தையும் முழு பரினாமத்தையும் கான்பித்தார். ஏ.ஆர் ரஹ்மான் அதற்கு தோதாக கிடைத்தார். நான் சொன்ன மூன்று படங்களும் தமிழில் வந்த சிறந்த படங்களாக நான் பட்டியலிடவில்லை, ஆனால் ஒவ்வொரு காலத்திலும் இந்த மூன்று படங்களும் தமிழ் சினிமாவின் அடுத்த பகுதிக்கு கதவு திறந்துவிட்டன.
sooper ranjith!!
infact mauna ragam kooda oru trend setter thaan!!
heroinekku thani song enjoying nature concept vandhadhu..appa amma love edhirpu concept maari internal problems between guy and girl concept came here!!
nice post with pic to bring back memories!!
thanks priya,
I like personally like mouna raagam.
Post a Comment