Total Pageviews

Sunday, April 16, 2006

படத்தொகுப்பு - Editing



இன்று lord of the rings: return of the king special extended edition படத்தை என் ரூம்மேட் பார்க்கவேண்டும் என்று சொல்ல ஹாலிவுட் வீடியோ சென்று dvd எடுத்து பார்த்தோம். அதில் the making of the film பார்த்தபோது பீட்டர் ஜாக்சன் சொன்ன ஒரு விஷயம் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. இந்த படத்தின் முதல் வெளிப்புற காட்சிகளை எடுக்க நியுசிலாந்து சென்றனர் படக்குழுவினர். அங்கு ஒரு காட்சியையும் எடுக்க முடியாதபடி நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. சரி உட்புற காட்சியை எடுக்கலாமென முடிவு செய்து அவர்கள் எடுத்த முதல் காட்சி return of the kingல் வரும், frodo, smeagol, sam மூவரும் மலையேறும் காட்சி. அது smeagol and sam சன்டைபோட, frodo அவர்களை தடுக்கும் காட்சி, அதிலும் அவர்கள் எடுத்தது sam and frodo சம்பந்தபட்ட காட்சியே. இது நடந்தது 1999ல், பிறகு மழை நின்று மற்ற காட்சிகளை பதிவு செய்து, முதல் இரண்டு பாகங்களை வெளியிட்டு 2003ல் அந்த காட்சியின் மிச்சம் இருந்த smeagol சம்பந்தபட்ட காட்சியை எடுத்தனர். இந்த காட்சியை திரையில் பார்க்கும்போது நமக்கு இதை எடுத்த கால வித்தியாசம் தெரியாதபடி closeup shots வைத்து எடிட் செய்திருப்பார்கள். இது எடிட்டிங் என்னும் நுட்பம் செய்யும் வித்தைக்கு ஒரு எடுத்துக்காட்டு. பல பேருக்கு எடிட்டிங் என்பது என்ன என்று சரியாக தெரியாது. பலசமயம் படம் மிகவும் நீளமாக இருந்தாலோ அல்லது மிகவும் அலுப்பு தட்டினாலும் நாம் எடிட்டரை குறை கூறுவோம். ஒரு படத்தின் நீளத்திற்கோ, தொடர்ச்சிக்கோ எடிட்டர் எந்த வகையிலும் பொறுப்பு கிடையாது. அது இயக்குநரை போய் சேர வேண்டிய பழி. முதன் முதலில் சினிமாவில் எடிட்டிங்கை அறிமுக படுத்தியது ரஷ்யர்கள் தான். ஒரு படத்தில் நீதிமன்ற காட்சி, குற்றவாளிக்கு எதிராக சாட்சி சொல்பவனை கானோம், நீதி மன்றத்தில் எல்லோரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள், நேரமாகிக்கொண்டே இருக்கிறது, மக்கள் கவலைகொள்ள ஆரம்பித்தனர், சாட்சி சொல்பவன் அடிப்பட்டு நீதி மன்றத்தை நோக்கி ஓடி வந்துக்கொண்டிருக்கிறான். இந்த காட்சியை எடிட்டிங் வரும்முன்னே நான் சொன்னவற்றையெல்லாம் ஒரு அட்டையில் எழுதி கான்பித்து, பிறகு நீதிமன்றத்தை கான்பித்து காட்சியாக்கி விடுவார்கள். ஆனால் இந்த படத்தில் நீதிமன்றத்தில் நீதிபதி எதிர்தரப்பு வக்கீலை பார்க்க கட், வக்கீல் பின்னே உட்கார்ந்திருக்கும் மக்களை பார்க்க கட், அதில் ஒருவர் கவலையாய் அங்கு மாட்டியிருக்கும் பெரிய கடிகாரத்தை பார்க்க கட், கதிகாரம் பெரிய முள் ஒரு இடம் நகர கட், சாட்சி அடிப்பட்டு ஓடி வந்துக்கொண்டிருக்கிறான் கட், சாட்சி நீதிமன்றத்தில் நுழைகிறான். இது தான் முதன் முதலில் எடிட் செய்து காட்டப்பட்ட காட்சியாகும். இதை செய்தவர்கள்தான் ரஷ்யர்கள். எடிட்டிங்கை இன்னும் புரியும்படி விளக்க வேண்டுமானால்: ஒரு பார்க்கில் இருவர் பேசிக்கொள்வது போல் காட்சி. இதற்கு குறைந்தது மூன்று ஷாட்கள் வைத்து எடுக்க வேண்டும், முதலாமவர் பேசும் காட்சி இரண்டாமவர் பார்வையில் கேமராவை வைத்து எடுக்க வேண்டும், இரண்டாமவர் பேசும் காட்சி முதலாமவர் பார்வையில் கேமராவை வைத்து எடுக்க வேண்டும். வழக்கமாக இதை இன்னொருவர் தோள் பின் கேமராவை வைத்து, கேட்பவரின் தலை பின்னெ சிறுது தெரிவது மாதிரியும், பேசுபவரின் முகம் முழுதும் தெரிவதுமாய் எடுப்பார்கள். பிறகு இருவரும் தெரிவது போல் ஒரு மீடியம் ஷாட் வைப்பார்கள். இதை ஷ¥ட் செய்து எடிட்டரிடம் கொடுப்பார்கள். எடிட்டர் ஒரு சம்பாஷனையில் இந்த மூன்று ஷாட்களையும் சேர்த்து எடிட் செய்து தருவார். இப்படி செய்யாமல் ஒரே மீடியம் ஷாட்டில் இருவரும் பேசுவது போல் கான்பித்தால் நாடகம் பார்ப்பது போல் இருக்கும்.
ஒரு காலத்தில் எடிட்டிங் டேபிளில் படச்சுருளை ஓட்டி அப்படியே கத்தரியை வைத்து எடிட் செய்வார்கள். இப்போது AVID, movie magic என்று பல மென்பொருளை உபயோகிக்கிறார்கள். இதில் படச்சுருளை டிஜிட்டலாக மாற்றி கனினியில் ஏற்றி, எடிட் செய்து திரும்பவும் படச்சுருளாக மாற்றுவார்கள். என் நன்பன் செந்தில் new york film academyல் film making course படித்தான். அவன் செய்த ஒரு ப்ராஜக்ட்டிற்காக எடிட் செய்தது தான் நான் முதன் முதலில் எடிட்டிங் செய்வதை நேரில் பார்த்த அனுபவம். சுமார் ஒரு நிமிடம் ஓட வேண்டிய காட்சியை நாங்கள் மூன்று மணி நேரம் உட்கார்ந்து எடிட் செய்தோம். LOTR: return of the king படம் இரண்டு மில்லியன் அடி படச்சுருள் கொண்டது, முதன் முதலில் நான்கரை மணி நேரம் ஓடும் படமாக எடிட் செய்தனர். பின்னர் அதை மூன்று மணி நேரமாக எடிட் செய்தனர். நான் பார்த்த extended edition இரண்டு டிஸ்க்குகள், நான்கு மணி நேரம் ஓடியது. நம்மூர் படங்களில் சமீபத்தில் வந்த படங்களில் எடிட்டிங் ஹாலிவுட்டிற்கு நிகராக இருக்கிறது. காக்க காக்க, கஜினி போன்ற படங்களில், தமிழ் சினிமாவின் அடுத்த அத்தியாத்திற்கு செல்லும் அறிகுறி தெரிகிறது.

5 comments:

Maayaa said...

ranjith..
post romba arumaiyaa irundhadhu.. fulla porumaiyaa oru dhadavaikku rendu dhadavai padichen..
its so nice that u have a friend like that.. i heard abt him from kp as well but not all such technicalities...very informative post explaining layman abt all these.. keep them coming..

well, i am reading it late as i had been to india.. also i got email abt ur post (blog) on the magazine.. read it.. sorry that i could not respond back.. good work ..
good luck for future as well!!!

ranjit kalidasan said...

Thanks priya...good to see u back..my blog reading slow offlate.think i might catch it on.

Maayaa said...

enna ..postee kaanum???

Maayaa said...

again.. enna unga poste kaanum???

ranjit kalidasan said...

amma appa vandurukaanga priya..so busy in keeping them not bored and showing around places..would resume soon.