Total Pageviews

Saturday, December 02, 2006

பயணங்களில்..planes, trains and automobiles

போன வாரம் thanksgiving holidaysல் என் நன்பர் IBM செந்தில் அழைப்பை ஏற்று, நான் மிகவும் ரசிக்கும் நகரமான sanfrancisco சென்றேன். அங்கே dallasலிருந்து அவரின் இன்னொரு நன்பரும் சேர்ந்து கொள்ள, அப்படியே இயற்கையை ரசிக்கலாம் என்று, வடக்கு கலி·போர்னியாவில் இருக்கும் crater lake மற்றும் lava beds national park ஆகிய இடத்திற்கு சென்றோம். crater lake பார்டரை சற்று தாண்டி ஆரெகான் மாநிலத்தில் இருக்கிறது, lava beds கலி·போர்னியாவில் இருக்கிறது. இரண்டு இடமுமே மிக அழகாகவும் adventerousஆகவும் இருந்தது. அமேரிக்காவில்தான் பயணம் செய்ய எவ்வளவு வசதிகள். சற்று காலச்சக்கரத்தை சுழற்றி விட்டு பின்னோக்கி பார்த்தால், படிக்கின்ற காலத்தில் எவ்வளவு விடுமுறைகள், எவ்வளவு பயணங்கள்.

சிறு வயதில் விடுமுறை, பயணம் என்றாலே எனக்கு முதலில் ஞாபகம் வருவது, ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் நாங்கள் ஊருக்கு போகும் ரயில் பயணங்கள் தான். அப்பா எங்களுக்கு லீவ் விட்டு ஒரு வார்த்திற்குள்ளேயே ரயில் டிக்கெட் ரிசர்வ் செய்துவிடுவார். முக்கால்வாசி கம்பன் எக்ஸ்பிரஸ் தான். அதுதான் விடியற்காலையில் எங்கள் ஊரிற்கு போய் சேர்ந்து விடும். அத்தனை பேரையும் ஆட்டோவில் அள்ளிப்போட்டு மயிலாப்பூரிலிருந்து எழும்பூர் செல்லும் முதல் பயணம். வருடத்தில் அந்த ஒரு நாள் தான் நான் மயிலாப்பூரை விட்டு வெகு தூரம் வெளியே வந்த நாளாய் இருக்கும். வழக்கமான ரூட், ராயப்பேட்டை, சத்யமூர்த்தி பவன், அண்ணாசாலை, கமிஷனர் office வழியே எக்மோர். ஏனோ சிறு வயதில் அது ரொம்ப தூரம்போல் தெரியும். வழியில் வுட்லேண்ட்ஸ் தியேட்டரில் என்ன படம் ஓடுகிறது, ராஜ் தியேட்டரில் என்ன படம் ஓடுகிறது, ஜெயப்ரதா தியேட்டரில் என்ன படம் ஓடுகிறது என்று பார்த்துக்கொண்டே போவேன். எனக்குத் தெரிந்து ஜெயப்ரதா தியேட்டரில் 'திருட்டு புருஷன்' என்று ஒரு பட போஸ்டர், மூன்று வருடம் தொடர்ந்து ரயில் பிடிக்க போகும் போது பார்த்திருக்கிறேன். அது ஏன் எந்த ரெக்கார்டிலும் வரவில்லை என்று தெரியவில்லை. ஒரு வேளை பெரிய A போட்ட கோக்குமாக்கான படமாக இருந்ததால் இருக்குமோ. சரி போதும். மேட்டரை விட்டு மேட்டருக்கு வருகிறேன். ரயில் பயணங்களில் முதலில் நடப்பது எனக்கும் என் அண்ணன் தங்கைக்கும் நடக்கும் ஜன்னல் ஓர சீட் சன்டை தான். அந்த இரவு நேர பயணங்களிலும், வெளியே கும்மிருட்டாக ஒன்றுமே தெரியாமல் இருந்தாலும் எனக்கு ஜன்னலோர பயணம் தான் மிகவும் பிடிக்கும். எப்படியாவது ஒரு ஜன்னலை பிடித்துவிடுவேன். மற்றவர்கள் தூங்கினாலும் எனக்கு தூக்கம் வராது. வெளியே வேடிக்கை பார்த்து ஒவ்வொரு ரயில் ஸ்டேஷனையும், விட்டில் பூச்சிகள் பறக்க எறியும் ட்யூப்லைட்களையும் ரசித்துக்கொண்டே முழித்திருப்பேன். அப்போதெல்லாம் நிலக்கரி என்ஞின் இருந்த சமயம். கம்பன் எக்ஸ்பிரஸ் விழுப்புரம் வரை எலெக்ட்ரிக் என்ஞினிலும், விழுப்புறம் டு மயிலாடுதுறை வரை டீஸல் என்ஞினும் அதற்குமேல் கரி என்ஞினும் மாற்றி கோர்த்து ஓடும். காலை நாலு மணிக்கு மயிலாடுதுறையில் கரி என்ஞினை சூடு கிளப்பிக்கொண்டிருப்பார்கள். பிறகு அதை கம்பனில் மாட்டி இழுப்பார்கள். கரி என்ஞினில் போவதே ஒரு சுகம் தான். நன்றாக நம்மை தாலாட்டும். கம்பன் விடியற்காலை ஆறு அறரை மணிக்கெல்லாம் திருவாரூர் ஸ்டேஷன் வந்தடையும். திருவாரூர் வந்தவுடன் "மல்லி, முல்லை, ஜாதிமல்லி" என்று ஒருவர் கணீர் குரலோடு பூ விற்றுக்கொண்டிருப்பார். வேலை கிடைத்து கடைசியாக ரயிலில் நான் போன போது அந்த குரல் கேட்காதது ஒரு மெல்லிய சோகம்.

ரயில் பயணத்திற்கு அடுத்தது எனக்கு பிடித்தது பஸ் பயணம் தான். எட்டாவதில் தான் ஒரு முழு நீள பஸ் பயணத்தில் என் தாய்மாமாவோடு ஊருக்கு சென்றேன். அவர் அடிக்கடி மாற்றலாகி தமிழ்நாட்டையே சுற்றுவார், அதனால் அவருக்கு பஸ் பயணம் அத்துப்படி. சென்னை டு கடலூர், கடலூர் டு மயிலாடுதுறை, மயிலாடுதுறை டு திருவாரூர் என்று பல பஸ்கள் மாறி செல்வது தான் அவருக்கு பிடிக்கும். நம் ஊர் தூங்கா பஸ் ஸ்டாண்டுகள், ட்யூப்லைட்கள், டீக்கடைகள் அதில் கேட்கும் எம்ஜியார், இளையராஜா அல்லது திண்டுக்கள் லியோனி ஆடியோக்கள் இதெல்லாம் நம் அடையாளங்கள். இன்றைக்கும் இவைகள் ஏற்படுத்தும் ஒரு ambience தான் பயணிகளின் களைப்பை போக்குவதற்கு இன்றியமையாதவையாக இருக்கிறது. அதனை பழகியவர்களுக்கு அதை ரசிக்க தெரியும். நம் ஊர் பஸ் பயணங்களிலே நான் வியப்பது நம் ஓட்டுநர்களின் திறமையை தான். எட்டு அடி ரோட்டின் குறுகிய திருப்பங்களில் அவ்வளவு பெரிய வண்டியை லாவகமாக திருப்புவார்கள். அமேரிக்காவில், நியுயார்க் மன்ஹாட்டனில் வண்டி ஓட்டுபவர்கள் தான் உலகத்திலே சிறந்த ட்ரைவர்கள் என்று ஜம்பம் அடிப்பவர்களையெல்லாம் நம் பஸ்களில் ஒரு முறை ஏற்ற வேண்டும்.

ரயில், பஸ் பயணங்கள் பிறகு நான் ரசிப்பது மாட்டு வண்டி பயணம் தான். எங்கள் ஊரில் அப்போதெல்லாம் வீட்டுக்கு வீடு இருக்கும் மாட்டு வண்டியை வைத்து தான் அவரவர்களின் மதிப்பே. வெறும் கூரை இல்லாத fence மட்டுமே இருக்கும் பாறை வண்டிகள் ஒரு SUV போல், கூரை வத்து ஸ்டைல் ரிம் வத்து alloy wheelsஓடு காணப்படும் கூட்டு வண்டிகள் luxury sedanகள் போல். சித்திரையில் நடக்கும் பழயங்குடி மாரியம்மன் கோவில் திருவிழா தான் மாட்டு வண்டி மாநாட்டின் main destination. திருவிழாவிற்கு போகும்போது adventurousஆக SUVல் போய்விடுவேன், அங்கே நன்றாய் சுற்றி பார்த்து, விளையாடி டையர்டாகி திரும்பும்போது ஏதாவது ஒரு luxury sedanல் தொற்றி கொள்வேன். ஒரு முறை அத்தை ஊருக்கு சென்றபோது, மாமா தயவோடு மாட்டு வண்டியை ஓட்டியிருக்கிறேன். கையில் இருக்கும் மாட்டின் இரு கையிறு தான் steering and brakes, குச்சிதான் accelerator.

ரயில், பஸ், மாட்டு வண்டி பிறகு நான் ரசிப்பது அப்பாவோடு அம்பாசிடர் காரில் நான் மட்டுமே போகும் திருப்பதி ட்ரிப்கள். அது ஏன் என்னை மட்டும்? ஏனேன்றால் நான் தான் வீட்டிலே காரில் வாந்தி எடுக்காத ஒரே ஆள். அது என்னமோ எவ்வளவு imported models வந்தாலும் நம்ம ஊரில் அம்பாசிடைரை அடிச்சுக்க முடியாது. I believe it is 'the car' for indian roads and people. அம்பாசிடர் காரிலும் எனக்கு ஜன்னலோர பயணமே பிடிக்கும். ஜன்னலை திறந்து எதிர்காற்று முகத்தில் பட வேடிக்கை பார்த்துக்கொண்டே போவது மிகவும் பிடிக்கும். அதிலும் எப்போதும் அம்பாசிடரில் வரும் சின்ன பெட்ரோல் வாடையும் கூடவே ஜேசுதாஸ் பாடலும் மேலும் கிக் ஏற்றும்.

ரயில், பஸ், மாட்டுவண்டி, அம்பாசிடர் இதற்கு அடுத்தது நான் அதிகம் போனது ஆனால் அவ்வளவாக பிடிக்காதது விமான பயணம் தான். அது என்னவோ நான் மற்றதில் பயணித்ததை விட விமான பயணம் எனக்கு ஒரு சந்தோஷத்தை கொடுக்கவில்லை. ஒருவேளை economy classல் மட்டும் சென்றதாலோ, இல்லை நான் மற்றதிலும் இதிலும் பயணத்திதில் இருந்த வயது வித்தியாசமோ, என்ன காரணமோ தெரியவில்லை. ஒன்று மட்டும் உன்மை, இப்போது அசை போட்டு பார்த்தால், நான் சிறுவயதில் சென்ற ரயில், பஸ், மாட்டுவண்டி, அம்பாசிடர் பயணங்களில் வெறும் பயணத்தை மட்டுமே ரசித்தேன், மனதில் வேறு எதுவும் இருந்ததில்லை. ஆனால் இப்போது விமானத்தில் பறக்கும் போதெல்லாம் ஏனோ மனதில் வருந்திக்கொள்ள பல விஷயங்கள், எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள்.

3 comments:

Anonymous said...

Ayyo.. Ayyo.. Autograph Part 2 paatha maadhiri irukku thalaiva..
Yours.. Vinu.

Anonymous said...

kavalai padaatheyy sagaotharaa...karumaari kaathu nippa...

ranjit kalidasan said...

enna priya subjecta vithuthu, kavalaikku mattum comment adichirukeengalae...