Total Pageviews

Friday, August 10, 2007

நான் கடவுள் - வி.சி கதை



நகரம் விழாக்கோலம் பூசியிருந்தது. பேராசிரியர் ஆத்மா பிறந்த மண்ணில் பிறந்ததற்கு நகரவாசிகள் பெருமிதம் கொண்டனர். எல்லா ஊடகங்ககளையும் ஆத்மாவின் கண்டுபிடிப்புகளும் அதனால் நிகழும் சங்கிலி நிகழ்வுகளும் பிரதான இடம் பிடித்திருந்தன. இதனால் உலகமே ஒரு மறுமலர்ச்சி அடைந்தது. போலி சாமியார்கள், கல்ட் கோஷ்டிகள், மடாதிபதிகள் பாதி பேர் தலைமறைவாகிவிட்டனர், மீதி பேர் மக்களால் துரத்திக் கொல்லப்பட்டனர், மிச்சமிருந்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள். சில காலம் முன் நாத்திகம் பேசிய நாட்டில் கட்டப்பட்ட கோயில்கள் அனைத்தும் இடிக்கப்பட்டன. மற்ற நாடுகளில் இருந்த மத ஸ்தாபனங்கள் எல்லாம் வரலாற்று சின்னங்கள் என்பதால் அரசாங்ககளால் பாதுகாக்கப்பட்டன. அப்படி என்ன ஆத்மா கண்டுபிடித்துவிட்டார், 'கடவுள் இல்லை' என்பதை தான். அவரின் தொடர் ஆரிஜின் டியரிகள், இதுவரை கடவுள் பேயரால் கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிட்டன. உலகம் இவரின் கருத்துக்களை ஒத்துக்கொண்டன.

நகரின் மையத்தில் இருக்கும் பிரும்மாண்ட மைதானம். மொத்தம் ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள். எங்கு திரும்பினாலும் ஆத்மா மேலே பார்த்த மாதிரி தெரியும் படங்கள். உலகத்தின் முக்கிய தலைவர்கள் எல்லாம் இன்று ஒரே மேடையில் அத்மாவை கௌரவிக்க இருந்தனர். எல்லோரும் ஆத்மாவை புகழ்ந்து தள்ளினார்கள். "ஆத்மா தான் உலகத்தின் பார்த்த ஈடு இனையற்ற விஞ்ஞானி", "உலகத்தின் சாபக்கேட்டை போக்க வந்த மேதை", "மதங்களால் இனி நிகழவிருந்த பல போர்களையும், அழிவுகளையும் தடுத்த..." தலைவர்கள் அடுக்கிக் கொண்டே போனார்கள். எல்லாவற்றையும் சலனமற்ற ஒரு புன்னைகையுடன் கேட்டு கொண்டிருந்தார் ஆத்மா. முடிவாக பேச வந்தவர் தலைவர் ஒருவர் "மனித குலத்தையே காக்க வந்த இன்னொரு அவதாரம் தான் ஆத்மா, இனிமேல் நமக்கெல்லாம் அவர்தான் கடவுள்" என்றார். இதை கேட்டு மட்டும் அத்மாவின் முகத்தில் கவலை படர்ந்தன. முடிவாக பேச வந்த ஆத்மா "என்னை கடவுள் என்று கூறுவது அபத்தமான ஒன்று...என் வாழ்க்கையேல்லாம் அப்படி ஒன்று இல்லை என்பதை நிரூபிக்கவே அர்பனித்திருக்கிறேன்...எனவே இனி தயவு செய்து யாரும் அப்படி பேசாதீர்கள்.." வேண்டுகோள் வைத்தார்.

********

அது ஒரு மலை உச்சி, மேலே அத்மா நகரத்தை பார்த்துக்கொண்டிருந்தார். இரவு நகரத்தை போர்த்திக்கொண்டிருந்தது. கடந்த ஒரு மாதமாய் உலகம் கண்டிராத அமைதி. "எல்லாம் சுபம், சொல்ல செய்திகள் இல்லை" என்று பத்திரிகைகள் பல பக்கங்ளை குறைத்தன. இதெற்கெல்லாம் காரணமாய், உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கும் அத்மாவோ எதுவுமே தெரியாதது போல் நகரத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு ஒளி வட்டம் அத்மா இருந்த இடத்தை சூழ்ந்தது, உச்சிவெயிலில் தெரியும் சூரிய ஒளி அந்த இரவில் ஆத்மா இருந்த இடத்தினில் மட்டும். ஆத்மா அந்நாந்து மேலே பார்த்தார், அவர் கண்ணில் பயமில்லை.
"நன்றி ஆத்மா, நான் சொன்ன பணியை பிழையின்றி முடித்துவிட்டாய்"
"பிதாவே என்ன இது..நீங்கள் சொன்னதையெல்லாம் தானே நான் செய்தேன்..பரம்பொருள் நீ எனக்கு நன்றி சொல்வதா...தந்தையே இனி நீங்கள் எப்போது எங்களுடன் வருவீர்கள்"
"இனி உங்கள் உலகத்திற்கு நான் தேவையில்லை...எந்த தந்தையும் தன் பிள்ளை தன் பெயரால் அடித்து கொண்டு சாவதை விரும்பமாட்டான். நான் தானே உங்களுக்கு பிரச்சனை..அதனால் தான் என்னையே அழித்துக் கொண்டேன். இனியாவது நான் உங்களுக்கு விட்டு செல்லும் மனிதம் என்னும் கடவுளை கான முயற்சி செய்யுங்கள்..வருகிறேன்" ஒளி மறைந்தது.

Sunday, August 05, 2007

இது ரீமேக் சீசன்

சமீபத்தில் வெளியான 'நான் அவன் இல்லை' படம் தான் எனக்கு தெரிந்து தமிழில் வந்த, முதல் தமிழ் ரீமேக் படம். அதாவது இது ரீமேக் படம் தான் என்று சொல்லி எடுத்த முதல் படம். உன்மையில் கரகாட்டகாரன் தான் இந்த முயற்சியில் வந்த முதல் படம். தில்லானா மோகனாம்பாளை கரகாட்டகாரனாக எடுத்ததை கங்கை அமரன் மறுக்கவில்லை.
நான் அவன் இல்லை படத்தை தொடர்ந்து இப்போது பில்லா, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களை ரீமேக் செய்து வருவதாக தெரிகிறது. சரி, என்ன மாதிரியான படங்களை ரீமேக் செய்யலாம்? அதற்கு என்ன அளவுகோல்? என்னைக் கேட்டால் எந்த படம் எப்போது பார்த்தாலும் அலுக்காமல் நம்மை entertain செய்கிறதோ அந்த படத்தை தாராளமாய் காலத்திற்கு ஏற்றாற்போல் மாற்றி திரைக்கதை அமைத்து ரீமேக் செய்யலாம். ஆங்கிலத்தில் வந்த bourne identity, manchurian candidate, perfect murder, king kong, casino royale, ocean's twelve, all kings men என்று எனக்கு தெரிந்த பல படங்கள் ரீமேக் படங்களே. நான் இதுபோல தமிழ் படங்களில் ரீமேக் செய்வதற்கு ஒரு பட்டியல் யோசித்தபோது தோன்றிய படங்கள் இவை:

பாமா விஜயம் - அறுபதுகளில் வந்த பாலச்சந்தரின் கலக்கலான நகைச்சுவை படம். எப்போது பார்த்தாலும் எனக்கு அலுக்காத படம் இது. இப்போது இந்த படத்தை எடுத்தால் நாகேஷ் பாத்திரத்தில் விவேக் நடித்தால் நன்றாய் இருக்கும்.

எதிர்நீச்சல் - கருப்பு வெள்ளை கால தமிழ் சினிமாவில் பாலச்சந்தரின் தைரியமான முயற்சி இது. ஒரு காமெடியனை வைத்து முழு படத்தையும் பல அடுக்கு குடியிருப்பில் நகர்த்தியிருப்பார். இந்த படத்தை இப்போது ரீமேக்கினால், casting தான் சவாலான விஷயம்.

நூற்றுக்கு நூறு - இதுவும் பாலச்சந்தரின் படம் தான். உன்மையிலே மற்றுமொரு வித்தியாசமான முயற்சி. ஒரு கல்லூரி பேராசிரியர் மீது மாணவி தன்னை பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக அபாண்டமாய் புகார் சொல்கிறாள், அதை எப்படி பேராசிரியர் சமாளித்து, தான் நிரபராதி என்று நிரூபிக்கிறார் என்பதே கதை. அகிரா குரோசாவாவின் ரோஷோமான், ஏவிஎம்மின் அந்த நாள் படங்களை போல பல flashback sequences மூலம் திரைக்கதை அமைத்திருப்பார். இந்த கதையை கமலை வைத்து இப்போது எடுத்தால் நன்றாய் இருக்கும்.

தில்லுமுல்லு - நம் சூப்பர்ஸ்டாரின் கேரியரில் மறக்கமுடியாத சினிமா. ஹிந்தியில் வந்த கோல்மால் படத்தின் ரீமேக் என்றாலும், தமிழில் நல்ல காமெடியாய் திரைக்கதை அமைத்திருப்பார் பாலச்சந்தர். ரஜினியும் தேங்காய் ஸ்ரீனிவாசனும் சேர்ந்த hillarious கூட்டனி படத்திற்கு மிகப்பெரிய பலம். இப்போது விஜய், பிரகாஷ்ராஜ் வைத்து ரீமேக்கலாம்.

இன்று போய் நாளை வா - கதை, லாஜிக் இதையெல்லாம் மறந்து முழுக்க முழுக்க காமெடிக்காக எடுக்கப்பட்ட படம். மூன்று இளைஞர்கள் ஒரு பெண்ணை ப்ராக்கெட் போட அடிக்கும் லூட்டிகள் தான் கதை. பாக்யராஜின் master piece படம், திரைக்கதையிலும் வசனத்திலும் கலக்கியிருப்பார். அழகாக இதை இப்போது ரிமேக் செய்யலாம். பாக்யராஜின் பாத்திரத்திற்கு casting தேர்வு இந்த படத்தின் ரீமேக்கிற்கும் ஒரு சவால்.

ரங்கா - என்பதுகளின் ஆரம்பத்தில் வந்த, ரஜினி கராத்தே மணி நடித்த படம். மணி திருடனாய் தவறான வழியில் போகும் ஒரு ஆளாய் இருப்பார், ரஜினியோ தன் பெட்டியில் கீதை, திருக்குறள் வைத்து நல்ல பையனாய் இருப்பார். இருவரும் சந்திக்கின்றனர், இருவரும் அவரவர் கொள்கைகளை நியாயப்படுத்தி வாதாடுகின்றனர், படுத்து தூங்கும்போது இருவரும் மற்றவர் சொன்னதை யோசிக்கிறார்கள், விடிந்ததும் நல்லவரான ரஜினி திருடனாய் மாறுகிறார் கராத்தே மணிக்கு நன்றி சொல்லி ஒரு கடுதாசி வைத்து அவர் வீட்டிலேயே திருட்டை ஆரம்பிக்கிறார், கெட்டவரான மணி நல்லவராய் மாறுகிறார். இந்த ஒப்பனிங்கே போதும் ஒரு நல்ல திரைக்கதை அமைத்து ரிமேக் செய்ய.

Saturday, August 04, 2007

சொன்னதெல்லாம் இனிமை

ஆனந்த விகடனில் நடிகர் பிரகாஷ்ராஜின் 'சொல்லாததும் உன்மை' தொடர் இந்த வாரத்தோடு முடிவடைந்தது. பொதுவாக ஒரு நடிகரை அழைத்து பத்திரிகையில் எழுத சொன்னால், முக்கால்வாசி தங்கள் சுயபுராணம், சினிமா சாதனைகள் என்று எழுதி நம்மை கொல்வார்கள். ஆனால் பிரகாஷ்ராஜ், இதெல்லாம் இல்லாமல், மிகவும் எளிமையாக தன்னுடைய மனசாட்சியை வாசகர்களுடன் இந்த தொடர் முழுவதும் பகிர்ந்திருக்கிறார். உன்மையை சொன்னால், நான் இந்த தொடரின் எல்லா அத்தியாத்தையும் படித்ததில்லை. ஆனால் படித்த சில அத்தியாயத்தில் எல்லாம், சொல்ல வந்த விஷயத்தின் மூலம் என்னை பலமுறை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். வாழ்க்கையை பற்றி இவரின் outlook எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. 'ஒரு கனவன் மனைவி ஒருத்தருக்காக இன்னொருத்தர் தன் தேவைகளை, ஆசைகளை, ரசனைகளை விட்டுகொடுத்து வாழ்வது அவசியமா? எவ்வளவு நாள் அப்படி வாழ முடியும்? அப்படி இல்லாமல் ஒரே கூரையில் ஒவ்வொரும் சுதந்திரமாக நன்பர்களாய் ஏன் வாழக்கூடாது?' என்று கடைசி பகுதியில் இவர் கேட்கும் கேள்வி என்னை மிகவும் யோசிக்க வைக்கிறது.