Total Pageviews
Saturday, August 04, 2007
சொன்னதெல்லாம் இனிமை
ஆனந்த விகடனில் நடிகர் பிரகாஷ்ராஜின் 'சொல்லாததும் உன்மை' தொடர் இந்த வாரத்தோடு முடிவடைந்தது. பொதுவாக ஒரு நடிகரை அழைத்து பத்திரிகையில் எழுத சொன்னால், முக்கால்வாசி தங்கள் சுயபுராணம், சினிமா சாதனைகள் என்று எழுதி நம்மை கொல்வார்கள். ஆனால் பிரகாஷ்ராஜ், இதெல்லாம் இல்லாமல், மிகவும் எளிமையாக தன்னுடைய மனசாட்சியை வாசகர்களுடன் இந்த தொடர் முழுவதும் பகிர்ந்திருக்கிறார். உன்மையை சொன்னால், நான் இந்த தொடரின் எல்லா அத்தியாத்தையும் படித்ததில்லை. ஆனால் படித்த சில அத்தியாயத்தில் எல்லாம், சொல்ல வந்த விஷயத்தின் மூலம் என்னை பலமுறை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். வாழ்க்கையை பற்றி இவரின் outlook எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. 'ஒரு கனவன் மனைவி ஒருத்தருக்காக இன்னொருத்தர் தன் தேவைகளை, ஆசைகளை, ரசனைகளை விட்டுகொடுத்து வாழ்வது அவசியமா? எவ்வளவு நாள் அப்படி வாழ முடியும்? அப்படி இல்லாமல் ஒரே கூரையில் ஒவ்வொரும் சுதந்திரமாக நன்பர்களாய் ஏன் வாழக்கூடாது?' என்று கடைசி பகுதியில் இவர் கேட்கும் கேள்வி என்னை மிகவும் யோசிக்க வைக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment