மீண்டும் நான் பதிவு செய்ய வந்திருக்கிறேன்.என் கடைசி வலைப்பதிவு 2007 செப்டம்பரில், ஏன் இவ்வளவு இடைவெளி? பதில் ரொம்ப சுலபம். செப்டம்பர் அடுத்து அக்டோபரில் தான் "என்ன என்ன்...தேடி வந்த அஞ்சலயை".. "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்". அக்டோபரில் ஆரம்பித்த உறவு நவம்பர் 15ல் நிச்சயமாகி உறுதியாச்சு..பிறகு அடுத்த ஆறுமாதம் இமெயில், SMS,web chat, voice chat, twitter, orkut, அவரைக்காய்..என்ன இன்னபிற இத்தியாதிகளால் இரவு பகல் பாராமல், இரவு எது பகல் எது என்று தெரியாமல் கழிந்தது. "மே மாதம் 2008ல்" மேஜர் ஆனேனோ இல்லையோ, பேஜாராய் மாப்பிள்ளையானேன். கல்யாணம் ஆகி பிறகு இல்லறம் வளர்க்க, நல்ல நேரமெல்லாம் செலவாயிற்று..."அப்புறம் எப்படி இப்ப blog எழுத வந்திருக்கே"ன்னு நீங்க கேட்டா..."வாழ்க்கை ஒரு வட்டம்"ம்னு தான் என்னால சொல்ல முடியும்..ஹிஹி..
Anyway, இந்த இடைப்பட்ட காலத்தில் மேற்சொன்ன விஷயங்களை தவிர, பல விஷயங்களும் நடந்தது...என் வேலையைவிட்டு..மீண்டும் இருந்த இடத்துக்கே வந்துவிட்டேன்...குளிர் கொளுத்துற (அட நல்லாயிருக்கே..)..wisconsin வந்தாச்சு.., அமேரிக்க தேர்தல் முடிஞ்சாச்சு, பொருளாதாரம் பொருள் அற்ற ஆதாரமாச்சு...நிறைய நடந்தாச்சு. சரி, இனிமே கொஞ்சம் வலைப்போம்னு..முடிவுக்கு வந்துட்டேன்...ஏன்னா என் கற்பனைக் குதிர லொள்ளு தாங்க முடியல.."எப்படா என்ன வெளிய விடுவே"ன்னு மிரட்ட ஆரம்பிச்சிடுச்சு..சரி என்ன எழுதலாம்?...என்ன எழுதினாலும் கொஞ்சம் சுவாரஸ்யமா எழுதலாம்னு முடிவுக்கு வந்துட்டேன்..officialஆ என்னோட வலைப்பதிவு பெயர மாத்திட்டேன்..நம்ம taglineஏ வலைப்படிவு பெயரா வச்சிட்டேன்...பார்க்கலாம்
என் உளறல்கள்
என் உளறல்கள்...எண்ணச் சிதறல்கள்
Total Pageviews
Thursday, January 08, 2009
Thursday, September 06, 2007
சக் தே இந்தியா - தமிழில்
சமீபத்தில் நான் பார்த்து ரசித்த படம் சக் தே இந்தியா. தரமான படம். ஷாருக்கான் என்ற அற்புதமான நடிகன் எப்படி மற்ற படங்களில் வீணடிக்கப்படுகிறான் என்பதற்கு இந்த படம் நல்ல உதாரணம். இந்த படத்தை பற்றி இந்த பதிவில் நான் விமர்சிக்க போவதில்லை. இந்த படத்தை பற்றி என் நன்பர் செந்திலிடம் பேசும் போது, நாங்கள் இருவருமே இது போல ஒரு படம் ஏன் தமிழில் வருவதில்லை என்று விவாதித்தோம். அப்போது வேடிக்கையாக நம் தமிழ் நடிகர்கள் இந்த மாதிரி படத்தில் நடித்தால் கதை எப்படி இருக்கும் என்று யோசித்தோம். அதை தான் இப்போது இங்கே பகிர்ந்துகொள்ள போகிறேன்.
கேப்டன் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த்: நம் கேப்டன் இந்த படத்தில் நடித்திருந்தால், 16 பெண்களுக்கும் ஹாக்கி மட்டை பதில், ஏகே 47 துப்பாக்கி பயிற்சி கொடுத்திருப்பார். பின்பு அனைவருடன் ஒரு டூயட் பாடி முடித்து, நம் நாட்டை பற்றி விலாவரியாக statistics சொல்லி முடித்து, எல்லாரையும் கூப்பிட்டு போய் காஷ்மீரில் baakistaan தீவரவாதிகிளுடன் சண்டை போடுவார். படத்தில் இவரோட பன்ச் லைன் "penalty தமில்ல எனக்கு பிடிக்காத வார்த்த.." படத்திற்கு அட்டகாசமாக "சுக்கு டா இந்தியா" என்று பெயர் வைத்திருப்பார். சன் டிவியில், கால் மேல் கால் போட்டுகொண்டு "சுக்கு டா இந்தியா...காரம் இல்லை" என்று விமர்சனம் செய்வார்கள்.
கமல்ஹாசன்: 16 பெண்களில், பத்து கெட்டப்பை அவரே போட்டிருப்பார். கோச்சாக 'நம்மவர்' தாடி வைத்துகொண்டு வந்திருப்பார். அவருடைய ·ப்ளாஷ்பேக்கை ஒருவர் பாகிஸ்தானிடம் அவர் பெட்டி வாங்கிக்கொண்டு இந்தியாவுக்கு துரோகம் செய்துவிட்டார் என்று வில்லன் ரேஞ்சுக்கு சொல்லுவார், ஆனால் அவரோ அதெ ·ப்ளாஷ்பேக் காட்சியை கேமிரா அங்கிளை மாற்றி வேறு மாதிரி சொல்லி அவர் நிரபராதி என்று நிரூபிப்பார்.
சூப்பர்ஸ்டார்: தலைவரை 16 பெண்களும் ஒருதலையாக காதலிப்பார்கள், தலைவரின் பெற்றோர்கள் அந்த பதினாறில் ஒன்றை செலக்ட் செய்ய சொல்லுவார்கள், ஆனால் தலைவரோ தனக்கு 'தமிழ் கலாச்சாரதோட ஒரு பெண் தான் வேண்டும்' என்று சொல்லி, ஹாக்கி ஸ்டேடியம் கூட்டிகொண்டிருக்கும் பெண்ணை டாவடிப்பார். வில்லன் ஹாக்கி மேட்சை fix செய்யும் ப்ரோக்கராக வருவார். அவர் தலைவரிடம் தோற்றுபோக சொல்ல, தலைவரோ மாட்டேன் என்று சொல்ல, வில்லன் வில்லத்தனம் செய்து தலைவரை பாகிஸ்தான் கையாள் என்று முத்திரை குற்றி விடுவான். தலைவர் பிறகு ஹாக்கி மேட்சில் புரளும் பெட்டிங் பணத்தை எல்லாம் வில்லன்களிடம் வெளியே கொண்டு வந்து, ஊருக்கு ஊர் ஹாக்கி ஸ்டேடியம் கட்டுவார். படத்தின் பெயர் "சிவாஜி the coach". படத்தில் இவரோட பன்ச் லைன் "goalஅ போட்டாலே ச்சும்மா அதிருதுல்ல..."
விக்ரம்: 'நான் கோச் இல்ல...பொறுக்கி' இது தான் படத்தில் இவரோட பஞ்ச் லைன். ரேய்மண்ட் க்ளாஸ் போட்டுக்கொண்டு முறுக்காக 16 பெண்களுக்கும் கோச் கொடுப்பார். அதில் ஒரு மாமி ·பிகரை மட்டும் காதலிப்பார். இங்கேயும் வில்லன் மேட்ச் ·பிக்ஸிங் பார்ட்டி. வில்லன் லஞ்சம் கொடுக்க, அதை வாங்கிக்கொள்வார், க்ளைமாக்சில் தான் அந்த பணத்தையெல்லாம் பிரதமர் ஹாக்கி நிதிக்கு அவர் கொடுத்தது தெரியும்.
சிம்பு: தம்பி சிம்புவை ஹாக்கி ஆடும் பெண் ஒருத்தி ஏமாற்றிவிட, அதற்கு பழிவாங்க அண்ணன் சிம்பு கோச்சாக பொய் சொல்லிக்கொண்டு 16 பெண்களையும் ஏமாற்றுவார். அடிக்கடி "யார் முதல்ல கோல் போடுறாங்கன்னு முக்கியம் இல்ல..கடைசில் யார் நிறைய கோல் போடுறாங்கன்னு தான் முக்கியம்.." என்று விரலை மடக்கி மடக்கி சொல்லுவார்.
கேப்டன் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த்: நம் கேப்டன் இந்த படத்தில் நடித்திருந்தால், 16 பெண்களுக்கும் ஹாக்கி மட்டை பதில், ஏகே 47 துப்பாக்கி பயிற்சி கொடுத்திருப்பார். பின்பு அனைவருடன் ஒரு டூயட் பாடி முடித்து, நம் நாட்டை பற்றி விலாவரியாக statistics சொல்லி முடித்து, எல்லாரையும் கூப்பிட்டு போய் காஷ்மீரில் baakistaan தீவரவாதிகிளுடன் சண்டை போடுவார். படத்தில் இவரோட பன்ச் லைன் "penalty தமில்ல எனக்கு பிடிக்காத வார்த்த.." படத்திற்கு அட்டகாசமாக "சுக்கு டா இந்தியா" என்று பெயர் வைத்திருப்பார். சன் டிவியில், கால் மேல் கால் போட்டுகொண்டு "சுக்கு டா இந்தியா...காரம் இல்லை" என்று விமர்சனம் செய்வார்கள்.
கமல்ஹாசன்: 16 பெண்களில், பத்து கெட்டப்பை அவரே போட்டிருப்பார். கோச்சாக 'நம்மவர்' தாடி வைத்துகொண்டு வந்திருப்பார். அவருடைய ·ப்ளாஷ்பேக்கை ஒருவர் பாகிஸ்தானிடம் அவர் பெட்டி வாங்கிக்கொண்டு இந்தியாவுக்கு துரோகம் செய்துவிட்டார் என்று வில்லன் ரேஞ்சுக்கு சொல்லுவார், ஆனால் அவரோ அதெ ·ப்ளாஷ்பேக் காட்சியை கேமிரா அங்கிளை மாற்றி வேறு மாதிரி சொல்லி அவர் நிரபராதி என்று நிரூபிப்பார்.
சூப்பர்ஸ்டார்: தலைவரை 16 பெண்களும் ஒருதலையாக காதலிப்பார்கள், தலைவரின் பெற்றோர்கள் அந்த பதினாறில் ஒன்றை செலக்ட் செய்ய சொல்லுவார்கள், ஆனால் தலைவரோ தனக்கு 'தமிழ் கலாச்சாரதோட ஒரு பெண் தான் வேண்டும்' என்று சொல்லி, ஹாக்கி ஸ்டேடியம் கூட்டிகொண்டிருக்கும் பெண்ணை டாவடிப்பார். வில்லன் ஹாக்கி மேட்சை fix செய்யும் ப்ரோக்கராக வருவார். அவர் தலைவரிடம் தோற்றுபோக சொல்ல, தலைவரோ மாட்டேன் என்று சொல்ல, வில்லன் வில்லத்தனம் செய்து தலைவரை பாகிஸ்தான் கையாள் என்று முத்திரை குற்றி விடுவான். தலைவர் பிறகு ஹாக்கி மேட்சில் புரளும் பெட்டிங் பணத்தை எல்லாம் வில்லன்களிடம் வெளியே கொண்டு வந்து, ஊருக்கு ஊர் ஹாக்கி ஸ்டேடியம் கட்டுவார். படத்தின் பெயர் "சிவாஜி the coach". படத்தில் இவரோட பன்ச் லைன் "goalஅ போட்டாலே ச்சும்மா அதிருதுல்ல..."
விக்ரம்: 'நான் கோச் இல்ல...பொறுக்கி' இது தான் படத்தில் இவரோட பஞ்ச் லைன். ரேய்மண்ட் க்ளாஸ் போட்டுக்கொண்டு முறுக்காக 16 பெண்களுக்கும் கோச் கொடுப்பார். அதில் ஒரு மாமி ·பிகரை மட்டும் காதலிப்பார். இங்கேயும் வில்லன் மேட்ச் ·பிக்ஸிங் பார்ட்டி. வில்லன் லஞ்சம் கொடுக்க, அதை வாங்கிக்கொள்வார், க்ளைமாக்சில் தான் அந்த பணத்தையெல்லாம் பிரதமர் ஹாக்கி நிதிக்கு அவர் கொடுத்தது தெரியும்.
சிம்பு: தம்பி சிம்புவை ஹாக்கி ஆடும் பெண் ஒருத்தி ஏமாற்றிவிட, அதற்கு பழிவாங்க அண்ணன் சிம்பு கோச்சாக பொய் சொல்லிக்கொண்டு 16 பெண்களையும் ஏமாற்றுவார். அடிக்கடி "யார் முதல்ல கோல் போடுறாங்கன்னு முக்கியம் இல்ல..கடைசில் யார் நிறைய கோல் போடுறாங்கன்னு தான் முக்கியம்.." என்று விரலை மடக்கி மடக்கி சொல்லுவார்.
Friday, August 10, 2007
நான் கடவுள் - வி.சி கதை

நகரம் விழாக்கோலம் பூசியிருந்தது. பேராசிரியர் ஆத்மா பிறந்த மண்ணில் பிறந்ததற்கு நகரவாசிகள் பெருமிதம் கொண்டனர். எல்லா ஊடகங்ககளையும் ஆத்மாவின் கண்டுபிடிப்புகளும் அதனால் நிகழும் சங்கிலி நிகழ்வுகளும் பிரதான இடம் பிடித்திருந்தன. இதனால் உலகமே ஒரு மறுமலர்ச்சி அடைந்தது. போலி சாமியார்கள், கல்ட் கோஷ்டிகள், மடாதிபதிகள் பாதி பேர் தலைமறைவாகிவிட்டனர், மீதி பேர் மக்களால் துரத்திக் கொல்லப்பட்டனர், மிச்சமிருந்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள். சில காலம் முன் நாத்திகம் பேசிய நாட்டில் கட்டப்பட்ட கோயில்கள் அனைத்தும் இடிக்கப்பட்டன. மற்ற நாடுகளில் இருந்த மத ஸ்தாபனங்கள் எல்லாம் வரலாற்று சின்னங்கள் என்பதால் அரசாங்ககளால் பாதுகாக்கப்பட்டன. அப்படி என்ன ஆத்மா கண்டுபிடித்துவிட்டார், 'கடவுள் இல்லை' என்பதை தான். அவரின் தொடர் ஆரிஜின் டியரிகள், இதுவரை கடவுள் பேயரால் கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிட்டன. உலகம் இவரின் கருத்துக்களை ஒத்துக்கொண்டன.
நகரின் மையத்தில் இருக்கும் பிரும்மாண்ட மைதானம். மொத்தம் ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள். எங்கு திரும்பினாலும் ஆத்மா மேலே பார்த்த மாதிரி தெரியும் படங்கள். உலகத்தின் முக்கிய தலைவர்கள் எல்லாம் இன்று ஒரே மேடையில் அத்மாவை கௌரவிக்க இருந்தனர். எல்லோரும் ஆத்மாவை புகழ்ந்து தள்ளினார்கள். "ஆத்மா தான் உலகத்தின் பார்த்த ஈடு இனையற்ற விஞ்ஞானி", "உலகத்தின் சாபக்கேட்டை போக்க வந்த மேதை", "மதங்களால் இனி நிகழவிருந்த பல போர்களையும், அழிவுகளையும் தடுத்த..." தலைவர்கள் அடுக்கிக் கொண்டே போனார்கள். எல்லாவற்றையும் சலனமற்ற ஒரு புன்னைகையுடன் கேட்டு கொண்டிருந்தார் ஆத்மா. முடிவாக பேச வந்தவர் தலைவர் ஒருவர் "மனித குலத்தையே காக்க வந்த இன்னொரு அவதாரம் தான் ஆத்மா, இனிமேல் நமக்கெல்லாம் அவர்தான் கடவுள்" என்றார். இதை கேட்டு மட்டும் அத்மாவின் முகத்தில் கவலை படர்ந்தன. முடிவாக பேச வந்த ஆத்மா "என்னை கடவுள் என்று கூறுவது அபத்தமான ஒன்று...என் வாழ்க்கையேல்லாம் அப்படி ஒன்று இல்லை என்பதை நிரூபிக்கவே அர்பனித்திருக்கிறேன்...எனவே இனி தயவு செய்து யாரும் அப்படி பேசாதீர்கள்.." வேண்டுகோள் வைத்தார்.
********
அது ஒரு மலை உச்சி, மேலே அத்மா நகரத்தை பார்த்துக்கொண்டிருந்தார். இரவு நகரத்தை போர்த்திக்கொண்டிருந்தது. கடந்த ஒரு மாதமாய் உலகம் கண்டிராத அமைதி. "எல்லாம் சுபம், சொல்ல செய்திகள் இல்லை" என்று பத்திரிகைகள் பல பக்கங்ளை குறைத்தன. இதெற்கெல்லாம் காரணமாய், உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கும் அத்மாவோ எதுவுமே தெரியாதது போல் நகரத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு ஒளி வட்டம் அத்மா இருந்த இடத்தை சூழ்ந்தது, உச்சிவெயிலில் தெரியும் சூரிய ஒளி அந்த இரவில் ஆத்மா இருந்த இடத்தினில் மட்டும். ஆத்மா அந்நாந்து மேலே பார்த்தார், அவர் கண்ணில் பயமில்லை.
"நன்றி ஆத்மா, நான் சொன்ன பணியை பிழையின்றி முடித்துவிட்டாய்"
"பிதாவே என்ன இது..நீங்கள் சொன்னதையெல்லாம் தானே நான் செய்தேன்..பரம்பொருள் நீ எனக்கு நன்றி சொல்வதா...தந்தையே இனி நீங்கள் எப்போது எங்களுடன் வருவீர்கள்"
"இனி உங்கள் உலகத்திற்கு நான் தேவையில்லை...எந்த தந்தையும் தன் பிள்ளை தன் பெயரால் அடித்து கொண்டு சாவதை விரும்பமாட்டான். நான் தானே உங்களுக்கு பிரச்சனை..அதனால் தான் என்னையே அழித்துக் கொண்டேன். இனியாவது நான் உங்களுக்கு விட்டு செல்லும் மனிதம் என்னும் கடவுளை கான முயற்சி செய்யுங்கள்..வருகிறேன்" ஒளி மறைந்தது.
Sunday, August 05, 2007
இது ரீமேக் சீசன்
சமீபத்தில் வெளியான 'நான் அவன் இல்லை' படம் தான் எனக்கு தெரிந்து தமிழில் வந்த, முதல் தமிழ் ரீமேக் படம். அதாவது இது ரீமேக் படம் தான் என்று சொல்லி எடுத்த முதல் படம். உன்மையில் கரகாட்டகாரன் தான் இந்த முயற்சியில் வந்த முதல் படம். தில்லானா மோகனாம்பாளை கரகாட்டகாரனாக எடுத்ததை கங்கை அமரன் மறுக்கவில்லை.
நான் அவன் இல்லை படத்தை தொடர்ந்து இப்போது பில்லா, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களை ரீமேக் செய்து வருவதாக தெரிகிறது. சரி, என்ன மாதிரியான படங்களை ரீமேக் செய்யலாம்? அதற்கு என்ன அளவுகோல்? என்னைக் கேட்டால் எந்த படம் எப்போது பார்த்தாலும் அலுக்காமல் நம்மை entertain செய்கிறதோ அந்த படத்தை தாராளமாய் காலத்திற்கு ஏற்றாற்போல் மாற்றி திரைக்கதை அமைத்து ரீமேக் செய்யலாம். ஆங்கிலத்தில் வந்த bourne identity, manchurian candidate, perfect murder, king kong, casino royale, ocean's twelve, all kings men என்று எனக்கு தெரிந்த பல படங்கள் ரீமேக் படங்களே. நான் இதுபோல தமிழ் படங்களில் ரீமேக் செய்வதற்கு ஒரு பட்டியல் யோசித்தபோது தோன்றிய படங்கள் இவை:
பாமா விஜயம் - அறுபதுகளில் வந்த பாலச்சந்தரின் கலக்கலான நகைச்சுவை படம். எப்போது பார்த்தாலும் எனக்கு அலுக்காத படம் இது. இப்போது இந்த படத்தை எடுத்தால் நாகேஷ் பாத்திரத்தில் விவேக் நடித்தால் நன்றாய் இருக்கும்.
எதிர்நீச்சல் - கருப்பு வெள்ளை கால தமிழ் சினிமாவில் பாலச்சந்தரின் தைரியமான முயற்சி இது. ஒரு காமெடியனை வைத்து முழு படத்தையும் பல அடுக்கு குடியிருப்பில் நகர்த்தியிருப்பார். இந்த படத்தை இப்போது ரீமேக்கினால், casting தான் சவாலான விஷயம்.
நூற்றுக்கு நூறு - இதுவும் பாலச்சந்தரின் படம் தான். உன்மையிலே மற்றுமொரு வித்தியாசமான முயற்சி. ஒரு கல்லூரி பேராசிரியர் மீது மாணவி தன்னை பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக அபாண்டமாய் புகார் சொல்கிறாள், அதை எப்படி பேராசிரியர் சமாளித்து, தான் நிரபராதி என்று நிரூபிக்கிறார் என்பதே கதை. அகிரா குரோசாவாவின் ரோஷோமான், ஏவிஎம்மின் அந்த நாள் படங்களை போல பல flashback sequences மூலம் திரைக்கதை அமைத்திருப்பார். இந்த கதையை கமலை வைத்து இப்போது எடுத்தால் நன்றாய் இருக்கும்.
தில்லுமுல்லு - நம் சூப்பர்ஸ்டாரின் கேரியரில் மறக்கமுடியாத சினிமா. ஹிந்தியில் வந்த கோல்மால் படத்தின் ரீமேக் என்றாலும், தமிழில் நல்ல காமெடியாய் திரைக்கதை அமைத்திருப்பார் பாலச்சந்தர். ரஜினியும் தேங்காய் ஸ்ரீனிவாசனும் சேர்ந்த hillarious கூட்டனி படத்திற்கு மிகப்பெரிய பலம். இப்போது விஜய், பிரகாஷ்ராஜ் வைத்து ரீமேக்கலாம்.
இன்று போய் நாளை வா - கதை, லாஜிக் இதையெல்லாம் மறந்து முழுக்க முழுக்க காமெடிக்காக எடுக்கப்பட்ட படம். மூன்று இளைஞர்கள் ஒரு பெண்ணை ப்ராக்கெட் போட அடிக்கும் லூட்டிகள் தான் கதை. பாக்யராஜின் master piece படம், திரைக்கதையிலும் வசனத்திலும் கலக்கியிருப்பார். அழகாக இதை இப்போது ரிமேக் செய்யலாம். பாக்யராஜின் பாத்திரத்திற்கு casting தேர்வு இந்த படத்தின் ரீமேக்கிற்கும் ஒரு சவால்.
ரங்கா - என்பதுகளின் ஆரம்பத்தில் வந்த, ரஜினி கராத்தே மணி நடித்த படம். மணி திருடனாய் தவறான வழியில் போகும் ஒரு ஆளாய் இருப்பார், ரஜினியோ தன் பெட்டியில் கீதை, திருக்குறள் வைத்து நல்ல பையனாய் இருப்பார். இருவரும் சந்திக்கின்றனர், இருவரும் அவரவர் கொள்கைகளை நியாயப்படுத்தி வாதாடுகின்றனர், படுத்து தூங்கும்போது இருவரும் மற்றவர் சொன்னதை யோசிக்கிறார்கள், விடிந்ததும் நல்லவரான ரஜினி திருடனாய் மாறுகிறார் கராத்தே மணிக்கு நன்றி சொல்லி ஒரு கடுதாசி வைத்து அவர் வீட்டிலேயே திருட்டை ஆரம்பிக்கிறார், கெட்டவரான மணி நல்லவராய் மாறுகிறார். இந்த ஒப்பனிங்கே போதும் ஒரு நல்ல திரைக்கதை அமைத்து ரிமேக் செய்ய.
நான் அவன் இல்லை படத்தை தொடர்ந்து இப்போது பில்லா, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களை ரீமேக் செய்து வருவதாக தெரிகிறது. சரி, என்ன மாதிரியான படங்களை ரீமேக் செய்யலாம்? அதற்கு என்ன அளவுகோல்? என்னைக் கேட்டால் எந்த படம் எப்போது பார்த்தாலும் அலுக்காமல் நம்மை entertain செய்கிறதோ அந்த படத்தை தாராளமாய் காலத்திற்கு ஏற்றாற்போல் மாற்றி திரைக்கதை அமைத்து ரீமேக் செய்யலாம். ஆங்கிலத்தில் வந்த bourne identity, manchurian candidate, perfect murder, king kong, casino royale, ocean's twelve, all kings men என்று எனக்கு தெரிந்த பல படங்கள் ரீமேக் படங்களே. நான் இதுபோல தமிழ் படங்களில் ரீமேக் செய்வதற்கு ஒரு பட்டியல் யோசித்தபோது தோன்றிய படங்கள் இவை:
பாமா விஜயம் - அறுபதுகளில் வந்த பாலச்சந்தரின் கலக்கலான நகைச்சுவை படம். எப்போது பார்த்தாலும் எனக்கு அலுக்காத படம் இது. இப்போது இந்த படத்தை எடுத்தால் நாகேஷ் பாத்திரத்தில் விவேக் நடித்தால் நன்றாய் இருக்கும்.
எதிர்நீச்சல் - கருப்பு வெள்ளை கால தமிழ் சினிமாவில் பாலச்சந்தரின் தைரியமான முயற்சி இது. ஒரு காமெடியனை வைத்து முழு படத்தையும் பல அடுக்கு குடியிருப்பில் நகர்த்தியிருப்பார். இந்த படத்தை இப்போது ரீமேக்கினால், casting தான் சவாலான விஷயம்.
நூற்றுக்கு நூறு - இதுவும் பாலச்சந்தரின் படம் தான். உன்மையிலே மற்றுமொரு வித்தியாசமான முயற்சி. ஒரு கல்லூரி பேராசிரியர் மீது மாணவி தன்னை பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக அபாண்டமாய் புகார் சொல்கிறாள், அதை எப்படி பேராசிரியர் சமாளித்து, தான் நிரபராதி என்று நிரூபிக்கிறார் என்பதே கதை. அகிரா குரோசாவாவின் ரோஷோமான், ஏவிஎம்மின் அந்த நாள் படங்களை போல பல flashback sequences மூலம் திரைக்கதை அமைத்திருப்பார். இந்த கதையை கமலை வைத்து இப்போது எடுத்தால் நன்றாய் இருக்கும்.
தில்லுமுல்லு - நம் சூப்பர்ஸ்டாரின் கேரியரில் மறக்கமுடியாத சினிமா. ஹிந்தியில் வந்த கோல்மால் படத்தின் ரீமேக் என்றாலும், தமிழில் நல்ல காமெடியாய் திரைக்கதை அமைத்திருப்பார் பாலச்சந்தர். ரஜினியும் தேங்காய் ஸ்ரீனிவாசனும் சேர்ந்த hillarious கூட்டனி படத்திற்கு மிகப்பெரிய பலம். இப்போது விஜய், பிரகாஷ்ராஜ் வைத்து ரீமேக்கலாம்.
இன்று போய் நாளை வா - கதை, லாஜிக் இதையெல்லாம் மறந்து முழுக்க முழுக்க காமெடிக்காக எடுக்கப்பட்ட படம். மூன்று இளைஞர்கள் ஒரு பெண்ணை ப்ராக்கெட் போட அடிக்கும் லூட்டிகள் தான் கதை. பாக்யராஜின் master piece படம், திரைக்கதையிலும் வசனத்திலும் கலக்கியிருப்பார். அழகாக இதை இப்போது ரிமேக் செய்யலாம். பாக்யராஜின் பாத்திரத்திற்கு casting தேர்வு இந்த படத்தின் ரீமேக்கிற்கும் ஒரு சவால்.
ரங்கா - என்பதுகளின் ஆரம்பத்தில் வந்த, ரஜினி கராத்தே மணி நடித்த படம். மணி திருடனாய் தவறான வழியில் போகும் ஒரு ஆளாய் இருப்பார், ரஜினியோ தன் பெட்டியில் கீதை, திருக்குறள் வைத்து நல்ல பையனாய் இருப்பார். இருவரும் சந்திக்கின்றனர், இருவரும் அவரவர் கொள்கைகளை நியாயப்படுத்தி வாதாடுகின்றனர், படுத்து தூங்கும்போது இருவரும் மற்றவர் சொன்னதை யோசிக்கிறார்கள், விடிந்ததும் நல்லவரான ரஜினி திருடனாய் மாறுகிறார் கராத்தே மணிக்கு நன்றி சொல்லி ஒரு கடுதாசி வைத்து அவர் வீட்டிலேயே திருட்டை ஆரம்பிக்கிறார், கெட்டவரான மணி நல்லவராய் மாறுகிறார். இந்த ஒப்பனிங்கே போதும் ஒரு நல்ல திரைக்கதை அமைத்து ரிமேக் செய்ய.
Saturday, August 04, 2007
சொன்னதெல்லாம் இனிமை
ஆனந்த விகடனில் நடிகர் பிரகாஷ்ராஜின் 'சொல்லாததும் உன்மை' தொடர் இந்த வாரத்தோடு முடிவடைந்தது. பொதுவாக ஒரு நடிகரை அழைத்து பத்திரிகையில் எழுத சொன்னால், முக்கால்வாசி தங்கள் சுயபுராணம், சினிமா சாதனைகள் என்று எழுதி நம்மை கொல்வார்கள். ஆனால் பிரகாஷ்ராஜ், இதெல்லாம் இல்லாமல், மிகவும் எளிமையாக தன்னுடைய மனசாட்சியை வாசகர்களுடன் இந்த தொடர் முழுவதும் பகிர்ந்திருக்கிறார். உன்மையை சொன்னால், நான் இந்த தொடரின் எல்லா அத்தியாத்தையும் படித்ததில்லை. ஆனால் படித்த சில அத்தியாயத்தில் எல்லாம், சொல்ல வந்த விஷயத்தின் மூலம் என்னை பலமுறை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். வாழ்க்கையை பற்றி இவரின் outlook எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. 'ஒரு கனவன் மனைவி ஒருத்தருக்காக இன்னொருத்தர் தன் தேவைகளை, ஆசைகளை, ரசனைகளை விட்டுகொடுத்து வாழ்வது அவசியமா? எவ்வளவு நாள் அப்படி வாழ முடியும்? அப்படி இல்லாமல் ஒரே கூரையில் ஒவ்வொரும் சுதந்திரமாக நன்பர்களாய் ஏன் வாழக்கூடாது?' என்று கடைசி பகுதியில் இவர் கேட்கும் கேள்வி என்னை மிகவும் யோசிக்க வைக்கிறது.
Sunday, July 29, 2007
நான் படித்த காந்தி
சமீபத்தில் தான் மகாத்மா காந்தியின் சுயசரிதையான 'Stories of my experiments with truth' முழுவதும் படித்து முடித்தேன். தமிழில் சத்திய சோதனையாக வெளிவந்தது. என் நன்பர்கள் சிலர் அதை படித்து முடித்ததும் ஒரு சிலிர்ப்பு வந்ததாகவும், சில நாட்கள் உன்மையே பேசியதாகவும் சொல்வார்கள். எனக்கு அப்படி எல்லாம் ஒன்றும் தோன்றவில்லை. இந்த புத்தகம் அவர் பிறந்ததிலிருந்து 1920 வரை நடந்த நிகழ்ச்சிகளை பதிவு செய்திருக்கிறது. அதிலும் முக்கால்வாசி அவரின் தென் ஆப்பிரிக்கா வாழ்க்கையே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒரு விஷயம் இந்த புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்தது, அவரின் சத்திய சோதனையின் ஒவ்வொரு வெற்றியையும் தோல்வியையும் ஒளிவு மறைவு இல்லாமல் பதிவு செய்ததேயாகும். சிறுவயதில் மற்ற எல்லோரையும் போலவே வாழ்க்கையின் பலம் பலவீனத்தோடு தான் காந்தியும் இருந்திருக்கிறார். வீட்டிற்கு தெரியாமல் நிறைய நாட்கள் மாமிசம் சாப்பிட்டிருக்கிறார், தண்ணி அடித்திருக்கிறார், ஒருமுறை விபச்சாரி வீட்டிற்கும் சென்றிருக்கிறார், ஆனால் அங்கு ஒன்றும் செய்யாமல் விபச்சாரியிடம் திட்டு வாங்கி வந்ததாக சொல்கிறார். தன் தந்தை சாக கிடக்கிற நேரத்திலும் தன் மனைவியை வலுக்கட்டாயமாக காமத்திற்கு உட்படுத்தியிருக்கிறார். அது பற்றி மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார்.
அவர் இங்கிலாந்து சென்று படித்தபோது, தென் ஆப்பிரிக்காவில் நேர்ந்த மாதிரி discrimination ஒன்றும் நடக்காதது ஆச்சர்யமாக இருக்கிறது. காந்தி இந்த சுயசரிதை எழுதும் வரை, ஆங்கிலேயர் ஆட்சி போக வேண்டும் என்ற கருத்து கொண்டவராக இருக்கவில்லை. ஆங்கிலேயர்களால் தான் இந்தியாவை ஆள முடியும் என்று நம்பியிருந்தார். அங்கிலேயர் ஆட்சியில் நடந்த கொடுமைகளை மட்டும் தான் சாத்வீக முறையில் எதிர்த்தார். அவரின் சாத்வீக முறையால் தான் அவரை மரியாதையாக நடத்தியது ஆங்கிலேய அரசு, அவர் கேட்டதற்கும் செவி சாய்த்தது. 1920 பிறகு தான் அவர் கொள்கையில் மாற்றம் தெரிந்தது, அதற்குள் அவர் பெரும் தலைவர் ஆகிவிட்டதால் இங்கிலாந்து அரசு அவரை ஒன்றும் செய்யமுடியவில்லை.
நான் பள்ளியில் படித்த் பாடத்தில், லோகமான்ய திலகர் தான் காந்தியின் குருவாக இருந்தார் என்று சித்தரிக்க பட்டிருந்தது. ஆனால் உன்மையில் கோகலே தான் காந்தியின் குருவாக விளங்கினார். கோகலே பற்றி பல பக்கங்களில், அவர் எப்படி காந்தியின் தேசப்பற்று கொள்கைகளை உரமேற்றினார் என்று எழுதியிருக்கிறார். திலகர் பற்றி ஒன்று இரண்டு பக்கம் தான் எழுதியிருக்கிறார், அதிலும் அவரை விமர்சித்து எழுதியிருக்கிறார். படேல் பற்றி குறிப்பு இருக்கிறது, நேரு பற்றி ஒரு வரி கூட அவர் எழுதவில்லை. ஆனால் மோதிலால் நேரு பற்றி நிறைய எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டிலிருந்து ராஜாஜி பற்றி எழுதியிருக்கிறார்.
பாரிஸ்டர் முடித்து இந்தியா வந்து வக்கீல் தொழிலில் அவருக்கு ஏற்பட்ட தோல்விகள் எல்லாம் ஒளிவு மறைவின்றி எழுதியிருக்கிறார். பம்பாய் ஹைகோர்ட்டில் தினமும் வழக்காடுவதை பார்க்க போய், அங்கேயே குறட்டை விட்டு தூங்கியதை படிக்கும்போது சிரிப்பு வந்தது. அவர் சுயசரிதையிலேயே எனக்கு பிடிக்காமல் போனது, சத்திய சோதனை என்கிற பெயரில் அவர் செய்த மருத்துவ சோதனைகள். அதற்கு ஒரு சமயம் தன் மகனையும் மரணத்தின் வாசலில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறார். அவர் சட்டம் படித்த பாரிஸ்டர், சட்ட சோதனைகள் செய்யலாம், மனிதன் என்கின்ற முறையில் சமுதாய சோதனைகள் செய்யலாம், எந்த எண்ணத்தில் மருத்துவ சோதனைகள் செய்தாரோ. அவர் கொள்கைகள் பிடிக்காமல் அவரிடமிருந்து விலகிய மூத்த மகன் ஹரிலால் காந்தியை பற்றி சொல்லும்போது 'அவனை திருத்த முடியாதது ஒரு வருந்ததக்க தோல்வி' என்று குறுப்பிடுகிறார். ஹரிலால் காந்திக்கும், மகாத்மாவுக்கும் இருந்த் உறவை பற்றி 'gandhi my father' என்று ஒரு ஹிந்தி படம் வர இருக்கிறது.
காந்தியின் ஒவ்வொரு சோதனைகளிலும், அவர் மனசாட்சியின் கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்கிறார். அதனால் ஒரு கொள்கையை எப்படி உறுவாக்கிறார், அந்த கொள்கைகளை எப்படி மற்றவர்க்கும் புரிய வைத்து அனைத்து தரப்பினரையும், ஆங்கிலேயர், ஜெர்மானியர், இந்தியர்கள் முதற்கொண்டு, எப்படி அரவனைக்கிறார் என்று படிக்கும்போது வியப்பாய் இருக்கிறது. முடிவாக ஒரு ஆச்சர்யமான தகவல், தென் ஆப்பிரிக்காவில் ஆங்கிலேயர்க்கு எதிராக முதல் போராட்டமாக அவர் எடுத்து போராடியது, பாலசுந்தரம் என்கிற ஒரு தமிழர், கொத்தடிமையாக, தென் ஆப்பிரிக்கா வந்து தன் ஆங்கிலேய முதலாளியால் துன்புறுத்தபட்டதற்கு. காந்திக்கு தமிழ் நன்றாக புரியும் ஆனால் பேச வராது, ஒருமுறை தன் ஆசிரமத்தில் இருந்த தமிழ் குழந்தைகளுக்கு ஜி.யு போப் புத்தகத்தின் துணையோடு தமிழ் சொல்லி கொடுத்திருக்கிறார். தமிழும், தெலுங்கும் தான் சாவதற்குள் முழுமையாக கற்று கொள்வது அவருக்கு ஒரு கனவாகவே இருந்தது.
அவர் இங்கிலாந்து சென்று படித்தபோது, தென் ஆப்பிரிக்காவில் நேர்ந்த மாதிரி discrimination ஒன்றும் நடக்காதது ஆச்சர்யமாக இருக்கிறது. காந்தி இந்த சுயசரிதை எழுதும் வரை, ஆங்கிலேயர் ஆட்சி போக வேண்டும் என்ற கருத்து கொண்டவராக இருக்கவில்லை. ஆங்கிலேயர்களால் தான் இந்தியாவை ஆள முடியும் என்று நம்பியிருந்தார். அங்கிலேயர் ஆட்சியில் நடந்த கொடுமைகளை மட்டும் தான் சாத்வீக முறையில் எதிர்த்தார். அவரின் சாத்வீக முறையால் தான் அவரை மரியாதையாக நடத்தியது ஆங்கிலேய அரசு, அவர் கேட்டதற்கும் செவி சாய்த்தது. 1920 பிறகு தான் அவர் கொள்கையில் மாற்றம் தெரிந்தது, அதற்குள் அவர் பெரும் தலைவர் ஆகிவிட்டதால் இங்கிலாந்து அரசு அவரை ஒன்றும் செய்யமுடியவில்லை.
நான் பள்ளியில் படித்த் பாடத்தில், லோகமான்ய திலகர் தான் காந்தியின் குருவாக இருந்தார் என்று சித்தரிக்க பட்டிருந்தது. ஆனால் உன்மையில் கோகலே தான் காந்தியின் குருவாக விளங்கினார். கோகலே பற்றி பல பக்கங்களில், அவர் எப்படி காந்தியின் தேசப்பற்று கொள்கைகளை உரமேற்றினார் என்று எழுதியிருக்கிறார். திலகர் பற்றி ஒன்று இரண்டு பக்கம் தான் எழுதியிருக்கிறார், அதிலும் அவரை விமர்சித்து எழுதியிருக்கிறார். படேல் பற்றி குறிப்பு இருக்கிறது, நேரு பற்றி ஒரு வரி கூட அவர் எழுதவில்லை. ஆனால் மோதிலால் நேரு பற்றி நிறைய எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டிலிருந்து ராஜாஜி பற்றி எழுதியிருக்கிறார்.
பாரிஸ்டர் முடித்து இந்தியா வந்து வக்கீல் தொழிலில் அவருக்கு ஏற்பட்ட தோல்விகள் எல்லாம் ஒளிவு மறைவின்றி எழுதியிருக்கிறார். பம்பாய் ஹைகோர்ட்டில் தினமும் வழக்காடுவதை பார்க்க போய், அங்கேயே குறட்டை விட்டு தூங்கியதை படிக்கும்போது சிரிப்பு வந்தது. அவர் சுயசரிதையிலேயே எனக்கு பிடிக்காமல் போனது, சத்திய சோதனை என்கிற பெயரில் அவர் செய்த மருத்துவ சோதனைகள். அதற்கு ஒரு சமயம் தன் மகனையும் மரணத்தின் வாசலில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறார். அவர் சட்டம் படித்த பாரிஸ்டர், சட்ட சோதனைகள் செய்யலாம், மனிதன் என்கின்ற முறையில் சமுதாய சோதனைகள் செய்யலாம், எந்த எண்ணத்தில் மருத்துவ சோதனைகள் செய்தாரோ. அவர் கொள்கைகள் பிடிக்காமல் அவரிடமிருந்து விலகிய மூத்த மகன் ஹரிலால் காந்தியை பற்றி சொல்லும்போது 'அவனை திருத்த முடியாதது ஒரு வருந்ததக்க தோல்வி' என்று குறுப்பிடுகிறார். ஹரிலால் காந்திக்கும், மகாத்மாவுக்கும் இருந்த் உறவை பற்றி 'gandhi my father' என்று ஒரு ஹிந்தி படம் வர இருக்கிறது.
காந்தியின் ஒவ்வொரு சோதனைகளிலும், அவர் மனசாட்சியின் கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்கிறார். அதனால் ஒரு கொள்கையை எப்படி உறுவாக்கிறார், அந்த கொள்கைகளை எப்படி மற்றவர்க்கும் புரிய வைத்து அனைத்து தரப்பினரையும், ஆங்கிலேயர், ஜெர்மானியர், இந்தியர்கள் முதற்கொண்டு, எப்படி அரவனைக்கிறார் என்று படிக்கும்போது வியப்பாய் இருக்கிறது. முடிவாக ஒரு ஆச்சர்யமான தகவல், தென் ஆப்பிரிக்காவில் ஆங்கிலேயர்க்கு எதிராக முதல் போராட்டமாக அவர் எடுத்து போராடியது, பாலசுந்தரம் என்கிற ஒரு தமிழர், கொத்தடிமையாக, தென் ஆப்பிரிக்கா வந்து தன் ஆங்கிலேய முதலாளியால் துன்புறுத்தபட்டதற்கு. காந்திக்கு தமிழ் நன்றாக புரியும் ஆனால் பேச வராது, ஒருமுறை தன் ஆசிரமத்தில் இருந்த தமிழ் குழந்தைகளுக்கு ஜி.யு போப் புத்தகத்தின் துணையோடு தமிழ் சொல்லி கொடுத்திருக்கிறார். தமிழும், தெலுங்கும் தான் சாவதற்குள் முழுமையாக கற்று கொள்வது அவருக்கு ஒரு கனவாகவே இருந்தது.
Saturday, June 30, 2007
அங்கீகாரம்
நான் பள்ளியில் படிக்கும்போது எப்போதும் ஒரு அங்கீகாரத்திற்காக ஏங்கியிருக்கேன். என்ன மாதிரி அங்கீகாரம்? ஒன்னும் பெருசா இல்ல, என் பெயர் சொன்னால் மத்த செக்ஷன் பையன்களுக்கும் தெரியனும். முடிஞ்சா பள்ளிக்கே தெரியனும். நான் படிக்கும்போது அதுக்கு ரெண்டே வழிதான். ஒன்னு விளையாட்டில் பெரிய ஆளா இருந்து வெளியில பதக்கங்கள் வாங்கனும். அப்படி வாங்கினா, ஸ்கூல் அசெம்பிளி மீட்டிங்கில் மேடைக்கு கூப்பிட்டு பரிசு கொடுப்பார்கள், எல்லோரும் கைதட்டுவார்கள். இத விட்டா அடுத்த வழி, நல்லா படிச்சு முதல் மூன்று ரேங்க்குள் வாங்கனும். Half yearly, quarterly ரிப்போர்ட் கார்டை எப்போதும் AHM வகுப்புக்கு எடுத்து வந்து, முதல் மூன்று ரேங்க் வாங்கியவர்களுக்கு மட்டும் பெயர் சொல்லி கூப்பிட்டு கையில் கொடுப்பார். எல்லோரும் கைதட்டுவார்கள். மற்ற கார்டுகளை class teacherஇடம் கொடுத்துவிட்டு போய்விடுவார். அவரோ class leaderஇடம் கொடுத்து எல்லோருக்கும் கொடுக்க சொல்லிவிடுவார். எப்படியாவது முதல் மூன்று ரேங்க்கிற்குள் வாங்கிவிட வேண்டும் என்று நானும் ரொம்ப காலமாய் போராடினேன். ஒன்பதாவது படிக்கும்போது quarterly examல் அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தது. Answers sheet எல்லாம் வாங்கி பார்த்ததில் எப்போதும் மூன்றாவது ரேங்க் வாங்கும் மாணவனும் நானும் ஒரே total வாங்கியிருந்தோம். அப்படி இருக்கும்போது ரெண்டு பேருக்கும் சேர்ந்து மூன்றாவது ரேங்க் கொடுத்து, அடுத்து ஐந்தாவது ரேங்க் கொடுப்பார்கள். எனக்கு ஒரே சந்தோஷம் எப்படியும் இந்த முறை கைதட்டலோடு நாமும் AHM கையால் ரிப்போர்ட் கார்ட் வாங்கிடலாம். அந்த நாளும் வந்தது நானும் ஆவலோடு AHM அழைப்பார் என்று உட்கார்ந்திருந்தேன். அவர் வழக்கம் போல் முதல் ரேங்க், இரண்டாவது ரேங்க் எடுக்கும் மாணவர்களை கூப்பிட்டு அவர்களுக்கு ரிப்போர்ட் கார்டை கொடுத்தார், வழக்கம் போல் கைதட்டல்கள், மூன்றாவது ரேங்க், முதலில் என்னை கூப்பிடுவார் என்று நினைத்தேன், அவரோ மற்றவனை கூப்பிட்டார். அவனிடம் கார்டை கொடுத்துவிட்டு class teacherஇடம், 'மற்றதை நீங்கள் கொடுங்கள்' என்று கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டார். எனக்கோ ஒரே ஏமாற்றம். பிறகு தான் தெரிந்தது, இரண்டு நாட்கள் முன்பே என்னோடு ஒரே total எடுத்தவன், தமிழில் ஒரு கேள்விக்கு ஆசிரியர் மார்க் கம்மியாய் போட்டிருக்கிறார் என்று வாதாடி அவரிடம் கேட்டு இரண்டு மார்க் கூட எடுத்துவிட்டான். எனக்கு நன்றாய் தெரியும் இந்த வேலையை நாங்கள் யாரும் செய்ய முடியாது. முதல் மூன்று ரேங்க் எடுப்பவர்கள் என்ன சொன்னாலும் முக்கால்வாசி ஆசிரியர்கள் தலையாட்டிடுவர். ஆகவே அந்த முறை எனக்கு நான்காவது ரேங்க். நான் அதிகமாய் போனது நான்காவது ரேங்க் வரையே. எனக்கு அழுகையாய் வந்தது. என்ன செய்வது. At least எங்கள் ஆசிரியர் என் முன்னேற்றத்தை கவனித்து ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்கலாம். அதுவும் இல்லை. வீட்டில் ரிப்போர்ட் கார்டை கொடுத்தேன். அப்பா வழக்கம்போல் முதல் ரேங்க் ஏன் வாங்கவில்லை என்று திட்டியபடியே கையெழுத்து போட்டார். ஒரு நேர்மையற்ற இரண்டு மதிப்பெண்ணில் என் அங்கீகாரத்தை பள்ளியில் இழந்தேன். இந்த ஒரு விஷயத்தில் தான் நான் அமேரிக்க கல்வி முறையை பாராட்டுவேன். ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவனின் தனித்திறமையை கொணர்ந்து அவனுக்கு ஊக்கத்தையும் அங்கீகார்த்தையும் வழங்குகின்றனர். கண்டிப்பாய் நம் கல்விமுறையில் மாற்றம் வேண்டும். வெறும் syllabus மாற்றம் மட்டும் போதாது.கல்வி முறையோ கற்பிக்கும் முறையோ மாற வேண்டும் என்று சொல்லவில்லை. ஒவ்வொரு மாணவனும் எப்படி உருவாக்க வேண்டும் என்கின்ற ஆசிரியர்களின் புரிதலில் மிகப்பெரிய மாற்றம் வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)