(சுஜாதாவின் இடது ஓரத்தில் என்ற கதையை படித்து inspire ஆகி எழுதியது. இதில் என்ன சூட்சுமம் கையாள முயற்சி செய்திருக்கிறேன் என்று யாராவது சொன்னால், அவருக்கு சுக்கிர திசை ஆரம்பமாகும், நாலாம் இடத்தில் 'சூரியன்' அமர்ந்து, ஐந்தாம் இடத்தில் 'நாட்டாமை' நல்ல தீர்ப்பு சொல்வார்)
புருஷோத்தமன் கன்னத்தில் கைவத்தபடி வலது பக்கம் திரும்பி உற்று பார்த்துக்கொண்டிருந்தான், அவன் முன் அகிலாவின் முகம் தெரிந்தது. அவன் அவளை கவனித்ததாய் தெரியவில்லை.
டாக்டர் திவாகர் அங்கு நிலவிய நிசப்தத்தை கலைத்தார்.
"மிஸ்டர் புருஷோத்தமன், நீங்க படிச்சவர், பெரிய எழுத்தாளரும் கூட, உங்களுக்கு நான் சொல்லனும்னு அவசியம் இல்ல, உங்க பிரச்சினை என்னன்னு உங்களுக்கே தெரியும்"
"பிரச்சினைன்னு நீங்க தான் சொல்றீங்க டாக்டர், அப்படியே அது உன்மையா இருந்தாலும், அது எனக்கு ஒரு பிரச்சினையாவே தெரியலயே...அகிலாவுக்கும் தெரியல"
"புருஷோத்தமன் first thing உங்க மனைவிக்கு அது பிரச்சினையா இருக்கு...second thing திரும்பவும் சொல்றன் அகிலான்னு யாரும் இல்ல அது வெறும் hallucinations"
"இல்ல டாக்டர், அகிலா இதோ பக்கத்துல தான் உட்கார்ந்திருக்கா....என்ன...என்னது...இரு டாக்டர்கிட்ட பேசிகிட்டு இருக்கேன்ல" தனக்கு அருகில் இருந்த சேரைப்பார்த்து பேசினான்.
திவாகர் தன் கண்ணாடியை கழற்றி, சேரை நகர்த்தி கொஞ்சம் முன்னே வந்தார், தலையை சற்று தாழ்த்தி புருஷோத்தமனை நேருக்கு நேர் பார்த்து பேசினார்.
"look...look here புருஷோத்தமன்...என்ன பாருங்க" புருஷோத்தமன் திரும்பி திவாகரை பார்த்தான்
"அகிலாங்கிறது யாரு?"
"அகிலா என் தோழி..இல்ல அதுக்கும் மேல..இதோ இருக்கா டாக்டர்...இங்க பாருங்க டாக்டர், இதோ சிரிக்கிறா பாருங்க.."
"அகிலாவ முதன் முதல்ல எங்க பார்த்தீங்க புருஷோத்தமன்"
"முதன் முதல்ல என் கதையில படிச்சேன் டாக்டர்"
"படிக்கில புருஷோத்தமன், படைத்து இருக்கீங்க...உங்க கதையில வருகிற ஒரு கேரக்டர் அவங்க...ஏதோ சில காரணங்கள் அந்த கேரக்டர் உங்கள ரொம்பவே பாதிச்சிருக்கு...அந்த பாதிப்புகள் அகிலாவுக்கு உருவம் கொடுத்திருக்கு அது தான் பிம்பமா உங்கள தொடருது"
புருஷோத்தமன் ஒன்றும் பேசவில்லை, வெறுமை மிஞ்சிய அவண் கண்கள் திவாகரையே பார்த்துக்கொண்டிருந்தன. திவாகர் தொடர்ந்தார்
"Whatever you having now are episodes of schizophrenia psychosis. உங்களுக்கும் உங்க மனைவிக்கும் பல விஷயத்துல கருத்து வேறுபாடு. நீங்க எழுதுறது அவங்களுக்கு பிடிக்கல, நீங்க எதிர்பார்த்த அளவு உங்க சுக துக்கத்துல அவங்க பங்கு எடுத்துக்கல..ஆனா நீங்க உருவாக்கின அகிலா இதுக்கு நேரெதிர். கனவனுக்கு அனுசரனையா, தோழியா, நிறைய அன்பா இருக்கிற இலக்கிய ரசனை கொண்ட ஒரு கேரக்டர். Infact உங்க மனைவி எப்படியெல்லாம் இருக்கனும்னு நீங்க எதிர்பார்த்தீங்களோ அதுதான் அகிலா" புருஷோத்தமன் ஒன்றும் பேசவில்லை திவாகரையே பார்த்துக்கொண்டிருந்தான். திவாகர் ஒரு பெருமூச்சு விட்டார் mental illness with creative intellectualness...a tough job மனதிற்குள் நினைத்துக்கொண்டார்.
"ஓகே புருஷோத்தமன்....அகிலாவ தவிர வேற யாராவது உங்க கூட பேசறாங்களா...வேற யாரையாவது பார்க்கிறீங்களா" திவாகரின் கேள்விக்கு புருஷோத்தமன் டாக்டர் சேரின் பின்னே தெரியும் கதவை பார்த்தான், கதவின் நடுவில் சதுரமாய் ஒரு கண்ணாடி பதிந்திருக்க அதற்குப் பின்னால்....
"பாருங்க டாக்டர் நான் சொல்லும்போது நீங்க நம்பலையே...இப்ப பாருங்க" நர்ஸ் ரோஸ்மேரி சீ·ப் டாக்டர் ரங்கபாஷ்யத்திடம் சொன்னாள். ரங்கபாஷ்யத்திற்கு தான் பார்த்துக்கொண்டிருப்பதை நம்ப முடியவில்லை.
"ஏதோ schizophrenia பற்றி பிஹெடி செய்யப்போறதா சொன்னதாலதான் வெறும் schizophrenic பேஷண்ட்ஸ் மட்டும் டயாக்னோசிஸ் பன்ன அனுமதிச்சேன்...அதுக்கு இவ்வளவு பெரிய சைட் எ·பெக்டா....ஓ மை காட்..தனியா அங்க யார் கூட பேசிகிட்டு இருக்கான்" ரங்கபாஷ்யம் குரலில் கவலை தெரிந்தது.
"என்ன அங்கயே பார்க்கறீங்க" அருகே அகிலாவின் குரல் கேட்டது.
"என்ன ஆச்சு இந்த டாக்டருக்கு !! தனியா அங்க நின்னுகிட்டு யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்கார், உள்ள அப்படி என்ன பார்க்கிறாரு...சரியான இடத்துக்கு தான் வந்திருக்கோமா" புருஷோத்தமன் கேட்டான்.
Total Pageviews
Wednesday, December 28, 2005
Friday, December 23, 2005
கொஞ்ச நேரம்...
இந்த வாரம் ஹாலிவுட் வீடியோ சென்று traffic, wall street, and justice for all என்ற மூன்று படங்களை எடுத்தேன். எதை வைத்து இந்த மூன்றையும் எடுத்தேன் என்பது மறந்து போயிற்று. இந்த மூன்று படங்களை பார்த்து முடித்த போதுதான் ஒரு ஆச்சர்யமான ஒற்றுமையை கவனித்தேன். இந்த மூன்று படங்களுமே ஒரு atmosphereஐ முன்னிறுத்தி அதன் திரைமறைவில் நடக்கும் விஷயங்களை பற்றி பேசுகிறது. Traffic அமெரிக்காவின் போதை கடத்தல் மற்றும் தடுப்பு நடவடிக்கை பற்றியது, wall street அமெரிக்காவின் பங்கு சந்தை பின்னால் நடக்கும் சூட்சமங்களை பற்றி சொல்லும் படம், ..and justice for all அமெரிக்காவின் ஜூடிஷியல் சிஸ்டத்தின் அவலங்களை சொல்லும் படம். நான் மிகவும் ரசித்த படம் and justice for all. Alpacino இந்த படத்திற்கு ஆஸ்கர் நாமினேஷன் பெற்றார். Traffic படத்தின் narration வித்தியாசமாக இருந்தது. படத்தில் பல கதாபாத்திரங்கள், எல்லோருக்கும் சில நிகழ்வுகள், அந்த நிகழ்வுக்குள் ஒரு தொடர்பு. அவை நடப்பதும் வெவ்வேறு இடத்தில், ஒளிப்பதிவும் வெவ்வேறு toneல். இது போன்ற ஒரு screenplay treatment பல ஆங்கில படங்களில் கையாளப்பட்டு இருக்கின்றன. எனக்கு தெரிந்து இவ்வகையில் நான் பார்த்த முதல் படம் magnolia. சமீபத்தில் கூட crash என்ற ஒரு படம் இவ்வகை screenplay சார்ந்தே இருக்கும். தமிழில் தேடினால் எனக்கு இரண்டு படம் தான் ஞாபகத்திற்கு வருகிறது, best example பாலசந்தரின் 'ஒரு வீடு இரு வாசல்', மணிரத்னத்தின் 'ஆயுத எழுத்து' முழுமையாக இவ்வகை என்று சொல்லமுடியாது but close to என்று சொல்லலாம். ஏனெனில் ஆயுத எழுத்தில் பாதி படத்திற்கு மேல் ஒரு கதாபாத்திரத்தின் நிகழ்வு மற்றொன்றை சார்ந்து இருக்கும். ஒரு வீடு இரு வாசலில் இரண்டாவது கதையின் நாயகன், முதல் கதையில் நாயகனை சந்திப்பான், அவ்வளவு தான், ஒரு சின்ன தொடர்பு இருக்குமே தவிர, ஒரு கதாபாத்திரத்தின் கதை மற்றொரு கதையை மாற்றாது.
நாமும் இதுபோல் சிறுகதையில் ஒரு முயற்சி செய்து பார்க்கலாம். உதாரணத்திற்கு ஒரு கதையில் protoganist character நாலைந்து supportive charcters, like ஒருவன் அடிப்பட்ட ஒருவனை அழைத்து மருத்துவமனை செல்கிறான், அங்கே பலரின் அலட்சியத்தால் (ex: ஒரு டாக்டர், நர்ஸ், இன்னொரு நோயாளி) அடிப்பட்டவன் இறந்து போகிறான். இது ஒரு கதை, இப்போது டாக்டர், நர்ஸ், அடிப்பட்டவன், நோயாளி என்று சப்போர்டிவ் கேரக்டர்ஸ் வருகிறது, இந்த சப்போர்டிவ் கேரக்டர்ஸ் ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை சொல்லலாம். ஏன் இவர்களால் அந்த அலட்சியம் ஏற்பட்டது என்பதை ஒவ்வொருவர் பார்வையில் ஒரு சிறுகதையாக சொல்லலாம். நம் வலைப்பதிப்பிலே இந்த முயற்சியை செய்து பார்க்கலாம்.
நாமும் இதுபோல் சிறுகதையில் ஒரு முயற்சி செய்து பார்க்கலாம். உதாரணத்திற்கு ஒரு கதையில் protoganist character நாலைந்து supportive charcters, like ஒருவன் அடிப்பட்ட ஒருவனை அழைத்து மருத்துவமனை செல்கிறான், அங்கே பலரின் அலட்சியத்தால் (ex: ஒரு டாக்டர், நர்ஸ், இன்னொரு நோயாளி) அடிப்பட்டவன் இறந்து போகிறான். இது ஒரு கதை, இப்போது டாக்டர், நர்ஸ், அடிப்பட்டவன், நோயாளி என்று சப்போர்டிவ் கேரக்டர்ஸ் வருகிறது, இந்த சப்போர்டிவ் கேரக்டர்ஸ் ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை சொல்லலாம். ஏன் இவர்களால் அந்த அலட்சியம் ஏற்பட்டது என்பதை ஒவ்வொருவர் பார்வையில் ஒரு சிறுகதையாக சொல்லலாம். நம் வலைப்பதிப்பிலே இந்த முயற்சியை செய்து பார்க்கலாம்.
Wednesday, December 21, 2005
சென்னையில் ஒரு எதிர்காலம் (சிறுகதை)

(சுஜாதா என்னுடைய ஆதர்ச எழுத்தாளர். அவருடைய பன்முகத்தன்மை கொண்ட எழுத்துகள் என்னை மிகவும் ஈர்க்கும். எனக்குத் தெரிந்து தமிழில் முதலில் sci-fi எழுதிய எழுத்தாளர் அவர் தான். எல்லோருக்கும் ஒரு காலத்தில் டிடியில் வந்த 'என் இனிய இயந்திரா' ஞாபகம் இருக்கும். அவரை போல நானும் ஒரு sci-fi எழுத வேண்டும் என்ற விபரீத ஆசையின் வெளிப்பாடு தான் இந்த சிறுகதை.)
சென்னை - 2115
'எழில்' கட்டடத்தின் 105ஆவது மாடியில் இருந்தது மூவா உணவகம். நிதி வெளியே பார்த்தாள், விசாலமான வானம், தூரத்தில் சென்னையில் உயரமான 'அரசு' கட்டிடம், மொத்தமாக 333 மாடி, யாரோ ஒரு அரசியல்வாதி தன் ராசி எண் 3 வருமாறு அந்த கட்டடத்தை கட்டியதாக கேள்வி. ஒரே கட்டிடத்தில் சட்டசபை, செயலகம் என எல்லா அரசு சார்ந்த துறைகளும் இயங்கி வருகிறது. நிதியின் பார்வையை சலனம் செய்து பறந்தது ஒரு எரோ, அப்போது தான் சற்று கீழே பார்த்தாள், வித்தியாசமான கலர்களில் ஏரோக்கள் பறந்துக் கொண்டிருந்தன, அவள் இருந்த உயரத்தில் ட்ரா·பிக் கொஞ்சம் கம்மி தான். இவையெல்லாம் ஒரு காலத்தில் கார் என்ற பெயரில் தரையில் சென்றதாக அம்மா சொன்னது ஞாபகத்திற்கு வந்தது, 'ஒரு தடவை ம்யூசியம் சென்று பார்க்க வேண்டும்' தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். இன்னும் யாரையும் கானோம், அவள் வந்து இரண்டு நிமிடம் ஆயிற்று. இந்நேரம் பல வேலைகள் செய்திருக்கலாம். நிதி தன் எதிரே இருந்த சுவரை பார்த்தாள், டிஜிட்டல் பிரேமில் எழில் கட்டடத்தின் மற்ற நிறுவனங்களின் விளம்பரங்கள் ஓடிக் கொண்டிருந்தது. கடைசியில் "மூவா உணவகம்: எல்லோருக்கும் ஒரே சேவை" என வார்த்தைகள் ஓடிக் கொண்டிருந்தது, வார்த்தைகள் முடிவில் ஒருவனின் பிம்பங்கள் பல தோளில் கைபோட்டு சிரித்து கொண்டிருந்தனர். நிதி அப்போது தான் தன் முன்னே இருக்கும் டேபிளை பார்த்தாள் வழித்து சீவிய தலையுடன் தெரோ கோட் சூட் அனிந்த ஒருவன் ஆர்டர் எடுத்துக் கொண்டிருந்தான், அவளை நோக்கி மற்றொருவன் வந்தான், அச்சு அசலாய் ஆர்டர் எடுப்பவனை வார்த்தது போலவே இருந்தான். "மாலை வணக்கம் நிதி அவர்களே...எங்கள் உணவகத்தின் உங்கள் முதல் வருகை எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய ஷ்பெஷல் வைட்டோ வேகா, ப்ரொட்டீன் மோஷா..." அவன் அடுக்கிக் கொண்டே போனான். "எனக்கு குடிக்க கார்போ ஒரு கோப்பை, மற்றவை சிறிது நேரம் கழித்து சொல்கிறேன்" நிதி அவனை நிறுத்தினாள். அவன் புன்னகை செய்து அங்கிருந்து நகர்ந்தான். அப்போது தான் அவன் காதருகே சிகப்பாய் மின்னும் அந்த சில்லை கவனித்தாள். திரும்பவும் எதிரே இருக்கும் டிஜிட்டல் ·ப்ரேமை பார்த்தாள் "மூவா உணவகம்: எல்லோருக்கும் ஒரே சேவை" அதன் பின் தெரிந்த படங்களில் முதலில் தோன்றியவனை தவிர மற்ற எல்லோருக்கும் காதருகே அந்த சிகப்பு சில் இருந்தது.
நிதி திரும்பவும் மணி பார்த்தாள், அவள் வந்து ஐந்து நிமிடம் ஆகிவிட்டது. இதற்கு மேல் உலகத்தோடு தொடர்பு அறுந்து போய் இருக்க அவள் விரும்பவில்லை. தன் கைப்பையை திறந்து அவளின் மினினியை எடுத்தாள் 6x6 இன்ச்சில் ஒரு கண்ணாடி துண்டு போல் இருந்தது வலது ஒரத்தின் கீழே ஒரு சின்ன சிலிக்கான் சிப் இருந்தது. நிதி அதில் தன் விரலை வைத்து அழுத்தினாள், நொடியில் உயிர் பெற்றது அவளின் மினினி. குட்டி குட்டி ஐகான்கள் தொன்றின.
"என் அருமை தோழி நிதிக்கு வந்தனம். நீங்கள் இப்போது இருப்பது எழில் கட்டடத்தின் மூவா.." அதற்கு மேல் அதைப் பேச விடாமல் உலக படம் போன்றதொரு ஐகானில் மேல் விரல் வைத்தாள்.
"தேர்ந்தெடுங்கள் நிதி, உலகச் செய்தியா? உள்ளூர் செய்தியா?"
"உலகச் செய்தி"
"தலைப்புச்செய்தி: ஸ்பெரிக்கல் கேலக்ஸியிலிருந்து பூமி அனுப்பிய ரேடியோ அலைக்கு பதில் அலை வந்துள்ளது, உலக வின்வெளி மையம் முழு வீச்சுடன் அதை ஆராய்ச்சி செய்கிறது. இது பற்றி இந்திய விஞ்ஞானி பாலா கருத்து தெரிவிக்கையில்.."
"உள்ளூர் செய்தி" நிதி உள்ளூரிற்கு தாவினாள்.
"தலைப்புச்செய்தி: தமிழகத்தின் தென்கோடியில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய நகர் கண்டுப்பிடிப்பு. இது சுனாமியால் மூழ்கிய இராமேசுவரமாய் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்" அப்போது மினினியின் ஒரு மூலையிருந்த ஐகான் உயிர்ப்பெற்று பெரிதானது.
"தோழி நிதி, தங்கள் தோழி சிமி அருகாமையில் இருக்கிறார்"
"ஹாய் நிதி" சுமியின் குரல் கேட்டு நிதி திரும்பினாள். மைக்ரோசில்க் சூட்டில் சிமி நளினமாக எதிரே வந்து உட்கார்ந்தாள்.
"ஏன் லேட், அஞ்சு நிமிஷமா காத்துகிட்டு இருக்கேன்"
"சாரிடி என் ஏரோ ஆல்ட்ல கொஞ்சம் ட்ரா·பிக் ஜாம், ஆல்ட் மாற்ற அனுமதி கிடைக்க கொஞ்சம் டைம் ஆச்சு. சரி சிவா சேரா ரெண்டு பேரும் இன்னும் வரலியா?"
"சிவா காலையில வீடியோ மெயில் அனுப்பி இருந்தான், பிரயான களைப்பு, அதனால கொஞ்சம் லேட்டா வருவேன்னு சொன்னான். இந்த சேரா எப்ப வருவான்னு தெரியல, அவன் தான் இப்ப நூறு வருஷம் பின்னாடி இருக்கானே"
"சரி அவங்க வரதுக்குள்ள நான் girls only விஷயம் சொல்லிடறன்"
"என்னடி"
"அனுமதி கிடைச்சாச்சு"
"எதுக்கு?"
"நான் தாய் ஆவதற்கு" சிமியின் முகத்தில் குதூகலம்.
"ஹே கங்க்ராட்ஸ் எப்ப"
"காலையில தான். உடனே நானும் மைத்ரேயனும் 'ஜீனோ மேட்ச்'க்கு போய் வேண்டிய குணாதிசியங்கள தேர்வு செஞ்சிட்டோம். பியூட்டி, காம்ப்ளக்ஷன், டோன் எல்லாம் என் சாய்ஸ். அறிவு சம்பத்தப்பட்ட இத்யாதிகள் மட்டும் மைத்ரேயனோட சாய்ஸ். பிரெயின் அவன மாதிரி வேண்டுமாம்... பெரிய்ய ஐன்ஸ்டீன் எள்ளு பேரன்னு நினைப்பு" இருவரும் சிரித்தனர்.
"எனிவே, அது ப்ரொசஸ் ஆகி ரெண்டு நாள்ல மேட்ரிக்சுக்கு அனுப்பிடுவாங்க. அப்புறம் கொறஞ்சது மூனு மாசத்துல ஏஞ்சல் மாதிரி ஒரு பாப்பா வீட்டுக்கு வந்திடும்" சிமி நிதியின் கைகளை பற்றி சிரித்தாள்.
"ஏஞ்சலுக்கு பேர் வச்சாச்சா" சிவா அவர்களை நோக்கி வந்தான்.
"வாப்பா the man from mars...எப்படி இருந்தது செவ்வாய்..உன் திருவாய் திறந்து சொல்லு" சிமி ஆரம்பித்தாள்
"oh...that was great.. மனிதன் உருவாக்கி கொண்டிருக்கும் ஒரு செயற்கை சொர்க்கம் அது. வெயில் கொஞ்சம் கம்மி தான். நிறைய பில்டிங், ஸ்பேஸ்போர்ட்ன்னு நிறைய கன்ஸ்ட்ரக்ஷன்ஸ். என்னோட விவசாய ஆராய்ச்சி எல்லாம் வெற்றிகரமா நடந்தது... இன்னும் கொஞ்சம் நாள்ல விவசாயம் மொத்தத்தையும் அங்க திருப்பிடுவோம்"
"ஸ்பேஸ்பிளேன் எப்படி இருந்தது"
"அத ஏன் கேக்கிற, நம்மூர்ல தான் ஸ்பேஸ்போர்ட் இல்லையே அதனால பீஜிங் போய் அங்கேயிருந்து ஸ்பேஸ்ப்ளேனல போனேன். உள்ள போன உடனே எனர்ஜி மாத்திரை கொடுத்து தூங்க வச்சிடுவாங்க, அப்புறம் வின்வெளி போய் தான் முழிச்சோம். நாலு வார பயணம்"
"நாடு முன்னேறுது, முன்னேறுதுன்னு வாய் கிழிய சொல்றாங்க, ஆனா இன்னும் இங்க ஒரு ஸ்பேஸ்போர்ட் இல்ல. கேட்டா இப்ப வருது அப்ப வருதுன்னு" நிதி எரிச்சலாக சொன்னாள்.
"நம்ம ஊரு முன்னேறவே முன்னேறாது" சிமி ஆமோதித்தாள்.
"சரி விடுப்பா, அப்புறம் சிவா உன் கல்யாண விஷயம் எந்த அளவுல இருக்கு" நிதி கேட்டாள்
"அதுவா, இப்ப எல்லாம் என் அம்மாவுக்கு என் டிஎன்ஏ பொருத்தம் பாக்கிறதே முழு நேர வேலையாயிடுச்சு. ..எங்க டிஎன்ஏ பொருத்தம்ன்னு சொல்லி ஏதாவது சப்ப மூக்கு சைனாக்காரிய கட்டி வெச்சிடுவாங்களோன்னு பயமா இருக்கு"
"ஏன் அதனால என்ன ஒரு க்ரோமோ ·பிக்ஸிங் செய்தா சரியாப்போச்சு"
"ஹே அதெல்லாம் சுத்த வேஸ்ட்டுப்பா காஸ்ட்லியும் கூட...மேலும் எனக்கு கொஞ்சம் எல்லாமே இயற்கையா இருக்கனும்னு எதிர்பார்க்கிறேன்"
"இப்படியெல்லாம் நீ யோசிச்சா..நீ இந்த நூற்றாண்டு மனுஷனே இல்ல" என்றாள் சிமி
"இவன் போன நூற்றாண்டு மனுஷனும் இல்ல" அவர்களை நோக்கி கேட்டது பரிச்சயமான குரல்
"ஹே சேரா வெல்கம்" நிதி சேராவை வரவேற்றாள். அவன் நேரே ஜோதியில் ஐக்கியமானான்.
"வாடா வரலாற்று மனிதா, 'சென்னை நூறு வருடம்" ஆராய்ச்சி செய்ய போனியே..எனிதிங் இன்ட்ரஸ்டிங்" சிவா அவனை கேட்டான்.
"நிறைய விஷயம் இருக்கு, சொல்றன் கேளு...நம்ம மினினி, சினினிக்கெல்லாம் தாத்தாவான கனினி சமாசாரம் நூறு வருஷத்துக்கு கொஞ்சம் முன்னேதான் நம்ம ஊருக்கு வந்திருக்கு, மொத்த சிட்டிக்குள்ளயும் நாலே நாலு ·ப்ளை ஓவர் தான். பாண்டிச்சேரியெல்லாம் அப்ப ரொம்பவே அவுட் ஆ·ப் சிட்டி, முதன் முதல்ல நம்ம ஊர்ல சுனாமி நூறு வருஷத்துக்கு முன்னாடி தான் வந்திருக்கு, இப்ப மாதிரி சுனாமி ஷோ எல்லாம் இல்ல, மக்கள் ரொம்பவே பாதிச்சியிருக்காங்க"
"வாவ்...இன்ட்ரஸ்டிங்" சிமி ஆச்சர்யத்துடன் சொன்னாள்.
"அப்புறம் ஒரு தடவ கற்ப பத்தி ஒரு நடிகை..."
"வெயிட்..வெயிட்..கற்பா..அப்படின்னா என்ன" நிதி குழப்பமானாள்
"அதுவா..அது ஒரு விவகாரமான விஷயம், புரிய வைக்கிறது கொஞ்சம் கஷ்டம், அப்பவே மக்களுக்கு புரிஞ்சுதாங்கிறது சந்தேகம்தான்...அதப்பத்தி அப்புறம் பேசுவோம். உனக்கு சே·ப் செக்ஸ்ன்னா என்னன்னு தெரியும்ல"
"அதான் அஞ்சாவதிலே படிச்சோமே" சிவா சொன்னான்
"அதேதான்... அது ரொம்ப அவசியம்ன்னு அந்த நடிகை கருத்து சொல்லியிருக்காங்க, அதுக்கு உடனே மக்கள் எல்லாம் செருப்பு துடைப்பம் எல்லாம் எடுத்து போராட்டம் அது இதுன்னு ரொம்ப டார்ச்சர் செஞ்சிருக்காங்க"
"செருப்பு ஒகே... துடைப்பம்னா...அது என்ன ஆயுதம்" சிமி கேட்டாள்
"ஆயுதம்மெல்லாம் இல்ல அது ஒரு வாக்ளீன் மாதிரி வெச்சுக்கோயேன்"
"நம்ம முன்னோர்களா அப்படி செஞ்சிருக்காங்க...நம்பவே முடியலே" சிவா சொன்னான்.
"நம்ம முன்னோர்களே தான்... இரு கொஞ்சம் போட்டோஸ் கலெக்ஷன் வெச்சிருக்கேன்.." சேரா தன்னுடைய மினினியை எடுத்து உயிர் கொடுத்தான். பூட் ஆனதும் திரையில் ஒரு புகைப்படம் தோன்றியது. அதில் சேராவின் பெற்றோர்களுடன் சேரா நின்று கொண்டிருந்தான் அவர்கள் பின்னே சுவற்றில் தொங்கியபடி சட்டம் செய்யப்பட்ட ஒரு வயதானவரின் புகைப்படம் இருந்தது, புகைப்படத்தின் கிழே இந்த வாசகங்கள் "ரஞ்சித் காளிதாசன்: தோற்றம் 01/05/1979 மறைவு...." ஆஹா...அதற்குள் அந்த படம் மினினியில் மறைந்து போயிற்று.
Friday, December 16, 2005
நொடியில் உறைந்த கவிதை
சமீபத்தில் டைம் இதழில், போன வருடத்தின் சிறந்த புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருந்தார்கள். பல படங்கள் பார்க்கும் சமயம் பல உணர்ச்சிகளை கொட்டியிருந்தாலும், என்னை மிகவும் பாதித்தது கீழே இருக்கும் இந்த இரண்டு படங்கள் தான்.

"நமக்கும் கீழே... மாண்டவர் கோடி"

"எனக்கும்தானடா புரியவில்லை..
இந்த ஆட்டம்"
பல விஷயங்கள் சொல்லும் இந்த இரண்டு புகைப்படத்திற்கு இரண்டு வரியில் யாரேனும் கவிதை எழுதி commentsல் post செய்யலாம்.

"நமக்கும் கீழே... மாண்டவர் கோடி"

"எனக்கும்தானடா புரியவில்லை..
இந்த ஆட்டம்"
பல விஷயங்கள் சொல்லும் இந்த இரண்டு புகைப்படத்திற்கு இரண்டு வரியில் யாரேனும் கவிதை எழுதி commentsல் post செய்யலாம்.
Friday, December 09, 2005
தவமாய் தவமிருந்து

இந்த வாரம் இந்த கலை படைப்பை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தவமாய் தவமிருந்து சேரன் செதுக்கி இருப்பது ஒரு சினிமாவை அல்ல, யதார்த்தத்தின் பிம்பங்களை. சென்ற முறை ஒரு காதலனின் ஆட்டோகிரா·பை நமக்கு கான்பித்தவர் இந்த முறை பெற்ற பிள்ளைகளுக்காகவே தன் வாழ்க்கையை தியாகம் செய்யும், நாம் அன்றாடம் பார்க்கும் அல்லது சில சமயம் பார்க்க மறக்கும் ஒரு தகப்பனின் பையோகிரா·பியை நமக்கு காட்டுகிறார். இது வரை நாம் பார்த்த மிகைப்படுத்தபட்ட சினிமாத்தனம் துளிக்கூட இல்லாமல் இயல்பான வாழ்க்கையை கேம்கார்டரில் படம் பிடித்து கான்பிப்பது போல் (ஒளிப்பதிவு HD technology கொண்டு செய்யப்பட்டு இருக்கிறது) பயனிக்கிறது கதை. கதையுடன் கச்சிதமாய் பொருந்தும் பாத்திரத்தேர்வு யதார்த்தத்தை மேலும் மெருகூட்டுகிறது. ராஜ்கிரன் கிராமத்தில் வாழும் நடுத்தர தகப்பனாய் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார். கண்டிப்பாய் ஒரு தேசிய விருதுக்கு அங்கீகரிக்கபட வேண்டிய நடிப்பு. தன் மகன் ஓடிப்போய் திருமணம் செய்து குழந்தைப்பெற்று கஷ்டப்படும்போது, அவனை பார்க்க வந்து வீட்டில் தரையை பார்த்து, உணர்ச்சியற்று ஒரு பார்வை பார்க்கிறாரே...வாவ்...என் கண்ணில் ஈரம் முட்டி நின்றது. இந்த படத்தில் உள்ள பல காட்சிகளை என் வாழ்வில் நடந்த சம்பவத்தோடு ஒப்பிட்டு பார்க்கிறேன்.
1) ராஜ்கிரன் தன் குழந்தைகளுக்கு தீபாவளி சாமான்கள் வாங்க காசில்லாமல் தினறும்போதும் மகன் கேட்ட பட்டாசுகளை கடையில் பார்க்கும்போதும், என் தந்தை என்னையும் என் அண்ணனையும் அழைத்து பாரீஸ் கார்னரில் பட்டாசுகள் வாங்கி அதை எங்களுக்காக தோளில் சுமந்து வந்தது மற்றும் ஒரு தீபாவளியில் முதல் நாள் இரவு வரை எங்களுக்கு துனி வாங்க காசு இல்லாமல் நடுராத்திரியில் எங்கேயோ கடன் வாங்கி எனக்கும் என் அண்ணனுக்கும் நாவல்டி ரெடிமேட்சில் துணி வாங்கியது.
2) ராஜ்கிரன் மூத்த மருமகள் தன் பெண் குழந்தைக்கு மாமனார் வைத்த தெய்வானை என்னும் பெயரை மாற்றி குஷ்பு என்று மாற்றும் போது, என் அம்மா என் தாத்தா எனக்கு துரைராசு என்று வைத்த பெயரை மாடர்னாக இருக்க வேண்டும் என்று ரஞ்சித் குமார் என மாற்றியது.
3) ராஜ்கிரன் தன் மூத்த மகனை பாலிடெக்னிக் சேர்க்க வட்டி கடைகாரரிடம் கூனி குறுகி நின்ற போது, நான் ஆறாம் வகுப்பு சேர்வதற்கு, சாந்தோம் பள்ளியில் என் அப்பா என்னை சேர்க்க பிரின்ஸிபாலிடம் கூட்டி செல்ல, அவர் what is your father? என்று கேட்ட கேள்வியை புரியாமல் நான் தவறாய் என் அப்பாவை கை காட்ட, அதனால் எரிச்சலைடைந்த அந்த பிரின்ஸிபால் டொனேஷன் தொகையை ஏற்ற என் தந்தையின் முகத்தில் தோன்றிய கவலை ஞாபகத்திற்கு வருகிறது.
4) ராஜ்கிரன் சேரனை இஞ்சினியரிங் கல்லூரியில் சேர்க்க பணத்தை வைத்து கொண்டு அலையும் போது, என்னை பாலிடெக்னிக் சேர்க்க நானும் என் தந்தையும் நேர்முகத் தேர்விற்கு காத்திருக்க, பக்கத்தில் கிராமத்திலிருந்து வந்த ஒரு அப்பா பையனுக்கு ·பீஸ் கட்ட வைத்து இருந்த பணத்தில் 100 ரூபாயை தொலைத்து அதை கவலையோடு அதை தேடியது ஞாபகத்திற்கு வருகிறது.
பிள்ளைகளுக்காக வாழ்க்கையை தொலைக்கும் தகப்பன்கள், அவர்களுக்கு பிள்ளைகள் காட்டும் நன்றி என்று இன்றைய வாழ்வில் நடக்கும் நிஜங்களை காட்டியது நம்மை அறையவைக்கிறது. இந்த படத்தின் மற்ற குறைகளை கூற தேவையில்லை, உன்மை என்னவென்றால் நான் அந்த அளவுக்கு படத்தின் குறைகளை கவனிக்கவில்லை, கவனிக்க முடியாதபடி படத்தோடு ஒன்றி விட்டேன். ஆறு பாட்டு, நாலு சண்டை, அதீத ஹீரொயிசம், வின்னிங் ·பார்முலா என ஒரு சின்ன வட்டத்துக்குள்ளே சிக்கிக் கொண்டி¢ருக்கும் தமிழ் சினிமாவில், இந்த மாதிரி ஒரு படம் வருடத்திற்கு ஒரு முறையாவது வந்தால், தமிழ் சினிமாவின் நாடித் துடிப்பு சாகாமல் இருக்கும்.
இந்த மாதிரி ஒரு பெற்றவர்களை நாம் கவனிக்க மறந்தால் அல்லது மறுத்தால், நாம் வேரோடு வெகுதூரம் விலகி வந்துக்கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.
Subscribe to:
Posts (Atom)