(சுஜாதாவின் இடது ஓரத்தில் என்ற கதையை படித்து inspire ஆகி எழுதியது. இதில் என்ன சூட்சுமம் கையாள முயற்சி செய்திருக்கிறேன் என்று யாராவது சொன்னால், அவருக்கு சுக்கிர திசை ஆரம்பமாகும், நாலாம் இடத்தில் 'சூரியன்' அமர்ந்து, ஐந்தாம் இடத்தில் 'நாட்டாமை' நல்ல தீர்ப்பு சொல்வார்)
புருஷோத்தமன் கன்னத்தில் கைவத்தபடி வலது பக்கம் திரும்பி உற்று பார்த்துக்கொண்டிருந்தான், அவன் முன் அகிலாவின் முகம் தெரிந்தது. அவன் அவளை கவனித்ததாய் தெரியவில்லை.
டாக்டர் திவாகர் அங்கு நிலவிய நிசப்தத்தை கலைத்தார்.
"மிஸ்டர் புருஷோத்தமன், நீங்க படிச்சவர், பெரிய எழுத்தாளரும் கூட, உங்களுக்கு நான் சொல்லனும்னு அவசியம் இல்ல, உங்க பிரச்சினை என்னன்னு உங்களுக்கே தெரியும்"
"பிரச்சினைன்னு நீங்க தான் சொல்றீங்க டாக்டர், அப்படியே அது உன்மையா இருந்தாலும், அது எனக்கு ஒரு பிரச்சினையாவே தெரியலயே...அகிலாவுக்கும் தெரியல"
"புருஷோத்தமன் first thing உங்க மனைவிக்கு அது பிரச்சினையா இருக்கு...second thing திரும்பவும் சொல்றன் அகிலான்னு யாரும் இல்ல அது வெறும் hallucinations"
"இல்ல டாக்டர், அகிலா இதோ பக்கத்துல தான் உட்கார்ந்திருக்கா....என்ன...என்னது...இரு டாக்டர்கிட்ட பேசிகிட்டு இருக்கேன்ல" தனக்கு அருகில் இருந்த சேரைப்பார்த்து பேசினான்.
திவாகர் தன் கண்ணாடியை கழற்றி, சேரை நகர்த்தி கொஞ்சம் முன்னே வந்தார், தலையை சற்று தாழ்த்தி புருஷோத்தமனை நேருக்கு நேர் பார்த்து பேசினார்.
"look...look here புருஷோத்தமன்...என்ன பாருங்க" புருஷோத்தமன் திரும்பி திவாகரை பார்த்தான்
"அகிலாங்கிறது யாரு?"
"அகிலா என் தோழி..இல்ல அதுக்கும் மேல..இதோ இருக்கா டாக்டர்...இங்க பாருங்க டாக்டர், இதோ சிரிக்கிறா பாருங்க.."
"அகிலாவ முதன் முதல்ல எங்க பார்த்தீங்க புருஷோத்தமன்"
"முதன் முதல்ல என் கதையில படிச்சேன் டாக்டர்"
"படிக்கில புருஷோத்தமன், படைத்து இருக்கீங்க...உங்க கதையில வருகிற ஒரு கேரக்டர் அவங்க...ஏதோ சில காரணங்கள் அந்த கேரக்டர் உங்கள ரொம்பவே பாதிச்சிருக்கு...அந்த பாதிப்புகள் அகிலாவுக்கு உருவம் கொடுத்திருக்கு அது தான் பிம்பமா உங்கள தொடருது"
புருஷோத்தமன் ஒன்றும் பேசவில்லை, வெறுமை மிஞ்சிய அவண் கண்கள் திவாகரையே பார்த்துக்கொண்டிருந்தன. திவாகர் தொடர்ந்தார்
"Whatever you having now are episodes of schizophrenia psychosis. உங்களுக்கும் உங்க மனைவிக்கும் பல விஷயத்துல கருத்து வேறுபாடு. நீங்க எழுதுறது அவங்களுக்கு பிடிக்கல, நீங்க எதிர்பார்த்த அளவு உங்க சுக துக்கத்துல அவங்க பங்கு எடுத்துக்கல..ஆனா நீங்க உருவாக்கின அகிலா இதுக்கு நேரெதிர். கனவனுக்கு அனுசரனையா, தோழியா, நிறைய அன்பா இருக்கிற இலக்கிய ரசனை கொண்ட ஒரு கேரக்டர். Infact உங்க மனைவி எப்படியெல்லாம் இருக்கனும்னு நீங்க எதிர்பார்த்தீங்களோ அதுதான் அகிலா" புருஷோத்தமன் ஒன்றும் பேசவில்லை திவாகரையே பார்த்துக்கொண்டிருந்தான். திவாகர் ஒரு பெருமூச்சு விட்டார் mental illness with creative intellectualness...a tough job மனதிற்குள் நினைத்துக்கொண்டார்.
"ஓகே புருஷோத்தமன்....அகிலாவ தவிர வேற யாராவது உங்க கூட பேசறாங்களா...வேற யாரையாவது பார்க்கிறீங்களா" திவாகரின் கேள்விக்கு புருஷோத்தமன் டாக்டர் சேரின் பின்னே தெரியும் கதவை பார்த்தான், கதவின் நடுவில் சதுரமாய் ஒரு கண்ணாடி பதிந்திருக்க அதற்குப் பின்னால்....
"பாருங்க டாக்டர் நான் சொல்லும்போது நீங்க நம்பலையே...இப்ப பாருங்க" நர்ஸ் ரோஸ்மேரி சீ·ப் டாக்டர் ரங்கபாஷ்யத்திடம் சொன்னாள். ரங்கபாஷ்யத்திற்கு தான் பார்த்துக்கொண்டிருப்பதை நம்ப முடியவில்லை.
"ஏதோ schizophrenia பற்றி பிஹெடி செய்யப்போறதா சொன்னதாலதான் வெறும் schizophrenic பேஷண்ட்ஸ் மட்டும் டயாக்னோசிஸ் பன்ன அனுமதிச்சேன்...அதுக்கு இவ்வளவு பெரிய சைட் எ·பெக்டா....ஓ மை காட்..தனியா அங்க யார் கூட பேசிகிட்டு இருக்கான்" ரங்கபாஷ்யம் குரலில் கவலை தெரிந்தது.
"என்ன அங்கயே பார்க்கறீங்க" அருகே அகிலாவின் குரல் கேட்டது.
"என்ன ஆச்சு இந்த டாக்டருக்கு !! தனியா அங்க நின்னுகிட்டு யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்கார், உள்ள அப்படி என்ன பார்க்கிறாரு...சரியான இடத்துக்கு தான் வந்திருக்கோமா" புருஷோத்தமன் கேட்டான்.
6 comments:
ஒரு அரசனுக்கு அடிக்கடி ஒரு கனவு வருமாம், தான் பட்டாம்பூசியாக இருப்பது போல. ஒரு நாள் திடீரென சந்தேகம் வந்ததாம். அதாவது தான் பட்டாம்பூச்சியாக இருப்பது போல கனவு காணும் அரசனா அல்லது அரசனாக இருப்பது போன்று கனவு காணும் பட்டாம்பூச்சியா என்று.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சரியாக சொன்னீர்கள் டோண்டூ. எது நிஜமான கதாபாத்திரம் என்று சொல்லமுடியாதவாறு இந்த கதையை எழுதியிருப்பேன்.
Priya said...
kadhai sooper...enakku pidichirukku..purinjudhu.
chief anumadhichadhunaala Dr.kku koncham kayandu pochu dhaan.. but en 'side effectnnu' sollareenga?
typonaala first commenta delete panni paste pannen..adhaan "priya said"
Priya,
schizophrenia researchoda side effectunnu adha sonnaen...
Post a Comment