Total Pageviews

Thursday, July 20, 2006

பொன்னியின் செல்வன்

"பொன்னியின் செல்வன்... பொன்னியின் செல்வன்.. படித்துவிட்டீர்களா பொன்னியின் செல்வன்..பொன்னியின் செல்வன் படிக்கவில்லையா! நீங்கள் தமிழ் வாசகராக இருப்பதற்கே லாயக்கில்லாதவர்கள்" இப்படி தான் எல்லாரும் பொன்னியின் செல்வனை பற்றி சிலாகிக்கிறார்கள். கண்டிப்பாய் அது சிறந்த வரலாற்று புனிதங்களில் ஒன்று. அதை மறுப்புதற்கில்லை, ஆனால் அது மட்டும் தான் தமிழில் வந்த வரலாற்று நாவல்களிலே சிறந்தது என்று சொல்வது தான் கொஞ்சம் மிகையாக படுகிறது.

எனக்கு பொன்னியின் செல்வனை பற்றி முதலில் சொன்னது என் அம்மா தான். ஆனால் சிறு வயதில் அதை படிப்பதற்கு தான் வழியில்லாமல் இருந்தது. அப்பாவிற்கு நாங்கள் சிறுவயதில் தமிழ் புத்தகங்கள் படிப்பது அவ்வளவாய் பிடிக்காது. ஆங்கில அறிவை வளர்க்க வேண்டுமென்று வீட்டில் தினமும் இந்தியன் எக்ஸ்பிரஸ், மாதம் ஒரு முறை
ரீடர்ஸ் டைஜஸ்ட் இது போக அலமாரியெல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் GK புத்தகங்கள் தான். வீட்டிற்கு பக்கத்தில் ஒரு lending library இருந்தது, மாதம் பத்து ருபாயோ இருபது ரூபாயோ தான், ஆனால் நான் எவ்வளவு கெஞ்சி கேட்டும் அம்மா அங்கு சேர பணம் கொடுக்கவில்லை. ஒருவழியாய் நான் வேலைக்கு போய் சம்பாதிக்க ஆரம்பித்ததும் அதே லைப்ரரியில் மெம்பராய் சேர்ந்து பொன்னியின் செல்வன் மட்டும் எடுத்து படித்தேன். ஒருவேளை பொன்னியின் செல்வன் நான் படித்த முதல் வரலாறு நாவலாக இருந்தால் எனக்கு ரொம்ப பிடித்திருக்குமோ என்னவோ, நான் முதலில் படித்தது சாண்டில்யனின் கடல்புறா. எப்பவோ அப்பாவிடம் கடல்புறா மூன்று பாகங்கள் கிடைக்க, அதை வீட்டிற்கு எடுத்து வந்தார். அப்போது எனக்கு 8ஆம் வகுப்பு காலாண்டு பரிட்சை விடுமுறை, வெளியே எங்கும் ஊர் சுற்றாமல் ஒரு பத்து பதினைந்து நாளில் மொத்த கதையையும் படித்து முடித்தேன், மொத்தம் 5400 மேல் பக்கங்கள். கடல்புறாவும் பொன்னியின் செல்வனை போலவே சோழர் காலத்தில் நடக்கும் கதை, ராஜேந்திர சோழன் அரியனையில் அமரும் சமயம் நடக்கும் கதை. கதை முழுவதும் சோழர்களின் கடல் கடந்த ராஜ்ஜியங்கள், கடல் போர்கள் பற்றி இருக்கும். வந்தியத்தேவனை போல இதில் இளையபல்லவன். ஷங்கர் படம் போல சாண்டில்யனின் வரிகள் எல்லாம் விறுவிறுப்பாய் இருக்கும், கடலின் பிரம்மாண்டத்தை நம் மனக்கண்ணில் ஒட விடுவார். கடல், மரக்களம், சீனர்கள், அரேபியர்கள் என்று ஒவ்வொன்றும் வித்தியாசமாய் சொல்லியிருப்பார். என்ன ஒன்றே ஒன்று, கதாநாயகி மட்டும் கதைக்குள் வந்தாள் என்றால் நாம் தாராளமாக ஒரு இரண்டு மூன்று பக்கம் திருப்பி கதையை தொடரலாம், அவ்வளவு விரிவாய் கதாநாயகிகளை விவரித்திருப்பார்.

பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் ஒன்றுமே வெற்றியடையவில்லை. எம்ஜிஆர் பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்க திரைக்கதை எல்லாம் எழுத சொன்னாராம். வந்தியத்தேவனையும், அருள்மொழிவர்மரையும் இருவேடமேற்று நடிக்க என்னியிருந்தாராம், எங்கயோ படித்த ஞாபகம். பிற்காலத்தில் கமல் பொன்னியின் செல்வனை எடுக்க திட்டமிட்டு சுஜாதாவுடன் சேர்ந்து திரைக்கதை எழுதலாம் என்று உட்கார பிறகு எப்படியோ மருதநாயகத்திற்கு தாவிவிட்டார். அதன் பிறகு பொன்னியின் செல்வனை எடுத்தே தீர்வது என்று மணிரத்னம் தன் பென்சிலால் முழு திரைக்கதையும் எழுதி முடிக்க அதற்குள் கல்கியின் படைப்புகள் நாட்டுடைமையாக்கி விட்டனர். இரு கோஷ்டிகள் அதை டிவி தொடராக எடுப்பது என்று கிளம்ப, மணிரத்னம் தன் முயற்சியை கைவிட்டார். அந்த டிவி தொடர் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.

ஒருவேளை பொன்னியின் செல்வன் சினிமாவாக வந்தால் இன்றைய தேதியில் அதன் perfect casting என்னவாக இருக்கும்? என்னை பொருத்தவரை வந்தியத்தேவனாக சூர்யா, அருள்மொழிவர்மனாக விக்ரம், நந்தினியாக அசின் அல்லது சிம்ரன் (ஒல்லியாக இருக்கும் பட்சத்தில்), குந்தவைக்கு perfect fit செளந்தர்யா ஆனால் அவர் இல்லாதலால் பத்மப்ரியா, சுந்தர சோழராக சிவக்குமார், மணிமேகலையாக த்ரிஷா, பெரியபழுவேட்டரையராக பெரியகருப்புத்தேவர் (அதான் விருமாண்டியில் பூசாரி), சின்ன பழுவேட்டரையராக வினுச்சக்ரவர்த்தி, ஆழ்வார்க்கடியனாக வெண்ணிறாடை மூர்த்தி (என் நன்பன் ராஜ்குமாருக்கு ஆழ்வார்க்கடியனுக்கு செந்தில் தான் மிகப்பொருத்தம் என்பான், அது ஒரு வைனவ கேரக்டராக இருப்பதால் எனக்கென்னவோ நம்ம மூர்த்தி தான் சரியாய் இருப்பார் என்று படுகிறது, provided அவர் கனைக்காமல் இருந்தால்) இவர்கள் மிக முக்கியமான பாத்திரத்துக்கு சரியாய் பொருந்துவார்கள். சரி அப்ப கடல் புறாவிற்கு? ம்ம்ம்..கடல் புறா பிரும்மாண்டத்திற்கு படம் எடுக்க நம் தமிழில் பட்ஜெட் இல்லை, மனது வைத்தால் பீட்டர் ஜாக்ஸன் எடுக்கலாம், அவர் எங்க இனிமே தமிழ் படிச்சு, புரிஞ்சி... அதெல்லாம் நடக்காத காரியம்.

Monday, July 17, 2006

சீரியல்...ஒரு serious பிரச்சினை

இந்த முறை அம்மா அப்பா என்கூட தங்கி இருக்க, அவர்களுக்கு போரடிக்காமல் இருக்க சன் டிவியையும், கே டிவியையும் இரண்டு மாதத்திற்கு இனையத்தில் subscribe செய்தேன். தமிழ் டிவியில் வரும் மெகாத் தொடர்களின் கொடுமைகளை பல வலைப்பூக்களில் படித்தாலும், அதன் தாக்கத்தை இந்த இரண்டு மாதங்களில்தான் நேரே கண்டேன். சொல்லி வைத்தாற்போல் எல்லா தொடர்களிலும் ஒரே கதை தான், இரண்டு பிரதான பெண் பாத்திரங்கள், ஒருத்தி குடும்பத்துக்காக போராடும், எப்போதுமே லிட்டர் கணக்காக அழுது வடிக்கும் ஹீரோயின், இன்னொருத்தி இவளின் அத்தனை முயற்சியையும் முறியடிப்பதற்காகவே பிறந்த மாமியாரோ, நாத்தனாரோ யாரோ ஒரு இன்னொரு பெண். இவர்களை சுற்றியே நகரும் கதை. இந்த சீரியல்களில் எல்லாம் ஆண்கள் பெரும்பாலும் atmosphere ஆர்ட்டிஸ்டுகளாகவே வந்து போவார்கள். மனைவியை சுற்றி கதை நகர்ந்தால் ஒரு புருஷன் கேரக்டர், ஒரு அப்பா கேரக்டர் (முக்கால்வாசி ஹீரோயினுக்கு அப்பா கிடையாது, விதவை அம்மா ஒரு கூடுதல் சென்டிமென்ட்), ஒரு மாமனார் கேரக்டர் என்று சொற்பமானவர்களே வசனம் பேசுகின்றனர். ஒரு நாள் ஒரு சீரியல் பார்த்துக்கொண்டிருந்தேன், நடுவில் ஒரு போன்கால் வந்ததால் அதை பேசிவிட்டு சிறுது நேரத்தில் வந்து திரும்பவும் சீரியலை பார்த்தேன், திடீரென்று கதாநாயகி வில்லியிடம் பாசமழை பொழிகிறாள், என்னடா இது குழப்பமாய் இருக்குதென்று அம்மாவிடம் கேட்டால், நான் போன் பேசிய நேரத்தில் பழைய சீரியல் முடிந்து புது சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறதாம். அப்படி ஒரு casting confusion, எல்லாம் அதே முகங்கள். ஒரு நிகழ்ச்சியில் கார்ட்டூனிஸ்ட் மதன் "சேனலை மாத்தி பார்த்தாலும் கதையில ஒரு continuity தெரியுது" என்று கிண்டலடித்தார். உன்மையிலேயே இந்த சீரியல்கள் எல்லாம் நடுத்தர வர்க்கத்தின் பெண்களின் மூளையை மழுங்கடித்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை.

சரி அப்படியானால் நம் தொலைக்காட்சியில் நல்ல தொடரோ, மெகா சீரியலோ வந்ததே இல்லையா? என்று கேட்டால், நிச்சயமாய் உண்டு. தமிழ் டிவி சீரியலை தொடங்கி வைத்த டிடிக்கே அந்த பெருமை போய்ச்சேரும். அப்போது டிடியில் ஒளிப்பரப்பாகும் தொடருக்கு 13 வாரங்கள் தான் ஒதுக்குவார்கள். அதுவும் அரைமணி நேரமே, ஆக மொத்தம் 6.5 மணி நேரம். அந்த வகையில் நான் பார்த்து ரசித்த முதல் சீரியல், இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தரின் இரயில் ஸ்நேகம். நிழல்கள் ரவி நடித்த சீரியல், அருமையான காதல் கதை. அதே காலகட்டத்தில், ஞாயிறு காலைகளில் பல நல்ல தொடர்கள் இடம்பெறும். சோ நிறைய தொடர்கள் செய்திருக்கிறார். அவர் சினிமாவை sattire செய்த சரஸ்வதியின் செல்வன் என்ற தொடர் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. இவற்றோடு வந்த இன்னும் சில தொடர்கள், சா.கந்தசாமியின் தொலைந்து போனவர்கள், ஜாவர் சீதாராமனின் உடல் பொருள் ஆனந்தி, சுஜாதாவின் கொலையுதிர் காலம், பாலகுமாரனின் தாயுமானவன் என்று பல நல்ல இலக்கிய படைப்பை டிவி தொடராக எடுத்தார்கள். என்னைக்கேட்டால் டிவியில் ஒரு கதையை சொல்ல 13 வாரம் போதுமானதே. டிடிக்கு பிறகு தனியார் தொலைக்காட்சிகள் வந்த ஆரம்பத்திலும், பல நல்ல சீரியல்கள் வந்து கொண்டு தான் இருந்தன. அதற்கு பிள்ளையார் சுழி போட்டவரும் பாலசந்தரே. சன் டிவியில் வந்த கையளவு மனசு ஒரு மேகா சீரியல் தான். ஆனால் அழகான ஒரு கதையை அலுக்காமல் சொல்லியிருப்பார். அதற்கு பிறகு வந்த கொஞ்ச காலத்தை நான் டிவி தொடர்களின் golden time என்பேன். ஏனென்றால் அப்போது தான் மர்மதேசம் வந்தது. மின்பிம்பங்களின் மர்மதேசம் டிவி வரலாற்றிலேயே ஒரு புது அத்தியாயத்தை ஏற்படுத்தியது. டெக்னிக்கலாக டிவியில் பல விஷயங்கள் புதிதாக இருந்தது மர்மதேசத்தில் தான். அதிலும் மர்மதேசம்: விடாது கருப்பு தான் என்னுடைய ·பேவரைட். ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, பின்னனி இசை, டைரக்ஷன் என்று அசத்தியிருப்பார்கள். அதனுடைய மூன்றாவது பாகம் சொர்ன ரேகை என்று ராஜ் டிவியில் வந்தது, இது மட்டும் 13 வார ·பார்முலாவில் எடுக்கப்பட்டது. சித்தியை இழுத்த..sorry எடுத்த சி.ஜே.பாஸ்கர் தான் இயக்கி இருப்பார். இதுவும் விருவிருப்பாய் இருக்கும். இதன் கதாசிரியர் இந்திரா சவுந்திரராஜன் உன்மையிலே ஒரு மன்டை பார்ட்டி. அமேரிக்காவில் இருந்தாரென்றால் மனோஜ் நைட் ஷ்யாமளனை எல்லாம் எடுத்து சாப்பிட்டு எங்கயோ போயிருப்பார். மர்மதேசத்தின் நாலாவது பாகத்தையும் (பெயர் மறந்துவிட்டது) கொஞ்ச நாள் எடுத்து ஒளிப்பரப்பினார்கள், ஏனோ நடுவில் நின்றுவிட்டது. இதே பாலச்சந்தர் அடுத்து ஜன்னல் என்று ஒரு பல பாககங்கள் கொண்ட மேகா சீரியல் கொடுத்தார். அதுவும் நன்றாகவே இருந்தது. ஒரு பாகத்தில் spbயும் லக்ஷ்மியும் வயதானவரகளாக நடித்திருப்பார்கள். ப்ரேமி என்று ஒரு மெகாவில்தான் கொஞ்சம் சொதப்பியிருப்பார். என்னைக் கேட்டால் டிவி சீரியலுக்கு சாபக்கேடு சித்தியின் ரூபத்தில் தான் வந்தது என்பேன். அதன் பிறகு இருக்கின்ற நிலை தான் நான் முதல் பத்தியில் சொன்னது.

Friday, July 14, 2006

சந்தோஷம் வாழ்க்கையின் வரம்

இரண்டு மாதமாய் வலைப்பதிவு வாசிக்கவும், பதிப்பிக்கவும் நேரமில்லை. காரணம் இந்தியாவிலிருந்து என் பெற்றோர்கள் வந்திருந்தார்கள். இரு மாதமாய் அவர்களுடன் பேசவும், சிரிக்கவும், இந்த ஊரை சுற்று கான்பிக்கவுமே சரியாய் இருந்தது. 'இரண்டு மாதம் போனதே தெரியவில்லை' என்று சொல்வது வழக்கமான clicheவாக இருந்தாலும் அதுதான் உன்மை. என் தாயுடன் இருந்தது அத்தனையும் சொர்க்க நேரங்கள். அவர்களை வழி அனுப்பிய பின் தான் நான் அதை உனர்ந்தேன். விருமாண்டியில் கமல் சொன்னது "சந்தோஷங்கிறது அத அனுபவிக்கும்போது மனுஷனுக்கு தெரியர்தில்ல" எவ்வளவு உன்னத வார்த்தைகள். இன்று தோழி ப்ரியாவின் blogல் happiness is secret of success என்று சொல்லியிருந்தார், அது எவ்வளவு தூரம் உன்மையென்று எனக்கு தெரியவில்லை, ஆனால் சந்தோஷம் தான் வாழ்க்கையின் ரகசியம், இது மட்டும் நிச்சயம்.