
Total Pageviews
Friday, October 28, 2005
Sunday, October 23, 2005
தீபாவளி
தீபாவளி நெருங்குகிறது, இந்த வருடம் தீபாவளி ஷாப்பிங்கை நேற்று சிக்காகோ சென்று முடித்து திரும்பினேன். அமேரிக்காவில் இந்த வருடம் தான் உண்மையான தீபாவளி கொண்டாட போகிறேன் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நான் இந்த வருடம் என் அண்ணன் அண்ணியோடு ('ஜெய்'யும் அவர் மனைவியும்) தீபாவளி கொண்டாட
ஒஹாயோவிற்கு (ohio) அடுத்த வாரம் செல்கிறேன். 2002லிருந்து நான் அமேரிக்காவில் இருப்பதால் கடந்த மூன்று வருடம் தீபாவளிக்கு என் குடும்பத்துடன் இருக்க
முடியவில்லை. நான் இல்லாததால் என் வீட்டாரும் அவ்வளவாக இப்போதெல்லாம் தீபாவளி கொண்டாடுவதில்லை.
தீபாவளி என்றால் எனக்கு பல ஞாபகங்கள். சிறுவயதில் தீபாவளியென்றால் ஒரு மாதம் முன்பாகவே நானும் என் அண்ணனும் பரபரப்பாகி விடுவோம். எப்போதும் கண்டிப்போடு இருக்கும் எங்கள் தந்தை, தீபாவளி பட்டாசில் மட்டும் அதை தளர்த்திவிடுவார். பத்து பதினைந்து வருடத்திற்கு முன்பே, அப்போது இருந்த விலைவாசி திண்டாட்டிலும் எங்களுக்கு ஆயிரம் இரண்டாயிரம் ருபாய்க்கெல்லாம் பட்டாசு வாங்கி தந்திருக்கிறார். ஒரு முறை, எனக்கு நன்றாய் ஞாபகம் இருக்கிறது, பலத்த மழையிலும் எங்களை பாரீஸ் கார்னர் கூட்டிச்சென்று எங்கள் விருப்பத்திற்கு பெரிய அட்டைப் பெட்டி நிறைய பட்டாசு வாங்கி அதை தன் தலையில் சுமந்தபடியே ஆட்டோ பிடித்து வீட்டிற்கு கொண்டு வந்தார். கட்டு கட்டாக அந்த பட்டாசுகளை பார்ப்பதே எனக்குக் கொள்ளை இன்பம், பல சமயம் அதை வெடிப்பதற்கே மனசு இருக்காது. பட்டாசு வாங்கியவுடன், முதல் வேலையாக நானும் என் அண்ணனும், அந்த பட்டாசுகளை தீபாவளி மற்றும் கார்த்திகை தீபத்திற்கு பிரித்து வைத்துவிடுவோம். முக்கால்வாசி தீபாவளிக்கு எங்கள் தந்தை எங்களை குடும்பத்துடன் திருவாரூரிற்கு பக்கத்திலிருக்கும் எங்கள் சொந்த ஊரிற்கு கூட்டிச் சென்றுவிடுவார். ஊரில்தான் பெருன்பான்மையான தீபாவளிகளை கொண்டாடுவோம். ஊர் சென்றவுடனே என் அம்மா, பாட்டி மற்றும் சின்னம்மாவுடன் பலகார ப்ரோக்ராம்களை ஆரம்பித்துவிடுவார். சமயத்தில் அம்மாவிற்கு தலைவலி எடுத்துவிடும், அதனால் தலையைப் பிடித்து ஓய்வு எடுத்துகொண்டிருப்பார், அப்போதெல்லாம் நான் "அம்மா எழுந்திரு...போய் பலகாரம் செய்" என்று தொல்லைப்படுத்த்வேன். என் தொல்லை தாங்காமலே என் அம்மா எல்லா பலகாரமும் செய்து விடுவார். அம்மா பலகாரம் செய்யும்போதெல்லாம் கண்டிப்பாய் யாரையும் சமையற்கட்டு பக்கம் அனுமதிக்க மாட்டார். பலகாரத்தை யாரும் சாமிக்கு படைக்கும் முன் எச்சில் படுத்த கூடாது என்பார். ஆனால் நான் மட்டும் திருட்டுதனமாய் அங்கு நுழைந்து சிலவற்றை எடுத்து சாப்பிட்டு விடுவேன். பலநேரம் இதை கண்டும் கானாததை போல் விட்டுவிடுவாள் அம்மா. ஊரில் தீபாவளியன்று விடியற் காலை நான்கு மனிக்கே எழுப்பிவிடுவர். என் தந்தை எல்லோர் தலையிலும் எண்ணெய் வைத்து
விடுவார். பாட்டி கொல்லைப்புறத்தில் பெரிய அண்டாவில் எல்லோருக்கும் வெந்நீர் போட்டுக் கொண்டிருப்பாள். குளிர் எடுத்தால் நான் வெந்நீர் வேண்டுவேன், அவ்வளவு குளிர் இல்லையென்றால் நான் சித்தப்பா மற்றும் என் அண்ணனும், எங்கள் ஊரில் உள்ள ஐயனார் குளத்தில் போய் ஒரு முங்கு முங்குவோம். ஆஹா, அந்த விடியற் நேரத்தில், கதிரவன் எட்டிப்பார்க்கும் வேளையில் குளத்தில் நீராடுவது எவ்வளவு ஆனந்தம். குளித்தவுடன் வீட்டிற்கு போய், அப்பா மஞ்சள் இட்டு கொடுக்கும் புது துணிமனியை வாங்கி
போட்டுக்கொண்டு எல்லோரும் சாமி கும்பிடுவோம். உடனே தலைவாழை இலை போட்டு திபாவளி விருந்து. எப்படியும் இலையில் 20 ஐயிட்டம் இருக்கும். அப்பாவிற்கு தெரியாமல் சிலவற்றை இலையிலெ வைத்து மடித்து எழுவேன். எழுந்தவுடன் வாங்கிய பட்டாசுகளை பிரித்து நானும் அண்ணனும் வெடித்துத் தள்ளுவோம். காலை மணி எட்டு ஒன்பதுக்குள் தீபாவளி முடிந்துவிடும். இப்போது இதை நினைக்கும் நேரம், விருமாண்டி படத்தில் கமல் சொல்லும் ஒரு வசனம் தான் ஞாபத்திற்கு வருகிறது "சந்தோஷம்னா என்னன்னு அத அனுபவிக்கும்போது மனுஷனுக்கு தெரியர்தில்ல".....
ஒஹாயோவிற்கு (ohio) அடுத்த வாரம் செல்கிறேன். 2002லிருந்து நான் அமேரிக்காவில் இருப்பதால் கடந்த மூன்று வருடம் தீபாவளிக்கு என் குடும்பத்துடன் இருக்க
முடியவில்லை. நான் இல்லாததால் என் வீட்டாரும் அவ்வளவாக இப்போதெல்லாம் தீபாவளி கொண்டாடுவதில்லை.
தீபாவளி என்றால் எனக்கு பல ஞாபகங்கள். சிறுவயதில் தீபாவளியென்றால் ஒரு மாதம் முன்பாகவே நானும் என் அண்ணனும் பரபரப்பாகி விடுவோம். எப்போதும் கண்டிப்போடு இருக்கும் எங்கள் தந்தை, தீபாவளி பட்டாசில் மட்டும் அதை தளர்த்திவிடுவார். பத்து பதினைந்து வருடத்திற்கு முன்பே, அப்போது இருந்த விலைவாசி திண்டாட்டிலும் எங்களுக்கு ஆயிரம் இரண்டாயிரம் ருபாய்க்கெல்லாம் பட்டாசு வாங்கி தந்திருக்கிறார். ஒரு முறை, எனக்கு நன்றாய் ஞாபகம் இருக்கிறது, பலத்த மழையிலும் எங்களை பாரீஸ் கார்னர் கூட்டிச்சென்று எங்கள் விருப்பத்திற்கு பெரிய அட்டைப் பெட்டி நிறைய பட்டாசு வாங்கி அதை தன் தலையில் சுமந்தபடியே ஆட்டோ பிடித்து வீட்டிற்கு கொண்டு வந்தார். கட்டு கட்டாக அந்த பட்டாசுகளை பார்ப்பதே எனக்குக் கொள்ளை இன்பம், பல சமயம் அதை வெடிப்பதற்கே மனசு இருக்காது. பட்டாசு வாங்கியவுடன், முதல் வேலையாக நானும் என் அண்ணனும், அந்த பட்டாசுகளை தீபாவளி மற்றும் கார்த்திகை தீபத்திற்கு பிரித்து வைத்துவிடுவோம். முக்கால்வாசி தீபாவளிக்கு எங்கள் தந்தை எங்களை குடும்பத்துடன் திருவாரூரிற்கு பக்கத்திலிருக்கும் எங்கள் சொந்த ஊரிற்கு கூட்டிச் சென்றுவிடுவார். ஊரில்தான் பெருன்பான்மையான தீபாவளிகளை கொண்டாடுவோம். ஊர் சென்றவுடனே என் அம்மா, பாட்டி மற்றும் சின்னம்மாவுடன் பலகார ப்ரோக்ராம்களை ஆரம்பித்துவிடுவார். சமயத்தில் அம்மாவிற்கு தலைவலி எடுத்துவிடும், அதனால் தலையைப் பிடித்து ஓய்வு எடுத்துகொண்டிருப்பார், அப்போதெல்லாம் நான் "அம்மா எழுந்திரு...போய் பலகாரம் செய்" என்று தொல்லைப்படுத்த்வேன். என் தொல்லை தாங்காமலே என் அம்மா எல்லா பலகாரமும் செய்து விடுவார். அம்மா பலகாரம் செய்யும்போதெல்லாம் கண்டிப்பாய் யாரையும் சமையற்கட்டு பக்கம் அனுமதிக்க மாட்டார். பலகாரத்தை யாரும் சாமிக்கு படைக்கும் முன் எச்சில் படுத்த கூடாது என்பார். ஆனால் நான் மட்டும் திருட்டுதனமாய் அங்கு நுழைந்து சிலவற்றை எடுத்து சாப்பிட்டு விடுவேன். பலநேரம் இதை கண்டும் கானாததை போல் விட்டுவிடுவாள் அம்மா. ஊரில் தீபாவளியன்று விடியற் காலை நான்கு மனிக்கே எழுப்பிவிடுவர். என் தந்தை எல்லோர் தலையிலும் எண்ணெய் வைத்து
விடுவார். பாட்டி கொல்லைப்புறத்தில் பெரிய அண்டாவில் எல்லோருக்கும் வெந்நீர் போட்டுக் கொண்டிருப்பாள். குளிர் எடுத்தால் நான் வெந்நீர் வேண்டுவேன், அவ்வளவு குளிர் இல்லையென்றால் நான் சித்தப்பா மற்றும் என் அண்ணனும், எங்கள் ஊரில் உள்ள ஐயனார் குளத்தில் போய் ஒரு முங்கு முங்குவோம். ஆஹா, அந்த விடியற் நேரத்தில், கதிரவன் எட்டிப்பார்க்கும் வேளையில் குளத்தில் நீராடுவது எவ்வளவு ஆனந்தம். குளித்தவுடன் வீட்டிற்கு போய், அப்பா மஞ்சள் இட்டு கொடுக்கும் புது துணிமனியை வாங்கி
போட்டுக்கொண்டு எல்லோரும் சாமி கும்பிடுவோம். உடனே தலைவாழை இலை போட்டு திபாவளி விருந்து. எப்படியும் இலையில் 20 ஐயிட்டம் இருக்கும். அப்பாவிற்கு தெரியாமல் சிலவற்றை இலையிலெ வைத்து மடித்து எழுவேன். எழுந்தவுடன் வாங்கிய பட்டாசுகளை பிரித்து நானும் அண்ணனும் வெடித்துத் தள்ளுவோம். காலை மணி எட்டு ஒன்பதுக்குள் தீபாவளி முடிந்துவிடும். இப்போது இதை நினைக்கும் நேரம், விருமாண்டி படத்தில் கமல் சொல்லும் ஒரு வசனம் தான் ஞாபத்திற்கு வருகிறது "சந்தோஷம்னா என்னன்னு அத அனுபவிக்கும்போது மனுஷனுக்கு தெரியர்தில்ல".....
Tuesday, October 11, 2005
சில நேரங்கள் சில ஞாபகங்கள் நாடக மேடை 2
பள்ளியில் அதன் பிறகு எனக்கு மேடையேறும் வாய்ப்புகள் ஏதும் வரவில்லை. கல்லூரியிலும் கூட நான் மேடை ஏறவில்லை. பல வருடங்கள் கழித்து, நான் வேலையில் சேர்ந்த பிறகு, எங்கள் நிறுவனத்தில் வருடா வருடம் நடக்கும் cultural dayஇல் (Rendezvous என்று அழைப்பார்கள்) தான் மேடை ஏறினேன். எங்கள்
டிபார்ட்மெண்டில் நந்து என்ற சீனியர் தான் rendevous வருடா வருடம் organize செய்வார். ஒரு
பார்ட்டியில் நான் ஏதோ பொழுது போக்கிற்கு மிமிக்ரி செய்ய, அது அவருக்கு பிடித்துபோய் எனக்கு ஒரு slot கொடுத்தார். நானும் என்னுடன் வேலை பார்த்த ராமசுப்புவும் சேர்ந்து 1999 வருடம் ம்யூசிக் அகாடமியில் எங்கள் முதல் நிகழ்ச்சியை செய்தோம். அப்போது கிரிக்கெட் world cup நடைபெற்றதால், நடிகர்கள் கிரிக்கெட் விளையாடுவது போல மிமிக்ரியும், விளம்பர spoofவும், அங்கில பட ட்ரெயிலர் ஒன்றும் செய்தோம். அதில் DTSஉடன் நாங்கள் செய்த ஆங்கிலப்பட ட்ரெய்லரும், விளம்பர spoofவும் நல்ல
ஹிட்டானது. உதாரணத்திற்கு ஒரு விளம்பரம்
நான்: (கயில் ஒரு கோப்பை வைத்துகொண்டு) "இந்த டீயில் நிறமில்லை, இந்த டீயில் மனமில்லை, இந்த டீயில் திடமில்லை...எந்த டீயில் இந்த மூனு குணமும் இருக்கு"
ராமசுப்பு: "டேய் முண்டம்... நீ குடிக்கிறது காபிடா"...
அதற்கு அடுத்த வருடம், எங்கள் டீம் பெரிதானது. நான், ராமசுப்பு, அருண் மற்றும் பாலா நால்வரும் சேர்ந்து மிமிக்ரி செய்தோம். ஆனால் எங்கள் மிமிக்ரி அவ்வளவு
சோபிக்கவில்லை. நல்ல வேளையாக மிமிக்ரியோடு மணிரத்னம் பட clicheக்களை spoof செய்தோம், அது நல்ல ஹிட்டானது. உதாரணத்திற்கு, மேடையில் இருட்டாக்கி, பாலா ஒரு பக்கமும், ராமசுப்பு மறு பக்கமும் மேடையின் நடுவே வருவார்கள், எதிரெதிர் வந்து அவர்கள் முகத்தில் டார்ச் அடிப்பார்கள்
பாலா: (மெல்லிய குரலில்) "...விட்டுது....எல்லாத்தையும் விட்டுது..."
ராமசுப்பு: (மெல்லிய குரலில்) "...முடியாது...என்னால முடியாது.." இது மட்டும் பேசி வந்து விடுவார்கள், பிறகு பாம்பே பட BGM ஒலிக்கும், மேடை ஒரு பக்கத்திலிருந்து அருண், பாலா, ராமசுப்பு மூவரும் ஆளுக்கொரு தடியை வத்து யாரையோ துரத்துவது போல் மேடையின் ஒரு மூலையில் இருந்து மறு மூலைக்கு ஓடிவார்கள், ஓடும்போது அருண் ஒரு சிகரெட் துண்டை பற்றவைத்து கீழே போட்டுவிட்டு ஓடுவார், அப்போது ரோஜா படத்தில் வரும் தமிழா தமிழா பாடலில் "இது பாரதம், நம் பாரதம்" இசை ஒலிக்கும் உடனே ஒரு சிகப்பு ஷ்வெட்டர் போட்டு, கயை கயிறால் கட்டி நான் தேச பக்தியோடு அந்த சிகரெட் துண்டை அனைப்பேன். அனைத்து அந்த பக்கம் வந்தபின், அலைப்பாயுதேவில் வரும் "என்றென்றும் புன்னகை" பாடல் ஒலிக்கும், அப்போது அருண் ஒரு கருப்பு sunglass மாட்டி காதில் walkman போட்டு ஒரு சின்ன tobu சைக்கிளில் மேடையை சுற்றி வருவார், அரங்கில் கரகோஷம்.
2001 வருடம் rendezvous தான் நான் கடைசியாக பங்கேற்ற மேடை அனுபவம். இந்தமுறை நான் மேடையில் தோன்றவில்லை, ஆனால் ஒரு முழுநீல நகைச்சுவை
நாடகத்தை எழுதி இயக்கினேன். செந்தில், ராஜ்குமார், மீனா, அம்மு, ஷபி, அருண், ஹரி, ஜெகதீஷ் என பெரிய டீம் வொர்க் அது, சூப்பர் ஹிட்டானது. எங்கள் IT company கோடம்பாக்கத்தில் சினிமா எடுத்தால் என்னென்ன ஆகும் என்ற வேடிக்கையான கற்பனை தான் கரு. HR, Admin, Finance என அனைவரையும் ஓட்டு ஓட்டு என ஓட்டினோம். செந்தில் தான் கதாநாயகன், சினிமா டைரக்டராக நடித்தான், அருணுக்கு ஆந்திர சினிமா ஹீரோ வேடம், அதற்கு ஏற்றார் போல் ஒரு கண்ணைகூசும் காஸ்ட்யூமில் வந்து கலக்கினார். எனக்கு மிகவும் திருப்தியளித்த நாடகத்திலிருந்து சில காட்சிகள்...
முதல் காட்சி: செந்தில் இரண்டு கைகளாலயும், சினிமா டைரக்டர் போல் angle பார்த்தபடியே மேடைக்கு வருவான், கூடவே அசிஸ்டெண்ட் டைரக்டராக ஷபி
செந்தில்: (மேடையின் எல்லா பக்கமும் திரும்பி angle பார்க்கிறான்)
ஷபி: (டைரக்டரை பார்த்து புல்லரித்தபடியே அவர் காலில் விழுகிறான்)
செந்தில் :ஏய் அசிஸ்டெண்ட் எழுந்திரு... எதுக்கு கால்ல விழர
ஷபி: சார்.. நீங்க டைரக்டர் தெய்வம் சார்... சும்மா நிக்கும்போதே எல்லா directionலயும் எப்படி angle பாக்குறீங்க
செந்தில்: நீ வேற....அவசரமா எனக்கு அது வருது...எந்த பக்கம் ரெஸ்ட் ரூம்னு பாத்துகிட்டு இருக்கேன்..
.....
கதாநாயகி தேர்விற்கு மும்பை மாடலாக மீனா டைரக்டரை பார்க்க வருவார்.
மீனா: வன்க்கம் சார்
செந்தில்: வணக்கம்மா...உனக்கு தமிழ் பேச தெரியுமா..
மீனா: குஞ்சம் குஞ்சம் தெர்யும் சார்
ஷபி: சார்...என்ன சார் தமிழ் தடுமாறுது
செந்தில்: இது போதுமே...இது போதுமே...இத வச்சு அவார்டே வாங்கலாம்
ஷபி: சரிம்மா..உனக்கு பாட தெரியுமா... ஒரு பாட்டு பாடு
மீனா: என்க்கு prayer song தான் தெர்யும்
ஷபி: என்னது prayer ஸாங்கா...
செந்தில்: டேய் விடுடா..பாப்பாவோட prayer தான் கேப்போமே..நீ பாடும்மா
மீனா: (தொண்டையய் செருமி, கைகளை கூப்பி, கண்கள் மூடி) மல ...மல மருத மல...
............
கதாசிரியராக ராஜ்குமார், டைரக்டரிடம் கதை சொல்ல வருகிறான்.
செந்தில்: இதோ பாருப்பா...இது ஒரு மெகா பட்ஜெட் படம்.. அதுக்கேத்த மாதிரி கதையச்சொல்லு
ராஜ்: சார்..ஒரு அருமையான கிராமத்து சப்ஜெக்ட் சார்
செந்தில்: அடடா...மெகா பட்ஜெட் படம்னாலும், கிராமத்து கதையா சொல்றான்டா..மண்வாசனைய காமிக்கிறாண்டா.. நோட் பன்னிகோடா
(ஷபி தன் கூடவே வைத்திருக்கும் ஒரு பேப்பர் பேடில் எதையோ எழுதுகிறான்.அடிக்கடி செந்தில் சொல்ல சொல்ல அவன் எதையோ கிறுக்குகிறான்)
ராஜ்: சார் கதப்படி நம்ம ஹீரோ..பாரப்பட்டிங்கிற கிராமத்துல விவசாயம் செய்யிற விவசாயி..
செந்தில்: யோவ் என்னய்யா....மெகா பட்ஜெட் படம்னு சொல்றன்..நீ பாரப்பட்டி..பஞ்சப்பட்டின்னு...எனக்கு விஷ்வல் முக்கியம்யா..பேசாம சுவிட்சர்லாந்துல ஏர் உழுவுரதா
வச்சிக்கோ
ஷபி: சார் சுவிட்சர்லாந்துல ஏர் பிடிக்கிறது எல்லாம் கொஞ்சம் ஓவர் சார்... பெர்மிஷன் கிடைக்காது..
செந்தில்: அப்படின்னா சொல்ற... சரி.. பேசாம தாஜ்மஹால் பக்கத்துல உழுவரதா வச்சிக்கலாம்..
ராஜ்: தாஜ்மஹால்ல விவசாயமா...லாஜிக் உதைக்குதே சார்
செந்தில்:(கூட்டத்தை பார்த்து கைகாட்டி) எழுதுற codeலேயே நாங்க லாஜிக் பாக்க மாட்டோம்...(சரியான applause)
ராஜ்: ஒகே சார்... கதைய கண்டின்யூ பன்றேன்...நம்ம ஹீரோ இருக்கிற ஊர்ல ஒரு பன்னையார்...
செந்தில்: என்ன...அந்த பன்னையார் பொன்ன நம்ம ஹீரோ லவ் பன்னி கல்யானம் பன்னிப்பார்...இதான கதை
ராஜ்:(ஆச்சர்யத்தோடு)...சார் உங்களுக்கு எப்படி சார் இது தெரியும்..
செந்தில்: இதான் ஊருக்கே தெரியுமேயா...இத வச்சி நானே நாலு படம் பன்னிட்டேன்....
ராஜ்: சார்...
செந்தில்: என்னய்யா நீ... இது ஒரு IT கம்பேனியோட படம்யா..இங்க நிறைய இருக்கு...java, oracle, database இது மாதிரி நிறைய விஷயம் இருக்கு.. இத வச்சி இவங்க தான்(கூட்டத்தை பார்த்து கைகாட்டி) ஒன்னும் பன்றதில்ல...நீயாவது நல்ல கத பன்னேயா..
ராஜ்: ஒகே சார்...ITக்கு ஏத்த கத ஒன்னு சொல்றேன் சார்..டைட்டிலே ரொம்ப வித்தியாசமா இருக்கும் சார்
செந்தில்: என்ன சொல்லு
ராஜ்: 12G இது தான் சார் டைட்டில்
செந்தில்: 12G...அப்படின்னா
ராஜ்: 12 gigabytes
செந்தில்: ஆஹா..டைட்டில்லெ கலக்குறாண்டா.. நோட் பன்னிகோடா (ஷபி எதையோ கிறுக்குகிறான்)..நீ சொல்லு
ராஜ்: நம்ம ஹீரோ உங்க IT கம்பேனியில வொர்க் பன்றார் சார்...கம்பேனியோட CEOவோட hard disk 12 GB சைஸ் சார்..
செந்தில்: கொஞ்சம் இரு (ஷபி பக்கம் திரும்பி)...டேய் CEO வச்சி கதைடா...அப்ரைஸல்ல (appraisal) நல்லா தேத்தலாம்.
ராஜ்: அந்த hard disk ஒரு நாள் க்ராஷ் ஆகுது...அத நம்ம ஹீரோ restore செய்தா அவன் நெலம என்ன...அவன் restore செய்யலேனா அவன் நெலம என்ன.. ரெண்டையும் மாத்தி மாத்தி காமிக்கிறோம் சார்..காட்சிக்கு காட்சி வித்தியாசம் சார்..
செந்தில்: சூப்பர் story ரெடி..ஸ்டெரெய்ட்டா நாம சூட்டிங் போயிடலாம்.
...........
சூட்டிங் ஸ்பாட்டில், டைரக்டர் ஹீரோ அருணுக்கு காட்சியை விளக்கி கொண்டிருகிறான், பக்கத்தில் அசிஸ்டெண்ட் கதாநாயகியோடு அரட்டை அடித்துகொண்டிருக்கிறான்
செந்தில்: சார்..இது தான் சார் சீன்..மல மேல டூயட் பாடுறீங்க..பாடி முடிச்சடும் ஹீரேயின கட்டி புடிச்சு கீழே விழறீங்க...கட்டி புடிச்சு உருள்ற சீன டூப் போட்டு எடுத்தடலாம்..
அருண்: ஏமி..ஹீரொயினோட சீனா...நேனே சேஸ்தானு....நேனே சேஸ்தானு
செந்தில்: சைக்கிள்ள இருந்து விழற சீனுக்கெல்லாம் டூப் கேக்கறான்...ஹீரோயினோட சீன் சொன்னா...அவனே செய்யனும்னு சொல்றான்...கொடுமைடா..
அருண்: ஏமி....
செந்தில்: ஒத்து சார்..
(செந்தில் திரும்ப, அங்கே அசிஸ்டெண்ட் ஹீரோயினுடன் அரட்டை அடிப்பதை பார்த்து டென்ஷன் ஆகிறான்)
செந்தில்: ஏய் நீ இங்க என்ன செஞ்சிகிட்டு இருக்கிற...ஹீரோயினுக்கு சீன் சொல்லதான சொன்னேன் (அவனிடம் இருக்கும் நோட் பேடை வாங்குகிறான் அதைப் பார்த்து பயங்கர அதிர்ச்சி ஆகிறான்) டேய் என்னடா பூனப்படம் வரைஞ்சி இருக்குற..
ஷபி:(தலை சொரிந்தபடி) சார்..சாரி சார்...எனக்கு எழுத படிக்க எல்லாம் தெரியாது..
செந்தில்: அடப்பாவி...ஆரம்பத்திலிருந்து....நோட் பன்னுடா...நோட் பன்னுடான்னு சொன்னேனே...இத தான் செஞ்சிகிட்டு இருந்தியா... நீ நம்ம HR recruit செஞ்ச ஆளா....
ஷபி: ஆமா சார்...
செந்தில்: இப்ப புரியுது (பயங்கர applause)
.....
டிபார்ட்மெண்டில் நந்து என்ற சீனியர் தான் rendevous வருடா வருடம் organize செய்வார். ஒரு
பார்ட்டியில் நான் ஏதோ பொழுது போக்கிற்கு மிமிக்ரி செய்ய, அது அவருக்கு பிடித்துபோய் எனக்கு ஒரு slot கொடுத்தார். நானும் என்னுடன் வேலை பார்த்த ராமசுப்புவும் சேர்ந்து 1999 வருடம் ம்யூசிக் அகாடமியில் எங்கள் முதல் நிகழ்ச்சியை செய்தோம். அப்போது கிரிக்கெட் world cup நடைபெற்றதால், நடிகர்கள் கிரிக்கெட் விளையாடுவது போல மிமிக்ரியும், விளம்பர spoofவும், அங்கில பட ட்ரெயிலர் ஒன்றும் செய்தோம். அதில் DTSஉடன் நாங்கள் செய்த ஆங்கிலப்பட ட்ரெய்லரும், விளம்பர spoofவும் நல்ல
ஹிட்டானது. உதாரணத்திற்கு ஒரு விளம்பரம்
நான்: (கயில் ஒரு கோப்பை வைத்துகொண்டு) "இந்த டீயில் நிறமில்லை, இந்த டீயில் மனமில்லை, இந்த டீயில் திடமில்லை...எந்த டீயில் இந்த மூனு குணமும் இருக்கு"
ராமசுப்பு: "டேய் முண்டம்... நீ குடிக்கிறது காபிடா"...
அதற்கு அடுத்த வருடம், எங்கள் டீம் பெரிதானது. நான், ராமசுப்பு, அருண் மற்றும் பாலா நால்வரும் சேர்ந்து மிமிக்ரி செய்தோம். ஆனால் எங்கள் மிமிக்ரி அவ்வளவு
சோபிக்கவில்லை. நல்ல வேளையாக மிமிக்ரியோடு மணிரத்னம் பட clicheக்களை spoof செய்தோம், அது நல்ல ஹிட்டானது. உதாரணத்திற்கு, மேடையில் இருட்டாக்கி, பாலா ஒரு பக்கமும், ராமசுப்பு மறு பக்கமும் மேடையின் நடுவே வருவார்கள், எதிரெதிர் வந்து அவர்கள் முகத்தில் டார்ச் அடிப்பார்கள்
பாலா: (மெல்லிய குரலில்) "...விட்டுது....எல்லாத்தையும் விட்டுது..."
ராமசுப்பு: (மெல்லிய குரலில்) "...முடியாது...என்னால முடியாது.." இது மட்டும் பேசி வந்து விடுவார்கள், பிறகு பாம்பே பட BGM ஒலிக்கும், மேடை ஒரு பக்கத்திலிருந்து அருண், பாலா, ராமசுப்பு மூவரும் ஆளுக்கொரு தடியை வத்து யாரையோ துரத்துவது போல் மேடையின் ஒரு மூலையில் இருந்து மறு மூலைக்கு ஓடிவார்கள், ஓடும்போது அருண் ஒரு சிகரெட் துண்டை பற்றவைத்து கீழே போட்டுவிட்டு ஓடுவார், அப்போது ரோஜா படத்தில் வரும் தமிழா தமிழா பாடலில் "இது பாரதம், நம் பாரதம்" இசை ஒலிக்கும் உடனே ஒரு சிகப்பு ஷ்வெட்டர் போட்டு, கயை கயிறால் கட்டி நான் தேச பக்தியோடு அந்த சிகரெட் துண்டை அனைப்பேன். அனைத்து அந்த பக்கம் வந்தபின், அலைப்பாயுதேவில் வரும் "என்றென்றும் புன்னகை" பாடல் ஒலிக்கும், அப்போது அருண் ஒரு கருப்பு sunglass மாட்டி காதில் walkman போட்டு ஒரு சின்ன tobu சைக்கிளில் மேடையை சுற்றி வருவார், அரங்கில் கரகோஷம்.
2001 வருடம் rendezvous தான் நான் கடைசியாக பங்கேற்ற மேடை அனுபவம். இந்தமுறை நான் மேடையில் தோன்றவில்லை, ஆனால் ஒரு முழுநீல நகைச்சுவை
நாடகத்தை எழுதி இயக்கினேன். செந்தில், ராஜ்குமார், மீனா, அம்மு, ஷபி, அருண், ஹரி, ஜெகதீஷ் என பெரிய டீம் வொர்க் அது, சூப்பர் ஹிட்டானது. எங்கள் IT company கோடம்பாக்கத்தில் சினிமா எடுத்தால் என்னென்ன ஆகும் என்ற வேடிக்கையான கற்பனை தான் கரு. HR, Admin, Finance என அனைவரையும் ஓட்டு ஓட்டு என ஓட்டினோம். செந்தில் தான் கதாநாயகன், சினிமா டைரக்டராக நடித்தான், அருணுக்கு ஆந்திர சினிமா ஹீரோ வேடம், அதற்கு ஏற்றார் போல் ஒரு கண்ணைகூசும் காஸ்ட்யூமில் வந்து கலக்கினார். எனக்கு மிகவும் திருப்தியளித்த நாடகத்திலிருந்து சில காட்சிகள்...
முதல் காட்சி: செந்தில் இரண்டு கைகளாலயும், சினிமா டைரக்டர் போல் angle பார்த்தபடியே மேடைக்கு வருவான், கூடவே அசிஸ்டெண்ட் டைரக்டராக ஷபி
செந்தில்: (மேடையின் எல்லா பக்கமும் திரும்பி angle பார்க்கிறான்)
ஷபி: (டைரக்டரை பார்த்து புல்லரித்தபடியே அவர் காலில் விழுகிறான்)
செந்தில் :ஏய் அசிஸ்டெண்ட் எழுந்திரு... எதுக்கு கால்ல விழர
ஷபி: சார்.. நீங்க டைரக்டர் தெய்வம் சார்... சும்மா நிக்கும்போதே எல்லா directionலயும் எப்படி angle பாக்குறீங்க
செந்தில்: நீ வேற....அவசரமா எனக்கு அது வருது...எந்த பக்கம் ரெஸ்ட் ரூம்னு பாத்துகிட்டு இருக்கேன்..
.....
கதாநாயகி தேர்விற்கு மும்பை மாடலாக மீனா டைரக்டரை பார்க்க வருவார்.
மீனா: வன்க்கம் சார்
செந்தில்: வணக்கம்மா...உனக்கு தமிழ் பேச தெரியுமா..
மீனா: குஞ்சம் குஞ்சம் தெர்யும் சார்
ஷபி: சார்...என்ன சார் தமிழ் தடுமாறுது
செந்தில்: இது போதுமே...இது போதுமே...இத வச்சு அவார்டே வாங்கலாம்
ஷபி: சரிம்மா..உனக்கு பாட தெரியுமா... ஒரு பாட்டு பாடு
மீனா: என்க்கு prayer song தான் தெர்யும்
ஷபி: என்னது prayer ஸாங்கா...
செந்தில்: டேய் விடுடா..பாப்பாவோட prayer தான் கேப்போமே..நீ பாடும்மா
மீனா: (தொண்டையய் செருமி, கைகளை கூப்பி, கண்கள் மூடி) மல ...மல மருத மல...
............
கதாசிரியராக ராஜ்குமார், டைரக்டரிடம் கதை சொல்ல வருகிறான்.
செந்தில்: இதோ பாருப்பா...இது ஒரு மெகா பட்ஜெட் படம்.. அதுக்கேத்த மாதிரி கதையச்சொல்லு
ராஜ்: சார்..ஒரு அருமையான கிராமத்து சப்ஜெக்ட் சார்
செந்தில்: அடடா...மெகா பட்ஜெட் படம்னாலும், கிராமத்து கதையா சொல்றான்டா..மண்வாசனைய காமிக்கிறாண்டா.. நோட் பன்னிகோடா
(ஷபி தன் கூடவே வைத்திருக்கும் ஒரு பேப்பர் பேடில் எதையோ எழுதுகிறான்.அடிக்கடி செந்தில் சொல்ல சொல்ல அவன் எதையோ கிறுக்குகிறான்)
ராஜ்: சார் கதப்படி நம்ம ஹீரோ..பாரப்பட்டிங்கிற கிராமத்துல விவசாயம் செய்யிற விவசாயி..
செந்தில்: யோவ் என்னய்யா....மெகா பட்ஜெட் படம்னு சொல்றன்..நீ பாரப்பட்டி..பஞ்சப்பட்டின்னு...எனக்கு விஷ்வல் முக்கியம்யா..பேசாம சுவிட்சர்லாந்துல ஏர் உழுவுரதா
வச்சிக்கோ
ஷபி: சார் சுவிட்சர்லாந்துல ஏர் பிடிக்கிறது எல்லாம் கொஞ்சம் ஓவர் சார்... பெர்மிஷன் கிடைக்காது..
செந்தில்: அப்படின்னா சொல்ற... சரி.. பேசாம தாஜ்மஹால் பக்கத்துல உழுவரதா வச்சிக்கலாம்..
ராஜ்: தாஜ்மஹால்ல விவசாயமா...லாஜிக் உதைக்குதே சார்
செந்தில்:(கூட்டத்தை பார்த்து கைகாட்டி) எழுதுற codeலேயே நாங்க லாஜிக் பாக்க மாட்டோம்...(சரியான applause)
ராஜ்: ஒகே சார்... கதைய கண்டின்யூ பன்றேன்...நம்ம ஹீரோ இருக்கிற ஊர்ல ஒரு பன்னையார்...
செந்தில்: என்ன...அந்த பன்னையார் பொன்ன நம்ம ஹீரோ லவ் பன்னி கல்யானம் பன்னிப்பார்...இதான கதை
ராஜ்:(ஆச்சர்யத்தோடு)...சார் உங்களுக்கு எப்படி சார் இது தெரியும்..
செந்தில்: இதான் ஊருக்கே தெரியுமேயா...இத வச்சி நானே நாலு படம் பன்னிட்டேன்....
ராஜ்: சார்...
செந்தில்: என்னய்யா நீ... இது ஒரு IT கம்பேனியோட படம்யா..இங்க நிறைய இருக்கு...java, oracle, database இது மாதிரி நிறைய விஷயம் இருக்கு.. இத வச்சி இவங்க தான்(கூட்டத்தை பார்த்து கைகாட்டி) ஒன்னும் பன்றதில்ல...நீயாவது நல்ல கத பன்னேயா..
ராஜ்: ஒகே சார்...ITக்கு ஏத்த கத ஒன்னு சொல்றேன் சார்..டைட்டிலே ரொம்ப வித்தியாசமா இருக்கும் சார்
செந்தில்: என்ன சொல்லு
ராஜ்: 12G இது தான் சார் டைட்டில்
செந்தில்: 12G...அப்படின்னா
ராஜ்: 12 gigabytes
செந்தில்: ஆஹா..டைட்டில்லெ கலக்குறாண்டா.. நோட் பன்னிகோடா (ஷபி எதையோ கிறுக்குகிறான்)..நீ சொல்லு
ராஜ்: நம்ம ஹீரோ உங்க IT கம்பேனியில வொர்க் பன்றார் சார்...கம்பேனியோட CEOவோட hard disk 12 GB சைஸ் சார்..
செந்தில்: கொஞ்சம் இரு (ஷபி பக்கம் திரும்பி)...டேய் CEO வச்சி கதைடா...அப்ரைஸல்ல (appraisal) நல்லா தேத்தலாம்.
ராஜ்: அந்த hard disk ஒரு நாள் க்ராஷ் ஆகுது...அத நம்ம ஹீரோ restore செய்தா அவன் நெலம என்ன...அவன் restore செய்யலேனா அவன் நெலம என்ன.. ரெண்டையும் மாத்தி மாத்தி காமிக்கிறோம் சார்..காட்சிக்கு காட்சி வித்தியாசம் சார்..
செந்தில்: சூப்பர் story ரெடி..ஸ்டெரெய்ட்டா நாம சூட்டிங் போயிடலாம்.
...........
சூட்டிங் ஸ்பாட்டில், டைரக்டர் ஹீரோ அருணுக்கு காட்சியை விளக்கி கொண்டிருகிறான், பக்கத்தில் அசிஸ்டெண்ட் கதாநாயகியோடு அரட்டை அடித்துகொண்டிருக்கிறான்
செந்தில்: சார்..இது தான் சார் சீன்..மல மேல டூயட் பாடுறீங்க..பாடி முடிச்சடும் ஹீரேயின கட்டி புடிச்சு கீழே விழறீங்க...கட்டி புடிச்சு உருள்ற சீன டூப் போட்டு எடுத்தடலாம்..
அருண்: ஏமி..ஹீரொயினோட சீனா...நேனே சேஸ்தானு....நேனே சேஸ்தானு
செந்தில்: சைக்கிள்ள இருந்து விழற சீனுக்கெல்லாம் டூப் கேக்கறான்...ஹீரோயினோட சீன் சொன்னா...அவனே செய்யனும்னு சொல்றான்...கொடுமைடா..
அருண்: ஏமி....
செந்தில்: ஒத்து சார்..
(செந்தில் திரும்ப, அங்கே அசிஸ்டெண்ட் ஹீரோயினுடன் அரட்டை அடிப்பதை பார்த்து டென்ஷன் ஆகிறான்)
செந்தில்: ஏய் நீ இங்க என்ன செஞ்சிகிட்டு இருக்கிற...ஹீரோயினுக்கு சீன் சொல்லதான சொன்னேன் (அவனிடம் இருக்கும் நோட் பேடை வாங்குகிறான் அதைப் பார்த்து பயங்கர அதிர்ச்சி ஆகிறான்) டேய் என்னடா பூனப்படம் வரைஞ்சி இருக்குற..
ஷபி:(தலை சொரிந்தபடி) சார்..சாரி சார்...எனக்கு எழுத படிக்க எல்லாம் தெரியாது..
செந்தில்: அடப்பாவி...ஆரம்பத்திலிருந்து....நோட் பன்னுடா...நோட் பன்னுடான்னு சொன்னேனே...இத தான் செஞ்சிகிட்டு இருந்தியா... நீ நம்ம HR recruit செஞ்ச ஆளா....
ஷபி: ஆமா சார்...
செந்தில்: இப்ப புரியுது (பயங்கர applause)
.....
Sunday, October 09, 2005
சில நேரங்கள் சில ஞாபகங்கள் (நாடக மேடை 1)
"உலகமே ஒரு நாடக மேடை - அதில்
நாமெல்லாம் நடிகர்கள்" - ஆங்கில அமர கவி ஷேக்ஸ்பியரின் அற்புதமான் வார்த்தைகள். உலகம் என்னும் நாடக மேடையில் நடிப்பது இயல்பு தான், ஆனால் நாடக மேடை என்னும் உலகத்தில் நடிப்பது என்பது கொஞ்சம் கஷ்டம். நான் எங்கு முதலில் மேடையில் தோன்றினேன்? யோசித்து பார்க்கிறேன், அட நான் தோன்றிய மேடை அனுபவங்களும் கொஞ்சம் சுவையாகவே இருக்கிறதே...
நாடக மேடை என்றவுடன், எனக்கு சென்ற வருடம் நடந்த ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. சென்ற வருடம் என் மேலாளர் மற்றும் நெருங்கிய நன்பரான ஜெய் மற்றும் அவர் மனைவியுடன் (நான் அண்ணி என்று அழைப்பேன்) நயாகரா அருவிக்கு என் வீட்டிலிருந்து காரினில் சென்று கொண்டிருந்தோம். அப்போது வெகு தூரம் ஒட்டும் பயண களைப்பு மறக்க கொஞ்சம் "பாட்டுக்கு பாட்டு" நடத்தலாமே என்று எனக்கு தோன்றியது. "யாராவது பாடுங்களேன்" என்று நான் ஜெய்யிடம் கேட்டேன். அவர் "உங்க அண்ணிய பாட சொல்லு, காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல எல்லாம் நிறைய பாடியிருக்கா" என்றார், நான் உடனே ஆச்சர்யமாக அண்ணியிடம் "அப்படியா அண்ணி...கல்ச்சுரல்ஸ் எல்லாம் பாடியிருக்கீங்களா..எப்படி stage fear இல்லாம் பாடினீங்க" உடனே அண்ணி அலட்டாமல் "சே..சே..மேடையில யாரோ பாடுவாங்க ரஞ்சித்...
நான் கீழே பாடிக்கிட்டு இருப்பேன்" என்றாரே பார்க்கலாம். இப்பவும் அதை நினைத்து சிரித்துக் கொள்வேன்.
நான் முதன் முதலில் மேடை ஏறியது என் ஆறாம் வகுப்பில். பள்ளியில் கிறிஸ்த்துமஸ் விழா, அதற்கு இயேசு பிரான் வாழ்க்கையில் நடந்த சில பகுதியை நாடகமாக்கினார்கள். என்னை நடிப்பதற்கு கூப்பிட்டார்கள். எனக்கு எப்படியும் இயேசு கிறிஸ்து வேடம் தரமாட்டார்கள், atleast ஒரு சீடன், இல்லை மன்னர் வேடமாவது தருவார்கள் என்ற
ஆசையில் ஒத்திகைக்கு சென்றேன். ஒரு காட்சியில், ஒரு செல்வந்தன் ஏழைகளை இம்சித்து பணம் பறிப்பான், ஏழைகள் அழுவார்கள், அவ்வழியே வரும் இயேசு அந்த செல்வந்தனை திறுத்துவார், இந்த காட்சியை விளக்கினார்கள். பரவாயில்லை, வில்லத்தனத்திற்கு scope இருக்கும் ஒரு செல்வந்தன் வேடமாவது கிடைக்கிறதே என்று என்னை நானே தேற்றினேன். ஆனால் அங்கேயும் 'அல்வா'... எனக்கு அவர்கள் கொடுத்ததோ, செல்வந்தனிடம் அடிப்பட்டு அழுகின்ற ஏழைகளில் ஒருவன். நல்ல வேடம் தருவார்கள்,நன்பர்களிடம் எல்லாம் சொல்லி பிரமாதப்படுத்தலாம் என என்னியிருந்தேன்...கடைசியில் என்னை atmosphere artist ஆக்கிவிட்டார்கள். சரி தொலைகிறது என்று ஒத்திகைக்கு சென்றேன், நாடகத்திற்கு முதல் நாள் எல்லோருக்கும் ஆடை உடுத்தி ஒத்திகை பார்த்தார்கள், எங்களை (ஏழைகள்) தவிர. நாங்கள் என்ன உடுத்துவது என்று டீச்சரிடம் கேட்டோம், டீச்சர் "நீங்க சும்மா பேண்ட் ஷர்ட் போட்டுட்டு வாங்கப்பா" என்றார். நான் உடனே "இல்ல டீச்சர், இயேசு காலத்துல பேண்ட் ஷர்ட் எல்லாம் இல்ல"
"சரி இப்ப என்ன செய்யலாம்னு சொல்ற"
"பேசாம வேஷ்டி,சட்டை போட்டுகிட்டு, தலையில துண்டு போட்டு, அத ரிப்பன் போட்டு தலைய சுத்தி கட்டினா, அரேபியர் மாதிரி இருக்கும் டீச்சர்...கொஞ்சம் நெச்சுரலா இருக்கும் டீச்சர்" என்றேன்...டீச்சருக்கு இந்த idea ரொம்ப பிடித்து விட்டது, அப்படியே வர சொன்னார், எனக்கு கொஞ்சம் பெருமை...ஆனால் நாடகத்தின் அன்று, அந்த காஸ்ட்யூமுடன் எங்களுக்கு முகத்தில் ரோஸ் பவுடரை அப்பிவிட்டனர்...கொஞ்சம் பனக்கார, அரேபிய, ஏழையாக கண்ணை கசக்கி அழுது தொலைத்துவிட்டு வந்தேன்..
(தொடரும்)
நாமெல்லாம் நடிகர்கள்" - ஆங்கில அமர கவி ஷேக்ஸ்பியரின் அற்புதமான் வார்த்தைகள். உலகம் என்னும் நாடக மேடையில் நடிப்பது இயல்பு தான், ஆனால் நாடக மேடை என்னும் உலகத்தில் நடிப்பது என்பது கொஞ்சம் கஷ்டம். நான் எங்கு முதலில் மேடையில் தோன்றினேன்? யோசித்து பார்க்கிறேன், அட நான் தோன்றிய மேடை அனுபவங்களும் கொஞ்சம் சுவையாகவே இருக்கிறதே...
நாடக மேடை என்றவுடன், எனக்கு சென்ற வருடம் நடந்த ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. சென்ற வருடம் என் மேலாளர் மற்றும் நெருங்கிய நன்பரான ஜெய் மற்றும் அவர் மனைவியுடன் (நான் அண்ணி என்று அழைப்பேன்) நயாகரா அருவிக்கு என் வீட்டிலிருந்து காரினில் சென்று கொண்டிருந்தோம். அப்போது வெகு தூரம் ஒட்டும் பயண களைப்பு மறக்க கொஞ்சம் "பாட்டுக்கு பாட்டு" நடத்தலாமே என்று எனக்கு தோன்றியது. "யாராவது பாடுங்களேன்" என்று நான் ஜெய்யிடம் கேட்டேன். அவர் "உங்க அண்ணிய பாட சொல்லு, காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல எல்லாம் நிறைய பாடியிருக்கா" என்றார், நான் உடனே ஆச்சர்யமாக அண்ணியிடம் "அப்படியா அண்ணி...கல்ச்சுரல்ஸ் எல்லாம் பாடியிருக்கீங்களா..எப்படி stage fear இல்லாம் பாடினீங்க" உடனே அண்ணி அலட்டாமல் "சே..சே..மேடையில யாரோ பாடுவாங்க ரஞ்சித்...
நான் கீழே பாடிக்கிட்டு இருப்பேன்" என்றாரே பார்க்கலாம். இப்பவும் அதை நினைத்து சிரித்துக் கொள்வேன்.
நான் முதன் முதலில் மேடை ஏறியது என் ஆறாம் வகுப்பில். பள்ளியில் கிறிஸ்த்துமஸ் விழா, அதற்கு இயேசு பிரான் வாழ்க்கையில் நடந்த சில பகுதியை நாடகமாக்கினார்கள். என்னை நடிப்பதற்கு கூப்பிட்டார்கள். எனக்கு எப்படியும் இயேசு கிறிஸ்து வேடம் தரமாட்டார்கள், atleast ஒரு சீடன், இல்லை மன்னர் வேடமாவது தருவார்கள் என்ற
ஆசையில் ஒத்திகைக்கு சென்றேன். ஒரு காட்சியில், ஒரு செல்வந்தன் ஏழைகளை இம்சித்து பணம் பறிப்பான், ஏழைகள் அழுவார்கள், அவ்வழியே வரும் இயேசு அந்த செல்வந்தனை திறுத்துவார், இந்த காட்சியை விளக்கினார்கள். பரவாயில்லை, வில்லத்தனத்திற்கு scope இருக்கும் ஒரு செல்வந்தன் வேடமாவது கிடைக்கிறதே என்று என்னை நானே தேற்றினேன். ஆனால் அங்கேயும் 'அல்வா'... எனக்கு அவர்கள் கொடுத்ததோ, செல்வந்தனிடம் அடிப்பட்டு அழுகின்ற ஏழைகளில் ஒருவன். நல்ல வேடம் தருவார்கள்,நன்பர்களிடம் எல்லாம் சொல்லி பிரமாதப்படுத்தலாம் என என்னியிருந்தேன்...கடைசியில் என்னை atmosphere artist ஆக்கிவிட்டார்கள். சரி தொலைகிறது என்று ஒத்திகைக்கு சென்றேன், நாடகத்திற்கு முதல் நாள் எல்லோருக்கும் ஆடை உடுத்தி ஒத்திகை பார்த்தார்கள், எங்களை (ஏழைகள்) தவிர. நாங்கள் என்ன உடுத்துவது என்று டீச்சரிடம் கேட்டோம், டீச்சர் "நீங்க சும்மா பேண்ட் ஷர்ட் போட்டுட்டு வாங்கப்பா" என்றார். நான் உடனே "இல்ல டீச்சர், இயேசு காலத்துல பேண்ட் ஷர்ட் எல்லாம் இல்ல"
"சரி இப்ப என்ன செய்யலாம்னு சொல்ற"
"பேசாம வேஷ்டி,சட்டை போட்டுகிட்டு, தலையில துண்டு போட்டு, அத ரிப்பன் போட்டு தலைய சுத்தி கட்டினா, அரேபியர் மாதிரி இருக்கும் டீச்சர்...கொஞ்சம் நெச்சுரலா இருக்கும் டீச்சர்" என்றேன்...டீச்சருக்கு இந்த idea ரொம்ப பிடித்து விட்டது, அப்படியே வர சொன்னார், எனக்கு கொஞ்சம் பெருமை...ஆனால் நாடகத்தின் அன்று, அந்த காஸ்ட்யூமுடன் எங்களுக்கு முகத்தில் ரோஸ் பவுடரை அப்பிவிட்டனர்...கொஞ்சம் பனக்கார, அரேபிய, ஏழையாக கண்ணை கசக்கி அழுது தொலைத்துவிட்டு வந்தேன்..
(தொடரும்)
Subscribe to:
Posts (Atom)