Total Pageviews

Tuesday, October 11, 2005

சில நேரங்கள் சில ஞாபகங்கள் நாடக மேடை 2

பள்ளியில் அதன் பிறகு எனக்கு மேடையேறும் வாய்ப்புகள் ஏதும் வரவில்லை. கல்லூரியிலும் கூட நான் மேடை ஏறவில்லை. பல வருடங்கள் கழித்து, நான் வேலையில் சேர்ந்த பிறகு, எங்கள் நிறுவனத்தில் வருடா வருடம் நடக்கும் cultural dayஇல் (Rendezvous என்று அழைப்பார்கள்) தான் மேடை ஏறினேன். எங்கள்
டிபார்ட்மெண்டில் நந்து என்ற சீனியர் தான் rendevous வருடா வருடம் organize செய்வார். ஒரு
பார்ட்டியில் நான் ஏதோ பொழுது போக்கிற்கு மிமிக்ரி செய்ய, அது அவருக்கு பிடித்துபோய் எனக்கு ஒரு slot கொடுத்தார். நானும் என்னுடன் வேலை பார்த்த ராமசுப்புவும் சேர்ந்து 1999 வருடம் ம்யூசிக் அகாடமியில் எங்கள் முதல் நிகழ்ச்சியை செய்தோம். அப்போது கிரிக்கெட் world cup நடைபெற்றதால், நடிகர்கள் கிரிக்கெட் விளையாடுவது போல மிமிக்ரியும், விளம்பர spoofவும், அங்கில பட ட்ரெயிலர் ஒன்றும் செய்தோம். அதில் DTSஉடன் நாங்கள் செய்த ஆங்கிலப்பட ட்ரெய்லரும், விளம்பர spoofவும் நல்ல
ஹிட்டானது. உதாரணத்திற்கு ஒரு விளம்பரம்
நான்: (கயில் ஒரு கோப்பை வைத்துகொண்டு) "இந்த டீயில் நிறமில்லை, இந்த டீயில் மனமில்லை, இந்த டீயில் திடமில்லை...எந்த டீயில் இந்த மூனு குணமும் இருக்கு"
ராமசுப்பு: "டேய் முண்டம்... நீ குடிக்கிறது காபிடா"...

அதற்கு அடுத்த வருடம், எங்கள் டீம் பெரிதானது. நான், ராமசுப்பு, அருண் மற்றும் பாலா நால்வரும் சேர்ந்து மிமிக்ரி செய்தோம். ஆனால் எங்கள் மிமிக்ரி அவ்வளவு
சோபிக்கவில்லை. நல்ல வேளையாக மிமிக்ரியோடு மணிரத்னம் பட clicheக்களை spoof செய்தோம், அது நல்ல ஹிட்டானது. உதாரணத்திற்கு, மேடையில் இருட்டாக்கி, பாலா ஒரு பக்கமும், ராமசுப்பு மறு பக்கமும் மேடையின் நடுவே வருவார்கள், எதிரெதிர் வந்து அவர்கள் முகத்தில் டார்ச் அடிப்பார்கள்
பாலா: (மெல்லிய குரலில்) "...விட்டுது....எல்லாத்தையும் விட்டுது..."
ராமசுப்பு: (மெல்லிய குரலில்) "...முடியாது...என்னால முடியாது.." இது மட்டும் பேசி வந்து விடுவார்கள், பிறகு பாம்பே பட BGM ஒலிக்கும், மேடை ஒரு பக்கத்திலிருந்து அருண், பாலா, ராமசுப்பு மூவரும் ஆளுக்கொரு தடியை வத்து யாரையோ துரத்துவது போல் மேடையின் ஒரு மூலையில் இருந்து மறு மூலைக்கு ஓடிவார்கள், ஓடும்போது அருண் ஒரு சிகரெட் துண்டை பற்றவைத்து கீழே போட்டுவிட்டு ஓடுவார், அப்போது ரோஜா படத்தில் வரும் தமிழா தமிழா பாடலில் "இது பாரதம், நம் பாரதம்" இசை ஒலிக்கும் உடனே ஒரு சிகப்பு ஷ்வெட்டர் போட்டு, கயை கயிறால் கட்டி நான் தேச பக்தியோடு அந்த சிகரெட் துண்டை அனைப்பேன். அனைத்து அந்த பக்கம் வந்தபின், அலைப்பாயுதேவில் வரும் "என்றென்றும் புன்னகை" பாடல் ஒலிக்கும், அப்போது அருண் ஒரு கருப்பு sunglass மாட்டி காதில் walkman போட்டு ஒரு சின்ன tobu சைக்கிளில் மேடையை சுற்றி வருவார், அரங்கில் கரகோஷம்.

2001 வருடம் rendezvous தான் நான் கடைசியாக பங்கேற்ற மேடை அனுபவம். இந்தமுறை நான் மேடையில் தோன்றவில்லை, ஆனால் ஒரு முழுநீல நகைச்சுவை
நாடகத்தை எழுதி இயக்கினேன். செந்தில், ராஜ்குமார், மீனா, அம்மு, ஷபி, அருண், ஹரி, ஜெகதீஷ் என பெரிய டீம் வொர்க் அது, சூப்பர் ஹிட்டானது. எங்கள் IT company கோடம்பாக்கத்தில் சினிமா எடுத்தால் என்னென்ன ஆகும் என்ற வேடிக்கையான கற்பனை தான் கரு. HR, Admin, Finance என அனைவரையும் ஓட்டு ஓட்டு என ஓட்டினோம். செந்தில் தான் கதாநாயகன், சினிமா டைரக்டராக நடித்தான், அருணுக்கு ஆந்திர சினிமா ஹீரோ வேடம், அதற்கு ஏற்றார் போல் ஒரு கண்ணைகூசும் காஸ்ட்யூமில் வந்து கலக்கினார். எனக்கு மிகவும் திருப்தியளித்த நாடகத்திலிருந்து சில காட்சிகள்...
முதல் காட்சி: செந்தில் இரண்டு கைகளாலயும், சினிமா டைரக்டர் போல் angle பார்த்தபடியே மேடைக்கு வருவான், கூடவே அசிஸ்டெண்ட் டைரக்டராக ஷபி
செந்தில்: (மேடையின் எல்லா பக்கமும் திரும்பி angle பார்க்கிறான்)
ஷபி: (டைரக்டரை பார்த்து புல்லரித்தபடியே அவர் காலில் விழுகிறான்)
செந்தில் :ஏய் அசிஸ்டெண்ட் எழுந்திரு... எதுக்கு கால்ல விழர
ஷபி: சார்.. நீங்க டைரக்டர் தெய்வம் சார்... சும்மா நிக்கும்போதே எல்லா directionலயும் எப்படி angle பாக்குறீங்க
செந்தில்: நீ வேற....அவசரமா எனக்கு அது வருது...எந்த பக்கம் ரெஸ்ட் ரூம்னு பாத்துகிட்டு இருக்கேன்..
.....
கதாநாயகி தேர்விற்கு மும்பை மாடலாக மீனா டைரக்டரை பார்க்க வருவார்.
மீனா: வன்க்கம் சார்
செந்தில்: வணக்கம்மா...உனக்கு தமிழ் பேச தெரியுமா..
மீனா: குஞ்சம் குஞ்சம் தெர்யும் சார்
ஷபி: சார்...என்ன சார் தமிழ் தடுமாறுது
செந்தில்: இது போதுமே...இது போதுமே...இத வச்சு அவார்டே வாங்கலாம்
ஷபி: சரிம்மா..உனக்கு பாட தெரியுமா... ஒரு பாட்டு பாடு
மீனா: என்க்கு prayer song தான் தெர்யும்
ஷபி: என்னது prayer ஸாங்கா...
செந்தில்: டேய் விடுடா..பாப்பாவோட prayer தான் கேப்போமே..நீ பாடும்மா
மீனா: (தொண்டையய் செருமி, கைகளை கூப்பி, கண்கள் மூடி) மல ...மல மருத மல...
............
கதாசிரியராக ராஜ்குமார், டைரக்டரிடம் கதை சொல்ல வருகிறான்.
செந்தில்: இதோ பாருப்பா...இது ஒரு மெகா பட்ஜெட் படம்.. அதுக்கேத்த மாதிரி கதையச்சொல்லு
ராஜ்: சார்..ஒரு அருமையான கிராமத்து சப்ஜெக்ட் சார்
செந்தில்: அடடா...மெகா பட்ஜெட் படம்னாலும், கிராமத்து கதையா சொல்றான்டா..மண்வாசனைய காமிக்கிறாண்டா.. நோட் பன்னிகோடா
(ஷபி தன் கூடவே வைத்திருக்கும் ஒரு பேப்பர் பேடில் எதையோ எழுதுகிறான்.அடிக்கடி செந்தில் சொல்ல சொல்ல அவன் எதையோ கிறுக்குகிறான்)
ராஜ்: சார் கதப்படி நம்ம ஹீரோ..பாரப்பட்டிங்கிற கிராமத்துல விவசாயம் செய்யிற விவசாயி..
செந்தில்: யோவ் என்னய்யா....மெகா பட்ஜெட் படம்னு சொல்றன்..நீ பாரப்பட்டி..பஞ்சப்பட்டின்னு...எனக்கு விஷ்வல் முக்கியம்யா..பேசாம சுவிட்சர்லாந்துல ஏர் உழுவுரதா
வச்சிக்கோ
ஷபி: சார் சுவிட்சர்லாந்துல ஏர் பிடிக்கிறது எல்லாம் கொஞ்சம் ஓவர் சார்... பெர்மிஷன் கிடைக்காது..
செந்தில்: அப்படின்னா சொல்ற... சரி.. பேசாம தாஜ்மஹால் பக்கத்துல உழுவரதா வச்சிக்கலாம்..
ராஜ்: தாஜ்மஹால்ல விவசாயமா...லாஜிக் உதைக்குதே சார்
செந்தில்:(கூட்டத்தை பார்த்து கைகாட்டி) எழுதுற codeலேயே நாங்க லாஜிக் பாக்க மாட்டோம்...(சரியான applause)
ராஜ்: ஒகே சார்... கதைய கண்டின்யூ பன்றேன்...நம்ம ஹீரோ இருக்கிற ஊர்ல ஒரு பன்னையார்...
செந்தில்: என்ன...அந்த பன்னையார் பொன்ன நம்ம ஹீரோ லவ் பன்னி கல்யானம் பன்னிப்பார்...இதான கதை
ராஜ்:(ஆச்சர்யத்தோடு)...சார் உங்களுக்கு எப்படி சார் இது தெரியும்..
செந்தில்: இதான் ஊருக்கே தெரியுமேயா...இத வச்சி நானே நாலு படம் பன்னிட்டேன்....
ராஜ்: சார்...
செந்தில்: என்னய்யா நீ... இது ஒரு IT கம்பேனியோட படம்யா..இங்க நிறைய இருக்கு...java, oracle, database இது மாதிரி நிறைய விஷயம் இருக்கு.. இத வச்சி இவங்க தான்(கூட்டத்தை பார்த்து கைகாட்டி) ஒன்னும் பன்றதில்ல...நீயாவது நல்ல கத பன்னேயா..
ராஜ்: ஒகே சார்...ITக்கு ஏத்த கத ஒன்னு சொல்றேன் சார்..டைட்டிலே ரொம்ப வித்தியாசமா இருக்கும் சார்
செந்தில்: என்ன சொல்லு
ராஜ்: 12G இது தான் சார் டைட்டில்
செந்தில்: 12G...அப்படின்னா
ராஜ்: 12 gigabytes
செந்தில்: ஆஹா..டைட்டில்லெ கலக்குறாண்டா.. நோட் பன்னிகோடா (ஷபி எதையோ கிறுக்குகிறான்)..நீ சொல்லு
ராஜ்: நம்ம ஹீரோ உங்க IT கம்பேனியில வொர்க் பன்றார் சார்...கம்பேனியோட CEOவோட hard disk 12 GB சைஸ் சார்..
செந்தில்: கொஞ்சம் இரு (ஷபி பக்கம் திரும்பி)...டேய் CEO வச்சி கதைடா...அப்ரைஸல்ல (appraisal) நல்லா தேத்தலாம்.
ராஜ்: அந்த hard disk ஒரு நாள் க்ராஷ் ஆகுது...அத நம்ம ஹீரோ restore செய்தா அவன் நெலம என்ன...அவன் restore செய்யலேனா அவன் நெலம என்ன.. ரெண்டையும் மாத்தி மாத்தி காமிக்கிறோம் சார்..காட்சிக்கு காட்சி வித்தியாசம் சார்..
செந்தில்: சூப்பர் story ரெடி..ஸ்டெரெய்ட்டா நாம சூட்டிங் போயிடலாம்.
...........
சூட்டிங் ஸ்பாட்டில், டைரக்டர் ஹீரோ அருணுக்கு காட்சியை விளக்கி கொண்டிருகிறான், பக்கத்தில் அசிஸ்டெண்ட் கதாநாயகியோடு அரட்டை அடித்துகொண்டிருக்கிறான்
செந்தில்: சார்..இது தான் சார் சீன்..மல மேல டூயட் பாடுறீங்க..பாடி முடிச்சடும் ஹீரேயின கட்டி புடிச்சு கீழே விழறீங்க...கட்டி புடிச்சு உருள்ற சீன டூப் போட்டு எடுத்தடலாம்..
அருண்: ஏமி..ஹீரொயினோட சீனா...நேனே சேஸ்தானு....நேனே சேஸ்தானு
செந்தில்: சைக்கிள்ள இருந்து விழற சீனுக்கெல்லாம் டூப் கேக்கறான்...ஹீரோயினோட சீன் சொன்னா...அவனே செய்யனும்னு சொல்றான்...கொடுமைடா..
அருண்: ஏமி....
செந்தில்: ஒத்து சார்..
(செந்தில் திரும்ப, அங்கே அசிஸ்டெண்ட் ஹீரோயினுடன் அரட்டை அடிப்பதை பார்த்து டென்ஷன் ஆகிறான்)
செந்தில்: ஏய் நீ இங்க என்ன செஞ்சிகிட்டு இருக்கிற...ஹீரோயினுக்கு சீன் சொல்லதான சொன்னேன் (அவனிடம் இருக்கும் நோட் பேடை வாங்குகிறான் அதைப் பார்த்து பயங்கர அதிர்ச்சி ஆகிறான்) டேய் என்னடா பூனப்படம் வரைஞ்சி இருக்குற..
ஷபி:(தலை சொரிந்தபடி) சார்..சாரி சார்...எனக்கு எழுத படிக்க எல்லாம் தெரியாது..
செந்தில்: அடப்பாவி...ஆரம்பத்திலிருந்து....நோட் பன்னுடா...நோட் பன்னுடான்னு சொன்னேனே...இத தான் செஞ்சிகிட்டு இருந்தியா... நீ நம்ம HR recruit செஞ்ச ஆளா....
ஷபி: ஆமா சார்...
செந்தில்: இப்ப புரியுது (பயங்கர applause)
.....

1 comment:

Anonymous said...

A very good one.. Your writing style is good.. Hit on your blog accidentally. All the very best.

Ramya