காதலர் தினம் என்பதே greeting cards கம்பெனிகளின் கார்ப்பரேட் சதி என்பதில் எனக்கு சில உடன்பாடு உண்டு. இருந்தாலும் அந்த ஒரு நாளில் காதலுக்காகவே வாழ்ந்த, காதலுக்கு மரியாதை தந்த பலரை நினைத்து பார்த்து வாழ்த்துவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். இன்று நான் எனக்கு தெரிந்து, காதலித்து கரம் பிடித்த நன்பர்களுக்கும், அந்த பகுதியை எட்ட இருக்கும் நன்பர்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்களை அனுப்பினேன். காதலர் தின ஷ்பெஷலில் விகடனில் வந்த பார்வையற்ற தம்பதியினரின் கதை என்னை கலங்க வைத்தது. செல்வனின் காதலர் தின பதிப்பும் என்னை கவர்ந்தது.
சொல்ல மறந்த கவிதை - என் டைரியிலிருந்து.
நான் காதல் உணர்ந்த தருனம்...
என் வானம் விரிந்தன
உலகம் சுருங்கின
இரவுகள் நீண்டன
கவிதைகள் பிறந்தன
இதயம் பட்டாம்பூச்சி ஆனது
இது சுரப்பிகளின் சதி - என
சொன்னது விஞ்ஞானம்
அது உன்மையென்றால் - என்
அவயங்கள் உறங்கும் போது
கனவுகள் காதல் செய்தது ஏன்
பொக்கிஷமாய் இருக்கும்
கல்லூரி ஆட்டோகிரா·ப்
விழிகள் உன் பக்கம் தேடின
'நல் வாழ்க்கைக்கு வாழ்த்துகிறேன்'
நிரப்பாத நான்கு வரிகள் தள்ளி உன் கையெழுத்து
இடையில் நீ எழுத மறந்ததென்ன
சொல்லாமல் இருந்தால்
இதயம் சுடுகாடாகிவிடும் என்று
சொன்னேன் ஒரு நாள் பார்த்து
பதில் சொல்லாமலே
என் காதலை கல்லறையாக்கி
ஒற்றை ரோஜாவை வைத்தாய்
காதல் தெய்வீகமானது என்றால்
என் ஞாபகங்கள் வேண்டுதல் வடிவம் பெற்றதா..
இல்வாழ்வெல்லாம் நல்வாழ்க்கை வாழ்கிறாய்
எனக் கேட்டதும் ஒரு சந்தோஷ பெருமூச்சு
நான் காதலை நினைக்கும் தருனம்
மறந்து போக நினைத்தாலும்
கடந்து போன மைல் கல்லாய் உன் ஞாபகங்கள்...
5 comments:
Thanks shree
nirappadha naangu varikalaalthaane indru
sirappaaga vandhu
varigalvizundhadhu indru !!!
nyabagangal kaadhalin uyir !!
avai ullavarai,
(ungal) kaadhal (avalaal)kallaraiku endrume sellaadhu !!
nalla varigal ranjit
Nandri priya
ranjith...
oreee typo errors in my prev comment..ippo thaan paakaren
i wanted to say
நிரப்பாத நான்கு வரிகளால் தானே
சிறப்பான நல்ல வரிகள்வந்து விழுந்தது இன்று!!
any way, the meaning was conveyed !!
ranjith..
enna silent modela irukeenga...
kathalar dhinam poi holi varapogudhu!!!
Post a Comment