Total Pageviews

Sunday, February 05, 2006

வரலாறு - I

பள்ளியில் படிக்கும் காலத்தில் எனக்கு வரலாறு பாடத்தின் மேல் அவ்வளவு ஈடுபாடு இல்லை. 'கடந்த காலத்தை தெரிவதனால் என்ன பயன்' என்று பலமுறை நான் கேட்டதுண்டு. ஆனால் இப்போதெல்லாம் எனக்கு வரலாறு மேல் ஓர் ஆர்வம் ஏற்படுகிறது. முதலில் பள்ளி பருவத்தில் எனக்கு வரலாறு மேல் ஆர்வம் ஏற்படாதற்கு காரணம், நாம் படித்த எல்லா வரலாறு பாடங்களும் வரலாற்றின் பல சம்பவங்களின் தலைப்புச் செய்திகளின் கோர்வையாய் இருந்தது ஒரு காரணம். They merely give the highlights and statistics of a historical incident, மாறாக ஒரு சம்பவம் ஒரு நாட்டிலோ அல்லது சமுதாயத்திலோ எத்தகைய மாற்றத்தை உண்டு பன்னியது என்பதை நாம் படித்த வரலாறு சொல்லியதில்லை and not the importance and impacts of that history. உதாரணத்திற்கு ஒரு ப்ரெஞ்சு புரட்சியோ அல்லது ரஷ்ய புரட்சியோ எவ்வளவு பிரசத்தி பெற்றது, அந்த நாடுகளில் அந்த புரட்சிகள் எத்தகைய மாற்றத்தை உண்டு பன்னியது என்பதை நாம் படிக்கவில்லை, மாறாக ப்ரெஞ்சு புரட்சி ஏற்பட்ட வருடம், அந்த வருடத்தில் எந்த லூயி மன்னன் ஆண்டான் என்பது மட்டும் தான் படித்தோம். இந்திய சுதந்திர வரலாறும் அவ்வாறே. காந்தியடிகள் இந்த இந்த வருடத்தில் இந்த போராட்டங்களை துவங்கி வைத்தார், இந்த வருடத்தில் கைதானார், பிறகு மவுண்ட்பேட்டன் வந்தார் சுதந்திரம் கொடுத்தார்...இப்படித்தான் நாம் சுதந்திரம் வாங்கிய வரலாறையே படித்தோம். சிறுவயதில் நிறைய நாள் நான் இப்படித்தான் யோசித்திருக்கிறேன் "மவுண்ட்பேட்டன் வலிய வந்து கொடுத்த சுதந்திரத்தை நாம் ஏன் காந்தியடிகள் போராடி வாங்கி கொடுத்தார் என்று சொல்லுகிறோம்". காந்தியை பற்றி நான் ரிச்சர்ட் அட்டென்பொரோவின் காந்தி படம் பார்த்து தான் நிறைய தெரிந்து கொண்டேன். ஒரு மனிதராக காந்தி எத்தகையவர், எவ்வளவு தியாகங்களை செய்தார் அவரின் கொள்கைகள் நாட்டின் சுதந்திர போராட்டத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை இன்னும் உள்ளே சென்று விஸ்தாரமாக சொல்லியிருந்தார்களென்றால் நான் நம் மகாத்மாவை பற்றி பள்ளியிலே ஆழ்ந்த அறிவை பெற்றிருப்பேன். நம் பாடத்திட்டங்கள் ஒரு மணி நேரம் எழுதும் தேர்வை வைத்து வரையறுக்கப்படுவதால் வரும் நிலை இது. நல்லவேளை நாம் பள்ளியில் மாறுவேட போட்டியிலும், திரைப்படங்களிலும் கட்டபொம்மனையும், பாரதியையும் பார்த்ததினால், விடுதலை போராட்டத்தில் தமிழனின் பங்கை பற்றி கொஞ்சமாவது தெரிந்து வைத்திருக்கிறோம். நம் ஊரில் பெற்றோர்களும், குழந்தைகளுக்கு பாடங்களுக்கு அப்பாற்பட்ட வரலாற்று அறிவை பெருக்குவதற்கு அவ்வளவு ஊக்கம் கொடுப்பதில்லை. நான் வளர்ந்ததெல்லாம் சென்னையில் தான், ஆனால் வாழ்க்கையில் ஒரே ஒரு தடவை தான் அருங்காட்சியத்திற்கு சென்றிருக்கிறேன். அப்போதும், என் அம்மா அங்கிருந்த ஆயிரம் ஆண்டு முன் எடுத்த ஒரு மீனின் எலும்புகளை ஆச்சர்யமாக காட்டிய அளவுக்கு, நான் அங்கிருந்த பல வரலாற்று சின்னங்களின் பற்றிய தகவலை படிக்க விடவில்லை. இன்னொரு சம்பவம் ஒருமுறை ஊட்டிக்கு சுற்றுலா போய் அங்கிருந்து திருப்பூருக்கு என் தந்தையின் நன்பரை பார்க்க சென்றோம். என்னிடம் திருப்பூரில் என்ன பார்க்க வேண்டும் என்று கேட்டார்கள், எனக்கு பாடத்தில் படித்த கொடி காத்த குமரனின் ஞாபகம் வந்தது, அவர் வாழ்ந்த வீட்டிற்கு போக வேண்டும் என்று சொன்னேன். ஆனால் அவர்களோ அங்கிருந்து பழனிக்கும், பனியன் பேக்டரிக்கும் முன்னுரிமை கொடுத்து, திரும்பி சென்னைக்கு ரயிலேறும் முன் வழியில் ஒரு வீட்டை தூரத்தில் காட்டி "அதுதாம்ப்பா கொடி காத்த குமரன் வீடு...பாத்துக்கோ" என்று சொல்லி ரயிலேற்றினர்.
ஏன் நாம் வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்?...வரலாறு நாம் கடந்து வந்த பாதை மட்டும் இல்லை, இனிமேல் நாம் கடக்க வேண்டிய பாதையையும் தீர்மானிக்கிறது. உதாரணத்திற்கு, தமிழ்நாட்டில் இந்தியை ஏன் நமக்கு கற்றுக்கொடுக்கப்படவில்லை என்பதை அறிவதற்கு நாம் திராவிட கழகங்களின் வரலாற்றை படித்தாக வேண்டும். அந்த வரலாறு தான் இன்றும் இந்தி நம் ஊரில் எட்டிப்பார்க்காதவாறு தடுக்கிறது. நம் வரலாறு பாடங்களில் இன்னொரு கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம், உலக வரலாறு சுத்தமாக புறக்கனிக்கப்படுகிறது. இரண்டாம் உலகப்போர்தான் இருபதாம் நூற்றாண்டில் உலகத்தின் தலையெழுத்தையே மாற்றியது, ஆனால் ஜெர்மனியனோ, ஜப்பான்காரனோ இந்தியாவில் குண்டு போடவில்லை என்பதால் நமக்கு அதைப்பற்றி சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் உன்மை என்னவென்றால், இரண்டாம் உலகப்போரிலும், முதல் உலகப்போரிலும் ஆங்கிலேயப் படையில் பனியாற்றி உயிரைவிட்ட இந்தியர்கள் பல லட்சம் பேர். ஆங்கிலேயப் படையில் பனியாற்றிய ஒரே காரணத்தினால் இந்திய வரலாற்று ஆசிரியர்கள் அவர்களின் தியாகங்களை பதியவைக்க மறந்துவிட்டனர். இன்றும் சென்னையில் இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த வீரர்களுக்கு நினைவிடம் இருக்கிறது அதை வருடா வருடம் பிரிட்டன் அரசு அதன் சொந்த செலவில் பராமரிக்கிறது.
(தொடரும்..)

2 comments:

பரஞ்சோதி said...

நல்லதொரு கட்டுரை கொடுத்திருக்கீங்க, அடுத்த பகுதியை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

வரலாற்றை உள்ளதை உள்ளப்படி சொல்ல அரசாங்கமே தயங்குகிறது, அதன் பின்னால் அரசியல் விளையாடுகிறது.

இன்றைக்கு எத்தனை பேருக்கு பெரியாரைப் பற்றிய உண்மையான நிலவரம் தெரியும்? அடுத்த தலைமுறை சுத்தமாக மறந்து விடுவார்கள், காரணம் அரசியலும் மக்களும் தான்.

தன்னுடைய நாட்டின் வரலாறு, மொழியின் வரலாறு, மாபெரும் வீரர்களின் வரலாறு போன்றவற்றை ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

நீங்க வரலாறு.காம் போய் பார்த்திருக்கீங்களா?

ranjit kalidasan said...

நன்றி பரஞ்சோதி. வரலாறு.காம் பார்த்ததில்லை, போய் பார்க்கிறேன்.