இன்று நியுரம்பெர்க் (Nuremberg) என்னும் ஆங்கில படம் பார்த்தேன். என்னுடைய war favouritesல் இந்த படத்தையும் சேர்க்கிறேன். என்ன ஒரு வித்தியாசம், இதில் ஒரு போர் காட்சி கூட கிடையாது. இரண்டாம் உலகப்போர் முடிந்து ஹிட்லரின் நாஸிப்படையின் உயர் அதிகாரிகள் பலரை சிறைப்பிடித்து, அவர்களை போர் நீதிமன்றம் ஒன்றை உருவாக்கி விசாரனை செய்வதே படத்தின் கதை. இரண்டாம் உலகப்போர் பற்றி பல விஷயங்களை நான் தெரிந்திருந்தாலும், எனக்கு ஒரே ஒரு கேள்விக்கான விடைதான் வெகு நாளாய் தெரியாமல் இருந்தது அது "யூதர்களுக்கு எதிராக இவ்வளவு கொலைகளையும் கொடுமைகளையும் செய்ய ஹிட்லருக்கும் அவன் ஆனைப்படி செய்த ஜெர்மானியர்களுக்கும் எப்படி மனது வந்தது, அவர்களின் மனசாட்சி எப்படி தொலைந்து போனது?"
இந்த கேள்விக்கான விடையை, இந்த படத்தில் வரும் அமேரிக்க உளவியல் நிபுனரின் கருத்தாய் வரும் வசனங்கள் எனக்கு விளக்கியது. அது:
1) ஜெர்மனியில் குடிமக்கள் தங்களுக்கு சொல்லப்படுவதை கேள்வியின்றி செய்வர் Germany is a country where the people do what they are told. நீ அப்படி தான் அங்கு வளர்வாய் You're raised from childhood not to question the authority. ஹிட்லர் இதை சாதகமாக்கி, ஒரு நாட்டையே தன் கட்டளைப்படி நடக்க செய்தான் He had an entire nation that believes it's perfectly natural to do whatever he says
2) இரண்டாவது தூஷ கொள்கை பரப்பு, யூதர்கள் மனிதர்கள் இல்லை, அவர்கள் மனித இனத்தின் சாபக்கேடு என்று anti-semitism கொள்கையை வேரூர பரப்பினான் Jews are not real human beings, they're a corruption of the race ஆக யூதர்களின் உரிமையை பறிப்பதிலும், அவர்களை கொல்வதிலும் தவறில்லை என்று எல்லோரையும் கண்மூடி நம்பும்படி செய்தான்.
இந்த வாதங்களை நிரூபிக்கும் வைகையில் இரு கதாபாத்திரங்களை படத்தில் காட்டுவர். ஒன்று concentration campன் பொறுப்பாளனின் குறுக்கு விசாரனை, அதில் அவன் எப்படி சக்தி வாய்ந்த விஷத்தை வைத்து அதிகம் பேரை சாகடிக்க முடியும் என்று தான் நிரூபித்து காட்டியதாக, முகத்தில் ஒரு சலனமும் குற்ற உனர்வும் இல்லாமல் சொல்வதிலும், பிறகு அந்த உளவியல் நிபுனர் "இப்படி செய்வதில் கொஞ்சமாவது வருத்தம் இருந்ததா" என்று கேட்க அவன் "இல்லவே இல்லை...நான் சொல்வதை செய்பவன்" என்று கூறுவான். இன்னொரு கதாபாத்திரம், ஹிட்லரின் இரண்டாம் நிலை தளபதி ஹெர்மன் கோரிங். படம் முழுவதும் நாஸிசத்தையும் ஹிட்லரையும் விட்டுக்கொடுக்காமல் கோர்ட்டில் வாதிடுவான், முடிவில் தான் அவன் மனைவி மூலம் அவனையும் ஹிட்லர் சுட்டுக்கொல்ல ஆனையிட, அதனால் அமேரிக்கரிடம் சரணடைந்தது விஷயம் நமக்கு தெரியும்.
இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி, அமேரிக்க உளவியல் நிபுனரும், ஹெர்மன் கோரிங்க்கும் இடையே நடக்கும் சம்பாஷனை தான். உளவியல் நிபுனர் கோரிங்கிடம் "லட்சக்கனக்கான யூத அப்பாவிகளை கொல்வதை நீ எப்படி விளக்குவாய்" என்று கேட்க அதற்கு கோரிங் "நாங்கள் லட்சக்கனக்கான யூதர்களை கொன்றதை பற்றி பேசுகிறாயே, நீங்கள் ஹிரோஷிமாவில் அனுகுண்டை போட்டு லட்சக்கனக்கான ஜப்பானியர்களை கொன்றதை என்னவென்று சொல்வீர்கள். ஏன் அந்த குண்டை ஜெர்மனி மீது போட்டு ஜெர்மனியரை கொல்ல வேண்டியது தானே...நீங்கள் அதை செய்ய மாட்டீர்கள் எனென்றால் ஒரு ஆசிய ஜப்பானியனை விட, ஐரோப்பா ஜெர்மனியன் உங்களுக்கு உசத்தியானவன். எங்கள் concentration campஐ பற்றி பேசுகிறீர்களே நீங்கள் போரின் போது உள்நாட்டிலே உள்ள உங்கள் நாட்டின் குடிமக்களான ஜப்பானியரை campல் அடைத்து கொடுமை படுத்தினீர்களே அதன் பேர் என்ன?....இனக் காழ்ப்புனர்ச்சி பற்றி பேசுகிறீர்களே, நீங்கள் கறுப்பர்களுக்கு செய்வதன் பெயர் என்ன, ஒரு கறுப்பனாவது உங்கள் நாட்டின் ரானுவத்தின் உயரதிகாரி ஆவானா?" என்று ஆவேசம் பொங்க கேட்பான். இதற்கு பதில் கூறமுடியாமல் அமேரிக்க நிபுனர் புன்னகை செய்வான். ஒரு கொடியவனின் சொல்லானாலும், அதில் உள்ள சில நியாயங்கள் நம்மை சிந்திக்க வைக்கும். "வரலாறுகள் பதிவு செய்யப்படுவதில்லை, சிலரால் திருத்தி எழுதப்படுகிறது" என்று யாரோ சொன்னது.
No comments:
Post a Comment