உலகத்தின் மிகச் சிறிய திகில் கதை எது? இதுதான்:
"உலகின் கடைசி மனிதன் தனியாக ஓர் அறையில் உட்கார்ந்திருந்தான். கதவு தட்டப்பட்டது."
உலகத்தின் மிகச் சிறிய விஞ்ஞான சிறு கதை இதுதான்:
கதையின் தலைப்பு "டெலிபதிக்காரர்களுக்கான விஞ்சானக் கதை" அவ்வளவு தான் கதை. இது சமீபத்தில் விகடனில் படித்தது. போன வார விகடனில் மதன் கேள்வி பதிலில் ஒரு கேள்வி: "மனித குலத்தில் எழுந்த முதல் கேள்வி எதுவாக இருக்கும்?" இதற்கு அவர் சொன்ன பதில் "எவ இவ?!".
chanceஏ இல்ல!!!...இவற்றின் எல்லாவற்றிலும் நான் பார்த்து பிரமிப்பது இவர்களின் அசாய creativity தான். எப்படி தான் இவர்களுக்கு மட்டும் தோன்றுகிறதோ. இது தான் மற்றவர்களையும் கலைஞர்களையும் வேறு படுத்துகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் ஒரு creator இருக்கிறான், ஒரு சில பேர் அதை வெளிக்கொனர்ந்து வெற்றி பெறுகிறார்கள். சிலர் அதை உள்ளேயே புதைத்து சாமானிய உலகத்திற்குள் கானாமல் போய் விடுகின்றனர். ஒரு மகாக்கவிஞனுக்குள் இருக்கும் இந்த அதீத creativityக்கு challenge வரும்போது தான் அவன்:
"பல வேடிக்கை மனிதரைப் போல் - நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ.." என்று வெடிக்கிறான். நம்மில் பலர் ஆழ் மனதில் ஏங்கி தவிக்கும் அந்த creative satisfactionக்கு தான் பலவற்றை இழக்கிறோம், அதற்காக வருத்தப்படவும் மாட்டோம். உதாரணத்திற்கு மிகக் கஷ்டப்பட்டு ஒவ்வொரு வார்த்தையாய் தமிழில் அடித்து, அதை யுனிக்கோடாக மாற்றி வலைப்பூக்களில் பதிவு செய்கிறோம், எல்லாம் எதற்காக, யாராவது ஒரு ஜீவன் அதை விமர்சித்தோ, பாராட்டியோ பின்னூட்டம் போட மாட்டார்களா என்பதற்கு தானே.
சரி சீரியஸாக பேசாமல் மீண்டும் தலைப்பு பற்றி பேசலாம். நான் பார்த்து, ரசித்து, பிரமித்த, நம்மவர்களின் creative விஷயங்களை தொகுக்க நினைக்கிறேன், ஒரு partial list இதுதான்:
1) இளையராஜாவின் பல பாடலின் orchestration and composition. உதாரனம்: 1) பூவே செம்பூவே 2) பூங்கதவே தாழ் திறவாய் etc.
2) வைரமுத்துவின் பல பாடல்கள், அவரின் சொல் ஆளுமை.
உதாரனம்: "பனி விழும் மலர் வனம் -உன்
பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்"
3) சுஜாதாவின் சிறுகதைகள். உதாரனம்: முதல் மனைவி, வி.சி கதைகள்
4) சமீபத்தில் வந்த வைகைப்புயலின் காமெடிகள் (எழுதியது யாரோ!!). "எனக்கு அவ்வளவு சீக்கிரம் கோவம் வராது..", "என்ன ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாமா..", "கட்டடம் strong தான், basementதான் கொஞம் வீக்.."
5) crazy மோகனின் நகைச்சுவை வசனங்கள்.
உதாரனம்:
"என் மகனுக்கு பயங்கர ஞாபகசக்திங்க"
"அப்படியா"
"ஆமாங்க...தம்பி உன் பேர் என்ன"
"முத்துபாண்டி"
"பாருங்க இருபது வருஷத்துக்கு முன்ன வச்சது, இப்பவும் ஞாபகம் வச்சிருக்கான்"
6) நா.முத்துக்குமாரின் திரைப்பாடல்கள். உதாரனம்:
"தொட்டு தொட்டு என்னை
வெற்றுக் களி மன்னை
சிற்பமாக யார் செய்ததோ"
7) ராஜ்குமார் ஹிரானியின் திரைக்கதை அமைப்பு. முதல் munnabhaiயிலும், இரண்டாவது munnabhaiயிலும் கலகலப்பான சினிமாவில், மனிதத்தனமான விஷயங்களை அவர் கலந்த முறை பிரமிக்க வைக்கிறது. சிரிக்கவும் வைத்து, சீரியஸாக சிந்திக்கவும் வைக்கிறார்.
இது போல் எத்தனையோ இருக்கு.
கடைசியாய் ஒரு சுய விளம்பரம். நான் எழுதியதில் creativeஆக, இது நான்தானா என்று நான் வியந்த ஒன்றே ஒன்று:
மூன்று வருடம் முன்பு, தீவரமாய் திரைக்கதை எழுத பயிற்சி எடுத்து, பல புத்தகங்கள் படித்து, பல திரைக்கதைகள் படித்து, பார்த்து முடிவில் நானே ஒரு கதையை
திரைக்கதையாய் எழுதினேன். 70% எழுதி முடித்து, 30% இன்னும் மன்டையில் இருக்கிறது. அதில் ஒரு சின்ன காட்சி:
கதாநாயகன் கிரிஷ்ணா தன் வீட்டில் பார்த்து பேசிய பெண்ணை, அவன் முதலில் பார்க்க ஒரு ஓட்டலில் காத்திருக்கிறான். மெனுக்கார்ட் அவன் முகத்தை மறைக்க படித்துக்கொண்டிருக்கிறான். அப்போது அகிலா அங்கே வருகிறாள்.
அகிலா: எக்ஸ்க்யூஸ் மீ
கிரிஷ்ணா: (மெனுக்கார்டை இறக்கி பார்க்கிறான். அகிலாவின் அழகை பார்த்து வாயடைத்து போகிறான்)
அகிலா: நான் தான் அகிலா...Hi
கிரிஷ்ணா: (அகிலா முகத்தை பார்த்தே எழுந்து கை கொடுக்க முயல்கிறான்) Hi...நான்...வந்து...அது...என் பேர்...பேரு...பேரு.....சே என்ன பேர் வச்சாங்க.....
6 comments:
100% உண்மை... போற்றுதலும் போற்றப்படுதலும் இல்லையேல் கலையும் உருவாக்கமும் வளர்ந்திருக்காது. உங்களின் சிந்தனையும் உருவாக்கமும் அருமையிலும் அருமை. மற்றொரு விஷயம் ஒவ்வொரு வார்த்தையாக தமிழில் தட்டி அதை யூனிகோட்-ல் மாற்றுவதற்கு பதில் இந்த ட்ரான்ஸ்லிதேரேஷன் இணைய தளத்தை முயற்சி செய்து பாருங்களேன் http://quillpad.com/tamil/ . இதன் மூலம் நீங்கள் தமிழை ஆங்கிலத்தில் தட்டி, வெட்டி, ஒட்டி சுலபத்தில் முடித்து விடலாம். நான் அதைத்தான் செய்கிறேன்.
நன்றி சுந்தர் நான் முரசுவில் இது போல் தான் தட்டி இணையத்தில் பதிப்பிக்கிறேன்
திரைக்கதை என்ன பொழுது போக்குக்கா இல்லை சீரியஸ் முயற்சியா?
நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை. ஊக்குவித்தல் எல்லாவற்றிலும் இருந்தால்தான் உயர முடியும்.
குறிப்பாக, பெற்றோர்கள், பிள்ளைகளை 'peer pressure' காட்டாமல், தட்டிக் கொடுத்து நட்பாக வளர்க்க வேண்டும்.
திரைக்கதை பொழுதுபோக்காக ஆரம்பித்தது..கொஞ்சம் சீரியசாக போய்க்கொண்டிருக்கு.
ipoo unga kadhai ezhudhum aarvam epdi irukku.. innum effort podareegalaa.. send me some sample...
mmm... read the same vikatan.. longest known (fiction) story ever..
"Sir... Is it over??? Wait.. still getting ready.. Ya. It's over now.. I've found the 'time machine' which can travel ahead and back of time.. Sir, can we test it? Yes. Sure. We will go back 10 seconds first. Drrrrrrrr...tap..tap..tap...Vvrrrroooommmm.... Sir... Is it over??? Wait.. still getting ready.. Ya. It's over now.. I've found the 'time machine' which can travel ahead and back of time.. Sir, can we test it? Yes. Sure. We will go back 10 seconds first. Drrrrrrrr...tap..tap..tap...Vvrrrroooommmm.... "
:-) Got it?
Yours... Vinu.
Post a Comment