Total Pageviews

Saturday, January 21, 2006

கனவு (சிறுகதை)

மெல்ல கண் திறந்தான் வாசு. பிரகாசமான வெளிச்சம் அவன் கண்களை கூசியது. சுற்றும் முற்றும் பார்க்க முயன்றான், அறையெல்லாம் வெளிச்சம் நிரப்பியது போல் இருந்தது. கண்களை மூடி திரும்பவும் திறந்தான். இப்போது வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்தது. எதிரே ஒரு உருவம் மெல்ல தெரிந்தது.
"வாசு...நான் பேசறது கேக்கறதா" உருவம் முழுதும் தெரிவது முன் குரல் கேட்டது. வாசு தலையாட்டினான்.
"குட்...நான் யார்ன்னு தெரியுதா" பரிச்சயமான குரல், ஞாபகங்களை ஸ்கேன் செய்தான்.
"டாக்டர்" மெல்ல சொன்னான்
"வெரிகுட்...சொல்லுங்க உங்க பிரச்சனை என்ன?"
"கனவு டாக்டர் கனவு...கெட்ட..கெட்ட கனவு" இப்போது டாக்டரின் உருவம் முழுதும் தெரிந்தது.
"கனவு வருவது நார்மலான விஷயம் தானே...சமயத்தில எல்லோருக்கும் கெட்ட கனவு வரும்"
"இல்ல டாக்டர்...எனக்கு தினமும் வருது..கெட்ட...கெட்ட கனவா வருது"
"எப்போதிருந்து இது மாதிரி இருக்கு"
"ரொம்ப நாளா டாக்டர்...எப்ப ஆரம்பிச்சதுன்னு ஞாபகம் இல்ல..ஆனா ரொம்ப நாளா வருது" வாசு கண்களை மூடி திரும்பவும் ஞாபகங்களை தேடினான்...ம்ம்ம்..விடை வராதென்பது அவனுக்கு தெரியும். நிறைய நாட்கள் யோசித்து பார்த்துவிட்டான், எப்போதிருந்து கனவு கான ஆரம்பித்தான் என்பது தெரியவில்லை.
"வாசு...கனவுங்கிறது நம்மோட ஞாபகங்கள் தான். ஏதாவது ஒரு சுவாரஸ்யமான் நிகழ்ச்சியோ அல்லது மனச பாதிக்கிற விஷயமோ முடிவோ தீர்வோ இல்லாம நம்மோட ஞாபகங்கள்ல தேங்கிடும். அது தான் நாம தூங்கறப்போ கனவா ஒரு உருவம் கொடுத்து வரும். கம்ப்யூட்டர்ல எப்படி ஒரு ப்ரோக்ராம் மெமரில்ல ஏறி எக்ஸ்கியூட் ஆகி, கம்ப்யூட்டர் ஆ·ப் செஞ்சா கானாம போயிடுமோ....அது போல தான் நம்ம கனவும். தூங்கும் போது நம்ம மூளையென்னும் கம்ப்யூட்டர் நம்ம ஞாபகம் என்னும் மெமரியில இருந்து எடுத்து ஓட்டுற ஒரு ஸ்க்ரீன்சேவர் தான் கனவு. தூங்கி எழுந்தா..அது கானாம போயிடும். சில சமயம் ஒரு பகுதி மட்டும் ஞாபகம் இருக்கும்" வாசுவிற்கு புரியுமாறு டாக்டர் லெக்சர் கொடுத்தார்.
"டாக்டர்..என் கனவு எல்லாம் நிஜமா நடந்திருமோன்னு பயமா இருக்கு டாக்டர்"
"ஏன் அப்படி சொல்றீங்க.. சரி அப்படி என்ன கனவு கண்டீங்க..."
"அது எப்படி டாக்டர் சொல்ல முடியும்..நீங்கதான் கனவு கலைஞ்சிடும்ன்னு சொன்னீங்களே"
"இல்ல கலையாது...ஞாபகம் இருக்கும்...கண்ண மூடி யோசிங்க வாசு..."
"அப்ப தூக்கம் வருமா...எப்படி உங்க கூட பேசுவேன்"
"அதெல்லாம் பேசுவீங்க...மைல்டா செதட்டிவ் கொடுத்திருக்கேன்...தூக்கமும் வரும்..பேச்சும் வரும்"
வாசு கண்ணை மூடினான், டாக்டர் அவனை வருடிக்கொடுப்பது போல இருந்தது. டாக்டரின் குரல் கேட்டது. எல்லாம் அமானுஷ்யமாக இருந்தது. கண்கள் இருந்தன எங்கோ போவது போல் இருந்தது ஆனால் உடம்பு மட்டும் நகரவில்லை. அது தெரிந்தது வாசுவிற்கு. திடீரென திரை விலகியது போல் இருந்தது.
"ஐயோ டாக்டர் அவன் தான் இது" வாசு அலறினான்.
"காம் டவுன்...யார் அது ?"
"அவன்தான் டாக்டர்... ரகு"
"யார் ரகு?"
"என் உயிர் நன்பன் டாக்டர்..சே...அப்படி சொல்றதுக்கே என் நாக்கு கூசுது...பாருங்க டாக்டர்..நன்பனின் மனைவின்னு கூட பாக்காம எப்படி பாக்கறான் பாருங்க என் மாலாவ"
"உங்க முன்னாடியே உங்க மனைவிய பார்க்கிறானா....நீங்க என்ன செய்யறீங்க... எங்க இருக்கீங்க"
"நான் திரும்பி தூங்கிகிட்டு இருக்கேன் டாக்டர்...அவன் எப்படி என் பெட் ரூம்ல வந்தான் டாக்டர்...மாலாவையே வெறிச்சி பாக்கிறானே..ஐயோ என் மாலாவ என்ன செய்ய போறானோ"
"எப்படி உங்க ரூமுக்கு வந்தான்...அவன் உங்க வீட்ல தான் தங்கியிருக்கானா"
"இல்ல டாக்டர்...பக்கத்து வீடு டாக்டர்...எப்படி வந்தான்னு தெரியல...ஒருவேல மாலாவே சாவி கொடுத்திருப்பாளோ"
"எப்படி சொல்றீங்க"
"அதான் எப்ப பார்த்தாலும் அவன் கூடவே இவ இளிச்சு இளிச்சு பேசுவாளே டாக்டர்...நான் எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டாளே"
"அப்ப உங்க மனைவிய சந்தேகப்படறீங்களா"
"இல்ல டாக்டர்...இல்ல...தப்பா சொல்லிட்டேன்...அவ பத்திரமாத்து தங்கம்...அவள நான் சந்தேகப்படக்கூடாது...இவன் கதவ உடச்சி வந்திருப்பான்"
"சரி நீங்க எழுந்திருச்சு அவன விரட்டுங்க"
"முடியல டாக்டர்...என்னால எழுந்திருக்க முடியல"
"முடியும்...இது உங்க கனவு... உங்களால முடியும்...உங்க மனைவிய காப்பாத்தனும் நினைச்சா உங்களால முடியும்"
"இல்ல டாக்டர்..என்னால முடியல..நான் மட்டும் எழுந்திருச்சா அவன நார் நாரா கிழிச்சு...ஐயோ அவன் கத்திய எடுக்கிறான் டாக்டர்...மாலா பக்கத்துல கொண்டுபோறான் டாக்டர்...அவள காப்பாத்துங்க...யாராவது காப்பாத்துங்க....மாலா...மாலா" வாசு பெரும் குரலெடுத்து அலறினான்.
"வாசு மிஸ்டர் வாசு" அவன் உடம்பு நகர்ந்தது. யாரோ குலுக்கியது போல இருந்தது. வாசு கண்களை திறந்தான். இப்போது பிரகாசமான வெளிச்சம் இல்லை..சற்று மங்கலான வெளிச்சமே. எதிரே டாக்டர் தெரிந்தார். முன்னைவிட கொஞ்சம் தூரத்தில் உட்கார்ந்திருந்தார். ஆனால் அவர் ஏன் கருப்பு கோட் அனிந்திருக்கிறார்.
"மிஸ்டர் வாசு உங்க மனைவி கொலை வழக்கு விசாரனை முடிவுக்கு வந்தாச்சு. உங்க மனைவி மாலாவ கோடூரமான முறையில கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு இருக்கீங்க. நீங்க ஏதாவது சொல்ல விரும்பறீங்களா" டாக்டரின் குரல் தான், ஆனால் வழக்கமான மருந்து வாசனை அடிக்கவில்லை. டாக்டர் ஏன் கருப்பு கோட் அனிந்திருக்கிறார் என்பது வாசுவிற்கு புரிந்தது. ஒரு கணம் மவுனமாய் இருந்தான்.
"எல்லாம் ஒரு கனவு மாதிரி இருக்கு யுவர் ஆனர்"

5 comments:

Maayaa said...

kadhai nalla irukku,,
but why lawyer appears as doctor to him and why all this mental testing,, enakku koncham puriyala!!
koncham bulb vidarennu nenakaren

ranjit kalidasan said...

Priya,
Puriyalanaa vitrunga. Idhuvum ennoda 'yaarudan' kadhai style'la ezhudiiruppen, but indha thadava main plot is kanavu.

Anonymous said...

poli pinnuuttam. for your attention

Anonymous said...

Dondu peyaril poli pinnuuttam..


Gavanikka..

Anonymous said...

poli pinnuuttam. Dondu peyaril.

Gananikka ...