Total Pageviews

Sunday, September 18, 2005

சில நேரங்கள் சில ஞாபகங்கள் (சிலப்பதிகாரத்தில் ஆங்கிலம்)

நான் ஒன்பதாவது படிக்கும் போது, தமிழில் சிலப்பதிகாரப் பாடல் ஒன்று (கண்ணகி நீதி கேட்கும் படலம்) உண்டு. பலர் அதை படித்திருக்கலாம்,
'தேரா மன்னா செப்புவடுதையேன்...' எனத் தொடங்கும் பாடல்.
அப்பொழுது எனக்கு திரு.ராஜரத்தினம் என்பவர் தமிழ் ஆசிரியராக இருந்தார். மிக வேடிக்கையான மனிதர், கொஞ்சம் கண்டிப்பானவரும் கூட. அவர் தமிழ் சொல்லிக்
கொடுக்கும் அழகே ஒரு அழகு. அவர் இந்த
பாடலை பாடம் நடத்தும்போது ஒரு சம்பவம்.
அதில் கண்ணகி உன்மையைக் கூறி காற்சிலம்பினை உடைத்து அதில்
மாணிக்க கற்கள் தெறிப்பதை கண்ட பாண்டிய மன்னன்
'மண்பதைக் காக்கும் தென்புதற்க் காவல்
என்முதற் பிழைத்தது யானோ அரசன் யானே கள்வன்' என்று கூறி உயிர் துறப்பான்.
இதன் பொருள், 'இந்த உலகத்தை காக்கும் தென்னகத்து பாண்டிய அரசு என்னால் பிழை செய்தது, இனி நான் அரசன் அல்ல நான் ஒரு கள்வன்',
இது தான் கடைசியில் வரும் 'யானோ அரசன் யானே கள்வன்'. இதை சொல்லும்போது, எங்கள் ஆசிரியர், இந்த அடியில் இளங்கோவடிகள் ஆங்கிலத்தை கயாள்கிறார் என்றார். எங்களுக்கோ ஒரே ஆச்சர்யம் 'அது எப்படி சார்' என நான் கேட்டேன். அவர் நேரே சென்று கரும்பலகையில்
'யான்NO அரசன் யான்A கள்வன்' என ஒளிந்திருப்பதை பாருங்கள் என்றார். எங்களுக்கு ஒரே சிரிப்பு, கூட அவரும் சிரித்தார்.
அவர் சாதரணமாக அந்த செய்யுளை நடத்தி இருந்தால் எனக்கு அன்றே சிலப்பதிகாரம் மறந்திருக்கும். ஆனால் இந்த சம்பவத்தால் இன்றும் அந்த பாடல் ஞாபகம் இருக்கிறது.

No comments: