Total Pageviews

Friday, September 23, 2005

ஹாலிவுட்டில் கலைஞர்

நான் கலைஞரின் தீவிர ரசிகன். இலக்கியவாதியாக, கலைஞர் நமக்கு கிடைத்த மிகப்பெரும் சொத்து. நான் பத்தாவது படிக்கும்போது எங்கள் பாடத்தில், கொடி தினத்தை பற்றி ஒரு பாடம் உள்ளது அதில் வரும் ஒரு உரையாடல்:

"முன்னேறு முன்னேறு நீ என முரசொலித்து
எஞ்சிய வீரர்களை நெஞ்சுரம் கொள்ளச் செய்து
சாவு முகட்டிலே நொடிகளை கணக்குப் பார்ப்பது
வீரர்களுக்கு அழகில்லை - என்ற போர்க்காலத்து
அரிச்சுவடியை தவறியும் மறந்து விடாமல்..."

இது இன்றைக்கும் எனக்கு ஞாபகம் உள்ளது. பராசக்தி, மந்திரிகுமாரி, மனோகரா போன்ற திரைப்படங்களுக்கு கலைஞர் எழுதிய புரட்சிகரமான வசனங்கள், காலத்தால்
அழிக்க முடியாத காவிய வடிவங்கள் என்றே சொல்லலாம். இங்கே பல ஆங்கில திரைப்படங்கள் பார்க்கும்போது அதிலும் குறிப்பாக கோர்ட் காட்சிகள் வரும் படங்களை
பார்க்கும்போது, எனக்கு பராசக்தியின் வசனங்கள்தான் உடனே ஞாபகத்திற்கு வரும். இந்த வகை படங்களிலே நான் மிகவும் ரசித்தது "A few good men" என்ற படமாகும். டாம் க்ரூஸ், டெமி மூர், ஜாக் நிக்கல்ஸன் என திறமைகள் போட்டி போடும் ஒரு கதை களம். அதிலும் ரானுவ உயரதிகாரியாக வரும் ஜாக் நிக்கல்ஸன் தன் அபார நடிப்பாற்றல், மற்றும் வசன உச்சரிப்பால் நம்மை வெகுவாக் கவர்வார். அதில் கடைசியில் வரும் ஒரு காட்சி; இரு சிப்பாய்களுக்காக வாதாடும் டாம் க்ரூஸ், அந்த சிப்பாய்கள் தங்கள் உயரதிகாரி கொடுக்கும் உத்தரவால் இன்னொரு சிப்பாய் இறக்க காரணமாகிறார்கள், உயரதிகாரியாக வரும் ஜாக் நிக்கல்ஸன் அந்த உத்தரவை கொடுத்ததாக உன்மையை சொல்ல வைக்கும் ஒரு காட்சி. இந்த காட்சியில் ஜாக் நிக்கல்ஸன் பேசும் வசனம் மிக பிரபலமானது, ஹாலிவுட்டில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய வசனக் காட்சிகளில் ஒன்று. அந்த வசனத்தை கலைஞரின் பேனா தீட்டியிருந்தால் எப்படி இருக்கும் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. அதை இப்போது முயற்சி செய்திருக்கிறேன்.
முதலில் ஆங்கிலத்தில் வரும் வசனம்:

Jack Nicholson: You want Answers?
Tom Cruise: I think I am entitled to them!
Jack Nicholson: You want answers...
Tom Cruise: I WANT THE TRUTH!!!
Jack Nicholson: YOU CAN'T HANDLE THE TRUTH!!! Son we live in a world that has walls, and those walls have to be guarded by men with guns. Whose gonna do it? You? You, Lieutenant Wienburg? I have more responsilbility here than you could possibly fathom.In places you don't want to talk about at parties, you want me on that wall...you need me on that wall. We use words like honour, code, loyalty...we use these words as the backbone to a life spent defending something. You use 'm as a punchline! I have neither the time nor the inclination to explain myself to a man who rises and sleeps under the blanket of the very freedom I provide, then questions the manner in which I provide it! I'd prefer you just said thank you and went on your way. Otherwise, I suggest you pick up a weapon and stand a post. Either way, I don't give a damn what you think you're entitled to!

இந்த காட்சி கலைஞரின் கைவண்ணத்தில் (என் கற்பனை):

ஜாக் நிக்கல்ஸன்: உனக்கு பதில் வேண்டுமா
டாம் க்ரூஸ்: அதை தேரிந்துகொள்ளும் உரிமை உள்ளது
ஜாக் நிக்கல்ஸன்: உனக்கு பதில் வேண்டுமா
டாம் க்ரூஸ்: எனக்கு உன்மை வேண்டும்
ஜாக் நிக்கல்ஸன்:
உன்னால் உன்மையை கையால முடியாது, கேள் இதை...
நாம் வாழும் இந்த உலகம் வேலிகளால் தடுக்கப்பட்டுள்ளது
அந்த வேலிகளை வாள்களால் காவல் செய்யவேண்டும்
யார் செய்வார்கள் அதை
கோர்ட்டிலே கோட்டும் சூட்டும் மாட்டி
பொய்யையும் புரட்டையும் விலைப் பேசும்
நீ செய்வாயா அதை...
உன்னை விட அதிகமாய் பொறுப்புகளும் கடமைகளும் எனக்குள்ளன
நீ கேளிக்கையாய் வாழ்க்கையை மகிழ்விக்க
வாடிக்கையாய் தினமும் தூங்கி எழ..
காக்க வேண்டும் அந்த வேலியை...
பகைவனின் துப்பாக்கிகளுக்கு துவண்டுவிடாமலும்,
எதிரியின் தோட்டாக்களுக்கு தளர்ந்துவிடாமலும்
நான் காக்க வேண்டும் அந்த வேலியை...
எங்கள் அகராதியில் நேர்மை, நானயம், பற்று என வார்த்தைகள் பல உள்ளன
அந்த வார்த்தைகள்தாம் எங்கள் வாழ்க்கையில்,
உயிர் காக்க, உயிர் விடும் எங்கள் யாக்கையில்
ஊறிய வேதமந்திரம்...
எங்களின் வேதமந்திரம் இங்கே உன் வாதத் திறமையின்
வாய்மால வித்தையின் போக பொருளாய் உள்ளது...
நான் கொடுக்கும் இந்த சுதந்திரக் காற்றை சுவாசிக்கும்
நான் படைக்கும் இந்த சுதந்திர வானத்தில் சிறகடித்து பறக்கும்
உன்னை போன்ற கருப்பு அங்கி போட்ட காக்கைக்கு
பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை
அதை கேட்கின்ற அருகதையும் உனக்கில்லை
இதை கேட்பதற்கு பதில்,
இந்த சுதந்திரத்தை உனக்கு பரிசளித்த
எனக்கு நன்றி கூறி உன் வேலையை செய்
இல்லையேல், என்னோடு சேர்ந்து வாள் ஏந்தி காவல் செய்
எப்படியாயினும் உன் உரிமையை பற்றியோ,
உன்மையை கண்டறியும் உன் கடமையை பற்றியோ
எனக்கு ஒருபோதும் கவலை இல்லை

4 comments:

Anonymous said...

enna saar! ivvalo supperaa ezhuthiirukeenga; orutharum idhuvarai comment ezhuthala! aazhryathaan!
vaazhthukkal.
anbudan lana.

Anonymous said...

correction "aachcharyamthaan"

Anonymous said...

Great work Ranjit... Last time ithai padikum pothu etho kazaigar padri ezuthi irukeenga endru enni fulla padikama vituten nenaikiren...or may be i must have got busy with something else that i would have forgot to complete this... but ippo padikum pothu thaan theriyuthu... ethukai monai ellam perfect use panni ungalalayum dialogues ezutha mudiyumnu....(though it was a translation)...its a nice work...seriously!

and am surprised too that no one actually responded to such a good work..

Sundar said...

வணக்கம் ரஞ்சித் அவர்களே,
உங்கள் கொஞ்சி விளையாடும் தமிழ் ஆளுமையை கண்டு நான் மெய் சிலிர்கிறேன். அபாரம்... அபாரம்...
உங்களிடமிருந்து இது போன்ற மேலும் பல எண்ன வடிவாக்கங்களை எதிர் பார்க்கிறேன்.
நன்றி.