போன வாரம் thanksgiving holidaysல் என் நன்பர் IBM செந்தில் அழைப்பை ஏற்று, நான் மிகவும் ரசிக்கும் நகரமான sanfrancisco சென்றேன். அங்கே dallasலிருந்து அவரின் இன்னொரு நன்பரும் சேர்ந்து கொள்ள, அப்படியே இயற்கையை ரசிக்கலாம் என்று, வடக்கு கலி·போர்னியாவில் இருக்கும் crater lake மற்றும் lava beds national park ஆகிய இடத்திற்கு சென்றோம். crater lake பார்டரை சற்று தாண்டி ஆரெகான் மாநிலத்தில் இருக்கிறது, lava beds கலி·போர்னியாவில் இருக்கிறது. இரண்டு இடமுமே மிக அழகாகவும் adventerousஆகவும் இருந்தது. அமேரிக்காவில்தான் பயணம் செய்ய எவ்வளவு வசதிகள். சற்று காலச்சக்கரத்தை சுழற்றி விட்டு பின்னோக்கி பார்த்தால், படிக்கின்ற காலத்தில் எவ்வளவு விடுமுறைகள், எவ்வளவு பயணங்கள்.
சிறு வயதில் விடுமுறை, பயணம் என்றாலே எனக்கு முதலில் ஞாபகம் வருவது, ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் நாங்கள் ஊருக்கு போகும் ரயில் பயணங்கள் தான். அப்பா எங்களுக்கு லீவ் விட்டு ஒரு வார்த்திற்குள்ளேயே ரயில் டிக்கெட் ரிசர்வ் செய்துவிடுவார். முக்கால்வாசி கம்பன் எக்ஸ்பிரஸ் தான். அதுதான் விடியற்காலையில் எங்கள் ஊரிற்கு போய் சேர்ந்து விடும். அத்தனை பேரையும் ஆட்டோவில் அள்ளிப்போட்டு மயிலாப்பூரிலிருந்து எழும்பூர் செல்லும் முதல் பயணம். வருடத்தில் அந்த ஒரு நாள் தான் நான் மயிலாப்பூரை விட்டு வெகு தூரம் வெளியே வந்த நாளாய் இருக்கும். வழக்கமான ரூட், ராயப்பேட்டை, சத்யமூர்த்தி பவன், அண்ணாசாலை, கமிஷனர் office வழியே எக்மோர். ஏனோ சிறு வயதில் அது ரொம்ப தூரம்போல் தெரியும். வழியில் வுட்லேண்ட்ஸ் தியேட்டரில் என்ன படம் ஓடுகிறது, ராஜ் தியேட்டரில் என்ன படம் ஓடுகிறது, ஜெயப்ரதா தியேட்டரில் என்ன படம் ஓடுகிறது என்று பார்த்துக்கொண்டே போவேன். எனக்குத் தெரிந்து ஜெயப்ரதா தியேட்டரில் 'திருட்டு புருஷன்' என்று ஒரு பட போஸ்டர், மூன்று வருடம் தொடர்ந்து ரயில் பிடிக்க போகும் போது பார்த்திருக்கிறேன். அது ஏன் எந்த ரெக்கார்டிலும் வரவில்லை என்று தெரியவில்லை. ஒரு வேளை பெரிய A போட்ட கோக்குமாக்கான படமாக இருந்ததால் இருக்குமோ. சரி போதும். மேட்டரை விட்டு மேட்டருக்கு வருகிறேன். ரயில் பயணங்களில் முதலில் நடப்பது எனக்கும் என் அண்ணன் தங்கைக்கும் நடக்கும் ஜன்னல் ஓர சீட் சன்டை தான். அந்த இரவு நேர பயணங்களிலும், வெளியே கும்மிருட்டாக ஒன்றுமே தெரியாமல் இருந்தாலும் எனக்கு ஜன்னலோர பயணம் தான் மிகவும் பிடிக்கும். எப்படியாவது ஒரு ஜன்னலை பிடித்துவிடுவேன். மற்றவர்கள் தூங்கினாலும் எனக்கு தூக்கம் வராது. வெளியே வேடிக்கை பார்த்து ஒவ்வொரு ரயில் ஸ்டேஷனையும், விட்டில் பூச்சிகள் பறக்க எறியும் ட்யூப்லைட்களையும் ரசித்துக்கொண்டே முழித்திருப்பேன். அப்போதெல்லாம் நிலக்கரி என்ஞின் இருந்த சமயம். கம்பன் எக்ஸ்பிரஸ் விழுப்புரம் வரை எலெக்ட்ரிக் என்ஞினிலும், விழுப்புறம் டு மயிலாடுதுறை வரை டீஸல் என்ஞினும் அதற்குமேல் கரி என்ஞினும் மாற்றி கோர்த்து ஓடும். காலை நாலு மணிக்கு மயிலாடுதுறையில் கரி என்ஞினை சூடு கிளப்பிக்கொண்டிருப்பார்கள். பிறகு அதை கம்பனில் மாட்டி இழுப்பார்கள். கரி என்ஞினில் போவதே ஒரு சுகம் தான். நன்றாக நம்மை தாலாட்டும். கம்பன் விடியற்காலை ஆறு அறரை மணிக்கெல்லாம் திருவாரூர் ஸ்டேஷன் வந்தடையும். திருவாரூர் வந்தவுடன் "மல்லி, முல்லை, ஜாதிமல்லி" என்று ஒருவர் கணீர் குரலோடு பூ விற்றுக்கொண்டிருப்பார். வேலை கிடைத்து கடைசியாக ரயிலில் நான் போன போது அந்த குரல் கேட்காதது ஒரு மெல்லிய சோகம்.
ரயில் பயணத்திற்கு அடுத்தது எனக்கு பிடித்தது பஸ் பயணம் தான். எட்டாவதில் தான் ஒரு முழு நீள பஸ் பயணத்தில் என் தாய்மாமாவோடு ஊருக்கு சென்றேன். அவர் அடிக்கடி மாற்றலாகி தமிழ்நாட்டையே சுற்றுவார், அதனால் அவருக்கு பஸ் பயணம் அத்துப்படி. சென்னை டு கடலூர், கடலூர் டு மயிலாடுதுறை, மயிலாடுதுறை டு திருவாரூர் என்று பல பஸ்கள் மாறி செல்வது தான் அவருக்கு பிடிக்கும். நம் ஊர் தூங்கா பஸ் ஸ்டாண்டுகள், ட்யூப்லைட்கள், டீக்கடைகள் அதில் கேட்கும் எம்ஜியார், இளையராஜா அல்லது திண்டுக்கள் லியோனி ஆடியோக்கள் இதெல்லாம் நம் அடையாளங்கள். இன்றைக்கும் இவைகள் ஏற்படுத்தும் ஒரு ambience தான் பயணிகளின் களைப்பை போக்குவதற்கு இன்றியமையாதவையாக இருக்கிறது. அதனை பழகியவர்களுக்கு அதை ரசிக்க தெரியும். நம் ஊர் பஸ் பயணங்களிலே நான் வியப்பது நம் ஓட்டுநர்களின் திறமையை தான். எட்டு அடி ரோட்டின் குறுகிய திருப்பங்களில் அவ்வளவு பெரிய வண்டியை லாவகமாக திருப்புவார்கள். அமேரிக்காவில், நியுயார்க் மன்ஹாட்டனில் வண்டி ஓட்டுபவர்கள் தான் உலகத்திலே சிறந்த ட்ரைவர்கள் என்று ஜம்பம் அடிப்பவர்களையெல்லாம் நம் பஸ்களில் ஒரு முறை ஏற்ற வேண்டும்.
ரயில், பஸ் பயணங்கள் பிறகு நான் ரசிப்பது மாட்டு வண்டி பயணம் தான். எங்கள் ஊரில் அப்போதெல்லாம் வீட்டுக்கு வீடு இருக்கும் மாட்டு வண்டியை வைத்து தான் அவரவர்களின் மதிப்பே. வெறும் கூரை இல்லாத fence மட்டுமே இருக்கும் பாறை வண்டிகள் ஒரு SUV போல், கூரை வத்து ஸ்டைல் ரிம் வத்து alloy wheelsஓடு காணப்படும் கூட்டு வண்டிகள் luxury sedanகள் போல். சித்திரையில் நடக்கும் பழயங்குடி மாரியம்மன் கோவில் திருவிழா தான் மாட்டு வண்டி மாநாட்டின் main destination. திருவிழாவிற்கு போகும்போது adventurousஆக SUVல் போய்விடுவேன், அங்கே நன்றாய் சுற்றி பார்த்து, விளையாடி டையர்டாகி திரும்பும்போது ஏதாவது ஒரு luxury sedanல் தொற்றி கொள்வேன். ஒரு முறை அத்தை ஊருக்கு சென்றபோது, மாமா தயவோடு மாட்டு வண்டியை ஓட்டியிருக்கிறேன். கையில் இருக்கும் மாட்டின் இரு கையிறு தான் steering and brakes, குச்சிதான் accelerator.
ரயில், பஸ், மாட்டு வண்டி பிறகு நான் ரசிப்பது அப்பாவோடு அம்பாசிடர் காரில் நான் மட்டுமே போகும் திருப்பதி ட்ரிப்கள். அது ஏன் என்னை மட்டும்? ஏனேன்றால் நான் தான் வீட்டிலே காரில் வாந்தி எடுக்காத ஒரே ஆள். அது என்னமோ எவ்வளவு imported models வந்தாலும் நம்ம ஊரில் அம்பாசிடைரை அடிச்சுக்க முடியாது. I believe it is 'the car' for indian roads and people. அம்பாசிடர் காரிலும் எனக்கு ஜன்னலோர பயணமே பிடிக்கும். ஜன்னலை திறந்து எதிர்காற்று முகத்தில் பட வேடிக்கை பார்த்துக்கொண்டே போவது மிகவும் பிடிக்கும். அதிலும் எப்போதும் அம்பாசிடரில் வரும் சின்ன பெட்ரோல் வாடையும் கூடவே ஜேசுதாஸ் பாடலும் மேலும் கிக் ஏற்றும்.
ரயில், பஸ், மாட்டுவண்டி, அம்பாசிடர் இதற்கு அடுத்தது நான் அதிகம் போனது ஆனால் அவ்வளவாக பிடிக்காதது விமான பயணம் தான். அது என்னவோ நான் மற்றதில் பயணித்ததை விட விமான பயணம் எனக்கு ஒரு சந்தோஷத்தை கொடுக்கவில்லை. ஒருவேளை economy classல் மட்டும் சென்றதாலோ, இல்லை நான் மற்றதிலும் இதிலும் பயணத்திதில் இருந்த வயது வித்தியாசமோ, என்ன காரணமோ தெரியவில்லை. ஒன்று மட்டும் உன்மை, இப்போது அசை போட்டு பார்த்தால், நான் சிறுவயதில் சென்ற ரயில், பஸ், மாட்டுவண்டி, அம்பாசிடர் பயணங்களில் வெறும் பயணத்தை மட்டுமே ரசித்தேன், மனதில் வேறு எதுவும் இருந்ததில்லை. ஆனால் இப்போது விமானத்தில் பறக்கும் போதெல்லாம் ஏனோ மனதில் வருந்திக்கொள்ள பல விஷயங்கள், எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள்.
Total Pageviews
3,950
Saturday, December 02, 2006
Thursday, October 19, 2006
Creativity
உலகத்தின் மிகச் சிறிய திகில் கதை எது? இதுதான்:
"உலகின் கடைசி மனிதன் தனியாக ஓர் அறையில் உட்கார்ந்திருந்தான். கதவு தட்டப்பட்டது."
உலகத்தின் மிகச் சிறிய விஞ்ஞான சிறு கதை இதுதான்:
கதையின் தலைப்பு "டெலிபதிக்காரர்களுக்கான விஞ்சானக் கதை" அவ்வளவு தான் கதை. இது சமீபத்தில் விகடனில் படித்தது. போன வார விகடனில் மதன் கேள்வி பதிலில் ஒரு கேள்வி: "மனித குலத்தில் எழுந்த முதல் கேள்வி எதுவாக இருக்கும்?" இதற்கு அவர் சொன்ன பதில் "எவ இவ?!".
chanceஏ இல்ல!!!...இவற்றின் எல்லாவற்றிலும் நான் பார்த்து பிரமிப்பது இவர்களின் அசாய creativity தான். எப்படி தான் இவர்களுக்கு மட்டும் தோன்றுகிறதோ. இது தான் மற்றவர்களையும் கலைஞர்களையும் வேறு படுத்துகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் ஒரு creator இருக்கிறான், ஒரு சில பேர் அதை வெளிக்கொனர்ந்து வெற்றி பெறுகிறார்கள். சிலர் அதை உள்ளேயே புதைத்து சாமானிய உலகத்திற்குள் கானாமல் போய் விடுகின்றனர். ஒரு மகாக்கவிஞனுக்குள் இருக்கும் இந்த அதீத creativityக்கு challenge வரும்போது தான் அவன்:
"பல வேடிக்கை மனிதரைப் போல் - நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ.." என்று வெடிக்கிறான். நம்மில் பலர் ஆழ் மனதில் ஏங்கி தவிக்கும் அந்த creative satisfactionக்கு தான் பலவற்றை இழக்கிறோம், அதற்காக வருத்தப்படவும் மாட்டோம். உதாரணத்திற்கு மிகக் கஷ்டப்பட்டு ஒவ்வொரு வார்த்தையாய் தமிழில் அடித்து, அதை யுனிக்கோடாக மாற்றி வலைப்பூக்களில் பதிவு செய்கிறோம், எல்லாம் எதற்காக, யாராவது ஒரு ஜீவன் அதை விமர்சித்தோ, பாராட்டியோ பின்னூட்டம் போட மாட்டார்களா என்பதற்கு தானே.
சரி சீரியஸாக பேசாமல் மீண்டும் தலைப்பு பற்றி பேசலாம். நான் பார்த்து, ரசித்து, பிரமித்த, நம்மவர்களின் creative விஷயங்களை தொகுக்க நினைக்கிறேன், ஒரு partial list இதுதான்:
1) இளையராஜாவின் பல பாடலின் orchestration and composition. உதாரனம்: 1) பூவே செம்பூவே 2) பூங்கதவே தாழ் திறவாய் etc.
2) வைரமுத்துவின் பல பாடல்கள், அவரின் சொல் ஆளுமை.
உதாரனம்: "பனி விழும் மலர் வனம் -உன்
பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்"
3) சுஜாதாவின் சிறுகதைகள். உதாரனம்: முதல் மனைவி, வி.சி கதைகள்
4) சமீபத்தில் வந்த வைகைப்புயலின் காமெடிகள் (எழுதியது யாரோ!!). "எனக்கு அவ்வளவு சீக்கிரம் கோவம் வராது..", "என்ன ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாமா..", "கட்டடம் strong தான், basementதான் கொஞம் வீக்.."
5) crazy மோகனின் நகைச்சுவை வசனங்கள்.
உதாரனம்:
"என் மகனுக்கு பயங்கர ஞாபகசக்திங்க"
"அப்படியா"
"ஆமாங்க...தம்பி உன் பேர் என்ன"
"முத்துபாண்டி"
"பாருங்க இருபது வருஷத்துக்கு முன்ன வச்சது, இப்பவும் ஞாபகம் வச்சிருக்கான்"
6) நா.முத்துக்குமாரின் திரைப்பாடல்கள். உதாரனம்:
"தொட்டு தொட்டு என்னை
வெற்றுக் களி மன்னை
சிற்பமாக யார் செய்ததோ"
7) ராஜ்குமார் ஹிரானியின் திரைக்கதை அமைப்பு. முதல் munnabhaiயிலும், இரண்டாவது munnabhaiயிலும் கலகலப்பான சினிமாவில், மனிதத்தனமான விஷயங்களை அவர் கலந்த முறை பிரமிக்க வைக்கிறது. சிரிக்கவும் வைத்து, சீரியஸாக சிந்திக்கவும் வைக்கிறார்.
இது போல் எத்தனையோ இருக்கு.
கடைசியாய் ஒரு சுய விளம்பரம். நான் எழுதியதில் creativeஆக, இது நான்தானா என்று நான் வியந்த ஒன்றே ஒன்று:
மூன்று வருடம் முன்பு, தீவரமாய் திரைக்கதை எழுத பயிற்சி எடுத்து, பல புத்தகங்கள் படித்து, பல திரைக்கதைகள் படித்து, பார்த்து முடிவில் நானே ஒரு கதையை
திரைக்கதையாய் எழுதினேன். 70% எழுதி முடித்து, 30% இன்னும் மன்டையில் இருக்கிறது. அதில் ஒரு சின்ன காட்சி:
கதாநாயகன் கிரிஷ்ணா தன் வீட்டில் பார்த்து பேசிய பெண்ணை, அவன் முதலில் பார்க்க ஒரு ஓட்டலில் காத்திருக்கிறான். மெனுக்கார்ட் அவன் முகத்தை மறைக்க படித்துக்கொண்டிருக்கிறான். அப்போது அகிலா அங்கே வருகிறாள்.
அகிலா: எக்ஸ்க்யூஸ் மீ
கிரிஷ்ணா: (மெனுக்கார்டை இறக்கி பார்க்கிறான். அகிலாவின் அழகை பார்த்து வாயடைத்து போகிறான்)
அகிலா: நான் தான் அகிலா...Hi
கிரிஷ்ணா: (அகிலா முகத்தை பார்த்தே எழுந்து கை கொடுக்க முயல்கிறான்) Hi...நான்...வந்து...அது...என் பேர்...பேரு...பேரு.....சே என்ன பேர் வச்சாங்க.....
"உலகின் கடைசி மனிதன் தனியாக ஓர் அறையில் உட்கார்ந்திருந்தான். கதவு தட்டப்பட்டது."
உலகத்தின் மிகச் சிறிய விஞ்ஞான சிறு கதை இதுதான்:
கதையின் தலைப்பு "டெலிபதிக்காரர்களுக்கான விஞ்சானக் கதை" அவ்வளவு தான் கதை. இது சமீபத்தில் விகடனில் படித்தது. போன வார விகடனில் மதன் கேள்வி பதிலில் ஒரு கேள்வி: "மனித குலத்தில் எழுந்த முதல் கேள்வி எதுவாக இருக்கும்?" இதற்கு அவர் சொன்ன பதில் "எவ இவ?!".
chanceஏ இல்ல!!!...இவற்றின் எல்லாவற்றிலும் நான் பார்த்து பிரமிப்பது இவர்களின் அசாய creativity தான். எப்படி தான் இவர்களுக்கு மட்டும் தோன்றுகிறதோ. இது தான் மற்றவர்களையும் கலைஞர்களையும் வேறு படுத்துகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் ஒரு creator இருக்கிறான், ஒரு சில பேர் அதை வெளிக்கொனர்ந்து வெற்றி பெறுகிறார்கள். சிலர் அதை உள்ளேயே புதைத்து சாமானிய உலகத்திற்குள் கானாமல் போய் விடுகின்றனர். ஒரு மகாக்கவிஞனுக்குள் இருக்கும் இந்த அதீத creativityக்கு challenge வரும்போது தான் அவன்:
"பல வேடிக்கை மனிதரைப் போல் - நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ.." என்று வெடிக்கிறான். நம்மில் பலர் ஆழ் மனதில் ஏங்கி தவிக்கும் அந்த creative satisfactionக்கு தான் பலவற்றை இழக்கிறோம், அதற்காக வருத்தப்படவும் மாட்டோம். உதாரணத்திற்கு மிகக் கஷ்டப்பட்டு ஒவ்வொரு வார்த்தையாய் தமிழில் அடித்து, அதை யுனிக்கோடாக மாற்றி வலைப்பூக்களில் பதிவு செய்கிறோம், எல்லாம் எதற்காக, யாராவது ஒரு ஜீவன் அதை விமர்சித்தோ, பாராட்டியோ பின்னூட்டம் போட மாட்டார்களா என்பதற்கு தானே.
சரி சீரியஸாக பேசாமல் மீண்டும் தலைப்பு பற்றி பேசலாம். நான் பார்த்து, ரசித்து, பிரமித்த, நம்மவர்களின் creative விஷயங்களை தொகுக்க நினைக்கிறேன், ஒரு partial list இதுதான்:
1) இளையராஜாவின் பல பாடலின் orchestration and composition. உதாரனம்: 1) பூவே செம்பூவே 2) பூங்கதவே தாழ் திறவாய் etc.
2) வைரமுத்துவின் பல பாடல்கள், அவரின் சொல் ஆளுமை.
உதாரனம்: "பனி விழும் மலர் வனம் -உன்
பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்"
3) சுஜாதாவின் சிறுகதைகள். உதாரனம்: முதல் மனைவி, வி.சி கதைகள்
4) சமீபத்தில் வந்த வைகைப்புயலின் காமெடிகள் (எழுதியது யாரோ!!). "எனக்கு அவ்வளவு சீக்கிரம் கோவம் வராது..", "என்ன ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாமா..", "கட்டடம் strong தான், basementதான் கொஞம் வீக்.."
5) crazy மோகனின் நகைச்சுவை வசனங்கள்.
உதாரனம்:
"என் மகனுக்கு பயங்கர ஞாபகசக்திங்க"
"அப்படியா"
"ஆமாங்க...தம்பி உன் பேர் என்ன"
"முத்துபாண்டி"
"பாருங்க இருபது வருஷத்துக்கு முன்ன வச்சது, இப்பவும் ஞாபகம் வச்சிருக்கான்"
6) நா.முத்துக்குமாரின் திரைப்பாடல்கள். உதாரனம்:
"தொட்டு தொட்டு என்னை
வெற்றுக் களி மன்னை
சிற்பமாக யார் செய்ததோ"
7) ராஜ்குமார் ஹிரானியின் திரைக்கதை அமைப்பு. முதல் munnabhaiயிலும், இரண்டாவது munnabhaiயிலும் கலகலப்பான சினிமாவில், மனிதத்தனமான விஷயங்களை அவர் கலந்த முறை பிரமிக்க வைக்கிறது. சிரிக்கவும் வைத்து, சீரியஸாக சிந்திக்கவும் வைக்கிறார்.
இது போல் எத்தனையோ இருக்கு.
கடைசியாய் ஒரு சுய விளம்பரம். நான் எழுதியதில் creativeஆக, இது நான்தானா என்று நான் வியந்த ஒன்றே ஒன்று:
மூன்று வருடம் முன்பு, தீவரமாய் திரைக்கதை எழுத பயிற்சி எடுத்து, பல புத்தகங்கள் படித்து, பல திரைக்கதைகள் படித்து, பார்த்து முடிவில் நானே ஒரு கதையை
திரைக்கதையாய் எழுதினேன். 70% எழுதி முடித்து, 30% இன்னும் மன்டையில் இருக்கிறது. அதில் ஒரு சின்ன காட்சி:
கதாநாயகன் கிரிஷ்ணா தன் வீட்டில் பார்த்து பேசிய பெண்ணை, அவன் முதலில் பார்க்க ஒரு ஓட்டலில் காத்திருக்கிறான். மெனுக்கார்ட் அவன் முகத்தை மறைக்க படித்துக்கொண்டிருக்கிறான். அப்போது அகிலா அங்கே வருகிறாள்.
அகிலா: எக்ஸ்க்யூஸ் மீ
கிரிஷ்ணா: (மெனுக்கார்டை இறக்கி பார்க்கிறான். அகிலாவின் அழகை பார்த்து வாயடைத்து போகிறான்)
அகிலா: நான் தான் அகிலா...Hi
கிரிஷ்ணா: (அகிலா முகத்தை பார்த்தே எழுந்து கை கொடுக்க முயல்கிறான்) Hi...நான்...வந்து...அது...என் பேர்...பேரு...பேரு.....சே என்ன பேர் வச்சாங்க.....
Tuesday, October 17, 2006
என் சினிமாக்கள் - 1
இந்த தொடரில் என்னை பாதித்த, நான் ரசித்த தமிழ் சினிமாக்கள் பற்றி சொல்ல போகிறேன். சிலர் சினிமா ஒரு சீரியஸான மெசெஜ் சொல்ல வேண்டும் என்று சொல்லுவார்கள், சிலர் அது பொழுதுபோக்கு விஷயமாக மற்றுமே இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள், என்னைக் கேட்டால் அது ஏதாவது ஒரு விஷயத்தில் நல்ல சினிமாவாக இருக்க வேண்டும். அப்படியானால் நல்ல சினிமாவின் இலக்கனம் தான் என்ன? ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால், அது ஞாபகத்தில் தங்க வேண்டும். அப்படி என் ஞாபகத்தில் தங்கிய, என்னை பிரமிக்க வைத்த சினிமாக்கள் சிலவற்றை இந்த பகுதியில் எழுத உள்ளேன்.
மூன்றாம் பிறை:
இப்படி ஒரு தொடர் ஆரம்பித்தால், இந்த படத்தை பற்றி முதலில் சொல்வது தான் சரியாய் இருக்கும். சிறு வயதில் மற்ற பிள்ளைகள் போல சினிமாவை வெறும் பொழுதுபோக்காக மற்றுமே கண்டுகளித்த என்னை முதன் முதலில் கேமராவின் பின்னால் நடக்கும் விஷயங்களை அறிய தூண்டிய படம் இது. இந்த படத்தை பற்றி முதலில் என் அம்மா தான் எனக்கு பல விஷயம் சொல்லியிருந்தார். இதில் கமல் நடிப்பு அழகாய் இருக்கும், ஸ்ரீதேவி நன்றாய் நடித்திருப்பார், கண்ணதாசன் கடைசியாய் பாட்டு எழுதியிருப்பார் என்று பல விஷயங்கள் சொன்னார். ஆனால் அப்போது வீட்டில் வீடியோ ப்ளேயர் எல்லாம் இல்லை, அதனால் இந்த படத்தைப் பற்றி கேள்விப்பட்டு வெகு நாள் வரை பார்க்க சந்தர்ப்பம் கிடைக்காமல் இருந்தேன். அப்போழுதெல்லாம் டிடி தான் ஒரே சேனல், டிடியில் நல்ல படங்கள் பார்க்க வேண்டுமானால் ஞாயிறு கிழமை வரை காத்திருக்க வேண்டும். ஞாயிறு கிழமைகளில் மதியம், காது கேளாதவர் செய்தி முடிந்தபிறகு 1:00 மணி அளவில் தேசிய விருது வாங்கிய படங்கள் போடுவர். அடிக்கடி வங்க மொழி படங்கள், மலையாள மொழி படங்கள் வரும். எப்போதாவது தமிழ் படங்கள் வரும். பலகாலம் இது டிடியின் சதி என்று நினைத்திருந்தேன், பிறகு தான் தெரிந்தது தொன்னூறுகள் வரை, தேசிய விருதுகள் வாங்கிய தமிழ்ப் படங்கள் மிகக் குறைவு என்று. எனினும் ஞாயிற்று கிழமைகளில் பல நல்ல படங்களை பார்த்தேன். அத்திப்பூத்தாற் போல சில சமயம், வெள்ளி கிழமை நடுராத்திரி டிடியில் சில படங்களை திரையிடுவர். ஒரு சமயம் அப்படி வெள்ளி கிழமை இரவு மூன்றாம் பிறை காட்ட போகிறார்கள் என்று செய்தி கேட்டு. நான் மட்டும் ராத்திரி 12 மணிவரை விழித்திருந்து, கடைசி இந்தி செய்தி முடிந்து, அந்த படத்தை பார்த்தேன். முதன் முதலாய் ஒரு தமிழ் படத்தை பார்த்து நான் பிரமித்தது இந்த படத்தை தான். ஒளிப்பதிவில் ஒரு புதிய பரிணாமத்தை காட்டியிருப்பார் பாலுமகேந்திரா. கதை, திரைக்கதை, இசை, பின்னனி இசை, நடிப்பு என்று எல்லா விதத்திலும் அசத்தியிருப்பார். 'பொன்மேனி உருகுதே..' தான் படத்தின் திருஷ்டி பரிகாரம். பாடல்களில் நடிகர்கள் வாயசைக்காமல் வெறும் மாண்டேஜ் ஷாட்களில் கச்சிதமாக காட்டியது இந்த படத்தில் தான் என நினைக்கிறேன். இந்த படத்தில் பாடல் என்றால் பொதுவாக எல்லோருடைய ·பேவரைட் கண்ணே கலைமானே பாடலாக தான் இருக்கும். எனக்கும் இதுதான் பிடித்த பாடல், ஆனால் படத்தோடு பார்க்கும் போது நான் மிகவும் ரசித்தது 'பூங்காற்று புதிதானது..' பாடலை தான். பல்லவியில் ஒரு வெஸ்டர்ன் ஸ்டைலில் ஆரம்பித்து, சரணத்தில் ஹிந்துஸ்தானியில் குழைத்திருப்பார் இளையராஜா. இந்த பாடலின் நடுவில், ஸ்ரீதேவியின் பாவாடை நுனி ஊட்டி ரயில் தண்டவாளத்தில் மாட்ட, எதிரே ரயில் நெருங்கி வர அப்போது ஒரு இசை போட்டிருப்பார் ராஜா, எனக்கு ரொம்ப நாளாய் ஒரு சந்தேகம், முன்னேயே அப்படி ஒரு காட்சியை யோசித்து பாலுமகேந்திரா கேட்டிருப்பாரோ, அல்லது அப்படி ஒரு ஷாட் எடுத்து அதை அழகாய் அந்த பாடலில் பொருத்தியிருப்பாரோ. மிக அழகான ஒரு காட்சி அது.
மூன்றாம் பிறை:
இப்படி ஒரு தொடர் ஆரம்பித்தால், இந்த படத்தை பற்றி முதலில் சொல்வது தான் சரியாய் இருக்கும். சிறு வயதில் மற்ற பிள்ளைகள் போல சினிமாவை வெறும் பொழுதுபோக்காக மற்றுமே கண்டுகளித்த என்னை முதன் முதலில் கேமராவின் பின்னால் நடக்கும் விஷயங்களை அறிய தூண்டிய படம் இது. இந்த படத்தை பற்றி முதலில் என் அம்மா தான் எனக்கு பல விஷயம் சொல்லியிருந்தார். இதில் கமல் நடிப்பு அழகாய் இருக்கும், ஸ்ரீதேவி நன்றாய் நடித்திருப்பார், கண்ணதாசன் கடைசியாய் பாட்டு எழுதியிருப்பார் என்று பல விஷயங்கள் சொன்னார். ஆனால் அப்போது வீட்டில் வீடியோ ப்ளேயர் எல்லாம் இல்லை, அதனால் இந்த படத்தைப் பற்றி கேள்விப்பட்டு வெகு நாள் வரை பார்க்க சந்தர்ப்பம் கிடைக்காமல் இருந்தேன். அப்போழுதெல்லாம் டிடி தான் ஒரே சேனல், டிடியில் நல்ல படங்கள் பார்க்க வேண்டுமானால் ஞாயிறு கிழமை வரை காத்திருக்க வேண்டும். ஞாயிறு கிழமைகளில் மதியம், காது கேளாதவர் செய்தி முடிந்தபிறகு 1:00 மணி அளவில் தேசிய விருது வாங்கிய படங்கள் போடுவர். அடிக்கடி வங்க மொழி படங்கள், மலையாள மொழி படங்கள் வரும். எப்போதாவது தமிழ் படங்கள் வரும். பலகாலம் இது டிடியின் சதி என்று நினைத்திருந்தேன், பிறகு தான் தெரிந்தது தொன்னூறுகள் வரை, தேசிய விருதுகள் வாங்கிய தமிழ்ப் படங்கள் மிகக் குறைவு என்று. எனினும் ஞாயிற்று கிழமைகளில் பல நல்ல படங்களை பார்த்தேன். அத்திப்பூத்தாற் போல சில சமயம், வெள்ளி கிழமை நடுராத்திரி டிடியில் சில படங்களை திரையிடுவர். ஒரு சமயம் அப்படி வெள்ளி கிழமை இரவு மூன்றாம் பிறை காட்ட போகிறார்கள் என்று செய்தி கேட்டு. நான் மட்டும் ராத்திரி 12 மணிவரை விழித்திருந்து, கடைசி இந்தி செய்தி முடிந்து, அந்த படத்தை பார்த்தேன். முதன் முதலாய் ஒரு தமிழ் படத்தை பார்த்து நான் பிரமித்தது இந்த படத்தை தான். ஒளிப்பதிவில் ஒரு புதிய பரிணாமத்தை காட்டியிருப்பார் பாலுமகேந்திரா. கதை, திரைக்கதை, இசை, பின்னனி இசை, நடிப்பு என்று எல்லா விதத்திலும் அசத்தியிருப்பார். 'பொன்மேனி உருகுதே..' தான் படத்தின் திருஷ்டி பரிகாரம். பாடல்களில் நடிகர்கள் வாயசைக்காமல் வெறும் மாண்டேஜ் ஷாட்களில் கச்சிதமாக காட்டியது இந்த படத்தில் தான் என நினைக்கிறேன். இந்த படத்தில் பாடல் என்றால் பொதுவாக எல்லோருடைய ·பேவரைட் கண்ணே கலைமானே பாடலாக தான் இருக்கும். எனக்கும் இதுதான் பிடித்த பாடல், ஆனால் படத்தோடு பார்க்கும் போது நான் மிகவும் ரசித்தது 'பூங்காற்று புதிதானது..' பாடலை தான். பல்லவியில் ஒரு வெஸ்டர்ன் ஸ்டைலில் ஆரம்பித்து, சரணத்தில் ஹிந்துஸ்தானியில் குழைத்திருப்பார் இளையராஜா. இந்த பாடலின் நடுவில், ஸ்ரீதேவியின் பாவாடை நுனி ஊட்டி ரயில் தண்டவாளத்தில் மாட்ட, எதிரே ரயில் நெருங்கி வர அப்போது ஒரு இசை போட்டிருப்பார் ராஜா, எனக்கு ரொம்ப நாளாய் ஒரு சந்தேகம், முன்னேயே அப்படி ஒரு காட்சியை யோசித்து பாலுமகேந்திரா கேட்டிருப்பாரோ, அல்லது அப்படி ஒரு ஷாட் எடுத்து அதை அழகாய் அந்த பாடலில் பொருத்தியிருப்பாரோ. மிக அழகான ஒரு காட்சி அது.
Friday, September 01, 2006
வேட்டையாடு விளையாடு - விமர்சனம்
இது கமல் படமா, கௌதம் படமா? இது தான் எனக்கு தோன்றிய முதல் கேள்வி. கமல் ரொம்ப underplay செய்திருக்கிறார். ஆனாலும் அவருக்கு ஒரு ஜேம்ஸ் பாண்ட் பட ஸ்டைலில் intro song வைத்து அசத்தியிருக்கிறார் கெளதம். ஆங்கில பட ஸ்டைலில் serial killing investigation என்று தொடங்குகிற படம் பாதிக்கு மேல் காக்க காக்க பார்ட் டூ போல் போகிறது. ஆனாலும் உன்மையில் கௌதம் திறமையானவர் தான். film making படு வித்தியாசமாய் இருக்கிறது. ஒளிப்பதிவு ரவிவர்மனும், எடிட்டிங் ஆண்டனியும் படத்தின் பாதி பலம். அதிலும் ஆண்டனி அட்டகாசமாய் எடிட்டிங் செய்திருக்கிறார். காக்க காக்கவும், கஜினியும் இவரின் முந்தைய படங்கள். தலைவர் தான் நம் தலைவர் சிவாஜி படத்திற்கும் எடிட்டர். பட்டையை கிளப்ப போவது உறுதி. கௌதம் வருங்காலத்தில் சினிமா டைரக்டராய் சோபிக்க முடியாவிட்டாலும், song album video டைரக்டராக நல்ல எதிர்காலம் உள்ளது. அருமையான picuturisation, அதிலும் 'நெருப்பே' பாடல் மை ·பேவரைட். படத்தின் ஒரே மைனஸ் பாய்ண்ட், கமல் ஜோதிகாவின் romance sceneகள். அதிலும் காக்க காக்க மாதிரியே வசனங்கள் இருக்கிறது. இளமையான சூர்யாவிற்கும் ஜோதிகாவிற்கும் அது பொருந்தியது, ஆனால் அங்கிள் கமலுக்கு அது பொருந்தவில்லை.
Wednesday, August 02, 2006
படித்ததில் ரசித்தது
சமீபத்தில் ரசித்த பாடல். மொழி என்னும் படத்திற்காக கவியரசு வைரமுத்து எழுதிய பாடல். கவிஞனுக்கு கற்பனை தான் களஞ்சியம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் கவியரசு.
காற்றின் மொழி
ஒலியா, இசையா?
பூவின் மொழி
நிறமா, மணமா?
கடலின் மொழி
அலையா, நுரையா?
காதல் மொழி
விழியா, இதழா?
இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்
மனிதரின் மொழியே தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை.
காற்று வீசும்போது
திசைகள் கிடையாது
காதல் பேசும்போது
மொழிகள் கிடையாது
பேசும் வார்த்தை போல
மவுனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை
கடவுள் அறியாது
உலவித் திரியும் காற்றுக்கு
உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம்
சப்தக் கூட்டில் அடங்காது
வானம் பேசும் பேச்சு
துளியாய் வெளியாகும்!
வானவில்லின் பேச்சு
நிறமாய் வெளியாகும்!
உண்மை ஊமையானால்
கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசை தூங்கும் ஜாமத்தில்
உச்சி மீன்கள் மொழியாகும்
ஆசை தூங்கும் இதயத்தில்
அசைவு கூட மொழியாகும்
இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!
காற்றின் மொழி
ஒலியா, இசையா?
பூவின் மொழி
நிறமா, மணமா?
கடலின் மொழி
அலையா, நுரையா?
காதல் மொழி
விழியா, இதழா?
இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்
மனிதரின் மொழியே தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை.
காற்று வீசும்போது
திசைகள் கிடையாது
காதல் பேசும்போது
மொழிகள் கிடையாது
பேசும் வார்த்தை போல
மவுனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை
கடவுள் அறியாது
உலவித் திரியும் காற்றுக்கு
உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம்
சப்தக் கூட்டில் அடங்காது
வானம் பேசும் பேச்சு
துளியாய் வெளியாகும்!
வானவில்லின் பேச்சு
நிறமாய் வெளியாகும்!
உண்மை ஊமையானால்
கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசை தூங்கும் ஜாமத்தில்
உச்சி மீன்கள் மொழியாகும்
ஆசை தூங்கும் இதயத்தில்
அசைவு கூட மொழியாகும்
இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!
Thursday, July 20, 2006
பொன்னியின் செல்வன்
"பொன்னியின் செல்வன்... பொன்னியின் செல்வன்.. படித்துவிட்டீர்களா பொன்னியின் செல்வன்..பொன்னியின் செல்வன் படிக்கவில்லையா! நீங்கள் தமிழ் வாசகராக இருப்பதற்கே லாயக்கில்லாதவர்கள்" இப்படி தான் எல்லாரும் பொன்னியின் செல்வனை பற்றி சிலாகிக்கிறார்கள். கண்டிப்பாய் அது சிறந்த வரலாற்று புனிதங்களில் ஒன்று. அதை மறுப்புதற்கில்லை, ஆனால் அது மட்டும் தான் தமிழில் வந்த வரலாற்று நாவல்களிலே சிறந்தது என்று சொல்வது தான் கொஞ்சம் மிகையாக படுகிறது.
எனக்கு பொன்னியின் செல்வனை பற்றி முதலில் சொன்னது என் அம்மா தான். ஆனால் சிறு வயதில் அதை படிப்பதற்கு தான் வழியில்லாமல் இருந்தது. அப்பாவிற்கு நாங்கள் சிறுவயதில் தமிழ் புத்தகங்கள் படிப்பது அவ்வளவாய் பிடிக்காது. ஆங்கில அறிவை வளர்க்க வேண்டுமென்று வீட்டில் தினமும் இந்தியன் எக்ஸ்பிரஸ், மாதம் ஒரு முறை
ரீடர்ஸ் டைஜஸ்ட் இது போக அலமாரியெல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் GK புத்தகங்கள் தான். வீட்டிற்கு பக்கத்தில் ஒரு lending library இருந்தது, மாதம் பத்து ருபாயோ இருபது ரூபாயோ தான், ஆனால் நான் எவ்வளவு கெஞ்சி கேட்டும் அம்மா அங்கு சேர பணம் கொடுக்கவில்லை. ஒருவழியாய் நான் வேலைக்கு போய் சம்பாதிக்க ஆரம்பித்ததும் அதே லைப்ரரியில் மெம்பராய் சேர்ந்து பொன்னியின் செல்வன் மட்டும் எடுத்து படித்தேன். ஒருவேளை பொன்னியின் செல்வன் நான் படித்த முதல் வரலாறு நாவலாக இருந்தால் எனக்கு ரொம்ப பிடித்திருக்குமோ என்னவோ, நான் முதலில் படித்தது சாண்டில்யனின் கடல்புறா. எப்பவோ அப்பாவிடம் கடல்புறா மூன்று பாகங்கள் கிடைக்க, அதை வீட்டிற்கு எடுத்து வந்தார். அப்போது எனக்கு 8ஆம் வகுப்பு காலாண்டு பரிட்சை விடுமுறை, வெளியே எங்கும் ஊர் சுற்றாமல் ஒரு பத்து பதினைந்து நாளில் மொத்த கதையையும் படித்து முடித்தேன், மொத்தம் 5400 மேல் பக்கங்கள். கடல்புறாவும் பொன்னியின் செல்வனை போலவே சோழர் காலத்தில் நடக்கும் கதை, ராஜேந்திர சோழன் அரியனையில் அமரும் சமயம் நடக்கும் கதை. கதை முழுவதும் சோழர்களின் கடல் கடந்த ராஜ்ஜியங்கள், கடல் போர்கள் பற்றி இருக்கும். வந்தியத்தேவனை போல இதில் இளையபல்லவன். ஷங்கர் படம் போல சாண்டில்யனின் வரிகள் எல்லாம் விறுவிறுப்பாய் இருக்கும், கடலின் பிரம்மாண்டத்தை நம் மனக்கண்ணில் ஒட விடுவார். கடல், மரக்களம், சீனர்கள், அரேபியர்கள் என்று ஒவ்வொன்றும் வித்தியாசமாய் சொல்லியிருப்பார். என்ன ஒன்றே ஒன்று, கதாநாயகி மட்டும் கதைக்குள் வந்தாள் என்றால் நாம் தாராளமாக ஒரு இரண்டு மூன்று பக்கம் திருப்பி கதையை தொடரலாம், அவ்வளவு விரிவாய் கதாநாயகிகளை விவரித்திருப்பார்.
பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் ஒன்றுமே வெற்றியடையவில்லை. எம்ஜிஆர் பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்க திரைக்கதை எல்லாம் எழுத சொன்னாராம். வந்தியத்தேவனையும், அருள்மொழிவர்மரையும் இருவேடமேற்று நடிக்க என்னியிருந்தாராம், எங்கயோ படித்த ஞாபகம். பிற்காலத்தில் கமல் பொன்னியின் செல்வனை எடுக்க திட்டமிட்டு சுஜாதாவுடன் சேர்ந்து திரைக்கதை எழுதலாம் என்று உட்கார பிறகு எப்படியோ மருதநாயகத்திற்கு தாவிவிட்டார். அதன் பிறகு பொன்னியின் செல்வனை எடுத்தே தீர்வது என்று மணிரத்னம் தன் பென்சிலால் முழு திரைக்கதையும் எழுதி முடிக்க அதற்குள் கல்கியின் படைப்புகள் நாட்டுடைமையாக்கி விட்டனர். இரு கோஷ்டிகள் அதை டிவி தொடராக எடுப்பது என்று கிளம்ப, மணிரத்னம் தன் முயற்சியை கைவிட்டார். அந்த டிவி தொடர் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.
ஒருவேளை பொன்னியின் செல்வன் சினிமாவாக வந்தால் இன்றைய தேதியில் அதன் perfect casting என்னவாக இருக்கும்? என்னை பொருத்தவரை வந்தியத்தேவனாக சூர்யா, அருள்மொழிவர்மனாக விக்ரம், நந்தினியாக அசின் அல்லது சிம்ரன் (ஒல்லியாக இருக்கும் பட்சத்தில்), குந்தவைக்கு perfect fit செளந்தர்யா ஆனால் அவர் இல்லாதலால் பத்மப்ரியா, சுந்தர சோழராக சிவக்குமார், மணிமேகலையாக த்ரிஷா, பெரியபழுவேட்டரையராக பெரியகருப்புத்தேவர் (அதான் விருமாண்டியில் பூசாரி), சின்ன பழுவேட்டரையராக வினுச்சக்ரவர்த்தி, ஆழ்வார்க்கடியனாக வெண்ணிறாடை மூர்த்தி (என் நன்பன் ராஜ்குமாருக்கு ஆழ்வார்க்கடியனுக்கு செந்தில் தான் மிகப்பொருத்தம் என்பான், அது ஒரு வைனவ கேரக்டராக இருப்பதால் எனக்கென்னவோ நம்ம மூர்த்தி தான் சரியாய் இருப்பார் என்று படுகிறது, provided அவர் கனைக்காமல் இருந்தால்) இவர்கள் மிக முக்கியமான பாத்திரத்துக்கு சரியாய் பொருந்துவார்கள். சரி அப்ப கடல் புறாவிற்கு? ம்ம்ம்..கடல் புறா பிரும்மாண்டத்திற்கு படம் எடுக்க நம் தமிழில் பட்ஜெட் இல்லை, மனது வைத்தால் பீட்டர் ஜாக்ஸன் எடுக்கலாம், அவர் எங்க இனிமே தமிழ் படிச்சு, புரிஞ்சி... அதெல்லாம் நடக்காத காரியம்.
எனக்கு பொன்னியின் செல்வனை பற்றி முதலில் சொன்னது என் அம்மா தான். ஆனால் சிறு வயதில் அதை படிப்பதற்கு தான் வழியில்லாமல் இருந்தது. அப்பாவிற்கு நாங்கள் சிறுவயதில் தமிழ் புத்தகங்கள் படிப்பது அவ்வளவாய் பிடிக்காது. ஆங்கில அறிவை வளர்க்க வேண்டுமென்று வீட்டில் தினமும் இந்தியன் எக்ஸ்பிரஸ், மாதம் ஒரு முறை
ரீடர்ஸ் டைஜஸ்ட் இது போக அலமாரியெல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் GK புத்தகங்கள் தான். வீட்டிற்கு பக்கத்தில் ஒரு lending library இருந்தது, மாதம் பத்து ருபாயோ இருபது ரூபாயோ தான், ஆனால் நான் எவ்வளவு கெஞ்சி கேட்டும் அம்மா அங்கு சேர பணம் கொடுக்கவில்லை. ஒருவழியாய் நான் வேலைக்கு போய் சம்பாதிக்க ஆரம்பித்ததும் அதே லைப்ரரியில் மெம்பராய் சேர்ந்து பொன்னியின் செல்வன் மட்டும் எடுத்து படித்தேன். ஒருவேளை பொன்னியின் செல்வன் நான் படித்த முதல் வரலாறு நாவலாக இருந்தால் எனக்கு ரொம்ப பிடித்திருக்குமோ என்னவோ, நான் முதலில் படித்தது சாண்டில்யனின் கடல்புறா. எப்பவோ அப்பாவிடம் கடல்புறா மூன்று பாகங்கள் கிடைக்க, அதை வீட்டிற்கு எடுத்து வந்தார். அப்போது எனக்கு 8ஆம் வகுப்பு காலாண்டு பரிட்சை விடுமுறை, வெளியே எங்கும் ஊர் சுற்றாமல் ஒரு பத்து பதினைந்து நாளில் மொத்த கதையையும் படித்து முடித்தேன், மொத்தம் 5400 மேல் பக்கங்கள். கடல்புறாவும் பொன்னியின் செல்வனை போலவே சோழர் காலத்தில் நடக்கும் கதை, ராஜேந்திர சோழன் அரியனையில் அமரும் சமயம் நடக்கும் கதை. கதை முழுவதும் சோழர்களின் கடல் கடந்த ராஜ்ஜியங்கள், கடல் போர்கள் பற்றி இருக்கும். வந்தியத்தேவனை போல இதில் இளையபல்லவன். ஷங்கர் படம் போல சாண்டில்யனின் வரிகள் எல்லாம் விறுவிறுப்பாய் இருக்கும், கடலின் பிரம்மாண்டத்தை நம் மனக்கண்ணில் ஒட விடுவார். கடல், மரக்களம், சீனர்கள், அரேபியர்கள் என்று ஒவ்வொன்றும் வித்தியாசமாய் சொல்லியிருப்பார். என்ன ஒன்றே ஒன்று, கதாநாயகி மட்டும் கதைக்குள் வந்தாள் என்றால் நாம் தாராளமாக ஒரு இரண்டு மூன்று பக்கம் திருப்பி கதையை தொடரலாம், அவ்வளவு விரிவாய் கதாநாயகிகளை விவரித்திருப்பார்.
பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் ஒன்றுமே வெற்றியடையவில்லை. எம்ஜிஆர் பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்க திரைக்கதை எல்லாம் எழுத சொன்னாராம். வந்தியத்தேவனையும், அருள்மொழிவர்மரையும் இருவேடமேற்று நடிக்க என்னியிருந்தாராம், எங்கயோ படித்த ஞாபகம். பிற்காலத்தில் கமல் பொன்னியின் செல்வனை எடுக்க திட்டமிட்டு சுஜாதாவுடன் சேர்ந்து திரைக்கதை எழுதலாம் என்று உட்கார பிறகு எப்படியோ மருதநாயகத்திற்கு தாவிவிட்டார். அதன் பிறகு பொன்னியின் செல்வனை எடுத்தே தீர்வது என்று மணிரத்னம் தன் பென்சிலால் முழு திரைக்கதையும் எழுதி முடிக்க அதற்குள் கல்கியின் படைப்புகள் நாட்டுடைமையாக்கி விட்டனர். இரு கோஷ்டிகள் அதை டிவி தொடராக எடுப்பது என்று கிளம்ப, மணிரத்னம் தன் முயற்சியை கைவிட்டார். அந்த டிவி தொடர் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.
ஒருவேளை பொன்னியின் செல்வன் சினிமாவாக வந்தால் இன்றைய தேதியில் அதன் perfect casting என்னவாக இருக்கும்? என்னை பொருத்தவரை வந்தியத்தேவனாக சூர்யா, அருள்மொழிவர்மனாக விக்ரம், நந்தினியாக அசின் அல்லது சிம்ரன் (ஒல்லியாக இருக்கும் பட்சத்தில்), குந்தவைக்கு perfect fit செளந்தர்யா ஆனால் அவர் இல்லாதலால் பத்மப்ரியா, சுந்தர சோழராக சிவக்குமார், மணிமேகலையாக த்ரிஷா, பெரியபழுவேட்டரையராக பெரியகருப்புத்தேவர் (அதான் விருமாண்டியில் பூசாரி), சின்ன பழுவேட்டரையராக வினுச்சக்ரவர்த்தி, ஆழ்வார்க்கடியனாக வெண்ணிறாடை மூர்த்தி (என் நன்பன் ராஜ்குமாருக்கு ஆழ்வார்க்கடியனுக்கு செந்தில் தான் மிகப்பொருத்தம் என்பான், அது ஒரு வைனவ கேரக்டராக இருப்பதால் எனக்கென்னவோ நம்ம மூர்த்தி தான் சரியாய் இருப்பார் என்று படுகிறது, provided அவர் கனைக்காமல் இருந்தால்) இவர்கள் மிக முக்கியமான பாத்திரத்துக்கு சரியாய் பொருந்துவார்கள். சரி அப்ப கடல் புறாவிற்கு? ம்ம்ம்..கடல் புறா பிரும்மாண்டத்திற்கு படம் எடுக்க நம் தமிழில் பட்ஜெட் இல்லை, மனது வைத்தால் பீட்டர் ஜாக்ஸன் எடுக்கலாம், அவர் எங்க இனிமே தமிழ் படிச்சு, புரிஞ்சி... அதெல்லாம் நடக்காத காரியம்.
Monday, July 17, 2006
சீரியல்...ஒரு serious பிரச்சினை
இந்த முறை அம்மா அப்பா என்கூட தங்கி இருக்க, அவர்களுக்கு போரடிக்காமல் இருக்க சன் டிவியையும், கே டிவியையும் இரண்டு மாதத்திற்கு இனையத்தில் subscribe செய்தேன். தமிழ் டிவியில் வரும் மெகாத் தொடர்களின் கொடுமைகளை பல வலைப்பூக்களில் படித்தாலும், அதன் தாக்கத்தை இந்த இரண்டு மாதங்களில்தான் நேரே கண்டேன். சொல்லி வைத்தாற்போல் எல்லா தொடர்களிலும் ஒரே கதை தான், இரண்டு பிரதான பெண் பாத்திரங்கள், ஒருத்தி குடும்பத்துக்காக போராடும், எப்போதுமே லிட்டர் கணக்காக அழுது வடிக்கும் ஹீரோயின், இன்னொருத்தி இவளின் அத்தனை முயற்சியையும் முறியடிப்பதற்காகவே பிறந்த மாமியாரோ, நாத்தனாரோ யாரோ ஒரு இன்னொரு பெண். இவர்களை சுற்றியே நகரும் கதை. இந்த சீரியல்களில் எல்லாம் ஆண்கள் பெரும்பாலும் atmosphere ஆர்ட்டிஸ்டுகளாகவே வந்து போவார்கள். மனைவியை சுற்றி கதை நகர்ந்தால் ஒரு புருஷன் கேரக்டர், ஒரு அப்பா கேரக்டர் (முக்கால்வாசி ஹீரோயினுக்கு அப்பா கிடையாது, விதவை அம்மா ஒரு கூடுதல் சென்டிமென்ட்), ஒரு மாமனார் கேரக்டர் என்று சொற்பமானவர்களே வசனம் பேசுகின்றனர். ஒரு நாள் ஒரு சீரியல் பார்த்துக்கொண்டிருந்தேன், நடுவில் ஒரு போன்கால் வந்ததால் அதை பேசிவிட்டு சிறுது நேரத்தில் வந்து திரும்பவும் சீரியலை பார்த்தேன், திடீரென்று கதாநாயகி வில்லியிடம் பாசமழை பொழிகிறாள், என்னடா இது குழப்பமாய் இருக்குதென்று அம்மாவிடம் கேட்டால், நான் போன் பேசிய நேரத்தில் பழைய சீரியல் முடிந்து புது சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறதாம். அப்படி ஒரு casting confusion, எல்லாம் அதே முகங்கள். ஒரு நிகழ்ச்சியில் கார்ட்டூனிஸ்ட் மதன் "சேனலை மாத்தி பார்த்தாலும் கதையில ஒரு continuity தெரியுது" என்று கிண்டலடித்தார். உன்மையிலேயே இந்த சீரியல்கள் எல்லாம் நடுத்தர வர்க்கத்தின் பெண்களின் மூளையை மழுங்கடித்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை.
சரி அப்படியானால் நம் தொலைக்காட்சியில் நல்ல தொடரோ, மெகா சீரியலோ வந்ததே இல்லையா? என்று கேட்டால், நிச்சயமாய் உண்டு. தமிழ் டிவி சீரியலை தொடங்கி வைத்த டிடிக்கே அந்த பெருமை போய்ச்சேரும். அப்போது டிடியில் ஒளிப்பரப்பாகும் தொடருக்கு 13 வாரங்கள் தான் ஒதுக்குவார்கள். அதுவும் அரைமணி நேரமே, ஆக மொத்தம் 6.5 மணி நேரம். அந்த வகையில் நான் பார்த்து ரசித்த முதல் சீரியல், இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தரின் இரயில் ஸ்நேகம். நிழல்கள் ரவி நடித்த சீரியல், அருமையான காதல் கதை. அதே காலகட்டத்தில், ஞாயிறு காலைகளில் பல நல்ல தொடர்கள் இடம்பெறும். சோ நிறைய தொடர்கள் செய்திருக்கிறார். அவர் சினிமாவை sattire செய்த சரஸ்வதியின் செல்வன் என்ற தொடர் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. இவற்றோடு வந்த இன்னும் சில தொடர்கள், சா.கந்தசாமியின் தொலைந்து போனவர்கள், ஜாவர் சீதாராமனின் உடல் பொருள் ஆனந்தி, சுஜாதாவின் கொலையுதிர் காலம், பாலகுமாரனின் தாயுமானவன் என்று பல நல்ல இலக்கிய படைப்பை டிவி தொடராக எடுத்தார்கள். என்னைக்கேட்டால் டிவியில் ஒரு கதையை சொல்ல 13 வாரம் போதுமானதே. டிடிக்கு பிறகு தனியார் தொலைக்காட்சிகள் வந்த ஆரம்பத்திலும், பல நல்ல சீரியல்கள் வந்து கொண்டு தான் இருந்தன. அதற்கு பிள்ளையார் சுழி போட்டவரும் பாலசந்தரே. சன் டிவியில் வந்த கையளவு மனசு ஒரு மேகா சீரியல் தான். ஆனால் அழகான ஒரு கதையை அலுக்காமல் சொல்லியிருப்பார். அதற்கு பிறகு வந்த கொஞ்ச காலத்தை நான் டிவி தொடர்களின் golden time என்பேன். ஏனென்றால் அப்போது தான் மர்மதேசம் வந்தது. மின்பிம்பங்களின் மர்மதேசம் டிவி வரலாற்றிலேயே ஒரு புது அத்தியாயத்தை ஏற்படுத்தியது. டெக்னிக்கலாக டிவியில் பல விஷயங்கள் புதிதாக இருந்தது மர்மதேசத்தில் தான். அதிலும் மர்மதேசம்: விடாது கருப்பு தான் என்னுடைய ·பேவரைட். ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, பின்னனி இசை, டைரக்ஷன் என்று அசத்தியிருப்பார்கள். அதனுடைய மூன்றாவது பாகம் சொர்ன ரேகை என்று ராஜ் டிவியில் வந்தது, இது மட்டும் 13 வார ·பார்முலாவில் எடுக்கப்பட்டது. சித்தியை இழுத்த..sorry எடுத்த சி.ஜே.பாஸ்கர் தான் இயக்கி இருப்பார். இதுவும் விருவிருப்பாய் இருக்கும். இதன் கதாசிரியர் இந்திரா சவுந்திரராஜன் உன்மையிலே ஒரு மன்டை பார்ட்டி. அமேரிக்காவில் இருந்தாரென்றால் மனோஜ் நைட் ஷ்யாமளனை எல்லாம் எடுத்து சாப்பிட்டு எங்கயோ போயிருப்பார். மர்மதேசத்தின் நாலாவது பாகத்தையும் (பெயர் மறந்துவிட்டது) கொஞ்ச நாள் எடுத்து ஒளிப்பரப்பினார்கள், ஏனோ நடுவில் நின்றுவிட்டது. இதே பாலச்சந்தர் அடுத்து ஜன்னல் என்று ஒரு பல பாககங்கள் கொண்ட மேகா சீரியல் கொடுத்தார். அதுவும் நன்றாகவே இருந்தது. ஒரு பாகத்தில் spbயும் லக்ஷ்மியும் வயதானவரகளாக நடித்திருப்பார்கள். ப்ரேமி என்று ஒரு மெகாவில்தான் கொஞ்சம் சொதப்பியிருப்பார். என்னைக் கேட்டால் டிவி சீரியலுக்கு சாபக்கேடு சித்தியின் ரூபத்தில் தான் வந்தது என்பேன். அதன் பிறகு இருக்கின்ற நிலை தான் நான் முதல் பத்தியில் சொன்னது.
சரி அப்படியானால் நம் தொலைக்காட்சியில் நல்ல தொடரோ, மெகா சீரியலோ வந்ததே இல்லையா? என்று கேட்டால், நிச்சயமாய் உண்டு. தமிழ் டிவி சீரியலை தொடங்கி வைத்த டிடிக்கே அந்த பெருமை போய்ச்சேரும். அப்போது டிடியில் ஒளிப்பரப்பாகும் தொடருக்கு 13 வாரங்கள் தான் ஒதுக்குவார்கள். அதுவும் அரைமணி நேரமே, ஆக மொத்தம் 6.5 மணி நேரம். அந்த வகையில் நான் பார்த்து ரசித்த முதல் சீரியல், இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தரின் இரயில் ஸ்நேகம். நிழல்கள் ரவி நடித்த சீரியல், அருமையான காதல் கதை. அதே காலகட்டத்தில், ஞாயிறு காலைகளில் பல நல்ல தொடர்கள் இடம்பெறும். சோ நிறைய தொடர்கள் செய்திருக்கிறார். அவர் சினிமாவை sattire செய்த சரஸ்வதியின் செல்வன் என்ற தொடர் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. இவற்றோடு வந்த இன்னும் சில தொடர்கள், சா.கந்தசாமியின் தொலைந்து போனவர்கள், ஜாவர் சீதாராமனின் உடல் பொருள் ஆனந்தி, சுஜாதாவின் கொலையுதிர் காலம், பாலகுமாரனின் தாயுமானவன் என்று பல நல்ல இலக்கிய படைப்பை டிவி தொடராக எடுத்தார்கள். என்னைக்கேட்டால் டிவியில் ஒரு கதையை சொல்ல 13 வாரம் போதுமானதே. டிடிக்கு பிறகு தனியார் தொலைக்காட்சிகள் வந்த ஆரம்பத்திலும், பல நல்ல சீரியல்கள் வந்து கொண்டு தான் இருந்தன. அதற்கு பிள்ளையார் சுழி போட்டவரும் பாலசந்தரே. சன் டிவியில் வந்த கையளவு மனசு ஒரு மேகா சீரியல் தான். ஆனால் அழகான ஒரு கதையை அலுக்காமல் சொல்லியிருப்பார். அதற்கு பிறகு வந்த கொஞ்ச காலத்தை நான் டிவி தொடர்களின் golden time என்பேன். ஏனென்றால் அப்போது தான் மர்மதேசம் வந்தது. மின்பிம்பங்களின் மர்மதேசம் டிவி வரலாற்றிலேயே ஒரு புது அத்தியாயத்தை ஏற்படுத்தியது. டெக்னிக்கலாக டிவியில் பல விஷயங்கள் புதிதாக இருந்தது மர்மதேசத்தில் தான். அதிலும் மர்மதேசம்: விடாது கருப்பு தான் என்னுடைய ·பேவரைட். ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, பின்னனி இசை, டைரக்ஷன் என்று அசத்தியிருப்பார்கள். அதனுடைய மூன்றாவது பாகம் சொர்ன ரேகை என்று ராஜ் டிவியில் வந்தது, இது மட்டும் 13 வார ·பார்முலாவில் எடுக்கப்பட்டது. சித்தியை இழுத்த..sorry எடுத்த சி.ஜே.பாஸ்கர் தான் இயக்கி இருப்பார். இதுவும் விருவிருப்பாய் இருக்கும். இதன் கதாசிரியர் இந்திரா சவுந்திரராஜன் உன்மையிலே ஒரு மன்டை பார்ட்டி. அமேரிக்காவில் இருந்தாரென்றால் மனோஜ் நைட் ஷ்யாமளனை எல்லாம் எடுத்து சாப்பிட்டு எங்கயோ போயிருப்பார். மர்மதேசத்தின் நாலாவது பாகத்தையும் (பெயர் மறந்துவிட்டது) கொஞ்ச நாள் எடுத்து ஒளிப்பரப்பினார்கள், ஏனோ நடுவில் நின்றுவிட்டது. இதே பாலச்சந்தர் அடுத்து ஜன்னல் என்று ஒரு பல பாககங்கள் கொண்ட மேகா சீரியல் கொடுத்தார். அதுவும் நன்றாகவே இருந்தது. ஒரு பாகத்தில் spbயும் லக்ஷ்மியும் வயதானவரகளாக நடித்திருப்பார்கள். ப்ரேமி என்று ஒரு மெகாவில்தான் கொஞ்சம் சொதப்பியிருப்பார். என்னைக் கேட்டால் டிவி சீரியலுக்கு சாபக்கேடு சித்தியின் ரூபத்தில் தான் வந்தது என்பேன். அதன் பிறகு இருக்கின்ற நிலை தான் நான் முதல் பத்தியில் சொன்னது.
Friday, July 14, 2006
சந்தோஷம் வாழ்க்கையின் வரம்
இரண்டு மாதமாய் வலைப்பதிவு வாசிக்கவும், பதிப்பிக்கவும் நேரமில்லை. காரணம் இந்தியாவிலிருந்து என் பெற்றோர்கள் வந்திருந்தார்கள். இரு மாதமாய் அவர்களுடன் பேசவும், சிரிக்கவும், இந்த ஊரை சுற்று கான்பிக்கவுமே சரியாய் இருந்தது. 'இரண்டு மாதம் போனதே தெரியவில்லை' என்று சொல்வது வழக்கமான clicheவாக இருந்தாலும் அதுதான் உன்மை. என் தாயுடன் இருந்தது அத்தனையும் சொர்க்க நேரங்கள். அவர்களை வழி அனுப்பிய பின் தான் நான் அதை உனர்ந்தேன். விருமாண்டியில் கமல் சொன்னது "சந்தோஷங்கிறது அத அனுபவிக்கும்போது மனுஷனுக்கு தெரியர்தில்ல" எவ்வளவு உன்னத வார்த்தைகள். இன்று தோழி ப்ரியாவின் blogல் happiness is secret of success என்று சொல்லியிருந்தார், அது எவ்வளவு தூரம் உன்மையென்று எனக்கு தெரியவில்லை, ஆனால் சந்தோஷம் தான் வாழ்க்கையின் ரகசியம், இது மட்டும் நிச்சயம்.
Sunday, April 16, 2006
படத்தொகுப்பு - Editing

இன்று lord of the rings: return of the king special extended edition படத்தை என் ரூம்மேட் பார்க்கவேண்டும் என்று சொல்ல ஹாலிவுட் வீடியோ சென்று dvd எடுத்து பார்த்தோம். அதில் the making of the film பார்த்தபோது பீட்டர் ஜாக்சன் சொன்ன ஒரு விஷயம் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. இந்த படத்தின் முதல் வெளிப்புற காட்சிகளை எடுக்க நியுசிலாந்து சென்றனர் படக்குழுவினர். அங்கு ஒரு காட்சியையும் எடுக்க முடியாதபடி நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. சரி உட்புற காட்சியை எடுக்கலாமென முடிவு செய்து அவர்கள் எடுத்த முதல் காட்சி return of the kingல் வரும், frodo, smeagol, sam மூவரும் மலையேறும் காட்சி. அது smeagol and sam சன்டைபோட, frodo அவர்களை தடுக்கும் காட்சி, அதிலும் அவர்கள் எடுத்தது sam and frodo சம்பந்தபட்ட காட்சியே. இது நடந்தது 1999ல், பிறகு மழை நின்று மற்ற காட்சிகளை பதிவு செய்து, முதல் இரண்டு பாகங்களை வெளியிட்டு 2003ல் அந்த காட்சியின் மிச்சம் இருந்த smeagol சம்பந்தபட்ட காட்சியை எடுத்தனர். இந்த காட்சியை திரையில் பார்க்கும்போது நமக்கு இதை எடுத்த கால வித்தியாசம் தெரியாதபடி closeup shots வைத்து எடிட் செய்திருப்பார்கள். இது எடிட்டிங் என்னும் நுட்பம் செய்யும் வித்தைக்கு ஒரு எடுத்துக்காட்டு. பல பேருக்கு எடிட்டிங் என்பது என்ன என்று சரியாக தெரியாது. பலசமயம் படம் மிகவும் நீளமாக இருந்தாலோ அல்லது மிகவும் அலுப்பு தட்டினாலும் நாம் எடிட்டரை குறை கூறுவோம். ஒரு படத்தின் நீளத்திற்கோ, தொடர்ச்சிக்கோ எடிட்டர் எந்த வகையிலும் பொறுப்பு கிடையாது. அது இயக்குநரை போய் சேர வேண்டிய பழி. முதன் முதலில் சினிமாவில் எடிட்டிங்கை அறிமுக படுத்தியது ரஷ்யர்கள் தான். ஒரு படத்தில் நீதிமன்ற காட்சி, குற்றவாளிக்கு எதிராக சாட்சி சொல்பவனை கானோம், நீதி மன்றத்தில் எல்லோரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள், நேரமாகிக்கொண்டே இருக்கிறது, மக்கள் கவலைகொள்ள ஆரம்பித்தனர், சாட்சி சொல்பவன் அடிப்பட்டு நீதி மன்றத்தை நோக்கி ஓடி வந்துக்கொண்டிருக்கிறான். இந்த காட்சியை எடிட்டிங் வரும்முன்னே நான் சொன்னவற்றையெல்லாம் ஒரு அட்டையில் எழுதி கான்பித்து, பிறகு நீதிமன்றத்தை கான்பித்து காட்சியாக்கி விடுவார்கள். ஆனால் இந்த படத்தில் நீதிமன்றத்தில் நீதிபதி எதிர்தரப்பு வக்கீலை பார்க்க கட், வக்கீல் பின்னே உட்கார்ந்திருக்கும் மக்களை பார்க்க கட், அதில் ஒருவர் கவலையாய் அங்கு மாட்டியிருக்கும் பெரிய கடிகாரத்தை பார்க்க கட், கதிகாரம் பெரிய முள் ஒரு இடம் நகர கட், சாட்சி அடிப்பட்டு ஓடி வந்துக்கொண்டிருக்கிறான் கட், சாட்சி நீதிமன்றத்தில் நுழைகிறான். இது தான் முதன் முதலில் எடிட் செய்து காட்டப்பட்ட காட்சியாகும். இதை செய்தவர்கள்தான் ரஷ்யர்கள். எடிட்டிங்கை இன்னும் புரியும்படி விளக்க வேண்டுமானால்: ஒரு பார்க்கில் இருவர் பேசிக்கொள்வது போல் காட்சி. இதற்கு குறைந்தது மூன்று ஷாட்கள் வைத்து எடுக்க வேண்டும், முதலாமவர் பேசும் காட்சி இரண்டாமவர் பார்வையில் கேமராவை வைத்து எடுக்க வேண்டும், இரண்டாமவர் பேசும் காட்சி முதலாமவர் பார்வையில் கேமராவை வைத்து எடுக்க வேண்டும். வழக்கமாக இதை இன்னொருவர் தோள் பின் கேமராவை வைத்து, கேட்பவரின் தலை பின்னெ சிறுது தெரிவது மாதிரியும், பேசுபவரின் முகம் முழுதும் தெரிவதுமாய் எடுப்பார்கள். பிறகு இருவரும் தெரிவது போல் ஒரு மீடியம் ஷாட் வைப்பார்கள். இதை ஷ¥ட் செய்து எடிட்டரிடம் கொடுப்பார்கள். எடிட்டர் ஒரு சம்பாஷனையில் இந்த மூன்று ஷாட்களையும் சேர்த்து எடிட் செய்து தருவார். இப்படி செய்யாமல் ஒரே மீடியம் ஷாட்டில் இருவரும் பேசுவது போல் கான்பித்தால் நாடகம் பார்ப்பது போல் இருக்கும்.
ஒரு காலத்தில் எடிட்டிங் டேபிளில் படச்சுருளை ஓட்டி அப்படியே கத்தரியை வைத்து எடிட் செய்வார்கள். இப்போது AVID, movie magic என்று பல மென்பொருளை உபயோகிக்கிறார்கள். இதில் படச்சுருளை டிஜிட்டலாக மாற்றி கனினியில் ஏற்றி, எடிட் செய்து திரும்பவும் படச்சுருளாக மாற்றுவார்கள். என் நன்பன் செந்தில் new york film academyல் film making course படித்தான். அவன் செய்த ஒரு ப்ராஜக்ட்டிற்காக எடிட் செய்தது தான் நான் முதன் முதலில் எடிட்டிங் செய்வதை நேரில் பார்த்த அனுபவம். சுமார் ஒரு நிமிடம் ஓட வேண்டிய காட்சியை நாங்கள் மூன்று மணி நேரம் உட்கார்ந்து எடிட் செய்தோம். LOTR: return of the king படம் இரண்டு மில்லியன் அடி படச்சுருள் கொண்டது, முதன் முதலில் நான்கரை மணி நேரம் ஓடும் படமாக எடிட் செய்தனர். பின்னர் அதை மூன்று மணி நேரமாக எடிட் செய்தனர். நான் பார்த்த extended edition இரண்டு டிஸ்க்குகள், நான்கு மணி நேரம் ஓடியது. நம்மூர் படங்களில் சமீபத்தில் வந்த படங்களில் எடிட்டிங் ஹாலிவுட்டிற்கு நிகராக இருக்கிறது. காக்க காக்க, கஜினி போன்ற படங்களில், தமிழ் சினிமாவின் அடுத்த அத்தியாத்திற்கு செல்லும் அறிகுறி தெரிகிறது.
Wednesday, March 29, 2006
தமிழ் சினிமாவின் மைல் கற்கள்
தமிழ் சினிமாவை பின்னோக்கி பார்த்தால், இதுவரை வந்த படங்களில் மைல் கற்களாக நான் மூன்று படங்களை சொல்வேன். இதை மைல் கற்கள் என்று ஏன் சொல்கிறேன் என்றால், இந்த படங்கள் தான் அவற்றுக்கு பின்னால் வந்த தமிழ் சினிமாக்கள் இப்படி தான் எடுக்கப்பட வேண்டும் என்று சில வரைமுறைகள் வகுக்க முன்னோடியாய் இருந்தது.

பராசக்தி: நடிகர் திலகம் அறிமுகமான படம் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ரகசியமே. இதற்கு முன் வந்த படங்கள் எல்லாம் பாடல்களால் நிரப்பப்பட்டு, நடிகர்கள் தேமே என்று கேமரா முன் வந்து உணர்ச்சியில்லாமல் நான்கு வரி வசனம் பேசிவிட்டு போவார்கள். உதாரணத்திற்கு ஹரிதாஸ், சாந்தா சக்குபாய் என்று பல படங்கள் சொல்லலாம். பராசக்தி இந்த இலக்கணத்தை உடைத்து, கலைஞரின் அனல் பறக்கும் வசனங்கள், சிவாஜியின் ஒப்பற்ற நடிப்பு என்று ஒரு புதிய பரிமானத்தை கொடுத்தது. இதற்கு பிறகு வந்த படங்கள் எல்லாம் பராசக்தியையே பின்பற்ற தொடங்கின. சிவாஜி அவருக்கு பின் வந்த நடிகர்களுக்கு ஒரு இலக்கனம் வகுத்தார்.

பதினாறு வயதினிலே: ஸ்டுடியோக்குள்ளேயே சுருண்டு கிடந்த தமிழ் சினிமாவை நூறு சதவிகிதம் வெளிப்புற படப்பிடிப்புக்கு இழுத்து வந்த படம். ஹீரோ வில்லன் இமேஜை உடைத்து எல்லா கதாபாத்திரங்களும் இயல்பாக கதையோடு ஒன்றி நடித்த படம். வசனமாக இல்லாமல் காட்சிகளாக சினிமாவில் விஷயங்கள் சொல்லலாம் என்று முதலில் சொன்ன படம். இந்த படத்திற்கு பிறகு தான் கோடம்பாக்கத்திலிருந்து கேமராக்கள் பல வெளியே சென்று, கிராமங்களில் படங்களை எடுத்தது. இயக்குனர் இமயம் பாலச்சந்தரே இந்த படத்தின் பாதிப்பால், கோடம்பாக்கத்திலிருந்தது வெளியே வந்து தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை என நல்ல படங்கள் கொடுத்தார். தமிழ் சினிமாவில் என்பதுகளில் எடுக்கப்பட்ட சினிமாவிற்கு ஒரு முன்னுதாரனமாக இந்த படம் அமைந்தது.

ரோஜா: தொழில்நுட்பத்தால் இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவை இந்தியா முழுதும் திரும்பி பார்க்க வைத்த பெருமை மணிரத்னத்திற்கும் ஏ.ஆர் ரஹ்மானுக்கே சேரும். முக்கியமாக ஒளிப்பதிவு, ஒலிப்பதிவில் இந்த படம் ஒரு மைல்கல்லாய் அமைந்தது. முதன் முதலில் பழைய அலங்கார் தியேட்டரில் இந்த படத்தை பார்த்தேன், எனக்கு நன்றாய் ஞாபகம் இருக்கு, 'ஒரு வெள்ளை மழை' பாடலில் அந்த இசையும், ஒளிப்பதிவும் நம்மை காஷ்மீருக்கே அழைத்து செல்லும். தொன்னூறிலிருந்து இன்று வரை எடுக்கப்பட்ட, எடுக்கபடுகிற படங்களுக்கு ரோஜா தான் trendsetter.

பராசக்தி: நடிகர் திலகம் அறிமுகமான படம் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ரகசியமே. இதற்கு முன் வந்த படங்கள் எல்லாம் பாடல்களால் நிரப்பப்பட்டு, நடிகர்கள் தேமே என்று கேமரா முன் வந்து உணர்ச்சியில்லாமல் நான்கு வரி வசனம் பேசிவிட்டு போவார்கள். உதாரணத்திற்கு ஹரிதாஸ், சாந்தா சக்குபாய் என்று பல படங்கள் சொல்லலாம். பராசக்தி இந்த இலக்கணத்தை உடைத்து, கலைஞரின் அனல் பறக்கும் வசனங்கள், சிவாஜியின் ஒப்பற்ற நடிப்பு என்று ஒரு புதிய பரிமானத்தை கொடுத்தது. இதற்கு பிறகு வந்த படங்கள் எல்லாம் பராசக்தியையே பின்பற்ற தொடங்கின. சிவாஜி அவருக்கு பின் வந்த நடிகர்களுக்கு ஒரு இலக்கனம் வகுத்தார்.

பதினாறு வயதினிலே: ஸ்டுடியோக்குள்ளேயே சுருண்டு கிடந்த தமிழ் சினிமாவை நூறு சதவிகிதம் வெளிப்புற படப்பிடிப்புக்கு இழுத்து வந்த படம். ஹீரோ வில்லன் இமேஜை உடைத்து எல்லா கதாபாத்திரங்களும் இயல்பாக கதையோடு ஒன்றி நடித்த படம். வசனமாக இல்லாமல் காட்சிகளாக சினிமாவில் விஷயங்கள் சொல்லலாம் என்று முதலில் சொன்ன படம். இந்த படத்திற்கு பிறகு தான் கோடம்பாக்கத்திலிருந்து கேமராக்கள் பல வெளியே சென்று, கிராமங்களில் படங்களை எடுத்தது. இயக்குனர் இமயம் பாலச்சந்தரே இந்த படத்தின் பாதிப்பால், கோடம்பாக்கத்திலிருந்தது வெளியே வந்து தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை என நல்ல படங்கள் கொடுத்தார். தமிழ் சினிமாவில் என்பதுகளில் எடுக்கப்பட்ட சினிமாவிற்கு ஒரு முன்னுதாரனமாக இந்த படம் அமைந்தது.

ரோஜா: தொழில்நுட்பத்தால் இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவை இந்தியா முழுதும் திரும்பி பார்க்க வைத்த பெருமை மணிரத்னத்திற்கும் ஏ.ஆர் ரஹ்மானுக்கே சேரும். முக்கியமாக ஒளிப்பதிவு, ஒலிப்பதிவில் இந்த படம் ஒரு மைல்கல்லாய் அமைந்தது. முதன் முதலில் பழைய அலங்கார் தியேட்டரில் இந்த படத்தை பார்த்தேன், எனக்கு நன்றாய் ஞாபகம் இருக்கு, 'ஒரு வெள்ளை மழை' பாடலில் அந்த இசையும், ஒளிப்பதிவும் நம்மை காஷ்மீருக்கே அழைத்து செல்லும். தொன்னூறிலிருந்து இன்று வரை எடுக்கப்பட்ட, எடுக்கபடுகிற படங்களுக்கு ரோஜா தான் trendsetter.
Tuesday, March 21, 2006
சில நேரங்கள் சில ஞாபகங்கள்
தேர்தல் நெருங்கும் நேரம், கட்சிக்கு கட்சி நடிகர்கள் சுற்றி நடக்கும் அரசியலை பார்த்தால் எப்போதோ ஆனந்த விகடனில் படித்த இரண்டு பேட்டிகள் ஞாபகத்திற்கு வருகின்றன.
1) தாதா சாகேப் விருது வாங்கிய அடூர் கோபாலகிர்ஷனன் பேட்டி:
கேள்வி: நடிகர்கள் அரசியலுக்கு வருவதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: சினிமாவில் பல கதாபாத்திரத்தில் நடிக்க தெரிந்த நடிகர்களுக்கு அரசியல்வாதியாகவும் நடிக்கத் தெரியும்.
2) மோகன்லால் பேட்டி:
கேள்வி: நீங்கள் ஏன் தமிழ்நாட்டு நடிகர்கள் போல் அரசியலில் இறங்கக் கூடாது?
பதில்: கேரள மக்கள் தங்கள் தலைவனை சினிமா கொட்டகையில் தேட மாட்டார்கள்.
இந்த ஞானம் நம் மக்களுக்கு எப்போது வரும்?
1) தாதா சாகேப் விருது வாங்கிய அடூர் கோபாலகிர்ஷனன் பேட்டி:
கேள்வி: நடிகர்கள் அரசியலுக்கு வருவதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: சினிமாவில் பல கதாபாத்திரத்தில் நடிக்க தெரிந்த நடிகர்களுக்கு அரசியல்வாதியாகவும் நடிக்கத் தெரியும்.
2) மோகன்லால் பேட்டி:
கேள்வி: நீங்கள் ஏன் தமிழ்நாட்டு நடிகர்கள் போல் அரசியலில் இறங்கக் கூடாது?
பதில்: கேரள மக்கள் தங்கள் தலைவனை சினிமா கொட்டகையில் தேட மாட்டார்கள்.
இந்த ஞானம் நம் மக்களுக்கு எப்போது வரும்?
Wednesday, March 08, 2006
ஆஸ்கர் 2005
கடந்த ஞாயிற்று கிழமை ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த வருடம் ஆஸ்கர் பல வகையில் வித்தியாசமானது. சிறந்த படங்களாக nominate செய்யப்பட்ட ஐந்து படங்களுமே வசூலில் ஒன்றும் பெரிய ஹிட் படங்கள் இல்லை. நிறைய ஓரினைசேர்க்கை சம்பந்தமுடைய படங்கள் தகுதி பெற்றன, ஆங்கில பத்திரிகைகள் இதை gay oscar என்றே கிண்டலடித்தனர். சிறந்த படமாக crash தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தப்படம் கண்டிப்பாக சிறந்த திரைக்கதை விருது பெரும் என்று எனக்கு நம்பிக்கையிருந்தது, அது பொய்க்கவில்லை. இந்த படத்தின் திரைக்கதை பற்றி December 21,2005 பதிவில் எழுதியிருக்கிறேன். இது தவிர சிறந்த எடிட்டிங் விருதையும் வென்றது crash. சிறந்த நடிகராக பிலிப் செய்மர் ஹா·ப்மென் தேர்ந்தெடுத்தது எதிர்பார்த்ததே. சிறந்த நடிகையாக ரீஸ் விதர்ஸ்பூன் தேர்வியது தான் ஆச்சர்யம். நியாயமாக ·பெலிசிட்டி ஹா·ப்மென்னுக்கு கிடைக்க வேண்டிய விருது. Transamerica என்ற படத்தில் பெண்ணாக மாறிய ஆணாக அருமையாக நடித்திருந்தார். ரீஸ் ஏதோ walk the line படத்திற்காக சொந்தமாக பாடினாராம், அதனால் விருது கிடைத்ததாம். சிறந்த supporting actress விருது ரேச்சல் வெய்ஸ்க்கு கிடைத்ததும் ஆச்சர்யமே. The constant gardener படம் பார்த்தேன், நடிப்பு ஓகே ரகம் தான். நியாயமாய் frances Mcdormandக்கு north county படத்திற்காக கிடைத்திருக்க வேண்டும். அவர் ஏற்கனவே fargo என்ற படத்திற்காக 1999 சிறந்த நடிகை விருது வாங்கியவர். DVD கிடைத்தால் வாங்கி பாருங்கள், கலக்கியிருப்பார். தொழில் நுட்பத்துக்கான எல்லா விருதுகளும் (best visual effects, sound editing, sound mixing) king kong படத்திற்கே கிடைத்தும் எதிர்பார்த்ததே. அதிலும் lord of the rings - trilogyக்கு வேலை செய்த Veta digital நியுஸிலாந்து டீம் அது. இனிமேல் வருடா வருடம் அவர்கள் வேலை பார்க்கும் படத்திற்கு கண்ணை மூடிக்கொண்டு visual effects விருதுகளை கொடுத்திடலாம். Chronicles of narniaவும் அவர்கள் கைவன்னமே.
Monday, February 13, 2006
காதலர் தினம்
காதலர் தினம் என்பதே greeting cards கம்பெனிகளின் கார்ப்பரேட் சதி என்பதில் எனக்கு சில உடன்பாடு உண்டு. இருந்தாலும் அந்த ஒரு நாளில் காதலுக்காகவே வாழ்ந்த, காதலுக்கு மரியாதை தந்த பலரை நினைத்து பார்த்து வாழ்த்துவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். இன்று நான் எனக்கு தெரிந்து, காதலித்து கரம் பிடித்த நன்பர்களுக்கும், அந்த பகுதியை எட்ட இருக்கும் நன்பர்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்களை அனுப்பினேன். காதலர் தின ஷ்பெஷலில் விகடனில் வந்த பார்வையற்ற தம்பதியினரின் கதை என்னை கலங்க வைத்தது. செல்வனின் காதலர் தின பதிப்பும் என்னை கவர்ந்தது.
சொல்ல மறந்த கவிதை - என் டைரியிலிருந்து.
நான் காதல் உணர்ந்த தருனம்...
என் வானம் விரிந்தன
உலகம் சுருங்கின
இரவுகள் நீண்டன
கவிதைகள் பிறந்தன
இதயம் பட்டாம்பூச்சி ஆனது
இது சுரப்பிகளின் சதி - என
சொன்னது விஞ்ஞானம்
அது உன்மையென்றால் - என்
அவயங்கள் உறங்கும் போது
கனவுகள் காதல் செய்தது ஏன்
பொக்கிஷமாய் இருக்கும்
கல்லூரி ஆட்டோகிரா·ப்
விழிகள் உன் பக்கம் தேடின
'நல் வாழ்க்கைக்கு வாழ்த்துகிறேன்'
நிரப்பாத நான்கு வரிகள் தள்ளி உன் கையெழுத்து
இடையில் நீ எழுத மறந்ததென்ன
சொல்லாமல் இருந்தால்
இதயம் சுடுகாடாகிவிடும் என்று
சொன்னேன் ஒரு நாள் பார்த்து
பதில் சொல்லாமலே
என் காதலை கல்லறையாக்கி
ஒற்றை ரோஜாவை வைத்தாய்
காதல் தெய்வீகமானது என்றால்
என் ஞாபகங்கள் வேண்டுதல் வடிவம் பெற்றதா..
இல்வாழ்வெல்லாம் நல்வாழ்க்கை வாழ்கிறாய்
எனக் கேட்டதும் ஒரு சந்தோஷ பெருமூச்சு
நான் காதலை நினைக்கும் தருனம்
மறந்து போக நினைத்தாலும்
கடந்து போன மைல் கல்லாய் உன் ஞாபகங்கள்...
சொல்ல மறந்த கவிதை - என் டைரியிலிருந்து.
நான் காதல் உணர்ந்த தருனம்...
என் வானம் விரிந்தன
உலகம் சுருங்கின
இரவுகள் நீண்டன
கவிதைகள் பிறந்தன
இதயம் பட்டாம்பூச்சி ஆனது
இது சுரப்பிகளின் சதி - என
சொன்னது விஞ்ஞானம்
அது உன்மையென்றால் - என்
அவயங்கள் உறங்கும் போது
கனவுகள் காதல் செய்தது ஏன்
பொக்கிஷமாய் இருக்கும்
கல்லூரி ஆட்டோகிரா·ப்
விழிகள் உன் பக்கம் தேடின
'நல் வாழ்க்கைக்கு வாழ்த்துகிறேன்'
நிரப்பாத நான்கு வரிகள் தள்ளி உன் கையெழுத்து
இடையில் நீ எழுத மறந்ததென்ன
சொல்லாமல் இருந்தால்
இதயம் சுடுகாடாகிவிடும் என்று
சொன்னேன் ஒரு நாள் பார்த்து
பதில் சொல்லாமலே
என் காதலை கல்லறையாக்கி
ஒற்றை ரோஜாவை வைத்தாய்
காதல் தெய்வீகமானது என்றால்
என் ஞாபகங்கள் வேண்டுதல் வடிவம் பெற்றதா..
இல்வாழ்வெல்லாம் நல்வாழ்க்கை வாழ்கிறாய்
எனக் கேட்டதும் ஒரு சந்தோஷ பெருமூச்சு
நான் காதலை நினைக்கும் தருனம்
மறந்து போக நினைத்தாலும்
கடந்து போன மைல் கல்லாய் உன் ஞாபகங்கள்...
Monday, February 06, 2006
டிஷ்யூம்
சும்மா பொழுது போகட்டுமே என்று தான் இந்த படத்தை பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் படம் முடிய அசந்து விட்டேன். தமிழில் இப்படி ஒரு sensible காதல் கதையை பார்த்ததில்லை. வித்தியாசமான திரைக்கதை, வசனம் மற்றும் காட்சியமைப்பிலும் படத்தை நிறையச்செய்த சசிக்கு பாராட்டுகள். திரையில் ஹீரோவுக்கு டூப் போடும் ஸ்டண்ட்மேனாக வரும் ஹீரோ, ஆர்ட்ஸ் காலேஜ் படிக்கும் ரசனைமிக்க ஒரு ஹீரோயின், இப்படி இரு கதாபாத்திரம், இருவருக்கும் காதல் என்று typical தமிழ் பட இயக்குநர் படத்தை எடுத்திருந்தால், தனக்கு பொருந்தவே பொருந்தாத ஹீரோவுடன், ஹீரோயினுக்கு கண்டதும் காதல், ஹீரோயின் அப்பாவிடம் நாம் பார்த்து புளித்துபோன ஏழை பனக்கார காதல் டயலாக்குகள், நாலு பைட் கடைசியில் சுபம் என மசாலா தூவி கைமா பன்னியிருப்பார்கள். ஆனால் அப்படிப்பட்ட cliche எதுவும் இல்லாமல், காட்சிக்கு காட்சி வித்தியாசமாய் படத்தை கொண்டு சென்றிருக்கும் விதம் சூப்பர்...
'ரிஸ்க்' பாஸ்கராக ஜீவா, ராம் படத்திற்கும் இதற்கும் பயங்கர இம்ப்ரூவ்மெண்ட். லாக்கப்பில் போலீசார் அடிப்பதற்கு முன்பே அடிவாங்கியது போல் ரியாக்ஷன் கொடுத்து விழ, ரகளயான ஓப்பனிங். லோக்கலாக பேசும் பேச்சு, பான்பராக் போடும் ஸ்டண்ட்மேனாக பாடி லாங்க்வேஜ் என்று நடிப்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார். இமேஜ் வளர்க்கிறேன் பேர்விழி என்று பஞ்ச் டயலாக், அதீத ஹீரோயிஸம் என்று சிக்காமல் இப்படியே நாலு படம் நடித்தால் சூர்யா பாதையில் செல்லலாம்.
ஹீரோவின் ரசனையும், ஹீரோயின் ரசனையும் எப்படி ஒட்டாமல் இருக்கிறது என்று சொல்லுகிற காட்சியமைப்பு எல்லாம் பன்ச். சந்தியா பீச்சில் செய்த மணல் சிலையை பேசிக்கொண்டே அதன் அருமை புரியாமல் ஜீவா காலால் உதைப்பதும், மோனாலிசா படத்தை பார்த்து "இது உங்க பெரியம்மாவா" என்று கேட்பதும் சில உதாரணங்கள்.
வசனங்களும் ஆங்காங்கே நச். டைட் டி சர்ட், கழுத்தில் தொங்கும் கத்தி செயின்கள் என்று வரும் ஜீவாவை பார்த்து, சந்தியா "கொஞ்சம் டீசண்டா வரலாமே" என்று கேட்க "நாங்க வில்லனா தெரியற வரைக்கும் தான் எங்களுக்கு பொழைப்பு" என்று ஜீவா சொல்வது ஒரு உதாரணம்.
ஒவ்வொரு காட்சியையும் நாம் சினிமா பானியில் ஒரு மாதிரியாக ஊகிக்க ஆனால் ப்ராக்டிக்லாக அதை எடுத்திருப்பது தான் இந்த படத்தின் பெரிய ப்ளஸ். பஸ் ஸ்டாப்பில் பஸ் வராமல் சந்தியா காத்திருக்க, அங்கே வரும் ஜீவா ஒரு பஸ்ஸை நிறுத்துவதற்கு அதன் முன்னால் போய் பாய, இதை பார்த்து ஹீரோயினுக்கு காதல் வரும் என்று பார்த்தால், அவர் போய் ஜீவாவை அறைகிறார் "உன் ரிஸ்க்க எல்லாம் சினிமாவுல்ல வச்சிக்கோ", சரி பதிலுக்கு ஹீரோ அப்படியே போய் ஒரு சோக பாட்டு பாடுவார் என்று பார்த்தால் பதிலுக்கு ஜீவாவும் சந்தியாவை பளார் என்று ஒரு அறை "உன்ன இம்ப்ரெஸ் பன்ன எனக்கு இதுதான் தெரியும், மத்தவங்க மாதிரி இங்கிலிஷ் பேசி வாயில மவுத் ஆர்கன் வாசிக்க தெரியாது" என்று பொரிந்து தள்ள, என ஆங்காங்கே சர்ப்ரைஸ். characterisation திரைக்கதைக்கு நல்ல வலு சேர்க்கிறது.
காமெடிக்கு விவேக் வடிவேலுவிடம் எல்லாம் போகாமல், ஒரு குள்ளரை வைத்து காமெடி செய்திருப்பது புதுமை. என்னதான் குள்ளராக இருந்தாலும் அவரின் குள்ளத்தனத்தை வைத்து ஓவராக காமெடி செய்திருக்கிறார்கள் என்று நினைத்தால், கடைசியில் அவர் கடன் வாங்கும் காரணத்தை சொல்லி நம்மை கலங்க வைக்கின்றனர். படத்தின் ஒரே குறை வலுக்கட்டாயமாக தினிக்கப்பட்ட பாடல்கள் தான், ஆனால் அதிலும் இரண்டு மூன்று பாடல் மாண்டேஜ் ஷாட்டுகளாக கதையை நகர்த்துவதால் போரடிக்கவில்லை. மொத்தத்தில் டிஷ்யூம், ஒரு யதார்த்தமான 'காதல்' படம் போல் இது நடைமுறை காதல் கதை.
'ரிஸ்க்' பாஸ்கராக ஜீவா, ராம் படத்திற்கும் இதற்கும் பயங்கர இம்ப்ரூவ்மெண்ட். லாக்கப்பில் போலீசார் அடிப்பதற்கு முன்பே அடிவாங்கியது போல் ரியாக்ஷன் கொடுத்து விழ, ரகளயான ஓப்பனிங். லோக்கலாக பேசும் பேச்சு, பான்பராக் போடும் ஸ்டண்ட்மேனாக பாடி லாங்க்வேஜ் என்று நடிப்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார். இமேஜ் வளர்க்கிறேன் பேர்விழி என்று பஞ்ச் டயலாக், அதீத ஹீரோயிஸம் என்று சிக்காமல் இப்படியே நாலு படம் நடித்தால் சூர்யா பாதையில் செல்லலாம்.
ஹீரோவின் ரசனையும், ஹீரோயின் ரசனையும் எப்படி ஒட்டாமல் இருக்கிறது என்று சொல்லுகிற காட்சியமைப்பு எல்லாம் பன்ச். சந்தியா பீச்சில் செய்த மணல் சிலையை பேசிக்கொண்டே அதன் அருமை புரியாமல் ஜீவா காலால் உதைப்பதும், மோனாலிசா படத்தை பார்த்து "இது உங்க பெரியம்மாவா" என்று கேட்பதும் சில உதாரணங்கள்.
வசனங்களும் ஆங்காங்கே நச். டைட் டி சர்ட், கழுத்தில் தொங்கும் கத்தி செயின்கள் என்று வரும் ஜீவாவை பார்த்து, சந்தியா "கொஞ்சம் டீசண்டா வரலாமே" என்று கேட்க "நாங்க வில்லனா தெரியற வரைக்கும் தான் எங்களுக்கு பொழைப்பு" என்று ஜீவா சொல்வது ஒரு உதாரணம்.
ஒவ்வொரு காட்சியையும் நாம் சினிமா பானியில் ஒரு மாதிரியாக ஊகிக்க ஆனால் ப்ராக்டிக்லாக அதை எடுத்திருப்பது தான் இந்த படத்தின் பெரிய ப்ளஸ். பஸ் ஸ்டாப்பில் பஸ் வராமல் சந்தியா காத்திருக்க, அங்கே வரும் ஜீவா ஒரு பஸ்ஸை நிறுத்துவதற்கு அதன் முன்னால் போய் பாய, இதை பார்த்து ஹீரோயினுக்கு காதல் வரும் என்று பார்த்தால், அவர் போய் ஜீவாவை அறைகிறார் "உன் ரிஸ்க்க எல்லாம் சினிமாவுல்ல வச்சிக்கோ", சரி பதிலுக்கு ஹீரோ அப்படியே போய் ஒரு சோக பாட்டு பாடுவார் என்று பார்த்தால் பதிலுக்கு ஜீவாவும் சந்தியாவை பளார் என்று ஒரு அறை "உன்ன இம்ப்ரெஸ் பன்ன எனக்கு இதுதான் தெரியும், மத்தவங்க மாதிரி இங்கிலிஷ் பேசி வாயில மவுத் ஆர்கன் வாசிக்க தெரியாது" என்று பொரிந்து தள்ள, என ஆங்காங்கே சர்ப்ரைஸ். characterisation திரைக்கதைக்கு நல்ல வலு சேர்க்கிறது.
காமெடிக்கு விவேக் வடிவேலுவிடம் எல்லாம் போகாமல், ஒரு குள்ளரை வைத்து காமெடி செய்திருப்பது புதுமை. என்னதான் குள்ளராக இருந்தாலும் அவரின் குள்ளத்தனத்தை வைத்து ஓவராக காமெடி செய்திருக்கிறார்கள் என்று நினைத்தால், கடைசியில் அவர் கடன் வாங்கும் காரணத்தை சொல்லி நம்மை கலங்க வைக்கின்றனர். படத்தின் ஒரே குறை வலுக்கட்டாயமாக தினிக்கப்பட்ட பாடல்கள் தான், ஆனால் அதிலும் இரண்டு மூன்று பாடல் மாண்டேஜ் ஷாட்டுகளாக கதையை நகர்த்துவதால் போரடிக்கவில்லை. மொத்தத்தில் டிஷ்யூம், ஒரு யதார்த்தமான 'காதல்' படம் போல் இது நடைமுறை காதல் கதை.
Sunday, February 05, 2006
வரலாறு - I
பள்ளியில் படிக்கும் காலத்தில் எனக்கு வரலாறு பாடத்தின் மேல் அவ்வளவு ஈடுபாடு இல்லை. 'கடந்த காலத்தை தெரிவதனால் என்ன பயன்' என்று பலமுறை நான் கேட்டதுண்டு. ஆனால் இப்போதெல்லாம் எனக்கு வரலாறு மேல் ஓர் ஆர்வம் ஏற்படுகிறது. முதலில் பள்ளி பருவத்தில் எனக்கு வரலாறு மேல் ஆர்வம் ஏற்படாதற்கு காரணம், நாம் படித்த எல்லா வரலாறு பாடங்களும் வரலாற்றின் பல சம்பவங்களின் தலைப்புச் செய்திகளின் கோர்வையாய் இருந்தது ஒரு காரணம். They merely give the highlights and statistics of a historical incident, மாறாக ஒரு சம்பவம் ஒரு நாட்டிலோ அல்லது சமுதாயத்திலோ எத்தகைய மாற்றத்தை உண்டு பன்னியது என்பதை நாம் படித்த வரலாறு சொல்லியதில்லை and not the importance and impacts of that history. உதாரணத்திற்கு ஒரு ப்ரெஞ்சு புரட்சியோ அல்லது ரஷ்ய புரட்சியோ எவ்வளவு பிரசத்தி பெற்றது, அந்த நாடுகளில் அந்த புரட்சிகள் எத்தகைய மாற்றத்தை உண்டு பன்னியது என்பதை நாம் படிக்கவில்லை, மாறாக ப்ரெஞ்சு புரட்சி ஏற்பட்ட வருடம், அந்த வருடத்தில் எந்த லூயி மன்னன் ஆண்டான் என்பது மட்டும் தான் படித்தோம். இந்திய சுதந்திர வரலாறும் அவ்வாறே. காந்தியடிகள் இந்த இந்த வருடத்தில் இந்த போராட்டங்களை துவங்கி வைத்தார், இந்த வருடத்தில் கைதானார், பிறகு மவுண்ட்பேட்டன் வந்தார் சுதந்திரம் கொடுத்தார்...இப்படித்தான் நாம் சுதந்திரம் வாங்கிய வரலாறையே படித்தோம். சிறுவயதில் நிறைய நாள் நான் இப்படித்தான் யோசித்திருக்கிறேன் "மவுண்ட்பேட்டன் வலிய வந்து கொடுத்த சுதந்திரத்தை நாம் ஏன் காந்தியடிகள் போராடி வாங்கி கொடுத்தார் என்று சொல்லுகிறோம்". காந்தியை பற்றி நான் ரிச்சர்ட் அட்டென்பொரோவின் காந்தி படம் பார்த்து தான் நிறைய தெரிந்து கொண்டேன். ஒரு மனிதராக காந்தி எத்தகையவர், எவ்வளவு தியாகங்களை செய்தார் அவரின் கொள்கைகள் நாட்டின் சுதந்திர போராட்டத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை இன்னும் உள்ளே சென்று விஸ்தாரமாக சொல்லியிருந்தார்களென்றால் நான் நம் மகாத்மாவை பற்றி பள்ளியிலே ஆழ்ந்த அறிவை பெற்றிருப்பேன். நம் பாடத்திட்டங்கள் ஒரு மணி நேரம் எழுதும் தேர்வை வைத்து வரையறுக்கப்படுவதால் வரும் நிலை இது. நல்லவேளை நாம் பள்ளியில் மாறுவேட போட்டியிலும், திரைப்படங்களிலும் கட்டபொம்மனையும், பாரதியையும் பார்த்ததினால், விடுதலை போராட்டத்தில் தமிழனின் பங்கை பற்றி கொஞ்சமாவது தெரிந்து வைத்திருக்கிறோம். நம் ஊரில் பெற்றோர்களும், குழந்தைகளுக்கு பாடங்களுக்கு அப்பாற்பட்ட வரலாற்று அறிவை பெருக்குவதற்கு அவ்வளவு ஊக்கம் கொடுப்பதில்லை. நான் வளர்ந்ததெல்லாம் சென்னையில் தான், ஆனால் வாழ்க்கையில் ஒரே ஒரு தடவை தான் அருங்காட்சியத்திற்கு சென்றிருக்கிறேன். அப்போதும், என் அம்மா அங்கிருந்த ஆயிரம் ஆண்டு முன் எடுத்த ஒரு மீனின் எலும்புகளை ஆச்சர்யமாக காட்டிய அளவுக்கு, நான் அங்கிருந்த பல வரலாற்று சின்னங்களின் பற்றிய தகவலை படிக்க விடவில்லை. இன்னொரு சம்பவம் ஒருமுறை ஊட்டிக்கு சுற்றுலா போய் அங்கிருந்து திருப்பூருக்கு என் தந்தையின் நன்பரை பார்க்க சென்றோம். என்னிடம் திருப்பூரில் என்ன பார்க்க வேண்டும் என்று கேட்டார்கள், எனக்கு பாடத்தில் படித்த கொடி காத்த குமரனின் ஞாபகம் வந்தது, அவர் வாழ்ந்த வீட்டிற்கு போக வேண்டும் என்று சொன்னேன். ஆனால் அவர்களோ அங்கிருந்து பழனிக்கும், பனியன் பேக்டரிக்கும் முன்னுரிமை கொடுத்து, திரும்பி சென்னைக்கு ரயிலேறும் முன் வழியில் ஒரு வீட்டை தூரத்தில் காட்டி "அதுதாம்ப்பா கொடி காத்த குமரன் வீடு...பாத்துக்கோ" என்று சொல்லி ரயிலேற்றினர்.
ஏன் நாம் வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்?...வரலாறு நாம் கடந்து வந்த பாதை மட்டும் இல்லை, இனிமேல் நாம் கடக்க வேண்டிய பாதையையும் தீர்மானிக்கிறது. உதாரணத்திற்கு, தமிழ்நாட்டில் இந்தியை ஏன் நமக்கு கற்றுக்கொடுக்கப்படவில்லை என்பதை அறிவதற்கு நாம் திராவிட கழகங்களின் வரலாற்றை படித்தாக வேண்டும். அந்த வரலாறு தான் இன்றும் இந்தி நம் ஊரில் எட்டிப்பார்க்காதவாறு தடுக்கிறது. நம் வரலாறு பாடங்களில் இன்னொரு கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம், உலக வரலாறு சுத்தமாக புறக்கனிக்கப்படுகிறது. இரண்டாம் உலகப்போர்தான் இருபதாம் நூற்றாண்டில் உலகத்தின் தலையெழுத்தையே மாற்றியது, ஆனால் ஜெர்மனியனோ, ஜப்பான்காரனோ இந்தியாவில் குண்டு போடவில்லை என்பதால் நமக்கு அதைப்பற்றி சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் உன்மை என்னவென்றால், இரண்டாம் உலகப்போரிலும், முதல் உலகப்போரிலும் ஆங்கிலேயப் படையில் பனியாற்றி உயிரைவிட்ட இந்தியர்கள் பல லட்சம் பேர். ஆங்கிலேயப் படையில் பனியாற்றிய ஒரே காரணத்தினால் இந்திய வரலாற்று ஆசிரியர்கள் அவர்களின் தியாகங்களை பதியவைக்க மறந்துவிட்டனர். இன்றும் சென்னையில் இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த வீரர்களுக்கு நினைவிடம் இருக்கிறது அதை வருடா வருடம் பிரிட்டன் அரசு அதன் சொந்த செலவில் பராமரிக்கிறது.
(தொடரும்..)
ஏன் நாம் வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்?...வரலாறு நாம் கடந்து வந்த பாதை மட்டும் இல்லை, இனிமேல் நாம் கடக்க வேண்டிய பாதையையும் தீர்மானிக்கிறது. உதாரணத்திற்கு, தமிழ்நாட்டில் இந்தியை ஏன் நமக்கு கற்றுக்கொடுக்கப்படவில்லை என்பதை அறிவதற்கு நாம் திராவிட கழகங்களின் வரலாற்றை படித்தாக வேண்டும். அந்த வரலாறு தான் இன்றும் இந்தி நம் ஊரில் எட்டிப்பார்க்காதவாறு தடுக்கிறது. நம் வரலாறு பாடங்களில் இன்னொரு கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம், உலக வரலாறு சுத்தமாக புறக்கனிக்கப்படுகிறது. இரண்டாம் உலகப்போர்தான் இருபதாம் நூற்றாண்டில் உலகத்தின் தலையெழுத்தையே மாற்றியது, ஆனால் ஜெர்மனியனோ, ஜப்பான்காரனோ இந்தியாவில் குண்டு போடவில்லை என்பதால் நமக்கு அதைப்பற்றி சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் உன்மை என்னவென்றால், இரண்டாம் உலகப்போரிலும், முதல் உலகப்போரிலும் ஆங்கிலேயப் படையில் பனியாற்றி உயிரைவிட்ட இந்தியர்கள் பல லட்சம் பேர். ஆங்கிலேயப் படையில் பனியாற்றிய ஒரே காரணத்தினால் இந்திய வரலாற்று ஆசிரியர்கள் அவர்களின் தியாகங்களை பதியவைக்க மறந்துவிட்டனர். இன்றும் சென்னையில் இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த வீரர்களுக்கு நினைவிடம் இருக்கிறது அதை வருடா வருடம் பிரிட்டன் அரசு அதன் சொந்த செலவில் பராமரிக்கிறது.
(தொடரும்..)
Monday, January 30, 2006
நியுரம்பெர்க் (Nuremberg)
இன்று நியுரம்பெர்க் (Nuremberg) என்னும் ஆங்கில படம் பார்த்தேன். என்னுடைய war favouritesல் இந்த படத்தையும் சேர்க்கிறேன். என்ன ஒரு வித்தியாசம், இதில் ஒரு போர் காட்சி கூட கிடையாது. இரண்டாம் உலகப்போர் முடிந்து ஹிட்லரின் நாஸிப்படையின் உயர் அதிகாரிகள் பலரை சிறைப்பிடித்து, அவர்களை போர் நீதிமன்றம் ஒன்றை உருவாக்கி விசாரனை செய்வதே படத்தின் கதை. இரண்டாம் உலகப்போர் பற்றி பல விஷயங்களை நான் தெரிந்திருந்தாலும், எனக்கு ஒரே ஒரு கேள்விக்கான விடைதான் வெகு நாளாய் தெரியாமல் இருந்தது அது "யூதர்களுக்கு எதிராக இவ்வளவு கொலைகளையும் கொடுமைகளையும் செய்ய ஹிட்லருக்கும் அவன் ஆனைப்படி செய்த ஜெர்மானியர்களுக்கும் எப்படி மனது வந்தது, அவர்களின் மனசாட்சி எப்படி தொலைந்து போனது?"
இந்த கேள்விக்கான விடையை, இந்த படத்தில் வரும் அமேரிக்க உளவியல் நிபுனரின் கருத்தாய் வரும் வசனங்கள் எனக்கு விளக்கியது. அது:
1) ஜெர்மனியில் குடிமக்கள் தங்களுக்கு சொல்லப்படுவதை கேள்வியின்றி செய்வர் Germany is a country where the people do what they are told. நீ அப்படி தான் அங்கு வளர்வாய் You're raised from childhood not to question the authority. ஹிட்லர் இதை சாதகமாக்கி, ஒரு நாட்டையே தன் கட்டளைப்படி நடக்க செய்தான் He had an entire nation that believes it's perfectly natural to do whatever he says
2) இரண்டாவது தூஷ கொள்கை பரப்பு, யூதர்கள் மனிதர்கள் இல்லை, அவர்கள் மனித இனத்தின் சாபக்கேடு என்று anti-semitism கொள்கையை வேரூர பரப்பினான் Jews are not real human beings, they're a corruption of the race ஆக யூதர்களின் உரிமையை பறிப்பதிலும், அவர்களை கொல்வதிலும் தவறில்லை என்று எல்லோரையும் கண்மூடி நம்பும்படி செய்தான்.
இந்த வாதங்களை நிரூபிக்கும் வைகையில் இரு கதாபாத்திரங்களை படத்தில் காட்டுவர். ஒன்று concentration campன் பொறுப்பாளனின் குறுக்கு விசாரனை, அதில் அவன் எப்படி சக்தி வாய்ந்த விஷத்தை வைத்து அதிகம் பேரை சாகடிக்க முடியும் என்று தான் நிரூபித்து காட்டியதாக, முகத்தில் ஒரு சலனமும் குற்ற உனர்வும் இல்லாமல் சொல்வதிலும், பிறகு அந்த உளவியல் நிபுனர் "இப்படி செய்வதில் கொஞ்சமாவது வருத்தம் இருந்ததா" என்று கேட்க அவன் "இல்லவே இல்லை...நான் சொல்வதை செய்பவன்" என்று கூறுவான். இன்னொரு கதாபாத்திரம், ஹிட்லரின் இரண்டாம் நிலை தளபதி ஹெர்மன் கோரிங். படம் முழுவதும் நாஸிசத்தையும் ஹிட்லரையும் விட்டுக்கொடுக்காமல் கோர்ட்டில் வாதிடுவான், முடிவில் தான் அவன் மனைவி மூலம் அவனையும் ஹிட்லர் சுட்டுக்கொல்ல ஆனையிட, அதனால் அமேரிக்கரிடம் சரணடைந்தது விஷயம் நமக்கு தெரியும்.
இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி, அமேரிக்க உளவியல் நிபுனரும், ஹெர்மன் கோரிங்க்கும் இடையே நடக்கும் சம்பாஷனை தான். உளவியல் நிபுனர் கோரிங்கிடம் "லட்சக்கனக்கான யூத அப்பாவிகளை கொல்வதை நீ எப்படி விளக்குவாய்" என்று கேட்க அதற்கு கோரிங் "நாங்கள் லட்சக்கனக்கான யூதர்களை கொன்றதை பற்றி பேசுகிறாயே, நீங்கள் ஹிரோஷிமாவில் அனுகுண்டை போட்டு லட்சக்கனக்கான ஜப்பானியர்களை கொன்றதை என்னவென்று சொல்வீர்கள். ஏன் அந்த குண்டை ஜெர்மனி மீது போட்டு ஜெர்மனியரை கொல்ல வேண்டியது தானே...நீங்கள் அதை செய்ய மாட்டீர்கள் எனென்றால் ஒரு ஆசிய ஜப்பானியனை விட, ஐரோப்பா ஜெர்மனியன் உங்களுக்கு உசத்தியானவன். எங்கள் concentration campஐ பற்றி பேசுகிறீர்களே நீங்கள் போரின் போது உள்நாட்டிலே உள்ள உங்கள் நாட்டின் குடிமக்களான ஜப்பானியரை campல் அடைத்து கொடுமை படுத்தினீர்களே அதன் பேர் என்ன?....இனக் காழ்ப்புனர்ச்சி பற்றி பேசுகிறீர்களே, நீங்கள் கறுப்பர்களுக்கு செய்வதன் பெயர் என்ன, ஒரு கறுப்பனாவது உங்கள் நாட்டின் ரானுவத்தின் உயரதிகாரி ஆவானா?" என்று ஆவேசம் பொங்க கேட்பான். இதற்கு பதில் கூறமுடியாமல் அமேரிக்க நிபுனர் புன்னகை செய்வான். ஒரு கொடியவனின் சொல்லானாலும், அதில் உள்ள சில நியாயங்கள் நம்மை சிந்திக்க வைக்கும். "வரலாறுகள் பதிவு செய்யப்படுவதில்லை, சிலரால் திருத்தி எழுதப்படுகிறது" என்று யாரோ சொன்னது.
இந்த கேள்விக்கான விடையை, இந்த படத்தில் வரும் அமேரிக்க உளவியல் நிபுனரின் கருத்தாய் வரும் வசனங்கள் எனக்கு விளக்கியது. அது:
1) ஜெர்மனியில் குடிமக்கள் தங்களுக்கு சொல்லப்படுவதை கேள்வியின்றி செய்வர் Germany is a country where the people do what they are told. நீ அப்படி தான் அங்கு வளர்வாய் You're raised from childhood not to question the authority. ஹிட்லர் இதை சாதகமாக்கி, ஒரு நாட்டையே தன் கட்டளைப்படி நடக்க செய்தான் He had an entire nation that believes it's perfectly natural to do whatever he says
2) இரண்டாவது தூஷ கொள்கை பரப்பு, யூதர்கள் மனிதர்கள் இல்லை, அவர்கள் மனித இனத்தின் சாபக்கேடு என்று anti-semitism கொள்கையை வேரூர பரப்பினான் Jews are not real human beings, they're a corruption of the race ஆக யூதர்களின் உரிமையை பறிப்பதிலும், அவர்களை கொல்வதிலும் தவறில்லை என்று எல்லோரையும் கண்மூடி நம்பும்படி செய்தான்.
இந்த வாதங்களை நிரூபிக்கும் வைகையில் இரு கதாபாத்திரங்களை படத்தில் காட்டுவர். ஒன்று concentration campன் பொறுப்பாளனின் குறுக்கு விசாரனை, அதில் அவன் எப்படி சக்தி வாய்ந்த விஷத்தை வைத்து அதிகம் பேரை சாகடிக்க முடியும் என்று தான் நிரூபித்து காட்டியதாக, முகத்தில் ஒரு சலனமும் குற்ற உனர்வும் இல்லாமல் சொல்வதிலும், பிறகு அந்த உளவியல் நிபுனர் "இப்படி செய்வதில் கொஞ்சமாவது வருத்தம் இருந்ததா" என்று கேட்க அவன் "இல்லவே இல்லை...நான் சொல்வதை செய்பவன்" என்று கூறுவான். இன்னொரு கதாபாத்திரம், ஹிட்லரின் இரண்டாம் நிலை தளபதி ஹெர்மன் கோரிங். படம் முழுவதும் நாஸிசத்தையும் ஹிட்லரையும் விட்டுக்கொடுக்காமல் கோர்ட்டில் வாதிடுவான், முடிவில் தான் அவன் மனைவி மூலம் அவனையும் ஹிட்லர் சுட்டுக்கொல்ல ஆனையிட, அதனால் அமேரிக்கரிடம் சரணடைந்தது விஷயம் நமக்கு தெரியும்.
இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி, அமேரிக்க உளவியல் நிபுனரும், ஹெர்மன் கோரிங்க்கும் இடையே நடக்கும் சம்பாஷனை தான். உளவியல் நிபுனர் கோரிங்கிடம் "லட்சக்கனக்கான யூத அப்பாவிகளை கொல்வதை நீ எப்படி விளக்குவாய்" என்று கேட்க அதற்கு கோரிங் "நாங்கள் லட்சக்கனக்கான யூதர்களை கொன்றதை பற்றி பேசுகிறாயே, நீங்கள் ஹிரோஷிமாவில் அனுகுண்டை போட்டு லட்சக்கனக்கான ஜப்பானியர்களை கொன்றதை என்னவென்று சொல்வீர்கள். ஏன் அந்த குண்டை ஜெர்மனி மீது போட்டு ஜெர்மனியரை கொல்ல வேண்டியது தானே...நீங்கள் அதை செய்ய மாட்டீர்கள் எனென்றால் ஒரு ஆசிய ஜப்பானியனை விட, ஐரோப்பா ஜெர்மனியன் உங்களுக்கு உசத்தியானவன். எங்கள் concentration campஐ பற்றி பேசுகிறீர்களே நீங்கள் போரின் போது உள்நாட்டிலே உள்ள உங்கள் நாட்டின் குடிமக்களான ஜப்பானியரை campல் அடைத்து கொடுமை படுத்தினீர்களே அதன் பேர் என்ன?....இனக் காழ்ப்புனர்ச்சி பற்றி பேசுகிறீர்களே, நீங்கள் கறுப்பர்களுக்கு செய்வதன் பெயர் என்ன, ஒரு கறுப்பனாவது உங்கள் நாட்டின் ரானுவத்தின் உயரதிகாரி ஆவானா?" என்று ஆவேசம் பொங்க கேட்பான். இதற்கு பதில் கூறமுடியாமல் அமேரிக்க நிபுனர் புன்னகை செய்வான். ஒரு கொடியவனின் சொல்லானாலும், அதில் உள்ள சில நியாயங்கள் நம்மை சிந்திக்க வைக்கும். "வரலாறுகள் பதிவு செய்யப்படுவதில்லை, சிலரால் திருத்தி எழுதப்படுகிறது" என்று யாரோ சொன்னது.
Wednesday, January 25, 2006
Save earth for children
Just now saw the priya's blog on saving mother earth. Good to see this kind of initiatives to spread good messages. She has tagged me to convey and come up with 3 ideas. And here it goes:
1) Stay close to nature, Drink good: I've stopped drinking soft drinks since some time. We knew it's a junkie food and still we are some way addicted to it. Don't ask me to exclude the Diet's one in this list. Just by seeing the nutrition facts on those can's we know what all unheard chemicals we consume. Instead of this we can drink tender coconuts selling in streets. We can at least help a poor seller to have some business. Many times we see our people bargaining for those tender cocunuts and not to those cola junks they sell on shop. Also I would recommend drinking lots of water. Many medical theories prove drinking excess water is good for health.
2) Rain water harvesting: I am not a political analyzer to comment on ruling government policies. But definitely the rain water harvesting campaign brought by our CM is a commendable one. Let's save rain water and increase our ground water levels.
3)Teach nature: Agriculture is our country's backbone. We should start teaching our childrens the importance of agriculture and cultivate our young minds with nature deeds. We can start teaching the kids about gardening. Imagine encouraging our young minds to plant atleast one seed their life time and grow them. Then even more our population grows the more green and pasture our country would become.
1) Stay close to nature, Drink good: I've stopped drinking soft drinks since some time. We knew it's a junkie food and still we are some way addicted to it. Don't ask me to exclude the Diet's one in this list. Just by seeing the nutrition facts on those can's we know what all unheard chemicals we consume. Instead of this we can drink tender coconuts selling in streets. We can at least help a poor seller to have some business. Many times we see our people bargaining for those tender cocunuts and not to those cola junks they sell on shop. Also I would recommend drinking lots of water. Many medical theories prove drinking excess water is good for health.
2) Rain water harvesting: I am not a political analyzer to comment on ruling government policies. But definitely the rain water harvesting campaign brought by our CM is a commendable one. Let's save rain water and increase our ground water levels.
3)Teach nature: Agriculture is our country's backbone. We should start teaching our childrens the importance of agriculture and cultivate our young minds with nature deeds. We can start teaching the kids about gardening. Imagine encouraging our young minds to plant atleast one seed their life time and grow them. Then even more our population grows the more green and pasture our country would become.
Saturday, January 21, 2006
கனவு (சிறுகதை)
மெல்ல கண் திறந்தான் வாசு. பிரகாசமான வெளிச்சம் அவன் கண்களை கூசியது. சுற்றும் முற்றும் பார்க்க முயன்றான், அறையெல்லாம் வெளிச்சம் நிரப்பியது போல் இருந்தது. கண்களை மூடி திரும்பவும் திறந்தான். இப்போது வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்தது. எதிரே ஒரு உருவம் மெல்ல தெரிந்தது.
"வாசு...நான் பேசறது கேக்கறதா" உருவம் முழுதும் தெரிவது முன் குரல் கேட்டது. வாசு தலையாட்டினான்.
"குட்...நான் யார்ன்னு தெரியுதா" பரிச்சயமான குரல், ஞாபகங்களை ஸ்கேன் செய்தான்.
"டாக்டர்" மெல்ல சொன்னான்
"வெரிகுட்...சொல்லுங்க உங்க பிரச்சனை என்ன?"
"கனவு டாக்டர் கனவு...கெட்ட..கெட்ட கனவு" இப்போது டாக்டரின் உருவம் முழுதும் தெரிந்தது.
"கனவு வருவது நார்மலான விஷயம் தானே...சமயத்தில எல்லோருக்கும் கெட்ட கனவு வரும்"
"இல்ல டாக்டர்...எனக்கு தினமும் வருது..கெட்ட...கெட்ட கனவா வருது"
"எப்போதிருந்து இது மாதிரி இருக்கு"
"ரொம்ப நாளா டாக்டர்...எப்ப ஆரம்பிச்சதுன்னு ஞாபகம் இல்ல..ஆனா ரொம்ப நாளா வருது" வாசு கண்களை மூடி திரும்பவும் ஞாபகங்களை தேடினான்...ம்ம்ம்..விடை வராதென்பது அவனுக்கு தெரியும். நிறைய நாட்கள் யோசித்து பார்த்துவிட்டான், எப்போதிருந்து கனவு கான ஆரம்பித்தான் என்பது தெரியவில்லை.
"வாசு...கனவுங்கிறது நம்மோட ஞாபகங்கள் தான். ஏதாவது ஒரு சுவாரஸ்யமான் நிகழ்ச்சியோ அல்லது மனச பாதிக்கிற விஷயமோ முடிவோ தீர்வோ இல்லாம நம்மோட ஞாபகங்கள்ல தேங்கிடும். அது தான் நாம தூங்கறப்போ கனவா ஒரு உருவம் கொடுத்து வரும். கம்ப்யூட்டர்ல எப்படி ஒரு ப்ரோக்ராம் மெமரில்ல ஏறி எக்ஸ்கியூட் ஆகி, கம்ப்யூட்டர் ஆ·ப் செஞ்சா கானாம போயிடுமோ....அது போல தான் நம்ம கனவும். தூங்கும் போது நம்ம மூளையென்னும் கம்ப்யூட்டர் நம்ம ஞாபகம் என்னும் மெமரியில இருந்து எடுத்து ஓட்டுற ஒரு ஸ்க்ரீன்சேவர் தான் கனவு. தூங்கி எழுந்தா..அது கானாம போயிடும். சில சமயம் ஒரு பகுதி மட்டும் ஞாபகம் இருக்கும்" வாசுவிற்கு புரியுமாறு டாக்டர் லெக்சர் கொடுத்தார்.
"டாக்டர்..என் கனவு எல்லாம் நிஜமா நடந்திருமோன்னு பயமா இருக்கு டாக்டர்"
"ஏன் அப்படி சொல்றீங்க.. சரி அப்படி என்ன கனவு கண்டீங்க..."
"அது எப்படி டாக்டர் சொல்ல முடியும்..நீங்கதான் கனவு கலைஞ்சிடும்ன்னு சொன்னீங்களே"
"இல்ல கலையாது...ஞாபகம் இருக்கும்...கண்ண மூடி யோசிங்க வாசு..."
"அப்ப தூக்கம் வருமா...எப்படி உங்க கூட பேசுவேன்"
"அதெல்லாம் பேசுவீங்க...மைல்டா செதட்டிவ் கொடுத்திருக்கேன்...தூக்கமும் வரும்..பேச்சும் வரும்"
வாசு கண்ணை மூடினான், டாக்டர் அவனை வருடிக்கொடுப்பது போல இருந்தது. டாக்டரின் குரல் கேட்டது. எல்லாம் அமானுஷ்யமாக இருந்தது. கண்கள் இருந்தன எங்கோ போவது போல் இருந்தது ஆனால் உடம்பு மட்டும் நகரவில்லை. அது தெரிந்தது வாசுவிற்கு. திடீரென திரை விலகியது போல் இருந்தது.
"ஐயோ டாக்டர் அவன் தான் இது" வாசு அலறினான்.
"காம் டவுன்...யார் அது ?"
"அவன்தான் டாக்டர்... ரகு"
"யார் ரகு?"
"என் உயிர் நன்பன் டாக்டர்..சே...அப்படி சொல்றதுக்கே என் நாக்கு கூசுது...பாருங்க டாக்டர்..நன்பனின் மனைவின்னு கூட பாக்காம எப்படி பாக்கறான் பாருங்க என் மாலாவ"
"உங்க முன்னாடியே உங்க மனைவிய பார்க்கிறானா....நீங்க என்ன செய்யறீங்க... எங்க இருக்கீங்க"
"நான் திரும்பி தூங்கிகிட்டு இருக்கேன் டாக்டர்...அவன் எப்படி என் பெட் ரூம்ல வந்தான் டாக்டர்...மாலாவையே வெறிச்சி பாக்கிறானே..ஐயோ என் மாலாவ என்ன செய்ய போறானோ"
"எப்படி உங்க ரூமுக்கு வந்தான்...அவன் உங்க வீட்ல தான் தங்கியிருக்கானா"
"இல்ல டாக்டர்...பக்கத்து வீடு டாக்டர்...எப்படி வந்தான்னு தெரியல...ஒருவேல மாலாவே சாவி கொடுத்திருப்பாளோ"
"எப்படி சொல்றீங்க"
"அதான் எப்ப பார்த்தாலும் அவன் கூடவே இவ இளிச்சு இளிச்சு பேசுவாளே டாக்டர்...நான் எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டாளே"
"அப்ப உங்க மனைவிய சந்தேகப்படறீங்களா"
"இல்ல டாக்டர்...இல்ல...தப்பா சொல்லிட்டேன்...அவ பத்திரமாத்து தங்கம்...அவள நான் சந்தேகப்படக்கூடாது...இவன் கதவ உடச்சி வந்திருப்பான்"
"சரி நீங்க எழுந்திருச்சு அவன விரட்டுங்க"
"முடியல டாக்டர்...என்னால எழுந்திருக்க முடியல"
"முடியும்...இது உங்க கனவு... உங்களால முடியும்...உங்க மனைவிய காப்பாத்தனும் நினைச்சா உங்களால முடியும்"
"இல்ல டாக்டர்..என்னால முடியல..நான் மட்டும் எழுந்திருச்சா அவன நார் நாரா கிழிச்சு...ஐயோ அவன் கத்திய எடுக்கிறான் டாக்டர்...மாலா பக்கத்துல கொண்டுபோறான் டாக்டர்...அவள காப்பாத்துங்க...யாராவது காப்பாத்துங்க....மாலா...மாலா" வாசு பெரும் குரலெடுத்து அலறினான்.
"வாசு மிஸ்டர் வாசு" அவன் உடம்பு நகர்ந்தது. யாரோ குலுக்கியது போல இருந்தது. வாசு கண்களை திறந்தான். இப்போது பிரகாசமான வெளிச்சம் இல்லை..சற்று மங்கலான வெளிச்சமே. எதிரே டாக்டர் தெரிந்தார். முன்னைவிட கொஞ்சம் தூரத்தில் உட்கார்ந்திருந்தார். ஆனால் அவர் ஏன் கருப்பு கோட் அனிந்திருக்கிறார்.
"மிஸ்டர் வாசு உங்க மனைவி கொலை வழக்கு விசாரனை முடிவுக்கு வந்தாச்சு. உங்க மனைவி மாலாவ கோடூரமான முறையில கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு இருக்கீங்க. நீங்க ஏதாவது சொல்ல விரும்பறீங்களா" டாக்டரின் குரல் தான், ஆனால் வழக்கமான மருந்து வாசனை அடிக்கவில்லை. டாக்டர் ஏன் கருப்பு கோட் அனிந்திருக்கிறார் என்பது வாசுவிற்கு புரிந்தது. ஒரு கணம் மவுனமாய் இருந்தான்.
"எல்லாம் ஒரு கனவு மாதிரி இருக்கு யுவர் ஆனர்"
"வாசு...நான் பேசறது கேக்கறதா" உருவம் முழுதும் தெரிவது முன் குரல் கேட்டது. வாசு தலையாட்டினான்.
"குட்...நான் யார்ன்னு தெரியுதா" பரிச்சயமான குரல், ஞாபகங்களை ஸ்கேன் செய்தான்.
"டாக்டர்" மெல்ல சொன்னான்
"வெரிகுட்...சொல்லுங்க உங்க பிரச்சனை என்ன?"
"கனவு டாக்டர் கனவு...கெட்ட..கெட்ட கனவு" இப்போது டாக்டரின் உருவம் முழுதும் தெரிந்தது.
"கனவு வருவது நார்மலான விஷயம் தானே...சமயத்தில எல்லோருக்கும் கெட்ட கனவு வரும்"
"இல்ல டாக்டர்...எனக்கு தினமும் வருது..கெட்ட...கெட்ட கனவா வருது"
"எப்போதிருந்து இது மாதிரி இருக்கு"
"ரொம்ப நாளா டாக்டர்...எப்ப ஆரம்பிச்சதுன்னு ஞாபகம் இல்ல..ஆனா ரொம்ப நாளா வருது" வாசு கண்களை மூடி திரும்பவும் ஞாபகங்களை தேடினான்...ம்ம்ம்..விடை வராதென்பது அவனுக்கு தெரியும். நிறைய நாட்கள் யோசித்து பார்த்துவிட்டான், எப்போதிருந்து கனவு கான ஆரம்பித்தான் என்பது தெரியவில்லை.
"வாசு...கனவுங்கிறது நம்மோட ஞாபகங்கள் தான். ஏதாவது ஒரு சுவாரஸ்யமான் நிகழ்ச்சியோ அல்லது மனச பாதிக்கிற விஷயமோ முடிவோ தீர்வோ இல்லாம நம்மோட ஞாபகங்கள்ல தேங்கிடும். அது தான் நாம தூங்கறப்போ கனவா ஒரு உருவம் கொடுத்து வரும். கம்ப்யூட்டர்ல எப்படி ஒரு ப்ரோக்ராம் மெமரில்ல ஏறி எக்ஸ்கியூட் ஆகி, கம்ப்யூட்டர் ஆ·ப் செஞ்சா கானாம போயிடுமோ....அது போல தான் நம்ம கனவும். தூங்கும் போது நம்ம மூளையென்னும் கம்ப்யூட்டர் நம்ம ஞாபகம் என்னும் மெமரியில இருந்து எடுத்து ஓட்டுற ஒரு ஸ்க்ரீன்சேவர் தான் கனவு. தூங்கி எழுந்தா..அது கானாம போயிடும். சில சமயம் ஒரு பகுதி மட்டும் ஞாபகம் இருக்கும்" வாசுவிற்கு புரியுமாறு டாக்டர் லெக்சர் கொடுத்தார்.
"டாக்டர்..என் கனவு எல்லாம் நிஜமா நடந்திருமோன்னு பயமா இருக்கு டாக்டர்"
"ஏன் அப்படி சொல்றீங்க.. சரி அப்படி என்ன கனவு கண்டீங்க..."
"அது எப்படி டாக்டர் சொல்ல முடியும்..நீங்கதான் கனவு கலைஞ்சிடும்ன்னு சொன்னீங்களே"
"இல்ல கலையாது...ஞாபகம் இருக்கும்...கண்ண மூடி யோசிங்க வாசு..."
"அப்ப தூக்கம் வருமா...எப்படி உங்க கூட பேசுவேன்"
"அதெல்லாம் பேசுவீங்க...மைல்டா செதட்டிவ் கொடுத்திருக்கேன்...தூக்கமும் வரும்..பேச்சும் வரும்"
வாசு கண்ணை மூடினான், டாக்டர் அவனை வருடிக்கொடுப்பது போல இருந்தது. டாக்டரின் குரல் கேட்டது. எல்லாம் அமானுஷ்யமாக இருந்தது. கண்கள் இருந்தன எங்கோ போவது போல் இருந்தது ஆனால் உடம்பு மட்டும் நகரவில்லை. அது தெரிந்தது வாசுவிற்கு. திடீரென திரை விலகியது போல் இருந்தது.
"ஐயோ டாக்டர் அவன் தான் இது" வாசு அலறினான்.
"காம் டவுன்...யார் அது ?"
"அவன்தான் டாக்டர்... ரகு"
"யார் ரகு?"
"என் உயிர் நன்பன் டாக்டர்..சே...அப்படி சொல்றதுக்கே என் நாக்கு கூசுது...பாருங்க டாக்டர்..நன்பனின் மனைவின்னு கூட பாக்காம எப்படி பாக்கறான் பாருங்க என் மாலாவ"
"உங்க முன்னாடியே உங்க மனைவிய பார்க்கிறானா....நீங்க என்ன செய்யறீங்க... எங்க இருக்கீங்க"
"நான் திரும்பி தூங்கிகிட்டு இருக்கேன் டாக்டர்...அவன் எப்படி என் பெட் ரூம்ல வந்தான் டாக்டர்...மாலாவையே வெறிச்சி பாக்கிறானே..ஐயோ என் மாலாவ என்ன செய்ய போறானோ"
"எப்படி உங்க ரூமுக்கு வந்தான்...அவன் உங்க வீட்ல தான் தங்கியிருக்கானா"
"இல்ல டாக்டர்...பக்கத்து வீடு டாக்டர்...எப்படி வந்தான்னு தெரியல...ஒருவேல மாலாவே சாவி கொடுத்திருப்பாளோ"
"எப்படி சொல்றீங்க"
"அதான் எப்ப பார்த்தாலும் அவன் கூடவே இவ இளிச்சு இளிச்சு பேசுவாளே டாக்டர்...நான் எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டாளே"
"அப்ப உங்க மனைவிய சந்தேகப்படறீங்களா"
"இல்ல டாக்டர்...இல்ல...தப்பா சொல்லிட்டேன்...அவ பத்திரமாத்து தங்கம்...அவள நான் சந்தேகப்படக்கூடாது...இவன் கதவ உடச்சி வந்திருப்பான்"
"சரி நீங்க எழுந்திருச்சு அவன விரட்டுங்க"
"முடியல டாக்டர்...என்னால எழுந்திருக்க முடியல"
"முடியும்...இது உங்க கனவு... உங்களால முடியும்...உங்க மனைவிய காப்பாத்தனும் நினைச்சா உங்களால முடியும்"
"இல்ல டாக்டர்..என்னால முடியல..நான் மட்டும் எழுந்திருச்சா அவன நார் நாரா கிழிச்சு...ஐயோ அவன் கத்திய எடுக்கிறான் டாக்டர்...மாலா பக்கத்துல கொண்டுபோறான் டாக்டர்...அவள காப்பாத்துங்க...யாராவது காப்பாத்துங்க....மாலா...மாலா" வாசு பெரும் குரலெடுத்து அலறினான்.
"வாசு மிஸ்டர் வாசு" அவன் உடம்பு நகர்ந்தது. யாரோ குலுக்கியது போல இருந்தது. வாசு கண்களை திறந்தான். இப்போது பிரகாசமான வெளிச்சம் இல்லை..சற்று மங்கலான வெளிச்சமே. எதிரே டாக்டர் தெரிந்தார். முன்னைவிட கொஞ்சம் தூரத்தில் உட்கார்ந்திருந்தார். ஆனால் அவர் ஏன் கருப்பு கோட் அனிந்திருக்கிறார்.
"மிஸ்டர் வாசு உங்க மனைவி கொலை வழக்கு விசாரனை முடிவுக்கு வந்தாச்சு. உங்க மனைவி மாலாவ கோடூரமான முறையில கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு இருக்கீங்க. நீங்க ஏதாவது சொல்ல விரும்பறீங்களா" டாக்டரின் குரல் தான், ஆனால் வழக்கமான மருந்து வாசனை அடிக்கவில்லை. டாக்டர் ஏன் கருப்பு கோட் அனிந்திருக்கிறார் என்பது வாசுவிற்கு புரிந்தது. ஒரு கணம் மவுனமாய் இருந்தான்.
"எல்லாம் ஒரு கனவு மாதிரி இருக்கு யுவர் ஆனர்"
Wednesday, January 18, 2006
கொஞ்ச நேரம்
'அப்பாடா பொங்கல் படம் ஒன்று பார்த்தாச்சு" என்று சொல்லலாமென்று தான் நினைத்தேன், ஆனால் "ஐயயோ ஏண்டா பார்த்தோம்" என்று சொல்லும்படி ஆகிவிட்டது. நம்ம 'தல' அஜீத்தின் பரமசிவன் பார்த்தேன். சந்திரமுகி என்னும் பிரம்மாண்ட வெற்றிக்குப்பின் பி.வாசு, பாதியாய் எடை குறைத்த அஜீத் இவர்கள் கூட்டனியில் ஒரு கலக்கல் படம் கொடுத்திருப்பார்கள் என்று ஆர்வமாய் இருந்தேன், கடவுள் புன்னியத்தில் அப்படியெல்லாம் ஒன்றும் செய்யாமல் இதுவரை நாம் பார்த்து புளித்துப்போன கோலிவுட் கோமாளித்தனங்கள் எல்லாம் கொட்டி ஒரு சொதப்பலை கொடுத்திருக்கிறார்கள். 'சிறையில் இருக்கும் மரண் தண்டனை கைதி ஒருவனை வெளியில் கொண்டு வந்து, தீவரவாதிகளை தீர்த்துக்கட்டுவது' என்று சொன்னால் சுவாரஸ்யமாய் தோனும் கதை தான், ஆனால் அதை எப்படியெல்லாம் கொடுமையாய் சொல்லமுடியுமோ அப்படியெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். முதலில் பி.வாசு அவர்களுக்கு, அரை செஞ்சுரி சினிமா எடுத்த நீங்கள் இன்னும் திரைக்கதை என்றால் என்ன என்பது தெரியாமல் இருப்பது அதிசயமே. முடிந்த வரையில் கதையை காட்சியாய் சொல்வது தான் திரைக்கதை, அதைவிட்டு கதாபாத்திரங்கள் எப்போதும் முழம் நீளத்துக்கு லெக்சர் கொடுப்பது ஏன். மேலும் உங்கள் சந்திரமுகி மெகா ஹிட்டாகி 200 நாள் கடந்து ஓடிவிட்டது, அதற்கு நீங்கள் இந்த படத்தில் காட்சிக்கு காட்சி மெனக்கெட்டு விளம்பரபடுத்துவது ஏன். 'தல' அஜீத்... நந்தா, காக்க காக்க, கஜினி படங்களுக்கு உங்களை தான் முதலில் அனுகினார்கள் என்று படித்தேன், அதையெல்லாம் விட்டுவிட்டு இதில் நடிப்பதற்கு உங்களுக்கு அட்வைஸ் செய்த அந்த எதிரி யார் சார்?
ஆக்ஷன் படம் என்று நம்பி படம் பார்த்தால் ஒரே தமாஷாய் இருக்கிறது. வழக்கம் போல் ஒரு கேனச்சி வேடத்தில் லைலா வருகிறார். அமேரிக்க FBI ரேஞ்சுக்கு பிரகாஷ்ராஜ் போலீஸ் துறையை தன் கையில் வைத்துக்கொண்டு ஏதேதோ செய்கிறார். நாட்டில் தலை போகிற விவகாரங்கள் பல இருக்க, தன் வீட்டில் வேலை செய்த ஒரு பாட்டியம்மாவின் பேரன் அஸ்தியை கண்டுபிடிக்க CBI ஆபிசராக ஜெயராம் துப்பு துலக்கி ஹீரோவையும் துரத்துகிறார். காமெடிக்கு விவேக் ம்ஹ¥ம் ஒன்னும் சொல்வதற்கு இல்லை. இருக்கிற விஷயங்கள் போதாதென்று புதுசாக ITயை வேறு இழுக்கிறார்கள், தீவரவாதிகளுக்கு இவர்களே சொல்லி கொடுப்பார்கள் போலிருக்கு. அடிக்கடி கம்ப்யூட்டரை காட்டி, அசிங்கமான க்ராபிக்ஸ் சேர்த்தால் புதுமையான ஆக்ஷன் படம் தரலாமென்று நினைத்திருக்கிறார்கள். வாசு சார், மசாலா படத்தில எல்லாம் இருக்கனும்ங்கிறது வாஸ்தவம் தான், அதுக்காக டிவி சீரியல் எபிசோட் போல காட்சி விட்டு காட்சி காமெடி, செண்டிமெண்ட், ஆக்ஷன் காமிக்கனும்னு அவசியம் இல்ல. நல்ல மசாலா படம் எடுக்கனும்னா போய் தரணி படம் பாருங்க. ஒரே ஒரு விஷயம் மட்டும் இந்த படத்தில் ரசிக்கும்படியாய் இருக்கு அது க்ளைமாக்ஸில் அஜீத் போடும் ஸ்டண்ட். தான் ஒரு ரேஸ் வீரர் என்பதற்கு சாட்சியாய் தூப் போடாமல் நடித்திருக்கிறார். இதை பார்த்த பிறகு ஆதியை பார்க்க பீதியாய் இருக்கு.
ஆக்ஷன் படம் என்று நம்பி படம் பார்த்தால் ஒரே தமாஷாய் இருக்கிறது. வழக்கம் போல் ஒரு கேனச்சி வேடத்தில் லைலா வருகிறார். அமேரிக்க FBI ரேஞ்சுக்கு பிரகாஷ்ராஜ் போலீஸ் துறையை தன் கையில் வைத்துக்கொண்டு ஏதேதோ செய்கிறார். நாட்டில் தலை போகிற விவகாரங்கள் பல இருக்க, தன் வீட்டில் வேலை செய்த ஒரு பாட்டியம்மாவின் பேரன் அஸ்தியை கண்டுபிடிக்க CBI ஆபிசராக ஜெயராம் துப்பு துலக்கி ஹீரோவையும் துரத்துகிறார். காமெடிக்கு விவேக் ம்ஹ¥ம் ஒன்னும் சொல்வதற்கு இல்லை. இருக்கிற விஷயங்கள் போதாதென்று புதுசாக ITயை வேறு இழுக்கிறார்கள், தீவரவாதிகளுக்கு இவர்களே சொல்லி கொடுப்பார்கள் போலிருக்கு. அடிக்கடி கம்ப்யூட்டரை காட்டி, அசிங்கமான க்ராபிக்ஸ் சேர்த்தால் புதுமையான ஆக்ஷன் படம் தரலாமென்று நினைத்திருக்கிறார்கள். வாசு சார், மசாலா படத்தில எல்லாம் இருக்கனும்ங்கிறது வாஸ்தவம் தான், அதுக்காக டிவி சீரியல் எபிசோட் போல காட்சி விட்டு காட்சி காமெடி, செண்டிமெண்ட், ஆக்ஷன் காமிக்கனும்னு அவசியம் இல்ல. நல்ல மசாலா படம் எடுக்கனும்னா போய் தரணி படம் பாருங்க. ஒரே ஒரு விஷயம் மட்டும் இந்த படத்தில் ரசிக்கும்படியாய் இருக்கு அது க்ளைமாக்ஸில் அஜீத் போடும் ஸ்டண்ட். தான் ஒரு ரேஸ் வீரர் என்பதற்கு சாட்சியாய் தூப் போடாமல் நடித்திருக்கிறார். இதை பார்த்த பிறகு ஆதியை பார்க்க பீதியாய் இருக்கு.
Monday, January 16, 2006
சில நேரங்கள் சில ஞாபகங்கள் - அடி உதவுவது போல் I
அமெரிக்காவில் ஒரு நன்பருடன் அவர் அக்கா வீட்டிற்க்கு சென்றிருந்தேன். அவர்களின் மூன்று வயது மகனை பற்றி பேச்சு வந்தது. அப்போது அவர்கள் ஒரு சம்பவம் சொன்னார்கள், ஒருமுறை அந்த சிறுவன் ஏதோ சேட்டை செய்திருக்கிறான், அவனை மிரட்ட அடிப்பதுபோல் கையை ஒங்கியிருக்கிறார்கள் அப்போது அந்தப் பையன் "அடிக்க வந்தால் 911 போன் செய்வேன்" என்று சொல்ல, அவர்கள் மிரண்டு விட்டார்கள்.
இதுபோல் நான் அந்த சிறுவன் வயதில் இப்படி "அடித்தால் போலீசுக்கு சொல்லிடுவேன்" என்று மிரட்டியிருக்க முடியாது. ஏனென்றால் நான் வளர்ந்ததே ஒரு காவலர் குடியிருப்பில்தான், அதுவும் ஒரு காவல் நிலையத்தின் பின்புறம் இருக்கும் காவலர் குடியிருப்பில். நான் வளரும்போது வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி, அடி உதை என்பது மிகவும் பரிச்சயமான விஷயம். எங்கள் அப்பா என்னையும் அண்ணனையும் அடிப்பதற்க்கென்றே ஒரு லத்தி வைத்திருந்தார். நானும் அண்ணனும் எந்த விஷயத்தில் சன்டைப்போட்டாலும் அந்த லத்தியை மறைக்கும் விஷயத்தில் மட்டும் ஒற்றுமையாய் இருப்போம். பொதுவாகவே போலீஸ்காரர்கள் எப்படி குற்றவாளிகளை அடிப்பார்கள் என்று எனக்கு தெரியும். எங்கள் ப்ளாக்கின் மொட்டை மாடியில் இருந்து பார்த்தால், காவல் நிலையத்தில் குற்றவாளிகளை அடிப்பது நன்றாய் தெரியும். சினிமாவில் பார்ப்பது போல் குற்றவாளியை உட்கார வைத்து, மேலே ஹைவால்டேஜ் லைட் போட்டு அடிக்க மாட்டார்கள். அடி என்பது பல வைகைப்படும், முதலில் விசாரனைக்கு கூட்டி வந்து மேல் அதிகாரி விசாரனை செய்ய கான்ஸ்டபிள்கள் அடிப்பார்கள், அப்போது குற்றவாளி எல்லோர் மேலும் சத்தியம் செய்வது கேட்கும். இரண்டாவது வகை, லாக்கப்பில் இருக்கும் எல்லா கைதிகளையும் வெட்ட வெளியில் கூட்டி வந்து, கைகளை மேலே நீட்டச்சொல்லி ஒரு கட்டையை இடுக்கில் வைத்து சரமாரியாக அடிப்பது, இப்படி அடிக்கும்போது விசாரனையெல்லாம் இருக்காது, இது பொதுவான அடி. மூன்றாவது வகை, இரவில் சில பிரத்யேக குற்றவாளிகளை தலைகீழ் தொங்கவிட்டு அடிப்பார்கள், பொதுவாக இதை லாடம் கட்டுவது என்பார்கள். இதில் குற்றவாளியில் உள்ளங்காலில் மட்டும் அடிப்பார்கள். இப்படி அடித்தால் குற்றவாளியால் குறைந்தது ஆறு மாதத்திற்கு சரியாய் நடக்க முடியாது. இப்படியெல்லாம் அலுவலகத்தில் அடியுடன் பழகியவர்கள், வீட்டிற்கு வந்து பிள்ளைகள் தவறு செய்தால், கண்ணே மணியே என்று கொஞ்ச மாட்டார்கள், ஒரு கணம் தான் காவல் நிலையத்தில் அடித்த குற்றவாளியை பார்ப்பது போல் பிள்ளைகளை பார்ப்பார்கள், அதனால் இங்கேயும் பெரும்பாலும் லத்தியே பேசும். எங்கள் வீட்டில் நானும் அண்ணனும் தான் அப்பாவிடம் அடி வாங்கியிருக்கிறோம். தங்கையை அப்பாவோ, அம்மாவோ அடித்து ஞாபகம் இல்லை. ஒருவேளை அவள் பெரும்பாலும் சேட்டைகள் செய்யாமல், நாங்கள் செய்யும் சேட்டைக்கு சாட்சியாய் இருந்ததால் அடித்ததில்லையோ! நானாவது அப்பா அடிக்க கையை ஓங்குவதற்கு முன்னாலேயே, அடிப்பட்டதாய் அழுது, பெரும்பாலும் அடியிலிருந்தோ அல்லது குறைந்த அடியோடு தப்பித்திருக்கிறேன், அண்ணந்தான் எப்போது அப்பா அடித்தாலும், வெள்ளையனை எதிர்த்த தியாகிபோல் நெஞ்சை நிமிர்த்தி நின்று, தர்மடி வாங்குவான். இதுபோல் குழந்தைகளை தண்டிப்பதில் பலருக்கு இப்போது உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் நான் வளர்ந்த அந்த சூழ்நிலையில் இது போன்ற தண்டனைகள் தான் நாங்கள் ஒழுக்கத்துடன் வளர உதவின. இல்லையென்றால் நான் வேறுமாதிரி போயிருப்பேன், அதற்கான அத்தனை வழிகளும் காவலர் குடியிருப்பில் இருந்தன. நான் ஒருபோதும் அப்பாவை குறை சொல்ல மாட்டேன். இத்தனைக்கும், அங்கு இருந்த வீடுகளில் எங்கள் வீட்டில் தான் தண்டனைகள் சற்று குறைவாய் இருந்தன. மற்றவரெல்லாம் பல லத்திகளையும், பெல்ட்டுகளையும் தின்றவர்கள். எங்கள் வீட்டின் மேல் வீட்டில் ஒரு பையன் இருந்தான், என் அண்ணன் வயதுதான் இருக்கும் அவனுக்கு. இருமுறை வீட்டை விட்டு ஓடியவன். இரண்டாவது முறை ஊட்டிக்கு நன்பர்களுடன் சென்றவன், ஒரு மாதம் கழித்துதான் வந்தான். அவன் வந்த இருநாள் வீடு அமைதியாக இருந்தது. மூன்றாம் நாள் இரவு விடிய விடிய அவன் அலறல் அங்கிருந்த எல்லோர் தூக்கத்தையும் கெடுத்தது. என்ன நடந்தது என்பதை எங்களால் ஊகிக்க முடிந்தது. அதன்பிறகு அவன் முற்றிலும் மாறிப்போனான். யாரிடமும் கலக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் நல்ல பிள்ளையாய் மாறிவிட்டான்.
இதுபோல் நான் அந்த சிறுவன் வயதில் இப்படி "அடித்தால் போலீசுக்கு சொல்லிடுவேன்" என்று மிரட்டியிருக்க முடியாது. ஏனென்றால் நான் வளர்ந்ததே ஒரு காவலர் குடியிருப்பில்தான், அதுவும் ஒரு காவல் நிலையத்தின் பின்புறம் இருக்கும் காவலர் குடியிருப்பில். நான் வளரும்போது வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி, அடி உதை என்பது மிகவும் பரிச்சயமான விஷயம். எங்கள் அப்பா என்னையும் அண்ணனையும் அடிப்பதற்க்கென்றே ஒரு லத்தி வைத்திருந்தார். நானும் அண்ணனும் எந்த விஷயத்தில் சன்டைப்போட்டாலும் அந்த லத்தியை மறைக்கும் விஷயத்தில் மட்டும் ஒற்றுமையாய் இருப்போம். பொதுவாகவே போலீஸ்காரர்கள் எப்படி குற்றவாளிகளை அடிப்பார்கள் என்று எனக்கு தெரியும். எங்கள் ப்ளாக்கின் மொட்டை மாடியில் இருந்து பார்த்தால், காவல் நிலையத்தில் குற்றவாளிகளை அடிப்பது நன்றாய் தெரியும். சினிமாவில் பார்ப்பது போல் குற்றவாளியை உட்கார வைத்து, மேலே ஹைவால்டேஜ் லைட் போட்டு அடிக்க மாட்டார்கள். அடி என்பது பல வைகைப்படும், முதலில் விசாரனைக்கு கூட்டி வந்து மேல் அதிகாரி விசாரனை செய்ய கான்ஸ்டபிள்கள் அடிப்பார்கள், அப்போது குற்றவாளி எல்லோர் மேலும் சத்தியம் செய்வது கேட்கும். இரண்டாவது வகை, லாக்கப்பில் இருக்கும் எல்லா கைதிகளையும் வெட்ட வெளியில் கூட்டி வந்து, கைகளை மேலே நீட்டச்சொல்லி ஒரு கட்டையை இடுக்கில் வைத்து சரமாரியாக அடிப்பது, இப்படி அடிக்கும்போது விசாரனையெல்லாம் இருக்காது, இது பொதுவான அடி. மூன்றாவது வகை, இரவில் சில பிரத்யேக குற்றவாளிகளை தலைகீழ் தொங்கவிட்டு அடிப்பார்கள், பொதுவாக இதை லாடம் கட்டுவது என்பார்கள். இதில் குற்றவாளியில் உள்ளங்காலில் மட்டும் அடிப்பார்கள். இப்படி அடித்தால் குற்றவாளியால் குறைந்தது ஆறு மாதத்திற்கு சரியாய் நடக்க முடியாது. இப்படியெல்லாம் அலுவலகத்தில் அடியுடன் பழகியவர்கள், வீட்டிற்கு வந்து பிள்ளைகள் தவறு செய்தால், கண்ணே மணியே என்று கொஞ்ச மாட்டார்கள், ஒரு கணம் தான் காவல் நிலையத்தில் அடித்த குற்றவாளியை பார்ப்பது போல் பிள்ளைகளை பார்ப்பார்கள், அதனால் இங்கேயும் பெரும்பாலும் லத்தியே பேசும். எங்கள் வீட்டில் நானும் அண்ணனும் தான் அப்பாவிடம் அடி வாங்கியிருக்கிறோம். தங்கையை அப்பாவோ, அம்மாவோ அடித்து ஞாபகம் இல்லை. ஒருவேளை அவள் பெரும்பாலும் சேட்டைகள் செய்யாமல், நாங்கள் செய்யும் சேட்டைக்கு சாட்சியாய் இருந்ததால் அடித்ததில்லையோ! நானாவது அப்பா அடிக்க கையை ஓங்குவதற்கு முன்னாலேயே, அடிப்பட்டதாய் அழுது, பெரும்பாலும் அடியிலிருந்தோ அல்லது குறைந்த அடியோடு தப்பித்திருக்கிறேன், அண்ணந்தான் எப்போது அப்பா அடித்தாலும், வெள்ளையனை எதிர்த்த தியாகிபோல் நெஞ்சை நிமிர்த்தி நின்று, தர்மடி வாங்குவான். இதுபோல் குழந்தைகளை தண்டிப்பதில் பலருக்கு இப்போது உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் நான் வளர்ந்த அந்த சூழ்நிலையில் இது போன்ற தண்டனைகள் தான் நாங்கள் ஒழுக்கத்துடன் வளர உதவின. இல்லையென்றால் நான் வேறுமாதிரி போயிருப்பேன், அதற்கான அத்தனை வழிகளும் காவலர் குடியிருப்பில் இருந்தன. நான் ஒருபோதும் அப்பாவை குறை சொல்ல மாட்டேன். இத்தனைக்கும், அங்கு இருந்த வீடுகளில் எங்கள் வீட்டில் தான் தண்டனைகள் சற்று குறைவாய் இருந்தன. மற்றவரெல்லாம் பல லத்திகளையும், பெல்ட்டுகளையும் தின்றவர்கள். எங்கள் வீட்டின் மேல் வீட்டில் ஒரு பையன் இருந்தான், என் அண்ணன் வயதுதான் இருக்கும் அவனுக்கு. இருமுறை வீட்டை விட்டு ஓடியவன். இரண்டாவது முறை ஊட்டிக்கு நன்பர்களுடன் சென்றவன், ஒரு மாதம் கழித்துதான் வந்தான். அவன் வந்த இருநாள் வீடு அமைதியாக இருந்தது. மூன்றாம் நாள் இரவு விடிய விடிய அவன் அலறல் அங்கிருந்த எல்லோர் தூக்கத்தையும் கெடுத்தது. என்ன நடந்தது என்பதை எங்களால் ஊகிக்க முடிந்தது. அதன்பிறகு அவன் முற்றிலும் மாறிப்போனான். யாரிடமும் கலக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் நல்ல பிள்ளையாய் மாறிவிட்டான்.
Wednesday, January 04, 2006
ஆங்கில படம்
நான் முதன் முதலில் பார்த்த ஆங்கில பட அனுபவம் எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது. இரண்டாவதோ மூன்றாவதோ படித்துக்கொண்டிருந்தேன், அப்பா தேவிபாரடைஸ் தியேட்டரில் ஒரு நல்ல ஆக்ஷன் படம் வந்திருப்பதாய் அறிந்து, முதலில் அதை தான் பார்த்து, 'குழந்தைகளை கூட்டிச் செல்லும் படம் தான்' என்பதை உறுதி செய்து எங்களையெல்லாம் கூட்டிச் சென்றார். நைட்ஷோ போனோம், முதல் முறையாய் லி·ப்டையும் அப்போது தான் பார்க்கிறேன். ஸீட்டில் போய் உட்கார்ந்ததும் எனக்கு குளிர் தொற்றிக்கொண்டது, உடம்பை இறுக்கி அனைத்தபடி பல்லில் தந்தியடித்தபடியே படத்தை பார்க்கிறேன். படம் பெயர் ஏதோ thunder என்று வரும், சரியாய் ஞாபகம் இல்லை. படத்தில் ஹீரோ சில்வெஸ்டர் ஸ்டல்லோன் போல் தலையில் ரிப்பன் கட்டி, பெரிய பெரிய குழாய் துப்பாக்கிகள் வைத்து, செந்தில் ஒரு படத்தில் சொல்வது போல் தோளின் குறுக்கில் செறுகி வைத்த மூக்குப்பொடி டப்பாக்கள் போல புல்லட் பெல்ட் மாட்டி, புல்டோசர் போன்ற வாகனத்தில் வந்து எதிரிகளை வதம் செய்தார். ஏன் செய்தார் என்பது ஞாபகம் இல்லை, அடித்த குளிரில் நான் பாதி படத்தின் மேல் தூங்கிவிட்டேன். அதன் பிறகு நானும் அண்ணனும், அரையாண்டு, காலாண்டு லீவுக்கெல்லாம் அப்பாவை வீடியோ ப்ளேயர் வாடகைக்கு வாங்கி வரச்சொல்லி, snake in the monkey shadows, monkey in the eagle shadows..என்று எல்லா விலங்கினத்தின் பேரிலும் வரும் ஆங்கில-சைனா-குங்பூ படங்களை வாங்கி பார்ப்போம். இது போன்ற படங்கள் எல்லாவற்றிலும் கதை ஒரே மாதிரியே தான் இருக்கும். ஹீரோவின் குடும்பத்தை pantன் மேல் கருப்பு பாவாடை கட்டிய வில்லன் கொன்றுவிடுவான், ஹீரோ நேரே வெள்ளை பாவாடை கட்டிய மாஸ்டரிடம் "மாஷ்டர்..டீச் மீ..குங்பூ" என்று மூச்சு விடுவதை விட வேகமாய் பேசி, கஷ்டப்பட்டு குங்பூ கற்று, மீண்டும் கருப்பு பாவாடை கட்டிய வில்லனை அடித்து நொறுக்கி பழிவாங்குவான். அப்பாவின் நன்பர் ஒருவர் ஜாக்கிச்சான் பட ரசிகர். எந்த ஜாக்கிச்சான் படம் வந்தாலும் தன் இரு மகன்களையும் தியேட்டருக்கு கூட்டிச் சென்று படத்தை பார்த்துவிடுவார். என்ன தான் ஆக்ஷன் படமானாலும், ஜாக்கிச்சான் படங்களிலும் ஒன்றிரண்டு விவகார காட்சிகள் வரும், காமெடியாக தான், அதனால் அவர் எப்போதும் மகன்களை தன் இருபுறமும் உட்கார வைத்து, அவர்களின் தோளில் மேல் கைபோட்டுக்கொன்டே படம் பார்ப்பார். படத்தில் இசகுபிசகாக காட்சிகள் வந்தால் உடனே கைகளை தூக்கி மகன்களின் கண்களை மூடிவிடுவார்.
ஒருமுறை சாந்தம் தியேட்டரில் குழந்தைகள் விரும்பும் ஆங்கிலப்படம் ஒன்று ஓடுவதாக அப்பா கேள்விபட, அதை பார்க்க ஒரு ஞாயிற்றுக்கிழமை ஈவினிங் ஷோவிற்கு டிக்கெட் ரிசர்வ் செய்தார். கடைசி நிமிஷத்தில் அப்பாவால் படத்திற்கு எங்களோடு வர முடியவில்லை, உடனே அம்மாவை எங்களையெல்லாம் அழைத்து போகச் சொன்னார். அம்மாவிற்கோ ஒரே பதற்றம், இதற்குமுன் எங்களை தனியாய் ஆங்கிலப் படத்திற்கு கூட்டி சென்றதே கிடையாது. சம்சாரம் அது மின்சாரம், மனதில் உறுதி வேண்டும் போன்ற நல்ல தமிழ் படத்திற்கு தான் கூட்டி சென்றிருக்கிறார். சத்யம் காம்ப்ளெக்ஸ் அடைந்ததும் அங்கிருந்த போஸ்டர்களை பார்த்தார், அப்படி ஒன்றும் வில்லங்கமான போஸ்டர்கள் அங்கு கானோம். அங்கு நின்றுகொண்டிருந்த நேரமெல்லாம் டென்ஷனாகவே இருந்தார் அம்மா. கொஞ்ச நேரம் கழித்து என் அண்ணனிடம் "உள்ள போய் படம் போஸ்டர்ல எங்கேயாவது கேப்பிடல் ஏ சுத்தி சர்க்கிள் போட்டிருக்கான்னு பாத்துகிட்டு வா" என்று அவனை உள்ளே அனுப்பினார். அவன் திரும்பி வந்து
"அப்படி ஒன்னும் இல்லம்மா"
"நல்லா பாத்தியா"
"நல்லா பாத்துட்டேன்"
அம்மாவிற்கு இன்னும் பதற்றம் குறையவில்லை, திரும்பவும் அண்ணனை உள்ளே போய் பார்க்கச் சொன்னார். அண்ணன் இந்தமுறை முரண்டு பிடித்தான், வழக்கம் போல் அம்மா பார்வையால் அதட்டி அவனை போக வைத்தார். அண்ணன் வந்து
"நல்லா பாத்துட்டேன்மா...சத்யம் தியேட்டர்ல ஓடற படத்துல தான் அந்த மாதிரி போட்டிருக்கு" என்று போஸ்டரை கைகான்பித்தான். சத்யம் தியேட்டரில் அப்போது 'fly' என்ற படம் ஓடிக்கொண்டிருந்தது, அதிலும் கூட மனிதர்களின் படங்கள் கானோம், ஒரு பெரிய ஈயின் படமே இருந்தது. இந்தமுறை அம்மா கையில் வைத்திருந்த டிக்கெட்டை அண்ணனிடம் கொடுத்து
"போய் அந்த டிக்கெட் கவுண்டர்ல...இந்த டிக்கெட்ட காமிச்சு, சாந்தம் தியேட்டர்லதான் நாம பாக்க வந்த படம் ஓடுதான்னு கேட்டுட்டு வா" என்று சொன்னார்.
அண்ணனிற்கு 'ஏன் தான் வந்தோம்' என ஆகிவிட்டது, கவுண்ட்டரில் போய் அம்மா சொன்னதை உறுதிபடுத்திக்கொண்டு திரும்பினான். கொஞ்ச நேரம் கழித்து ஒரு வழியாய் தியேட்டரில் போய் உட்கார்ந்தோம். திரையில் அஸ்ஸாமின் ஆதிவாசி நடனமும், கூடவே பாரதப் பிரதமர் விஜயமும், கருப்பு வெள்ளையில் நியூஸ் ரீலாய் ஓடுக்கொண்டிருந்தது. அது முடிந்து வீக்கோ டருமெரிக் விளம்பரம் வந்தது. அப்போது அம்மா எங்களிடம் திரும்பி "நான் சொல்லும்போது கண்ண மூடிக்கனும்...புரியுதா" என்று எங்களுக்கு instructions கொடுத்தாள். நல்லவேளை பாக்யராஜ் படம் போல சில்லறை மாற்றி வைக்கவில்லை. படம் ஆரம்பித்து டைட்டில் முடிந்து ஒன்றிரண்டு காட்சிகள் வரையில் அம்மா டென்ஷனாகவே இருந்தார். பிறகு படத்தில் இன்வால்வ் ஆகி எங்களோடு மிகவும் ரசித்து பார்த்தார். படம் முடியும் வரையில் அம்மாவின் instructionsக்கு வேலையில்லாமல் போயிற்று. இப்படி அம்மாவுக்கு ஒரு பெரிய மிஷனாய் அமைந்த அந்த படத்தின் பெயரை நான் இன்னும் சொல்லவில்லையே, அது வேறொன்றும் இல்லை, மெக்காலே கல்க்கின் நடித்து வெளிவந்த 'ஹோம் அலோன்' பார்ட் ஒன் தான் அந்த படம்.
ஒருமுறை சாந்தம் தியேட்டரில் குழந்தைகள் விரும்பும் ஆங்கிலப்படம் ஒன்று ஓடுவதாக அப்பா கேள்விபட, அதை பார்க்க ஒரு ஞாயிற்றுக்கிழமை ஈவினிங் ஷோவிற்கு டிக்கெட் ரிசர்வ் செய்தார். கடைசி நிமிஷத்தில் அப்பாவால் படத்திற்கு எங்களோடு வர முடியவில்லை, உடனே அம்மாவை எங்களையெல்லாம் அழைத்து போகச் சொன்னார். அம்மாவிற்கோ ஒரே பதற்றம், இதற்குமுன் எங்களை தனியாய் ஆங்கிலப் படத்திற்கு கூட்டி சென்றதே கிடையாது. சம்சாரம் அது மின்சாரம், மனதில் உறுதி வேண்டும் போன்ற நல்ல தமிழ் படத்திற்கு தான் கூட்டி சென்றிருக்கிறார். சத்யம் காம்ப்ளெக்ஸ் அடைந்ததும் அங்கிருந்த போஸ்டர்களை பார்த்தார், அப்படி ஒன்றும் வில்லங்கமான போஸ்டர்கள் அங்கு கானோம். அங்கு நின்றுகொண்டிருந்த நேரமெல்லாம் டென்ஷனாகவே இருந்தார் அம்மா. கொஞ்ச நேரம் கழித்து என் அண்ணனிடம் "உள்ள போய் படம் போஸ்டர்ல எங்கேயாவது கேப்பிடல் ஏ சுத்தி சர்க்கிள் போட்டிருக்கான்னு பாத்துகிட்டு வா" என்று அவனை உள்ளே அனுப்பினார். அவன் திரும்பி வந்து
"அப்படி ஒன்னும் இல்லம்மா"
"நல்லா பாத்தியா"
"நல்லா பாத்துட்டேன்"
அம்மாவிற்கு இன்னும் பதற்றம் குறையவில்லை, திரும்பவும் அண்ணனை உள்ளே போய் பார்க்கச் சொன்னார். அண்ணன் இந்தமுறை முரண்டு பிடித்தான், வழக்கம் போல் அம்மா பார்வையால் அதட்டி அவனை போக வைத்தார். அண்ணன் வந்து
"நல்லா பாத்துட்டேன்மா...சத்யம் தியேட்டர்ல ஓடற படத்துல தான் அந்த மாதிரி போட்டிருக்கு" என்று போஸ்டரை கைகான்பித்தான். சத்யம் தியேட்டரில் அப்போது 'fly' என்ற படம் ஓடிக்கொண்டிருந்தது, அதிலும் கூட மனிதர்களின் படங்கள் கானோம், ஒரு பெரிய ஈயின் படமே இருந்தது. இந்தமுறை அம்மா கையில் வைத்திருந்த டிக்கெட்டை அண்ணனிடம் கொடுத்து
"போய் அந்த டிக்கெட் கவுண்டர்ல...இந்த டிக்கெட்ட காமிச்சு, சாந்தம் தியேட்டர்லதான் நாம பாக்க வந்த படம் ஓடுதான்னு கேட்டுட்டு வா" என்று சொன்னார்.
அண்ணனிற்கு 'ஏன் தான் வந்தோம்' என ஆகிவிட்டது, கவுண்ட்டரில் போய் அம்மா சொன்னதை உறுதிபடுத்திக்கொண்டு திரும்பினான். கொஞ்ச நேரம் கழித்து ஒரு வழியாய் தியேட்டரில் போய் உட்கார்ந்தோம். திரையில் அஸ்ஸாமின் ஆதிவாசி நடனமும், கூடவே பாரதப் பிரதமர் விஜயமும், கருப்பு வெள்ளையில் நியூஸ் ரீலாய் ஓடுக்கொண்டிருந்தது. அது முடிந்து வீக்கோ டருமெரிக் விளம்பரம் வந்தது. அப்போது அம்மா எங்களிடம் திரும்பி "நான் சொல்லும்போது கண்ண மூடிக்கனும்...புரியுதா" என்று எங்களுக்கு instructions கொடுத்தாள். நல்லவேளை பாக்யராஜ் படம் போல சில்லறை மாற்றி வைக்கவில்லை. படம் ஆரம்பித்து டைட்டில் முடிந்து ஒன்றிரண்டு காட்சிகள் வரையில் அம்மா டென்ஷனாகவே இருந்தார். பிறகு படத்தில் இன்வால்வ் ஆகி எங்களோடு மிகவும் ரசித்து பார்த்தார். படம் முடியும் வரையில் அம்மாவின் instructionsக்கு வேலையில்லாமல் போயிற்று. இப்படி அம்மாவுக்கு ஒரு பெரிய மிஷனாய் அமைந்த அந்த படத்தின் பெயரை நான் இன்னும் சொல்லவில்லையே, அது வேறொன்றும் இல்லை, மெக்காலே கல்க்கின் நடித்து வெளிவந்த 'ஹோம் அலோன்' பார்ட் ஒன் தான் அந்த படம்.
Tuesday, January 03, 2006
தமிழ் பேசுங்க
முதலில் இது ஏதோ தமிழைக் காப்பாற்ற புறப்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் இயக்கத்தின் பிரசார பதிவு என்று முடிவு கட்டாதீர்கள். அப்படி இருந்தால் 'தமிழில் மட்டும் பேசுங்க....இல்லையென்றால் துடைப்பம் பறக்கும்' என்று தலைப்பு வைத்திருப்பேன். சுமார் நான்கைந்து வருடம் முன்பு ஒரு நாள் என் நன்பன் ப்ரேமை பார்க்க அவன் வீட்டிற்கு சென்றேன். வீட்டில் நிறைய விருந்தினர்கள் இருந்தார்கள் அதனால் அவனை அழைத்து அவன் வீட்டின் மாடிக்கு சென்றேன் (இல்லையென்றாலும் மாடிக்கு தான் போவோம், அங்கு தான் எங்களுக்கு ஒரு privacy கிடைக்கும்). அப்போது மாடிக்கு அவன் வீட்டிற்கு வந்திருந்த விருந்தினரில் ஒரு சிறுவன், நல்ல வெளுப்பாய் புஷ்டியாய், பார்க்கும்போதே மம்மி, டாடி, ஆன்ட்டி என மற்றவரை விளிக்கும், நாம் அன்றாடம் பார்க்கும் சென்னை நகரத்து 'ஆரோக்யா பால்' சிறுவனைப் போலவே இருந்தான். அவனை பார்த்து ப்ரேம் "டேய் இங்க என்ன பன்ற" என்று இதே தோனியில் கேட்டான். அதற்கு அவன் "காற்று வேண்டிக்கொண்டு இருக்கிறேன் அண்ணா" என்றான். எனக்கு ஒரே ஆச்சர்யம், இவ்வளவு சுத்த தமிழை பேச்சு வழக்கில் நான் கேட்டதே இல்லை. என் ஆச்சர்யத்தை கவனித்த ப்ரேம் "மச்சி ஷாக் ஆவாத..இந்த பையன் srilankan..அதான் இப்படி பேசறான்...புரியறது கொஞ்சம் கஷ்டம்தான்" என்றான். எனக்கு இதற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. இப்படி சொன்னதற்கு ப்ரேம் மீது கடுப்பாய் இருந்தது, அந்த சிறுவன் மீது பொறாமையா இருந்தது. தமிழ்நாட்டில் பிறந்து, நல்ல தமிழ் பேசவேண்டுமானால் நான் ஸ்ரீலங்கா தான் போகவேண்டும் போல. சென்ற வருடம் விடுமுறைக்கு சென்னை சென்றபோது ஒரு சம்பவம். விசா ஸ்டாம்பிங்காக பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க நுங்கம்பாக்கத்தில் உள்ள konica ஸ்டுடியோவிற்கு என் நன்பனுடன் சென்றேன். ரிசப்ஷனில் சோகையாய் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள் நான் அவரிடம் சென்று "யுஎஸ் விசாவுக்கு போட்டோ எடுக்கனும் (சாதாரனமாய் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ என்று சொல்ல முடியாது, யுஎஸ் விசாவுக்கென சில specifications உள்ளது) " என்று சொன்னேன். "அந்த கவுன்ட்டர்ல போய் வெயிட் பன்னுங்க" அருகே இருந்த கவுன்ட்டரை கை கான்பித்தாள். நான் அங்கிருந்து நகர்ந்து அவள் காட்டிய இடத்தில் நன்பனுடன் போய் நின்றேன். சிறுது நேரம் கழித்து அந்தப்பெண்ணே என் எதிரில் வந்து "sir we have various packages for passports, do you like the photo to be copied in the CD...." என்று இல்லாத ஒரு accentல் சிரமப்பட்டு ஆங்கிலம் பேசினாள். எனக்கு ஒரே குழப்பம், என்னடா இது, சற்று நேரம் முன்புதான் இவளிடம் தமிழில் பேசினோம், பதிலுக்கு தமிழிலே பதில் சொன்னாள், ஏன் இந்த இடத்தில் இப்படி பேசுகிறாள். பிறகு நானும் ஆங்கிலத்திலே பேசி அவளிடம் ஆர்டர் கொடுத்தேன். திரும்பியவுடன் இதையெல்லாம் கவனித்த என் நன்பன் "என்னடா அங்க தமிழ்ல பேசினா...இங்க இப்படி பீட்டர் விடறா" நான் உடனே "தெரியலடா ஒரு வேள american bodyய கரெக்ட் பன்றாளோ" (சும்மா ஒரு டைமிங்கிற்கு விவேக்கின் பிட்டை எடுத்து விட்டேன் ஹி..ஹி).இது மாதிரி மற்றொரு நாள் சில டாக்குமெண்ட்டுகளை மும்பைக்கு கூரியர் அனுப்ப DHL சென்றேன், அங்கும் இதே போல் ஒரு அம்மனி நல்ல சேலை கட்டி, சடை பின்னி, மல்லிகை வைத்து, பார்க்க nativityயுடன் இருக்க, நான் நேரே சென்று "பாம்பேக்கு ஒரு கூரியர் அனுப்பனுங்க" என்று தமிழில் கேட்க அவர் "sir it will reach only by friday sir" என்று சொன்னாள். சரி அவருக்கு உன்மையிலே தமிழ் தெரியாதோ என்று நினைத்த நான் "can it be received sooner by any chance" என்று கேட்க அந்த அம்மனி one minute please என்று சொல்லி திரும்பி அருகில் இருப்பவரிடம் "பெருமாள் சார்...பாம்பேக்கு ரெண்டு நாள்ல முன்னடி கூரியர் போகுமா" என்று கேட்டாள். பெருமாள் போகாது என்று சொல்ல, no sir என்று அனாவசியத்திற்கு அதை மொழிபெயர்த்தாள். கோனிக்காவிற்கு வந்த அதே நன்பனிடம் "என்னடா இது எங்கேயும் இப்படிதானா" என்று நான் வருத்தப்பட, அவன் "மச்சான் இப்ப பெட்டிக்கடைக்கு போனா கூட இப்படித்தான் இங்கிலிஷ்ல அலட்றாய்ங்க" என்று அவன் ஆதங்கப்பட்டான்.
நான் கேட்பதெல்லாம் இதுதான், தமிழ் என்று தெரிந்தபின் கூட ஏன் தமிழில் பேச தயங்குகிறார்கள். நான் சென்னையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது, official communication எல்லாமே ஆங்கிலத்தில் தான் நடக்கும். அதற்கு சில நியாங்கள் உள்ளன, அது ஒரு பன்னாட்டு நிறுவனம், ஐடி கம்பெனி அதனால் உள்ளே meeting, conference எல்லாமே ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும். சென்னையில் உள்ள எல்லா ஐடி நிறுவனங்களிலும் இப்படி தான் உள்ளன. நன்பரிடமும், தெரிந்தவர்களிடமும் unofficialஆக பேசும்போது தமிழில் தான் பேசுவோம். அதே நபருடன் வேலை சம்பந்தமாக பேசும்போது strictly english. ஆனால் இது சென்னை மற்றும் பெங்களூரில் மட்டும் தானா என்று நினைக்கிறேன். ஒரு சமயம் எங்கள் நிறுவனத்தில் ஒரு training எடுப்பதற்காக புனே சென்றேன். ட்ரெயினிங் ரூமில், என்னை அறிமுகப்படுத்தும்போதே, எனக்கு ஹிந்தி தெரியாது என்று அழுத்தமாய் சொல்லி ட்ரெயினிங் நடத்தினேன். நடு நடுவே சிலர் வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ என்னிடம் ஹிந்தியிலே கேள்வி கேட்டனர். எனக்கு எரிச்சலாகிவிட்டது. அப்போது தான் கவனித்தேன், அங்கு எப்போதும், எல்லோரும் ஹிந்தியிலே பேசினார்கள். அவ்வப்போது தான் ஆங்கிலம் எட்டிப்பார்த்தது. ஆனால் சென்னையில் இப்போதெல்லாம் அவ்வப்போதும் தமிழ் தலை கான்பதில்லை. முக்கியமாய் பெண்கள்தான் அதிகமாய் ஆங்கிலத்தில் தமிழ் கலந்து அளக்கிறார்கள் என்று நான் சொன்னால், மகளிர் அணி யாரும் என்மீது கோபப்படக்கூடாது. இது நானே பல தடவை சென்னையில் பார்த்த உன்மை. ஒரு சமயம் மதிய உணவு சாப்பிட நான் போய்க்கொண்டிருந்தேன் அப்போது ஒரு பெண் மற்றொருவரிடம் "Hey come...yaar..stomach ஒரே பசியிங்yaar" என்று கூப்பிட்டுக்கொண்டிருந்தாள். ஒன்று "வாடி சாப்பிட போகலாம் பசிக்குது" என்று தமிழில் கூப்பிட்டிருக்கலாம், இல்லை முற்றிலுமாய் ஆங்கிலத்திலே கூப்பிட்டு இருக்கலாம். இவர்கள் ஏன் புதுசாய் ஒரு மொழியை கண்டுபிடிக்கிறார்களோ. இதை ஒருவன் எங்கள் intranetல் இருக்கும் discussion forumத்தில் போட, அதற்கு குஷ்புவுக்கு வந்த எதிர்ப்பை போல பல மடங்கு மகளிர் அணியினர் அவனைக் கிழித்து தோரனம் கட்டிவிட்டனர். ஒரு முரண்பாட்டை மட்டும் இவர்களை போன்றவர்களிடம் பார்க்கிறேன், அங்கு இப்படி ஆங்கிலம் அல்லது தமிங்கிலம் பேசுபவர்கள், இங்கு வந்தால் மட்டும் முடிந்தவரையில் தமிழில் பேசுகின்றனர். ஒருவேளை அந்நியர் காதில் கேட்காதவாறு ஒரு cryptographic privacyஐ உருவாக்குகிறார்களோ.. என்னவோ.
நான் கேட்பதெல்லாம் இதுதான், தமிழ் என்று தெரிந்தபின் கூட ஏன் தமிழில் பேச தயங்குகிறார்கள். நான் சென்னையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது, official communication எல்லாமே ஆங்கிலத்தில் தான் நடக்கும். அதற்கு சில நியாங்கள் உள்ளன, அது ஒரு பன்னாட்டு நிறுவனம், ஐடி கம்பெனி அதனால் உள்ளே meeting, conference எல்லாமே ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும். சென்னையில் உள்ள எல்லா ஐடி நிறுவனங்களிலும் இப்படி தான் உள்ளன. நன்பரிடமும், தெரிந்தவர்களிடமும் unofficialஆக பேசும்போது தமிழில் தான் பேசுவோம். அதே நபருடன் வேலை சம்பந்தமாக பேசும்போது strictly english. ஆனால் இது சென்னை மற்றும் பெங்களூரில் மட்டும் தானா என்று நினைக்கிறேன். ஒரு சமயம் எங்கள் நிறுவனத்தில் ஒரு training எடுப்பதற்காக புனே சென்றேன். ட்ரெயினிங் ரூமில், என்னை அறிமுகப்படுத்தும்போதே, எனக்கு ஹிந்தி தெரியாது என்று அழுத்தமாய் சொல்லி ட்ரெயினிங் நடத்தினேன். நடு நடுவே சிலர் வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ என்னிடம் ஹிந்தியிலே கேள்வி கேட்டனர். எனக்கு எரிச்சலாகிவிட்டது. அப்போது தான் கவனித்தேன், அங்கு எப்போதும், எல்லோரும் ஹிந்தியிலே பேசினார்கள். அவ்வப்போது தான் ஆங்கிலம் எட்டிப்பார்த்தது. ஆனால் சென்னையில் இப்போதெல்லாம் அவ்வப்போதும் தமிழ் தலை கான்பதில்லை. முக்கியமாய் பெண்கள்தான் அதிகமாய் ஆங்கிலத்தில் தமிழ் கலந்து அளக்கிறார்கள் என்று நான் சொன்னால், மகளிர் அணி யாரும் என்மீது கோபப்படக்கூடாது. இது நானே பல தடவை சென்னையில் பார்த்த உன்மை. ஒரு சமயம் மதிய உணவு சாப்பிட நான் போய்க்கொண்டிருந்தேன் அப்போது ஒரு பெண் மற்றொருவரிடம் "Hey come...yaar..stomach ஒரே பசியிங்yaar" என்று கூப்பிட்டுக்கொண்டிருந்தாள். ஒன்று "வாடி சாப்பிட போகலாம் பசிக்குது" என்று தமிழில் கூப்பிட்டிருக்கலாம், இல்லை முற்றிலுமாய் ஆங்கிலத்திலே கூப்பிட்டு இருக்கலாம். இவர்கள் ஏன் புதுசாய் ஒரு மொழியை கண்டுபிடிக்கிறார்களோ. இதை ஒருவன் எங்கள் intranetல் இருக்கும் discussion forumத்தில் போட, அதற்கு குஷ்புவுக்கு வந்த எதிர்ப்பை போல பல மடங்கு மகளிர் அணியினர் அவனைக் கிழித்து தோரனம் கட்டிவிட்டனர். ஒரு முரண்பாட்டை மட்டும் இவர்களை போன்றவர்களிடம் பார்க்கிறேன், அங்கு இப்படி ஆங்கிலம் அல்லது தமிங்கிலம் பேசுபவர்கள், இங்கு வந்தால் மட்டும் முடிந்தவரையில் தமிழில் பேசுகின்றனர். ஒருவேளை அந்நியர் காதில் கேட்காதவாறு ஒரு cryptographic privacyஐ உருவாக்குகிறார்களோ.. என்னவோ.
Subscribe to:
Posts (Atom)