(சுஜாதாவின் இடது ஓரத்தில் என்ற கதையை படித்து inspire ஆகி எழுதியது. இதில் என்ன சூட்சுமம் கையாள முயற்சி செய்திருக்கிறேன் என்று யாராவது சொன்னால், அவருக்கு சுக்கிர திசை ஆரம்பமாகும், நாலாம் இடத்தில் 'சூரியன்' அமர்ந்து, ஐந்தாம் இடத்தில் 'நாட்டாமை' நல்ல தீர்ப்பு சொல்வார்)
புருஷோத்தமன் கன்னத்தில் கைவத்தபடி வலது பக்கம் திரும்பி உற்று பார்த்துக்கொண்டிருந்தான், அவன் முன் அகிலாவின் முகம் தெரிந்தது. அவன் அவளை கவனித்ததாய் தெரியவில்லை.
டாக்டர் திவாகர் அங்கு நிலவிய நிசப்தத்தை கலைத்தார்.
"மிஸ்டர் புருஷோத்தமன், நீங்க படிச்சவர், பெரிய எழுத்தாளரும் கூட, உங்களுக்கு நான் சொல்லனும்னு அவசியம் இல்ல, உங்க பிரச்சினை என்னன்னு உங்களுக்கே தெரியும்"
"பிரச்சினைன்னு நீங்க தான் சொல்றீங்க டாக்டர், அப்படியே அது உன்மையா இருந்தாலும், அது எனக்கு ஒரு பிரச்சினையாவே தெரியலயே...அகிலாவுக்கும் தெரியல"
"புருஷோத்தமன் first thing உங்க மனைவிக்கு அது பிரச்சினையா இருக்கு...second thing திரும்பவும் சொல்றன் அகிலான்னு யாரும் இல்ல அது வெறும் hallucinations"
"இல்ல டாக்டர், அகிலா இதோ பக்கத்துல தான் உட்கார்ந்திருக்கா....என்ன...என்னது...இரு டாக்டர்கிட்ட பேசிகிட்டு இருக்கேன்ல" தனக்கு அருகில் இருந்த சேரைப்பார்த்து பேசினான்.
திவாகர் தன் கண்ணாடியை கழற்றி, சேரை நகர்த்தி கொஞ்சம் முன்னே வந்தார், தலையை சற்று தாழ்த்தி புருஷோத்தமனை நேருக்கு நேர் பார்த்து பேசினார்.
"look...look here புருஷோத்தமன்...என்ன பாருங்க" புருஷோத்தமன் திரும்பி திவாகரை பார்த்தான்
"அகிலாங்கிறது யாரு?"
"அகிலா என் தோழி..இல்ல அதுக்கும் மேல..இதோ இருக்கா டாக்டர்...இங்க பாருங்க டாக்டர், இதோ சிரிக்கிறா பாருங்க.."
"அகிலாவ முதன் முதல்ல எங்க பார்த்தீங்க புருஷோத்தமன்"
"முதன் முதல்ல என் கதையில படிச்சேன் டாக்டர்"
"படிக்கில புருஷோத்தமன், படைத்து இருக்கீங்க...உங்க கதையில வருகிற ஒரு கேரக்டர் அவங்க...ஏதோ சில காரணங்கள் அந்த கேரக்டர் உங்கள ரொம்பவே பாதிச்சிருக்கு...அந்த பாதிப்புகள் அகிலாவுக்கு உருவம் கொடுத்திருக்கு அது தான் பிம்பமா உங்கள தொடருது"
புருஷோத்தமன் ஒன்றும் பேசவில்லை, வெறுமை மிஞ்சிய அவண் கண்கள் திவாகரையே பார்த்துக்கொண்டிருந்தன. திவாகர் தொடர்ந்தார்
"Whatever you having now are episodes of schizophrenia psychosis. உங்களுக்கும் உங்க மனைவிக்கும் பல விஷயத்துல கருத்து வேறுபாடு. நீங்க எழுதுறது அவங்களுக்கு பிடிக்கல, நீங்க எதிர்பார்த்த அளவு உங்க சுக துக்கத்துல அவங்க பங்கு எடுத்துக்கல..ஆனா நீங்க உருவாக்கின அகிலா இதுக்கு நேரெதிர். கனவனுக்கு அனுசரனையா, தோழியா, நிறைய அன்பா இருக்கிற இலக்கிய ரசனை கொண்ட ஒரு கேரக்டர். Infact உங்க மனைவி எப்படியெல்லாம் இருக்கனும்னு நீங்க எதிர்பார்த்தீங்களோ அதுதான் அகிலா" புருஷோத்தமன் ஒன்றும் பேசவில்லை திவாகரையே பார்த்துக்கொண்டிருந்தான். திவாகர் ஒரு பெருமூச்சு விட்டார் mental illness with creative intellectualness...a tough job மனதிற்குள் நினைத்துக்கொண்டார்.
"ஓகே புருஷோத்தமன்....அகிலாவ தவிர வேற யாராவது உங்க கூட பேசறாங்களா...வேற யாரையாவது பார்க்கிறீங்களா" திவாகரின் கேள்விக்கு புருஷோத்தமன் டாக்டர் சேரின் பின்னே தெரியும் கதவை பார்த்தான், கதவின் நடுவில் சதுரமாய் ஒரு கண்ணாடி பதிந்திருக்க அதற்குப் பின்னால்....
"பாருங்க டாக்டர் நான் சொல்லும்போது நீங்க நம்பலையே...இப்ப பாருங்க" நர்ஸ் ரோஸ்மேரி சீ·ப் டாக்டர் ரங்கபாஷ்யத்திடம் சொன்னாள். ரங்கபாஷ்யத்திற்கு தான் பார்த்துக்கொண்டிருப்பதை நம்ப முடியவில்லை.
"ஏதோ schizophrenia பற்றி பிஹெடி செய்யப்போறதா சொன்னதாலதான் வெறும் schizophrenic பேஷண்ட்ஸ் மட்டும் டயாக்னோசிஸ் பன்ன அனுமதிச்சேன்...அதுக்கு இவ்வளவு பெரிய சைட் எ·பெக்டா....ஓ மை காட்..தனியா அங்க யார் கூட பேசிகிட்டு இருக்கான்" ரங்கபாஷ்யம் குரலில் கவலை தெரிந்தது.
"என்ன அங்கயே பார்க்கறீங்க" அருகே அகிலாவின் குரல் கேட்டது.
"என்ன ஆச்சு இந்த டாக்டருக்கு !! தனியா அங்க நின்னுகிட்டு யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்கார், உள்ள அப்படி என்ன பார்க்கிறாரு...சரியான இடத்துக்கு தான் வந்திருக்கோமா" புருஷோத்தமன் கேட்டான்.
Total Pageviews
Wednesday, December 28, 2005
Friday, December 23, 2005
கொஞ்ச நேரம்...
இந்த வாரம் ஹாலிவுட் வீடியோ சென்று traffic, wall street, and justice for all என்ற மூன்று படங்களை எடுத்தேன். எதை வைத்து இந்த மூன்றையும் எடுத்தேன் என்பது மறந்து போயிற்று. இந்த மூன்று படங்களை பார்த்து முடித்த போதுதான் ஒரு ஆச்சர்யமான ஒற்றுமையை கவனித்தேன். இந்த மூன்று படங்களுமே ஒரு atmosphereஐ முன்னிறுத்தி அதன் திரைமறைவில் நடக்கும் விஷயங்களை பற்றி பேசுகிறது. Traffic அமெரிக்காவின் போதை கடத்தல் மற்றும் தடுப்பு நடவடிக்கை பற்றியது, wall street அமெரிக்காவின் பங்கு சந்தை பின்னால் நடக்கும் சூட்சமங்களை பற்றி சொல்லும் படம், ..and justice for all அமெரிக்காவின் ஜூடிஷியல் சிஸ்டத்தின் அவலங்களை சொல்லும் படம். நான் மிகவும் ரசித்த படம் and justice for all. Alpacino இந்த படத்திற்கு ஆஸ்கர் நாமினேஷன் பெற்றார். Traffic படத்தின் narration வித்தியாசமாக இருந்தது. படத்தில் பல கதாபாத்திரங்கள், எல்லோருக்கும் சில நிகழ்வுகள், அந்த நிகழ்வுக்குள் ஒரு தொடர்பு. அவை நடப்பதும் வெவ்வேறு இடத்தில், ஒளிப்பதிவும் வெவ்வேறு toneல். இது போன்ற ஒரு screenplay treatment பல ஆங்கில படங்களில் கையாளப்பட்டு இருக்கின்றன. எனக்கு தெரிந்து இவ்வகையில் நான் பார்த்த முதல் படம் magnolia. சமீபத்தில் கூட crash என்ற ஒரு படம் இவ்வகை screenplay சார்ந்தே இருக்கும். தமிழில் தேடினால் எனக்கு இரண்டு படம் தான் ஞாபகத்திற்கு வருகிறது, best example பாலசந்தரின் 'ஒரு வீடு இரு வாசல்', மணிரத்னத்தின் 'ஆயுத எழுத்து' முழுமையாக இவ்வகை என்று சொல்லமுடியாது but close to என்று சொல்லலாம். ஏனெனில் ஆயுத எழுத்தில் பாதி படத்திற்கு மேல் ஒரு கதாபாத்திரத்தின் நிகழ்வு மற்றொன்றை சார்ந்து இருக்கும். ஒரு வீடு இரு வாசலில் இரண்டாவது கதையின் நாயகன், முதல் கதையில் நாயகனை சந்திப்பான், அவ்வளவு தான், ஒரு சின்ன தொடர்பு இருக்குமே தவிர, ஒரு கதாபாத்திரத்தின் கதை மற்றொரு கதையை மாற்றாது.
நாமும் இதுபோல் சிறுகதையில் ஒரு முயற்சி செய்து பார்க்கலாம். உதாரணத்திற்கு ஒரு கதையில் protoganist character நாலைந்து supportive charcters, like ஒருவன் அடிப்பட்ட ஒருவனை அழைத்து மருத்துவமனை செல்கிறான், அங்கே பலரின் அலட்சியத்தால் (ex: ஒரு டாக்டர், நர்ஸ், இன்னொரு நோயாளி) அடிப்பட்டவன் இறந்து போகிறான். இது ஒரு கதை, இப்போது டாக்டர், நர்ஸ், அடிப்பட்டவன், நோயாளி என்று சப்போர்டிவ் கேரக்டர்ஸ் வருகிறது, இந்த சப்போர்டிவ் கேரக்டர்ஸ் ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை சொல்லலாம். ஏன் இவர்களால் அந்த அலட்சியம் ஏற்பட்டது என்பதை ஒவ்வொருவர் பார்வையில் ஒரு சிறுகதையாக சொல்லலாம். நம் வலைப்பதிப்பிலே இந்த முயற்சியை செய்து பார்க்கலாம்.
நாமும் இதுபோல் சிறுகதையில் ஒரு முயற்சி செய்து பார்க்கலாம். உதாரணத்திற்கு ஒரு கதையில் protoganist character நாலைந்து supportive charcters, like ஒருவன் அடிப்பட்ட ஒருவனை அழைத்து மருத்துவமனை செல்கிறான், அங்கே பலரின் அலட்சியத்தால் (ex: ஒரு டாக்டர், நர்ஸ், இன்னொரு நோயாளி) அடிப்பட்டவன் இறந்து போகிறான். இது ஒரு கதை, இப்போது டாக்டர், நர்ஸ், அடிப்பட்டவன், நோயாளி என்று சப்போர்டிவ் கேரக்டர்ஸ் வருகிறது, இந்த சப்போர்டிவ் கேரக்டர்ஸ் ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை சொல்லலாம். ஏன் இவர்களால் அந்த அலட்சியம் ஏற்பட்டது என்பதை ஒவ்வொருவர் பார்வையில் ஒரு சிறுகதையாக சொல்லலாம். நம் வலைப்பதிப்பிலே இந்த முயற்சியை செய்து பார்க்கலாம்.
Wednesday, December 21, 2005
சென்னையில் ஒரு எதிர்காலம் (சிறுகதை)

(சுஜாதா என்னுடைய ஆதர்ச எழுத்தாளர். அவருடைய பன்முகத்தன்மை கொண்ட எழுத்துகள் என்னை மிகவும் ஈர்க்கும். எனக்குத் தெரிந்து தமிழில் முதலில் sci-fi எழுதிய எழுத்தாளர் அவர் தான். எல்லோருக்கும் ஒரு காலத்தில் டிடியில் வந்த 'என் இனிய இயந்திரா' ஞாபகம் இருக்கும். அவரை போல நானும் ஒரு sci-fi எழுத வேண்டும் என்ற விபரீத ஆசையின் வெளிப்பாடு தான் இந்த சிறுகதை.)
சென்னை - 2115
'எழில்' கட்டடத்தின் 105ஆவது மாடியில் இருந்தது மூவா உணவகம். நிதி வெளியே பார்த்தாள், விசாலமான வானம், தூரத்தில் சென்னையில் உயரமான 'அரசு' கட்டிடம், மொத்தமாக 333 மாடி, யாரோ ஒரு அரசியல்வாதி தன் ராசி எண் 3 வருமாறு அந்த கட்டடத்தை கட்டியதாக கேள்வி. ஒரே கட்டிடத்தில் சட்டசபை, செயலகம் என எல்லா அரசு சார்ந்த துறைகளும் இயங்கி வருகிறது. நிதியின் பார்வையை சலனம் செய்து பறந்தது ஒரு எரோ, அப்போது தான் சற்று கீழே பார்த்தாள், வித்தியாசமான கலர்களில் ஏரோக்கள் பறந்துக் கொண்டிருந்தன, அவள் இருந்த உயரத்தில் ட்ரா·பிக் கொஞ்சம் கம்மி தான். இவையெல்லாம் ஒரு காலத்தில் கார் என்ற பெயரில் தரையில் சென்றதாக அம்மா சொன்னது ஞாபகத்திற்கு வந்தது, 'ஒரு தடவை ம்யூசியம் சென்று பார்க்க வேண்டும்' தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். இன்னும் யாரையும் கானோம், அவள் வந்து இரண்டு நிமிடம் ஆயிற்று. இந்நேரம் பல வேலைகள் செய்திருக்கலாம். நிதி தன் எதிரே இருந்த சுவரை பார்த்தாள், டிஜிட்டல் பிரேமில் எழில் கட்டடத்தின் மற்ற நிறுவனங்களின் விளம்பரங்கள் ஓடிக் கொண்டிருந்தது. கடைசியில் "மூவா உணவகம்: எல்லோருக்கும் ஒரே சேவை" என வார்த்தைகள் ஓடிக் கொண்டிருந்தது, வார்த்தைகள் முடிவில் ஒருவனின் பிம்பங்கள் பல தோளில் கைபோட்டு சிரித்து கொண்டிருந்தனர். நிதி அப்போது தான் தன் முன்னே இருக்கும் டேபிளை பார்த்தாள் வழித்து சீவிய தலையுடன் தெரோ கோட் சூட் அனிந்த ஒருவன் ஆர்டர் எடுத்துக் கொண்டிருந்தான், அவளை நோக்கி மற்றொருவன் வந்தான், அச்சு அசலாய் ஆர்டர் எடுப்பவனை வார்த்தது போலவே இருந்தான். "மாலை வணக்கம் நிதி அவர்களே...எங்கள் உணவகத்தின் உங்கள் முதல் வருகை எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய ஷ்பெஷல் வைட்டோ வேகா, ப்ரொட்டீன் மோஷா..." அவன் அடுக்கிக் கொண்டே போனான். "எனக்கு குடிக்க கார்போ ஒரு கோப்பை, மற்றவை சிறிது நேரம் கழித்து சொல்கிறேன்" நிதி அவனை நிறுத்தினாள். அவன் புன்னகை செய்து அங்கிருந்து நகர்ந்தான். அப்போது தான் அவன் காதருகே சிகப்பாய் மின்னும் அந்த சில்லை கவனித்தாள். திரும்பவும் எதிரே இருக்கும் டிஜிட்டல் ·ப்ரேமை பார்த்தாள் "மூவா உணவகம்: எல்லோருக்கும் ஒரே சேவை" அதன் பின் தெரிந்த படங்களில் முதலில் தோன்றியவனை தவிர மற்ற எல்லோருக்கும் காதருகே அந்த சிகப்பு சில் இருந்தது.
நிதி திரும்பவும் மணி பார்த்தாள், அவள் வந்து ஐந்து நிமிடம் ஆகிவிட்டது. இதற்கு மேல் உலகத்தோடு தொடர்பு அறுந்து போய் இருக்க அவள் விரும்பவில்லை. தன் கைப்பையை திறந்து அவளின் மினினியை எடுத்தாள் 6x6 இன்ச்சில் ஒரு கண்ணாடி துண்டு போல் இருந்தது வலது ஒரத்தின் கீழே ஒரு சின்ன சிலிக்கான் சிப் இருந்தது. நிதி அதில் தன் விரலை வைத்து அழுத்தினாள், நொடியில் உயிர் பெற்றது அவளின் மினினி. குட்டி குட்டி ஐகான்கள் தொன்றின.
"என் அருமை தோழி நிதிக்கு வந்தனம். நீங்கள் இப்போது இருப்பது எழில் கட்டடத்தின் மூவா.." அதற்கு மேல் அதைப் பேச விடாமல் உலக படம் போன்றதொரு ஐகானில் மேல் விரல் வைத்தாள்.
"தேர்ந்தெடுங்கள் நிதி, உலகச் செய்தியா? உள்ளூர் செய்தியா?"
"உலகச் செய்தி"
"தலைப்புச்செய்தி: ஸ்பெரிக்கல் கேலக்ஸியிலிருந்து பூமி அனுப்பிய ரேடியோ அலைக்கு பதில் அலை வந்துள்ளது, உலக வின்வெளி மையம் முழு வீச்சுடன் அதை ஆராய்ச்சி செய்கிறது. இது பற்றி இந்திய விஞ்ஞானி பாலா கருத்து தெரிவிக்கையில்.."
"உள்ளூர் செய்தி" நிதி உள்ளூரிற்கு தாவினாள்.
"தலைப்புச்செய்தி: தமிழகத்தின் தென்கோடியில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய நகர் கண்டுப்பிடிப்பு. இது சுனாமியால் மூழ்கிய இராமேசுவரமாய் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்" அப்போது மினினியின் ஒரு மூலையிருந்த ஐகான் உயிர்ப்பெற்று பெரிதானது.
"தோழி நிதி, தங்கள் தோழி சிமி அருகாமையில் இருக்கிறார்"
"ஹாய் நிதி" சுமியின் குரல் கேட்டு நிதி திரும்பினாள். மைக்ரோசில்க் சூட்டில் சிமி நளினமாக எதிரே வந்து உட்கார்ந்தாள்.
"ஏன் லேட், அஞ்சு நிமிஷமா காத்துகிட்டு இருக்கேன்"
"சாரிடி என் ஏரோ ஆல்ட்ல கொஞ்சம் ட்ரா·பிக் ஜாம், ஆல்ட் மாற்ற அனுமதி கிடைக்க கொஞ்சம் டைம் ஆச்சு. சரி சிவா சேரா ரெண்டு பேரும் இன்னும் வரலியா?"
"சிவா காலையில வீடியோ மெயில் அனுப்பி இருந்தான், பிரயான களைப்பு, அதனால கொஞ்சம் லேட்டா வருவேன்னு சொன்னான். இந்த சேரா எப்ப வருவான்னு தெரியல, அவன் தான் இப்ப நூறு வருஷம் பின்னாடி இருக்கானே"
"சரி அவங்க வரதுக்குள்ள நான் girls only விஷயம் சொல்லிடறன்"
"என்னடி"
"அனுமதி கிடைச்சாச்சு"
"எதுக்கு?"
"நான் தாய் ஆவதற்கு" சிமியின் முகத்தில் குதூகலம்.
"ஹே கங்க்ராட்ஸ் எப்ப"
"காலையில தான். உடனே நானும் மைத்ரேயனும் 'ஜீனோ மேட்ச்'க்கு போய் வேண்டிய குணாதிசியங்கள தேர்வு செஞ்சிட்டோம். பியூட்டி, காம்ப்ளக்ஷன், டோன் எல்லாம் என் சாய்ஸ். அறிவு சம்பத்தப்பட்ட இத்யாதிகள் மட்டும் மைத்ரேயனோட சாய்ஸ். பிரெயின் அவன மாதிரி வேண்டுமாம்... பெரிய்ய ஐன்ஸ்டீன் எள்ளு பேரன்னு நினைப்பு" இருவரும் சிரித்தனர்.
"எனிவே, அது ப்ரொசஸ் ஆகி ரெண்டு நாள்ல மேட்ரிக்சுக்கு அனுப்பிடுவாங்க. அப்புறம் கொறஞ்சது மூனு மாசத்துல ஏஞ்சல் மாதிரி ஒரு பாப்பா வீட்டுக்கு வந்திடும்" சிமி நிதியின் கைகளை பற்றி சிரித்தாள்.
"ஏஞ்சலுக்கு பேர் வச்சாச்சா" சிவா அவர்களை நோக்கி வந்தான்.
"வாப்பா the man from mars...எப்படி இருந்தது செவ்வாய்..உன் திருவாய் திறந்து சொல்லு" சிமி ஆரம்பித்தாள்
"oh...that was great.. மனிதன் உருவாக்கி கொண்டிருக்கும் ஒரு செயற்கை சொர்க்கம் அது. வெயில் கொஞ்சம் கம்மி தான். நிறைய பில்டிங், ஸ்பேஸ்போர்ட்ன்னு நிறைய கன்ஸ்ட்ரக்ஷன்ஸ். என்னோட விவசாய ஆராய்ச்சி எல்லாம் வெற்றிகரமா நடந்தது... இன்னும் கொஞ்சம் நாள்ல விவசாயம் மொத்தத்தையும் அங்க திருப்பிடுவோம்"
"ஸ்பேஸ்பிளேன் எப்படி இருந்தது"
"அத ஏன் கேக்கிற, நம்மூர்ல தான் ஸ்பேஸ்போர்ட் இல்லையே அதனால பீஜிங் போய் அங்கேயிருந்து ஸ்பேஸ்ப்ளேனல போனேன். உள்ள போன உடனே எனர்ஜி மாத்திரை கொடுத்து தூங்க வச்சிடுவாங்க, அப்புறம் வின்வெளி போய் தான் முழிச்சோம். நாலு வார பயணம்"
"நாடு முன்னேறுது, முன்னேறுதுன்னு வாய் கிழிய சொல்றாங்க, ஆனா இன்னும் இங்க ஒரு ஸ்பேஸ்போர்ட் இல்ல. கேட்டா இப்ப வருது அப்ப வருதுன்னு" நிதி எரிச்சலாக சொன்னாள்.
"நம்ம ஊரு முன்னேறவே முன்னேறாது" சிமி ஆமோதித்தாள்.
"சரி விடுப்பா, அப்புறம் சிவா உன் கல்யாண விஷயம் எந்த அளவுல இருக்கு" நிதி கேட்டாள்
"அதுவா, இப்ப எல்லாம் என் அம்மாவுக்கு என் டிஎன்ஏ பொருத்தம் பாக்கிறதே முழு நேர வேலையாயிடுச்சு. ..எங்க டிஎன்ஏ பொருத்தம்ன்னு சொல்லி ஏதாவது சப்ப மூக்கு சைனாக்காரிய கட்டி வெச்சிடுவாங்களோன்னு பயமா இருக்கு"
"ஏன் அதனால என்ன ஒரு க்ரோமோ ·பிக்ஸிங் செய்தா சரியாப்போச்சு"
"ஹே அதெல்லாம் சுத்த வேஸ்ட்டுப்பா காஸ்ட்லியும் கூட...மேலும் எனக்கு கொஞ்சம் எல்லாமே இயற்கையா இருக்கனும்னு எதிர்பார்க்கிறேன்"
"இப்படியெல்லாம் நீ யோசிச்சா..நீ இந்த நூற்றாண்டு மனுஷனே இல்ல" என்றாள் சிமி
"இவன் போன நூற்றாண்டு மனுஷனும் இல்ல" அவர்களை நோக்கி கேட்டது பரிச்சயமான குரல்
"ஹே சேரா வெல்கம்" நிதி சேராவை வரவேற்றாள். அவன் நேரே ஜோதியில் ஐக்கியமானான்.
"வாடா வரலாற்று மனிதா, 'சென்னை நூறு வருடம்" ஆராய்ச்சி செய்ய போனியே..எனிதிங் இன்ட்ரஸ்டிங்" சிவா அவனை கேட்டான்.
"நிறைய விஷயம் இருக்கு, சொல்றன் கேளு...நம்ம மினினி, சினினிக்கெல்லாம் தாத்தாவான கனினி சமாசாரம் நூறு வருஷத்துக்கு கொஞ்சம் முன்னேதான் நம்ம ஊருக்கு வந்திருக்கு, மொத்த சிட்டிக்குள்ளயும் நாலே நாலு ·ப்ளை ஓவர் தான். பாண்டிச்சேரியெல்லாம் அப்ப ரொம்பவே அவுட் ஆ·ப் சிட்டி, முதன் முதல்ல நம்ம ஊர்ல சுனாமி நூறு வருஷத்துக்கு முன்னாடி தான் வந்திருக்கு, இப்ப மாதிரி சுனாமி ஷோ எல்லாம் இல்ல, மக்கள் ரொம்பவே பாதிச்சியிருக்காங்க"
"வாவ்...இன்ட்ரஸ்டிங்" சிமி ஆச்சர்யத்துடன் சொன்னாள்.
"அப்புறம் ஒரு தடவ கற்ப பத்தி ஒரு நடிகை..."
"வெயிட்..வெயிட்..கற்பா..அப்படின்னா என்ன" நிதி குழப்பமானாள்
"அதுவா..அது ஒரு விவகாரமான விஷயம், புரிய வைக்கிறது கொஞ்சம் கஷ்டம், அப்பவே மக்களுக்கு புரிஞ்சுதாங்கிறது சந்தேகம்தான்...அதப்பத்தி அப்புறம் பேசுவோம். உனக்கு சே·ப் செக்ஸ்ன்னா என்னன்னு தெரியும்ல"
"அதான் அஞ்சாவதிலே படிச்சோமே" சிவா சொன்னான்
"அதேதான்... அது ரொம்ப அவசியம்ன்னு அந்த நடிகை கருத்து சொல்லியிருக்காங்க, அதுக்கு உடனே மக்கள் எல்லாம் செருப்பு துடைப்பம் எல்லாம் எடுத்து போராட்டம் அது இதுன்னு ரொம்ப டார்ச்சர் செஞ்சிருக்காங்க"
"செருப்பு ஒகே... துடைப்பம்னா...அது என்ன ஆயுதம்" சிமி கேட்டாள்
"ஆயுதம்மெல்லாம் இல்ல அது ஒரு வாக்ளீன் மாதிரி வெச்சுக்கோயேன்"
"நம்ம முன்னோர்களா அப்படி செஞ்சிருக்காங்க...நம்பவே முடியலே" சிவா சொன்னான்.
"நம்ம முன்னோர்களே தான்... இரு கொஞ்சம் போட்டோஸ் கலெக்ஷன் வெச்சிருக்கேன்.." சேரா தன்னுடைய மினினியை எடுத்து உயிர் கொடுத்தான். பூட் ஆனதும் திரையில் ஒரு புகைப்படம் தோன்றியது. அதில் சேராவின் பெற்றோர்களுடன் சேரா நின்று கொண்டிருந்தான் அவர்கள் பின்னே சுவற்றில் தொங்கியபடி சட்டம் செய்யப்பட்ட ஒரு வயதானவரின் புகைப்படம் இருந்தது, புகைப்படத்தின் கிழே இந்த வாசகங்கள் "ரஞ்சித் காளிதாசன்: தோற்றம் 01/05/1979 மறைவு...." ஆஹா...அதற்குள் அந்த படம் மினினியில் மறைந்து போயிற்று.
Friday, December 16, 2005
நொடியில் உறைந்த கவிதை
சமீபத்தில் டைம் இதழில், போன வருடத்தின் சிறந்த புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருந்தார்கள். பல படங்கள் பார்க்கும் சமயம் பல உணர்ச்சிகளை கொட்டியிருந்தாலும், என்னை மிகவும் பாதித்தது கீழே இருக்கும் இந்த இரண்டு படங்கள் தான்.

"நமக்கும் கீழே... மாண்டவர் கோடி"

"எனக்கும்தானடா புரியவில்லை..
இந்த ஆட்டம்"
பல விஷயங்கள் சொல்லும் இந்த இரண்டு புகைப்படத்திற்கு இரண்டு வரியில் யாரேனும் கவிதை எழுதி commentsல் post செய்யலாம்.

"நமக்கும் கீழே... மாண்டவர் கோடி"

"எனக்கும்தானடா புரியவில்லை..
இந்த ஆட்டம்"
பல விஷயங்கள் சொல்லும் இந்த இரண்டு புகைப்படத்திற்கு இரண்டு வரியில் யாரேனும் கவிதை எழுதி commentsல் post செய்யலாம்.
Friday, December 09, 2005
தவமாய் தவமிருந்து

இந்த வாரம் இந்த கலை படைப்பை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தவமாய் தவமிருந்து சேரன் செதுக்கி இருப்பது ஒரு சினிமாவை அல்ல, யதார்த்தத்தின் பிம்பங்களை. சென்ற முறை ஒரு காதலனின் ஆட்டோகிரா·பை நமக்கு கான்பித்தவர் இந்த முறை பெற்ற பிள்ளைகளுக்காகவே தன் வாழ்க்கையை தியாகம் செய்யும், நாம் அன்றாடம் பார்க்கும் அல்லது சில சமயம் பார்க்க மறக்கும் ஒரு தகப்பனின் பையோகிரா·பியை நமக்கு காட்டுகிறார். இது வரை நாம் பார்த்த மிகைப்படுத்தபட்ட சினிமாத்தனம் துளிக்கூட இல்லாமல் இயல்பான வாழ்க்கையை கேம்கார்டரில் படம் பிடித்து கான்பிப்பது போல் (ஒளிப்பதிவு HD technology கொண்டு செய்யப்பட்டு இருக்கிறது) பயனிக்கிறது கதை. கதையுடன் கச்சிதமாய் பொருந்தும் பாத்திரத்தேர்வு யதார்த்தத்தை மேலும் மெருகூட்டுகிறது. ராஜ்கிரன் கிராமத்தில் வாழும் நடுத்தர தகப்பனாய் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார். கண்டிப்பாய் ஒரு தேசிய விருதுக்கு அங்கீகரிக்கபட வேண்டிய நடிப்பு. தன் மகன் ஓடிப்போய் திருமணம் செய்து குழந்தைப்பெற்று கஷ்டப்படும்போது, அவனை பார்க்க வந்து வீட்டில் தரையை பார்த்து, உணர்ச்சியற்று ஒரு பார்வை பார்க்கிறாரே...வாவ்...என் கண்ணில் ஈரம் முட்டி நின்றது. இந்த படத்தில் உள்ள பல காட்சிகளை என் வாழ்வில் நடந்த சம்பவத்தோடு ஒப்பிட்டு பார்க்கிறேன்.
1) ராஜ்கிரன் தன் குழந்தைகளுக்கு தீபாவளி சாமான்கள் வாங்க காசில்லாமல் தினறும்போதும் மகன் கேட்ட பட்டாசுகளை கடையில் பார்க்கும்போதும், என் தந்தை என்னையும் என் அண்ணனையும் அழைத்து பாரீஸ் கார்னரில் பட்டாசுகள் வாங்கி அதை எங்களுக்காக தோளில் சுமந்து வந்தது மற்றும் ஒரு தீபாவளியில் முதல் நாள் இரவு வரை எங்களுக்கு துனி வாங்க காசு இல்லாமல் நடுராத்திரியில் எங்கேயோ கடன் வாங்கி எனக்கும் என் அண்ணனுக்கும் நாவல்டி ரெடிமேட்சில் துணி வாங்கியது.
2) ராஜ்கிரன் மூத்த மருமகள் தன் பெண் குழந்தைக்கு மாமனார் வைத்த தெய்வானை என்னும் பெயரை மாற்றி குஷ்பு என்று மாற்றும் போது, என் அம்மா என் தாத்தா எனக்கு துரைராசு என்று வைத்த பெயரை மாடர்னாக இருக்க வேண்டும் என்று ரஞ்சித் குமார் என மாற்றியது.
3) ராஜ்கிரன் தன் மூத்த மகனை பாலிடெக்னிக் சேர்க்க வட்டி கடைகாரரிடம் கூனி குறுகி நின்ற போது, நான் ஆறாம் வகுப்பு சேர்வதற்கு, சாந்தோம் பள்ளியில் என் அப்பா என்னை சேர்க்க பிரின்ஸிபாலிடம் கூட்டி செல்ல, அவர் what is your father? என்று கேட்ட கேள்வியை புரியாமல் நான் தவறாய் என் அப்பாவை கை காட்ட, அதனால் எரிச்சலைடைந்த அந்த பிரின்ஸிபால் டொனேஷன் தொகையை ஏற்ற என் தந்தையின் முகத்தில் தோன்றிய கவலை ஞாபகத்திற்கு வருகிறது.
4) ராஜ்கிரன் சேரனை இஞ்சினியரிங் கல்லூரியில் சேர்க்க பணத்தை வைத்து கொண்டு அலையும் போது, என்னை பாலிடெக்னிக் சேர்க்க நானும் என் தந்தையும் நேர்முகத் தேர்விற்கு காத்திருக்க, பக்கத்தில் கிராமத்திலிருந்து வந்த ஒரு அப்பா பையனுக்கு ·பீஸ் கட்ட வைத்து இருந்த பணத்தில் 100 ரூபாயை தொலைத்து அதை கவலையோடு அதை தேடியது ஞாபகத்திற்கு வருகிறது.
பிள்ளைகளுக்காக வாழ்க்கையை தொலைக்கும் தகப்பன்கள், அவர்களுக்கு பிள்ளைகள் காட்டும் நன்றி என்று இன்றைய வாழ்வில் நடக்கும் நிஜங்களை காட்டியது நம்மை அறையவைக்கிறது. இந்த படத்தின் மற்ற குறைகளை கூற தேவையில்லை, உன்மை என்னவென்றால் நான் அந்த அளவுக்கு படத்தின் குறைகளை கவனிக்கவில்லை, கவனிக்க முடியாதபடி படத்தோடு ஒன்றி விட்டேன். ஆறு பாட்டு, நாலு சண்டை, அதீத ஹீரொயிசம், வின்னிங் ·பார்முலா என ஒரு சின்ன வட்டத்துக்குள்ளே சிக்கிக் கொண்டி¢ருக்கும் தமிழ் சினிமாவில், இந்த மாதிரி ஒரு படம் வருடத்திற்கு ஒரு முறையாவது வந்தால், தமிழ் சினிமாவின் நாடித் துடிப்பு சாகாமல் இருக்கும்.
இந்த மாதிரி ஒரு பெற்றவர்களை நாம் கவனிக்க மறந்தால் அல்லது மறுத்தால், நாம் வேரோடு வெகுதூரம் விலகி வந்துக்கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.
Wednesday, November 30, 2005
கொஞ்ச நேரம்...
இன்று ABCD என்று சமீபத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம் பார்த்தேன். எப்படி இந்த டைட்டிலை தமிழ் காப்பாற்றும், துடைப்பமும் செருப்பும் எடுப்பவர்கள் விட்டு வைத்தார்களோ. எப்படியோ நீண்ட நாளைக்கு பிறகு எழுபதுகளில் வெளியான பாலச்சந்தர் படத்தை கலரில் பார்த்தது போல் இருந்தது (store outline பாலச்சந்தரின் சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தை ஞாபகம் படுத்துகிறது). A for anand வேலைத் தேடும் ஒரு ரொம்பவே நல்ல ஹீரோ. B for bharathi 'அவள் ஒரு தொடர்கதை' சுஜாதாவை போல் நடுத்தர குடும்பத்துகாகவே பாடுபடும் ரொம்பவே ஆக்ரஷமான ஹீரோயின் நம்பர் 1. C for chandra வக்கிர புத்தி கொண்ட, கனவனை இழந்த ஒரு விதவை, ஹீரோயின் நம்பர் 2. D for Daisy அனாதை + churchஇல் வளர்ந்த யதார்த்தமான பெண், ஹீரோயின் நம்பர் 3. இவர்கள் நால்வரை சுற்றி நகர்கிறது கதை. எல்லோரும் யூகித்தபடியே மூன்று ஹீரோயின்களும் கதாநாயகன் ஆனந்தை காதலிக்கிறார்கள். வழக்கமான தமிழ் படத்தில் வரும் கண்டதும் காதல் போல் இல்லாமல், எல்லோரும் காதல் வசப்படும் சந்தர்ப்பத்தை விவரிக்கும் யதார்த்தமான காட்சியமைப்புக்கு ஒரு ஜே. இந்த நால்வரின் பின்னனியும் கதாபாத்திரத்தையும் விளக்கி இந்த கதாபாத்திரங்களின் குணாதிசியங்களை வைத்து காட்சி அமைத்தது நல்லதொரு screenplay முயற்சி. மூன்று பேரில் முடிவில் ஹீரோ யாரை கைப்பிடிக்கிறார் என்பதே கதை. முடிவு நாம் நினைப்பது போல் இருந்தாலும், அதை சொல்லிய விதமும் அருமை. எல்லோரும் அவரவர் சொந்த குரலில் பேசியது, யதார்த்த தன்மைக்கு மேலும் வளம் சேர்க்கிறது. இவ்வளவு நல்லது இருந்தும் படத்திற்கு ஒரே திருஷ்டி, படத்தின் இசை. இயல்பாகவே பின்னனி இசைக்கு scope உள்ள திரைக்கதை, ஆனால் இசை அமைக்க தினறியிருக்கிறார் இசையமைப்பாளர். ராஜாவிடம் கொடுத்து இருந்தால் பிய்த்து உதறியிருப்பார். படத்தின் நடுவே தேவை இல்லாமல் தினிக்கப்படும் பாடல்கள் ஆவ்... 'மஞ்சள் முகம்' என்னும் பாடல் தேவலாம். படத்தோடு ஒட்டாமல் இருந்தாலும் வடிவேலுவின் காமெடி ட்ராக் கலக்கல். வர வர வைகைப்புயல் graph ஏறிக்கொண்டே போகிறது. அதிரடி மசாலா படங்களின் ஆக்ரமிப்பில் இப்படியொரு படம் பூப்பது அதிசயமே.
சன் டிவியின் ஸ்டைலில் சொன்னால் "ABCD, கண்டிப்பாய் வாசிக்கலாம்".
சன் டிவியின் ஸ்டைலில் சொன்னால் "ABCD, கண்டிப்பாய் வாசிக்கலாம்".
Friday, November 25, 2005
நீ பெரியவனா ஆனா...(சிறுகதை)
ரகுபதி - வயது 6 மணி நேரம்..
ரகுபதி பிறந்து அழுத களைப்பில் சுவாமிநாதன் கையில் கிடந்தான். சோர்வு இருந்தாலும், கண்ணில்
ஈன்ற பெருமை தெரிய அருகில் மீனாட்சி. டாக்சியில் ஏறியவுடன் மீண்டும் ரகுபதியின் பிஞ்சு முகத்தை ஒருமுறை பார்த்தான் சுவாமிநாதன்.
"என் ராசா....நான் தவங்கிடந்து பெத்து எடுத்த தங்கமே....எங்க அப்பன போலவே ராஜகள...நீ வேனாம்
பாரேன் மீனாட்சி என் மவன் பெரியவனா ஆனதும் இந்த சீமையே கட்டி ஆளப் போறான்"
உடனே ஒரு வறட்சியான சிரிப்பு சத்தம் முன்னிருந்து கேட்டது. சுவாமிநாதனும் மீனாட்சியும் நிமிர்ந்து பார்க்க ரியர் வியூ மிரரில் டாக்சி ட்ரைவர் இவர்களை பார்த்து
சிரித்துக் கொண்டிருந்தான்.
"ஏம்பா சிரிக்கிற" சுவாமிநாதன் குழப்பத்துடன் கேட்டான்
ரகுபதி - வயது 2
"கூ.. கூ..." ரயில்வே ஸ்டேஷனில் ரகுபதி. தூரத்தில் வரும் புகைவண்டி கரி என்ஜினைப் பார்த்து, வாயில் கட்டை விரலை வைத்தபடி கூவிக்கொண்டிருந்தான்.
"ஏங்க கேளுங்க... நேத்து அவன் அப்பத்தாக்கிட்ட கூட சொன்னாங்க.."
சுவாமிநாதன் வயர் கூடையை பிடித்தபடி தன் பேரனையே பார்த்துக்கொண்டிருக்கும் தன் தாயைப் பார்த்துக் கேட்டான்
"நெசமா தானா"
"ஆமால சாமிநாதா...என் கையை நாடி பாக்கிறா மாதிரி புடிச்சிகிட்டே சொன்னாங்கிறன்...'நான் டாக்டராவேன் அப்பத்தா'ன்னு நெசமாத்தான் சொன்னான்"
"என் தங்கமே" சுவாமிநாதன் ரகுபதயை அள்ளி வாரி முத்தம் மழை பொழிந்தான். ரகுபதியின் கவனமெல்லாம் அவன் அருகே வந்து கொண்டிருக்கும் ரயில் என்ஜின்னிடமே இருந்தது.
"என் ராசா... எங்க சொல்லு நீ பெரியவனா ஆனதும் என்னவா வருவே"
"கூ...கூ..." ரகுபதி சுவாமிநாதனை கவனித்தாற் மாதிரி தெரியவில்லை.
"சொல்லுப்பா... என் தங்கம் இல்ல...என் செல்லம் இல்ல..சொல்லுப்பா"
"நான் பெரிவனா ஆனா..ஆங்..ஆங் வந்து...வந்து..."
"ம்ம் சொல்லுப்பா"
"நான் அதோ அந்த என்ஜின் ஓட்ட போறேன்..."
ரகுபதி - வயது 10
"உங்க ஒவ்வொருத்தருக்கும் நீங்க என்னவா ஆகப்போறீங்கன்னு ஒரு ஆசை இருக்கும்...அந்த ஆசைய அடைய நீங்களே ஒரு லட்ச்சியத்த வளத்துக்கனும்.. கல்விக்கூடங்கிறது அந்த லட்சியத்த நீங்க அடைய உங்கள நீங்களே தயார் செஞ்சுக்கிறதுக்கான ஒரு பயிற்சி களம்" ஆறாம் வகுப்பின் தமிழ் டீச்சரின் முதல் நாள் வகுப்பு.
"எங்க சொல்லுங்க நீங்க ஒவ்வொருத்தரும் பெரியவனா ஆனா என்னவா ஆகபோறீங்க"
"டாக்டர், இன்ஜினியர், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஸயின்டிஸ்ட்" சொல்லி வைத்தாற் போல் எல்லா மாணவர்களும் முறை மாற்றி சொன்னனர். ஒரு மாணவன் "எங்க தலைவர போல பெரிய ஸ்டார் ஆவேன் டீச்சர்" என்று சொல்ல டீச்சரிடம் ஒரு முறைப்பு வந்தது. ரகுபதியின் முறை வந்தது
"நான் மிலிட்டிரியில சேரப் போறேன் டீச்சர்..சேர்ந்து நம்ம நாட்டு எதிரிய எல்லாம் சுட்டு தள்ளப்போறேன்" சதீஷ் ஆச்சர்யமாக தன் நன்பன் ரகுபதியை பார்த்தான்.
"என்னடா நேத்து வரைக்கும் பெரிய என்ஜினியராக போறேன்னு சொல்லிக்கிட்டு இருந்த.. இன்னைக்கு என்னடா ஆச்சு"
"நேத்து ஒரு இங்கிலிஷ் படம் பாத்தேண்டா.. ஸ்டலோன்னு மிலிட்டரியில சேர்ந்து என்னமா சன்ட போட்டார் தெரியுமா...இவ்வளவு பெரிய கன்னு, எதிரிங்க பாம்
போடறாங்க, ப்ளைட்ல இருந்து சுடறாங்க, ஆனா நம்ம ஸ்டலோன்னு ஒரு குண்டு கூட படாம அவங்க எல்லாரையும் சுட்டாரு பாரு சூப்பர்டா...மிலிட்டரியில சேரலாம்டா..அப்பதான் கன்னு, பாம் எல்லாம் தருவாங்க" கண்கள் படபடக்க ரகுபதி விவரித்தான்.
ரகுபதி - வயது 15
"ரகுபதி...congrats..கிரிக்கெட்டுல உனக்கு பெரிய எதிர்காலம் இருக்கு..இந்த மாதிரியே நல்லா விளையாடனும்.. நீ தான் அடுத்த டெண்டுல்கர்" கிரிக்கெட் கோச் சொன்ன
வார்த்தைகள் ரகுபதியால் நம்ப முடியவில்லை. வெற்றிக்களிப்புடன் கோப்பையை வாங்கி வீட்டிற்கு வந்தான். ரகுபதி ஒரு கையில் கோப்பையுடனும் மறுகையில் கிரிக்கெட் மட்டையுடனும் வீட்டினுள் நுழைந்தான். உள்ளே சுவாமிநாதன் கண்ணில் கோபம் தெறிக்க ரகுபதியை பார்த்தான், அவன் கையில் ரகுபதியின் ப்ரொக்ரஸ் கார்ட்.
"ஏண்டா காடு கரைய வித்து உன்னைய படிக்க வச்சா...என்னடா மார்க் வாங்கியிருக்குற"
"இல்லப்பா...அடுத்த தடவ கண்டிப்பா..."
"எலெ நிறுத்துடா...இதயேதாண்டா போன தடவையும் சொன்னே...இந்த முறையும் அஞ்சு சப்ஜெக்டலையும் பெயிலாயி இருக்குற.....இந்த வருஷம் SSLC தெரியும்ல..."
ரகுபதி தலையசைத்தான்
"உன்னெடுத்த பசங்க எல்லாம் ஒழுங்கு மருவாதையா வீடே கெதின்னு படிக்கிறானுவோ..நீ என்னடான்னா ஊர் சுத்திகிட்டு திரியுறவ...அது என்னடா கையில"
"கிரிக்கெட்டுல இன்னைக்கு நான்தாம்பா man of the match"
"உன்னைய படிக்க சொன்னா... என்னடா கிரிக்கெட் வேண்டி கெடக்குது...நீ என்ன சொன்னாலும் திருந்த மாட்டே...இரு உன்னைய..." ரகுபதி கயில் இருந்த கோப்பைய
வாங்கி தூர எறிந்தான், அவன் மட்டையை பிடுங்கி ரகுபதியை அடிக்க கை ஓங்கினான். ரகுபதி இரு கைகளாலும் அழுதவாறே தன் தகப்பனை அடிக்க விடாமல் தடுத்தான். இரண்டு அடி அடித்தும் கோபம் தீராதவனாய் சுவாமிநாதன் கிரிக்கெட் மட்டையை ஒங்கி தூணில் போட்டு உடைத்தான். மீனாட்சி ரகுபதியை அனைத்து அவனை
தேற்றிக்கொண்டிருந்தாள்.
ரகுபதி - வயது 17
ரகுபதி திரும்பத் திரும்ப நன்றாய் தேடிப் பார்த்தான். ம்ஹ¥ம்..அவன் நம்பர் தெரிந்தபாடில்லை. அவன் நன்பர்களெல்லாம் தங்கள் நம்பரை பார்த்த சந்தோஷத்தில் வீட்டிற்கு
விரைந்து கொண்டிருந்தனர். ப்ளஸ் டூ ரிசல்ட் வந்துவிட்டது. இது ரகுபதிக்கு ஒன்றும் ஆச்சர்யம் தரவில்லை. இருந்தாலும் வீட்டிற்கு போனால் இந்த அப்பனை எப்படி
சமாளிப்பது. தீவிர யோசனைக்கு பிறகு தன் திருட்டு சிகரெட்டை அனைத்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்தவனாய் வீட்டை நோக்கி நடந்தான். வீட்டின் முன் ஒரு ஐம்பது அடி வந்து கொண்டிருக்கும் போது, சுவாமிநாதன் குரல் தெருவெங்கும் கேட்டது, கூடவே மீனாட்சியின் அழுகுரல்.
"இன்னைக்கும் வரட்டும் அவன்... புள்ளையாடி பெத்து இருக்க புள்ள... ஒன்னுத்துக்கும் உருப்படாத பய"
"எம்புள்ளைய ஒன்னும் செய்யாதீங்க"
சுருட்டிய தினத்தந்தியுடன் வீட்டினுள் நுழைந்தான் ரகுபதி.
"வாங்க தொர... என்ன ஜில்லாவில்லே மொத மார்க்காமே..." நக்கல் + கோபத்துடன் சுவாமிநாதன்.
"அப்பா...கோபப்படாதீங்க... நான் தான் எனக்கு படிப்பு வரல..படிப்பு வரலன்னு சொன்னேனே...இப்ப நீங்க டென்ஷனாகி என்ன ஆகப்போவது"
"டேய் படிக்காம என்னடா பன்ன போற"
"ஏதாவது செய்யறன்... உலகத்துல பொழைக்க வழியா இல்ல"
ரகுபதி - வயது 25
அந்த தனியார் மருத்துவமனையின் வாசலில் அந்த வெள்ளை அம்பாசிடர் கார் நின்று கொண்டிருந்தது. அதன் பின் கண்ணாடியில் மஞ்சள் நிறத்தில் "raghu cabs" என்று ஸ்டிக்கர் மின்னிக்கொண்டிருந்தது. மெல்ல அந்த தம்பதியினர் அம்பாசிடர் கார் கதவை திறந்து உள்ளே கைக்குழந்தையுடன் உட்கார்ந்தனர்.
"ட்ரைவர் போகலாம்பா"
"சரி சார்" சிக்னல் போட்டு ரகுபதி வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
"ஜ்ஜூக்குட்டி...செல்லக்குட்டி....மங்கலம் நாம ஆசப்பட்ட மாதிரியே சிங்கக்குட்டி பொறந்திருக்கான்டி.....என்னால தான் ஆக முடியல...இவனை எப்படியாவது ஒரு கலெக்டரா ஆக்கி காமிக்கிறேன்"
ரகுபதி சிரித்தான், தம்பதியினர் நிமிர்ந்து பார்த்தனர்.
ரகுபதி பிறந்து அழுத களைப்பில் சுவாமிநாதன் கையில் கிடந்தான். சோர்வு இருந்தாலும், கண்ணில்
ஈன்ற பெருமை தெரிய அருகில் மீனாட்சி. டாக்சியில் ஏறியவுடன் மீண்டும் ரகுபதியின் பிஞ்சு முகத்தை ஒருமுறை பார்த்தான் சுவாமிநாதன்.
"என் ராசா....நான் தவங்கிடந்து பெத்து எடுத்த தங்கமே....எங்க அப்பன போலவே ராஜகள...நீ வேனாம்
பாரேன் மீனாட்சி என் மவன் பெரியவனா ஆனதும் இந்த சீமையே கட்டி ஆளப் போறான்"
உடனே ஒரு வறட்சியான சிரிப்பு சத்தம் முன்னிருந்து கேட்டது. சுவாமிநாதனும் மீனாட்சியும் நிமிர்ந்து பார்க்க ரியர் வியூ மிரரில் டாக்சி ட்ரைவர் இவர்களை பார்த்து
சிரித்துக் கொண்டிருந்தான்.
"ஏம்பா சிரிக்கிற" சுவாமிநாதன் குழப்பத்துடன் கேட்டான்
ரகுபதி - வயது 2
"கூ.. கூ..." ரயில்வே ஸ்டேஷனில் ரகுபதி. தூரத்தில் வரும் புகைவண்டி கரி என்ஜினைப் பார்த்து, வாயில் கட்டை விரலை வைத்தபடி கூவிக்கொண்டிருந்தான்.
"ஏங்க கேளுங்க... நேத்து அவன் அப்பத்தாக்கிட்ட கூட சொன்னாங்க.."
சுவாமிநாதன் வயர் கூடையை பிடித்தபடி தன் பேரனையே பார்த்துக்கொண்டிருக்கும் தன் தாயைப் பார்த்துக் கேட்டான்
"நெசமா தானா"
"ஆமால சாமிநாதா...என் கையை நாடி பாக்கிறா மாதிரி புடிச்சிகிட்டே சொன்னாங்கிறன்...'நான் டாக்டராவேன் அப்பத்தா'ன்னு நெசமாத்தான் சொன்னான்"
"என் தங்கமே" சுவாமிநாதன் ரகுபதயை அள்ளி வாரி முத்தம் மழை பொழிந்தான். ரகுபதியின் கவனமெல்லாம் அவன் அருகே வந்து கொண்டிருக்கும் ரயில் என்ஜின்னிடமே இருந்தது.
"என் ராசா... எங்க சொல்லு நீ பெரியவனா ஆனதும் என்னவா வருவே"
"கூ...கூ..." ரகுபதி சுவாமிநாதனை கவனித்தாற் மாதிரி தெரியவில்லை.
"சொல்லுப்பா... என் தங்கம் இல்ல...என் செல்லம் இல்ல..சொல்லுப்பா"
"நான் பெரிவனா ஆனா..ஆங்..ஆங் வந்து...வந்து..."
"ம்ம் சொல்லுப்பா"
"நான் அதோ அந்த என்ஜின் ஓட்ட போறேன்..."
ரகுபதி - வயது 10
"உங்க ஒவ்வொருத்தருக்கும் நீங்க என்னவா ஆகப்போறீங்கன்னு ஒரு ஆசை இருக்கும்...அந்த ஆசைய அடைய நீங்களே ஒரு லட்ச்சியத்த வளத்துக்கனும்.. கல்விக்கூடங்கிறது அந்த லட்சியத்த நீங்க அடைய உங்கள நீங்களே தயார் செஞ்சுக்கிறதுக்கான ஒரு பயிற்சி களம்" ஆறாம் வகுப்பின் தமிழ் டீச்சரின் முதல் நாள் வகுப்பு.
"எங்க சொல்லுங்க நீங்க ஒவ்வொருத்தரும் பெரியவனா ஆனா என்னவா ஆகபோறீங்க"
"டாக்டர், இன்ஜினியர், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஸயின்டிஸ்ட்" சொல்லி வைத்தாற் போல் எல்லா மாணவர்களும் முறை மாற்றி சொன்னனர். ஒரு மாணவன் "எங்க தலைவர போல பெரிய ஸ்டார் ஆவேன் டீச்சர்" என்று சொல்ல டீச்சரிடம் ஒரு முறைப்பு வந்தது. ரகுபதியின் முறை வந்தது
"நான் மிலிட்டிரியில சேரப் போறேன் டீச்சர்..சேர்ந்து நம்ம நாட்டு எதிரிய எல்லாம் சுட்டு தள்ளப்போறேன்" சதீஷ் ஆச்சர்யமாக தன் நன்பன் ரகுபதியை பார்த்தான்.
"என்னடா நேத்து வரைக்கும் பெரிய என்ஜினியராக போறேன்னு சொல்லிக்கிட்டு இருந்த.. இன்னைக்கு என்னடா ஆச்சு"
"நேத்து ஒரு இங்கிலிஷ் படம் பாத்தேண்டா.. ஸ்டலோன்னு மிலிட்டரியில சேர்ந்து என்னமா சன்ட போட்டார் தெரியுமா...இவ்வளவு பெரிய கன்னு, எதிரிங்க பாம்
போடறாங்க, ப்ளைட்ல இருந்து சுடறாங்க, ஆனா நம்ம ஸ்டலோன்னு ஒரு குண்டு கூட படாம அவங்க எல்லாரையும் சுட்டாரு பாரு சூப்பர்டா...மிலிட்டரியில சேரலாம்டா..அப்பதான் கன்னு, பாம் எல்லாம் தருவாங்க" கண்கள் படபடக்க ரகுபதி விவரித்தான்.
ரகுபதி - வயது 15
"ரகுபதி...congrats..கிரிக்கெட்டுல உனக்கு பெரிய எதிர்காலம் இருக்கு..இந்த மாதிரியே நல்லா விளையாடனும்.. நீ தான் அடுத்த டெண்டுல்கர்" கிரிக்கெட் கோச் சொன்ன
வார்த்தைகள் ரகுபதியால் நம்ப முடியவில்லை. வெற்றிக்களிப்புடன் கோப்பையை வாங்கி வீட்டிற்கு வந்தான். ரகுபதி ஒரு கையில் கோப்பையுடனும் மறுகையில் கிரிக்கெட் மட்டையுடனும் வீட்டினுள் நுழைந்தான். உள்ளே சுவாமிநாதன் கண்ணில் கோபம் தெறிக்க ரகுபதியை பார்த்தான், அவன் கையில் ரகுபதியின் ப்ரொக்ரஸ் கார்ட்.
"ஏண்டா காடு கரைய வித்து உன்னைய படிக்க வச்சா...என்னடா மார்க் வாங்கியிருக்குற"
"இல்லப்பா...அடுத்த தடவ கண்டிப்பா..."
"எலெ நிறுத்துடா...இதயேதாண்டா போன தடவையும் சொன்னே...இந்த முறையும் அஞ்சு சப்ஜெக்டலையும் பெயிலாயி இருக்குற.....இந்த வருஷம் SSLC தெரியும்ல..."
ரகுபதி தலையசைத்தான்
"உன்னெடுத்த பசங்க எல்லாம் ஒழுங்கு மருவாதையா வீடே கெதின்னு படிக்கிறானுவோ..நீ என்னடான்னா ஊர் சுத்திகிட்டு திரியுறவ...அது என்னடா கையில"
"கிரிக்கெட்டுல இன்னைக்கு நான்தாம்பா man of the match"
"உன்னைய படிக்க சொன்னா... என்னடா கிரிக்கெட் வேண்டி கெடக்குது...நீ என்ன சொன்னாலும் திருந்த மாட்டே...இரு உன்னைய..." ரகுபதி கயில் இருந்த கோப்பைய
வாங்கி தூர எறிந்தான், அவன் மட்டையை பிடுங்கி ரகுபதியை அடிக்க கை ஓங்கினான். ரகுபதி இரு கைகளாலும் அழுதவாறே தன் தகப்பனை அடிக்க விடாமல் தடுத்தான். இரண்டு அடி அடித்தும் கோபம் தீராதவனாய் சுவாமிநாதன் கிரிக்கெட் மட்டையை ஒங்கி தூணில் போட்டு உடைத்தான். மீனாட்சி ரகுபதியை அனைத்து அவனை
தேற்றிக்கொண்டிருந்தாள்.
ரகுபதி - வயது 17
ரகுபதி திரும்பத் திரும்ப நன்றாய் தேடிப் பார்த்தான். ம்ஹ¥ம்..அவன் நம்பர் தெரிந்தபாடில்லை. அவன் நன்பர்களெல்லாம் தங்கள் நம்பரை பார்த்த சந்தோஷத்தில் வீட்டிற்கு
விரைந்து கொண்டிருந்தனர். ப்ளஸ் டூ ரிசல்ட் வந்துவிட்டது. இது ரகுபதிக்கு ஒன்றும் ஆச்சர்யம் தரவில்லை. இருந்தாலும் வீட்டிற்கு போனால் இந்த அப்பனை எப்படி
சமாளிப்பது. தீவிர யோசனைக்கு பிறகு தன் திருட்டு சிகரெட்டை அனைத்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்தவனாய் வீட்டை நோக்கி நடந்தான். வீட்டின் முன் ஒரு ஐம்பது அடி வந்து கொண்டிருக்கும் போது, சுவாமிநாதன் குரல் தெருவெங்கும் கேட்டது, கூடவே மீனாட்சியின் அழுகுரல்.
"இன்னைக்கும் வரட்டும் அவன்... புள்ளையாடி பெத்து இருக்க புள்ள... ஒன்னுத்துக்கும் உருப்படாத பய"
"எம்புள்ளைய ஒன்னும் செய்யாதீங்க"
சுருட்டிய தினத்தந்தியுடன் வீட்டினுள் நுழைந்தான் ரகுபதி.
"வாங்க தொர... என்ன ஜில்லாவில்லே மொத மார்க்காமே..." நக்கல் + கோபத்துடன் சுவாமிநாதன்.
"அப்பா...கோபப்படாதீங்க... நான் தான் எனக்கு படிப்பு வரல..படிப்பு வரலன்னு சொன்னேனே...இப்ப நீங்க டென்ஷனாகி என்ன ஆகப்போவது"
"டேய் படிக்காம என்னடா பன்ன போற"
"ஏதாவது செய்யறன்... உலகத்துல பொழைக்க வழியா இல்ல"
ரகுபதி - வயது 25
அந்த தனியார் மருத்துவமனையின் வாசலில் அந்த வெள்ளை அம்பாசிடர் கார் நின்று கொண்டிருந்தது. அதன் பின் கண்ணாடியில் மஞ்சள் நிறத்தில் "raghu cabs" என்று ஸ்டிக்கர் மின்னிக்கொண்டிருந்தது. மெல்ல அந்த தம்பதியினர் அம்பாசிடர் கார் கதவை திறந்து உள்ளே கைக்குழந்தையுடன் உட்கார்ந்தனர்.
"ட்ரைவர் போகலாம்பா"
"சரி சார்" சிக்னல் போட்டு ரகுபதி வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
"ஜ்ஜூக்குட்டி...செல்லக்குட்டி....மங்கலம் நாம ஆசப்பட்ட மாதிரியே சிங்கக்குட்டி பொறந்திருக்கான்டி.....என்னால தான் ஆக முடியல...இவனை எப்படியாவது ஒரு கலெக்டரா ஆக்கி காமிக்கிறேன்"
ரகுபதி சிரித்தான், தம்பதியினர் நிமிர்ந்து பார்த்தனர்.
Sunday, November 20, 2005
பெண்ணாய் பிறந்ததாலே..(சிறுகதை)
(இன்றிலிருந்து இருபது வருடங்களுக்கு முன்பு...)
மணி இரவு பதினொன்றை நெருங்கும் நேரம், அந்த ஆட்டோ கொட்டும் மழையையும் பொருட்டாது தார் ரோட்டில் பறந்து கொண்டிருந்தது. உள்ளே நிறைமாத கர்ப்பினி சுகந்தி வலி பொறுக்க முடியாமல் துடிக்கிறாள், காசிக்கு கண்ணில் பயம் கொஞ்சம் இயலாமை கொஞ்சம், சுகந்தியை தோளோடு தழுவி வெளியே பார்த்தான். கண்ணுக்கு தெரிந்த வரையில் எந்த ஒரு பெரிய ஆஸ்பத்திரியும் தெரிவதாய் இல்லை. "ஏம்பா இன்னும் எவ்வளவு தூரம் போகனும்"
"இன்னும் கொஞ்சம் தொலவு போகனும் சார்.....ஒரு அரை மணி நேரமாவது ஆகும்.... அடிக்கிற மழையில வண்டி ஓட்டறது வேற கஷ்டமா இருக்குது"
"சரி பக்கத்துல எங்கயாவது சின்ன ஆஸ்பத்திரி இருக்கா"
"இந்த ஊருக்குல்ல போனா ஒரு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கு சார்... வேனும்னா அங்க வண்டிய திருப்பத்துமா"
"சரிப்பா...இவ ரொம்ப துடிக்கிறா.. அங்கேயே போவோம்" அரை மனதுடன் காசி சொன்னான். பேருக்கு பெரிய ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவை போக சொன்னாலும், அங்கே ஆகும் செலவை நினைத்து பாதி வழியிலே கவலைப்பட ஆரம்பித்தான். கையில் ஆட்டோவிற்கே பணம் இருப்பதாய் தெரியவில்லை. தன் வாரிசை இப்படியெல்லாம் பெறப்போகிறோம் என்று சில வருடம் முன்பு அவன் கனவுகூட கண்டிருக்க மாட்டான். தன் பரம்பரை வசதிக்கும், பாரம்பரியத்திற்கும் இந்நேரம் ஆஸ்பத்திரியே அவன் அரண்மனை வீட்டிற்கு வந்திருக்கும். இதெல்லாம் ஏன் நடக்கவில்லை! எல்லாம் இந்த பாழாய்போன காதலால் வந்த வினை. பக்கத்து ஊர் பழைய ஜமீன்தார் பெண்ணை தனக்காக தன் தாய் நாச்சியார் பார்த்து வைத்திருக்க, காசியோ திடுப்பென தன் காதலைப் பற்றி தாயிடம் வாய் திறந்தான். பிறகு என்ன, காதலா பரம்பரை சொத்தா என்று வந்தவுடன், காசி காதலே ஜெயம் என்று வீட்டை விட்டு வெளியே வந்தான். அந்த நேரத்திற்கு நன்பர்களின் துணை இருந்தது, அவர்களின் ஆதரவோடு சுகந்தியின் கரம் பிடித்தான். வாழ்க்கை இனித்தது நம்பிக்கை என்னும் மூலதனத்தை வைத்து வாழ்க்கையைத் தொடங்கினான். எல்லாம் கொஞ்சம் காலம் தான். உலகம் காசிக்கு மெல்ல புரிந்தது, பணத்தின் அருமை புரிந்தது, வாழ்க்கை மெல்ல வலித்தது.
"சார்..ஆஸ்பத்திர் வந்தாச்சு. அம்மாவ மெல்ல இறக்குங்க"
ஆட்டோ ட்ரைவரின் குரல் காசியின் நினைவை தற்காலத்திற்கு கொண்டு வந்தது. சுகந்தியை கைதாங்கலாய் உள்ளே கொண்டு சென்று படுக்கவைத்தான். சுகந்தியின் அருகே இரண்டு மூன்று பெண்கள் பிரசுவிக்க தயாராய் இருந்தனர்.
"ஆம்பளைங்க எல்லாம் வெளியே போங்க" நர்ஸ் ஒருத்தியின் குரல் அதட்டியது
"டாக்டர் எப்ப வருவாங்க" காசி நர்ஸிடம் கேட்டான்
"எல்லாம் சொல்லியிருக்கு வருவாங்க...அப்படியே வர்லேன்னாலும் என்ன...பெரிய எலிசபெத்து ராணியா உம்பொண்டாட்டி...ஏன் நாங்க பிரசவம் பாத்தா உனக்கு ஆகாதா"
இதற்கு மேல் அரசாங்க சுகாதார நிலையத்தில் கவனிப்பை எதிர்பார்ப்பது தவறு. காசி வெளியே வந்தான். அப்போது தான் ஆட்டோ அங்கே இருப்பதை பார்த்தான்.
"சாரிப்பா...நீ இருக்கிறதை மறந்துட்டேன்... எவ்வளவு ஆச்சு" சட்டை பையை துலாவியபடியே கேட்டான்
"பரவாயில்ல சார்... என் ஆட்டோ பிரசவத்துக்கெல்லாம் இலவசம் சார்...அம்மா எப்படி இருக்காங்கன்னு கேக்க தான் சார் நின்னுகிட்டு இருந்தேன்....கவல படாதீங்க சார் எல்லாம் நல்லபடியா நடக்கும்" ஆட்டோ திரும்பி சென்றது. காசி அப்போது தான் கவனித்தான் "பிரசவத்திற்கு இலவசம்" என்று எழுதியிருப்பதை.
"சே என்ன இது... எப்படியாவது ஒரு அம்பது ரூபாவது கொடுத்திருக்கனும்" சட்டைப் பையை பிரித்து பார்த்தான், உள்ளே கசங்கிய இரண்டு ஐந்து ருபாய் நோட்டும் ஒரு இன்லாந்து லெட்டரும் தெரிந்தது, காசியின் கண்ணீர் மழையில் கரைந்தது.
காசி திரும்பவும் அந்த இன்லாந்து லெட்டரை பார்த்தான், இரண்டு நாட்களுக்கு முன் வந்த கடிதம், தன் மாமா எழுதிய கடிதம். தன் தாய் சுகமில்லாமல் இருப்பதாகவும், மெல்ல மெல்ல காசியின் மேல் உள்ள கோபம் கரைவதாகவும் எழுதி இருந்தார். ஆனால் கடைசியில் அவர் எழுதி இருந்தது தான் காசிக்கு கவலையை அதிகரித்தது
"..மேலும் சுகந்தி முழுகாமல் இருப்பதாய் செய்தி வந்தது, நாச்சியாளுக்கு சந்தோஷம். பரம்பரை குலம் காக்க உனக்கும் தலைப்பிள்ளை ஆணாக பிறப்பான் என்று
குலதெய்வத்திற்கு வேண்டிக் கொள்கிறாள். நீயும் அவ்வாறே வேண்டிக்கொள் எனென்றால் உனக்கு பிறக்கும் ஆண்பிள்ளைக்கு தான் பரம்பரை சொத்து முழுவதும் சேரும் என்றும், அப்போது தான் அதை அனுபவிக்கும் பாக்கியதை உனக்கு இருக்கும் என்றும் ஏற்கனவே வக்கீல் வைத்து உயில் எழுதி வைத்து விட்டாள். நீ வேண்டுமானால் சொத்து வேண்டாம் என்று வீட்டை விட்டு போயிருக்கலாம், ஆனால் உனக்கு மூத்த குழந்தை ஆணாக பிறக்கும் பட்சத்தில் அவன் தான் இந்த சொத்துக்கெல்லாம் அதிபதி"
சுகந்தியை கைப்பிடித்த பொழுதில் இந்த மாதிரி ஒரு கடிதத்தைப்பார்த்தால் அதை அப்போதே கிழித்து எறிந்திருப்பான். ஆனால் காதல் வாழ்க்கையின் நிஜம் இப்போது
காசியை வேறு விதமாக யோசிக்க வைத்தது. "உன்ன ராணிய போல வச்சிருப்பேன்..." காதலிக்கும்போது காசியின் வசீகர வார்த்தைகள்..."பெரிய எலிசபெத்து ராணியா உம்பொண்டாட்டி" சற்று முன் கேட்ட யதார்த்த வார்த்தைகள்.
"முடியாது...என்னால் முடியாது.....இனிமேல் இந்த வாழ்க்கை வாழ என்னால் முடியாது... எனக்கு என் சொத்து வேண்டும்.. நமக்கு பணம் வேண்டும்... சுகந்தி எப்படியாவது ஒரு ஆண் வாரிசை கொடுத்துவிடு" சுகந்தியோடு சேர்த்து கடவுளையும் வேண்டினான்.
மழை சற்று விட்டிருந்தது, காசி அப்போது தான் தன்னை சுற்றி இருப்பவற்றை பார்த்தான். ஆரம்ப சுகாதர நிலையத்தின் தின்னையின் ஒரு ஓரத்தில் ஒருவன் மிக
வித்தியாசமாய் காட்சியளித்தான். வாய் நிறைய வெற்றிலையை குதைத்தபடியே கிழே தரையில் படுத்திருந்த ஒருத்தியுடன் பேசிக்கொண்டிருந்தான். அடிக்கடி வெற்றிலை
எச்சியை துப்பியபடியே இருந்தான். அவன் அருகில் படுத்திருப்பவளுக்கு நடுத்திர வயது இருக்கும், பக்கத்தில் சில ஆண்கள் இருந்தும், அவள் அதையெல்லாம் சட்டைசெய்யாமல் தன் முந்தானையை தரையில் விரித்து படுத்திருந்ததை பார்த்தபோது காசிக்கு என்னவோ போல் இருந்தது. எண்ணெய் படாத தலை, அழுக்கான துனியென ஏழைத்தனம்
அவர்களிடம் தாண்டவமாடியது.
"அடுத்த வேளை சோத்துக்கே வழி இருப்பதாய் தெரியவில்லை.. இவங்க எல்லாம் புள்ள பெத்துக்கலன்னு எவன் அழுதான்" காசி தனக்குள்ளே முனகி கொண்டிருந்தான்.
பின்னர் தன் நிலையை உணர்ந்து, தான் அப்படி அவர்கள் பற்றி யோசித்ததற்கு தன்னைத்தானே நொந்துகொண்டான்.
நேரம் நடுநிசியை தாண்டி ஓடிக்கொண்டிருந்தது, களைப்பாய் இருந்த காசி சற்று கண் அயர்ந்தவனாய் தூங்கிக்கொண்டு இருந்தான். சில நேரம் கழித்து, குழந்தை அழும் சத்தம் அவனை எழுப்பியது. உள்ளேயிருந்து அந்த நர்ஸ் வெளியே வந்தாள்.
"சுகந்தி புருஷன் நீயா...போ உள்ள போயி உன் குழந்தைய பாரு...எங்க அந்த காத்தாயி புருஷன்... அதாம்பா இங்க உக்காந்து இருந்தானே"
காசி அந்த எழை ஜீவன்கள் இருந்த இடத்தை பார்த்தான், ஒரு பழைய மஞ்சள் பை மட்டும் அவர்கள் அங்கே இருந்ததற்கு அத்தாட்சியாய் இருந்தது. அவர்களை கானோம். காசி அதை பொருட்படுத்தாமல் உள்ளே சுகந்தியை பார்க்க சென்றான். உள்ளே சுகந்தி மயக்க நிலையில் இருந்தால், பக்கத்தில் வெள்ளைதுணி போர்த்தியிருக்க ஒரு பிஞ்சு. காசி மெல்ல சென்று, தன் மகராணிக்கு நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்
"சுகந்தி, நம்ம கஷ்டமெல்லாம் போக போகுது...உன்ன நிஜமாகவே ராணி போல வச்சிருக்க போறேன்" அவள் காதில் மெல்ல கிசுகிசுத்தான். திரும்பி தன் குழந்தையை
பார்த்தான், அந்த நொடியில் தன்னையே மறந்தான், கண்ணில் நீர் முட்டியது.
"என் ராஜகுமாரா...என் செல்லம்" தன் இஷ்ட தெய்வத்தை வேண்டியபடி குழந்தையை தூக்கினான். மெல்ல குழந்தையின் துணியை விலக்கிப்பார்த்தான். வெளியே ஒரு மின்னல் வெட்டு, அதன் வெளிச்சம் காசியின் மேல் பட்டு தெறிக்க, அதிர்ச்சியில் காசி நின்றுகொண்டிருந்தான். ஆம், காசியின் இஷ்ட தெய்வத்தின் வரம் வேறாய் இருந்தது. காசியின் கையில் பால்வன்னம் மாறாத அழகான பெண் தேவதை. மீண்டும் ஒண்டி குடுத்தனம், ரேஷன் க்யூ, வாடகை கட்ட முடியாமல் வீட்டுக்காரனின் ஏச்சு. காசியின் முன்
ஒவ்வொன்றாய் வந்து கொண்டிருந்தது. சற்றுமுன் அவன் கட்டிய கனவு கோட்டை சிதறிக் கொண்டிருந்தது. அப்போது தான் அவன் கவனித்தான், சுகந்தியின் பக்கத்தில் காத்தாயி, அவள் அருகில் அழகான ஆண் குழந்தை. காத்தாயி சுகந்தி போலவே மயக்க நிலையில் இருந்தாள். காசிக்கு இப்போது என்ன செய்வது என்று புரிந்துவிட்டது,
நல்லது கெட்டது அவன் யோசிக்கவில்லை, சுகந்தியை பற்றியும் அவன் யோசிக்கவில்லை. தன் குழந்தையை சுகந்தி அருகே வைத்து திரும்பி யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தான். வெளியே அந்த நர்ஸ் எங்கயோ போய்க்கொண்டிருந்தாள், உள்ளே இருந்த இன்னொரு நர்சும் இப்போது இல்லை. கன நேரத்தில் காசி அந்த காரியத்தை செய்தான், அவன் பெண் குழந்தை இப்போது காத்தாயி பக்கத்தில், இப்போது கண்ணை திறந்து காசியை பார்த்தது, அதை பார்க்க கூட திரானியற்றவனாய் காசி
திரும்பி கொண்டான். சுகந்திக்கு நினைவு வந்தது, தன் குழந்தையை பார்த்தாள், அருகில் இருந்த காசியை பார்த்து லேசாய் சிரித்தாள் அவள் கண்ணில் நீர்.
நேரம் விடியலை நெருங்கி கொண்டிருந்தது. காசி வெளியே உட்கார்ந்திருந்தான். உள்ளேயிருந்து நேற்று அவன் பார்த்த அந்த ஏழை ஜீவனில் ஒருத்தி காத்தாயியை கைத்தாங்கலாய் வெளியே நடத்தி கொண்டு வந்திருந்தாள், அவர்கள் பின்னே அந்த வெற்றிலை மனிதன் குழந்தையை ஏந்தி வந்தான். அவன் முகத்தில் ஒருவித மகிழ்ச்சி. காசிக்கு கடைசியாய் தன் குழந்தையை பார்க்கும் ஆசை வந்தது.
"ஐயா ஒரு நிமிஷம்"
வெற்றிலை மனிதன் நின்றான், காசி அவன் அருகே வந்து குழந்தையை வாங்கினான். குழந்தை தூங்கிகொண்டிருந்தது
"என்ன மன்னிச்சிடுமா... நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்ப...நீ கண்டிப்பா நல்லா வருவ....பெரிய படிப்பெல்லாம் படிப்ப.." காசியின் மனசாட்சி குழந்தையிடம் பேசியது. குழந்தையை அவனிடம் கொடுத்து தன் சட்டைபையில் கைவிட்டு பார்த்தான், நேற்று இருந்த இருபது ருபாயும் சுகந்தியின் மருந்திற்கு செலவானதை மறந்தவனாய். அவனிடம் இருந்தது அவன் மாமா எழுதிய அந்த கடிதம் மட்டுமே, அது வேறு அவன் மனதை மேலும் கிழித்தது.
"ஆண்டவா...." தன் கழுத்தை தொட்டான், கையில் அவன் சிறுவயதிலிருந்து போட்டு கொண்டிருக்கும் தங்க செயின் பட்டது. அதை எடுத்து குழந்தையின் கழுத்தில் போட்டான்.
"ஐயோ சாமி.. என்ன சாமி இதெல்லாம்... வேண்டாம் சாமி"
"இல்லைங்க... பரவாயில்ல என் குழந்தை பிறந்த நேரம் பிறந்திருக்கா..அந்த ஞாபகத்துக்கு இருக்கட்டும்... இதான் உங்க முதல் குழந்தையா"
"ஆமா சாமி... இது என் ரெண்டாவது சம்சாரத்துக்கு பொறந்தது...அதோ என் சம்சாரத்த கூட்டிக்கிட்டு போறாளே அவதான் என் மொத சம்சாரம்...அவளுக்கு கொழந்த இல்லாததால....நான் தவமா தவம் கிடந்து பெத்ததுங்க இது"
"முதல் குழந்தயா.. ஆம்பிள்ளையா இருந்தா நல்லா இருந்திருக்கும்"
"ஐயோ என்ன சாமி அப்படி சொல்லிட்டீங்க... எங்க தொழிலுக்கு பொம்பள குழந்த பொறந்தா..தாங்க நல்லது"
காசி பேச்சற்றவனாய் நின்றான்...குழந்தையுடன் தூரத்தில் காத்தாயியும் அவர்களும் போய்க்கொன்டிருந்தனர்.
"எங்க தொழிலுக்கு பொம்பள குழந்த பொறந்தா..தாங்க நல்லது"
அவன் கடைசியாய் சொன்ன அந்த வார்த்தைகள் காசியின் வாழ்நாள் முழுவதும் வலித்தது.
மணி இரவு பதினொன்றை நெருங்கும் நேரம், அந்த ஆட்டோ கொட்டும் மழையையும் பொருட்டாது தார் ரோட்டில் பறந்து கொண்டிருந்தது. உள்ளே நிறைமாத கர்ப்பினி சுகந்தி வலி பொறுக்க முடியாமல் துடிக்கிறாள், காசிக்கு கண்ணில் பயம் கொஞ்சம் இயலாமை கொஞ்சம், சுகந்தியை தோளோடு தழுவி வெளியே பார்த்தான். கண்ணுக்கு தெரிந்த வரையில் எந்த ஒரு பெரிய ஆஸ்பத்திரியும் தெரிவதாய் இல்லை. "ஏம்பா இன்னும் எவ்வளவு தூரம் போகனும்"
"இன்னும் கொஞ்சம் தொலவு போகனும் சார்.....ஒரு அரை மணி நேரமாவது ஆகும்.... அடிக்கிற மழையில வண்டி ஓட்டறது வேற கஷ்டமா இருக்குது"
"சரி பக்கத்துல எங்கயாவது சின்ன ஆஸ்பத்திரி இருக்கா"
"இந்த ஊருக்குல்ல போனா ஒரு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கு சார்... வேனும்னா அங்க வண்டிய திருப்பத்துமா"
"சரிப்பா...இவ ரொம்ப துடிக்கிறா.. அங்கேயே போவோம்" அரை மனதுடன் காசி சொன்னான். பேருக்கு பெரிய ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவை போக சொன்னாலும், அங்கே ஆகும் செலவை நினைத்து பாதி வழியிலே கவலைப்பட ஆரம்பித்தான். கையில் ஆட்டோவிற்கே பணம் இருப்பதாய் தெரியவில்லை. தன் வாரிசை இப்படியெல்லாம் பெறப்போகிறோம் என்று சில வருடம் முன்பு அவன் கனவுகூட கண்டிருக்க மாட்டான். தன் பரம்பரை வசதிக்கும், பாரம்பரியத்திற்கும் இந்நேரம் ஆஸ்பத்திரியே அவன் அரண்மனை வீட்டிற்கு வந்திருக்கும். இதெல்லாம் ஏன் நடக்கவில்லை! எல்லாம் இந்த பாழாய்போன காதலால் வந்த வினை. பக்கத்து ஊர் பழைய ஜமீன்தார் பெண்ணை தனக்காக தன் தாய் நாச்சியார் பார்த்து வைத்திருக்க, காசியோ திடுப்பென தன் காதலைப் பற்றி தாயிடம் வாய் திறந்தான். பிறகு என்ன, காதலா பரம்பரை சொத்தா என்று வந்தவுடன், காசி காதலே ஜெயம் என்று வீட்டை விட்டு வெளியே வந்தான். அந்த நேரத்திற்கு நன்பர்களின் துணை இருந்தது, அவர்களின் ஆதரவோடு சுகந்தியின் கரம் பிடித்தான். வாழ்க்கை இனித்தது நம்பிக்கை என்னும் மூலதனத்தை வைத்து வாழ்க்கையைத் தொடங்கினான். எல்லாம் கொஞ்சம் காலம் தான். உலகம் காசிக்கு மெல்ல புரிந்தது, பணத்தின் அருமை புரிந்தது, வாழ்க்கை மெல்ல வலித்தது.
"சார்..ஆஸ்பத்திர் வந்தாச்சு. அம்மாவ மெல்ல இறக்குங்க"
ஆட்டோ ட்ரைவரின் குரல் காசியின் நினைவை தற்காலத்திற்கு கொண்டு வந்தது. சுகந்தியை கைதாங்கலாய் உள்ளே கொண்டு சென்று படுக்கவைத்தான். சுகந்தியின் அருகே இரண்டு மூன்று பெண்கள் பிரசுவிக்க தயாராய் இருந்தனர்.
"ஆம்பளைங்க எல்லாம் வெளியே போங்க" நர்ஸ் ஒருத்தியின் குரல் அதட்டியது
"டாக்டர் எப்ப வருவாங்க" காசி நர்ஸிடம் கேட்டான்
"எல்லாம் சொல்லியிருக்கு வருவாங்க...அப்படியே வர்லேன்னாலும் என்ன...பெரிய எலிசபெத்து ராணியா உம்பொண்டாட்டி...ஏன் நாங்க பிரசவம் பாத்தா உனக்கு ஆகாதா"
இதற்கு மேல் அரசாங்க சுகாதார நிலையத்தில் கவனிப்பை எதிர்பார்ப்பது தவறு. காசி வெளியே வந்தான். அப்போது தான் ஆட்டோ அங்கே இருப்பதை பார்த்தான்.
"சாரிப்பா...நீ இருக்கிறதை மறந்துட்டேன்... எவ்வளவு ஆச்சு" சட்டை பையை துலாவியபடியே கேட்டான்
"பரவாயில்ல சார்... என் ஆட்டோ பிரசவத்துக்கெல்லாம் இலவசம் சார்...அம்மா எப்படி இருக்காங்கன்னு கேக்க தான் சார் நின்னுகிட்டு இருந்தேன்....கவல படாதீங்க சார் எல்லாம் நல்லபடியா நடக்கும்" ஆட்டோ திரும்பி சென்றது. காசி அப்போது தான் கவனித்தான் "பிரசவத்திற்கு இலவசம்" என்று எழுதியிருப்பதை.
"சே என்ன இது... எப்படியாவது ஒரு அம்பது ரூபாவது கொடுத்திருக்கனும்" சட்டைப் பையை பிரித்து பார்த்தான், உள்ளே கசங்கிய இரண்டு ஐந்து ருபாய் நோட்டும் ஒரு இன்லாந்து லெட்டரும் தெரிந்தது, காசியின் கண்ணீர் மழையில் கரைந்தது.
காசி திரும்பவும் அந்த இன்லாந்து லெட்டரை பார்த்தான், இரண்டு நாட்களுக்கு முன் வந்த கடிதம், தன் மாமா எழுதிய கடிதம். தன் தாய் சுகமில்லாமல் இருப்பதாகவும், மெல்ல மெல்ல காசியின் மேல் உள்ள கோபம் கரைவதாகவும் எழுதி இருந்தார். ஆனால் கடைசியில் அவர் எழுதி இருந்தது தான் காசிக்கு கவலையை அதிகரித்தது
"..மேலும் சுகந்தி முழுகாமல் இருப்பதாய் செய்தி வந்தது, நாச்சியாளுக்கு சந்தோஷம். பரம்பரை குலம் காக்க உனக்கும் தலைப்பிள்ளை ஆணாக பிறப்பான் என்று
குலதெய்வத்திற்கு வேண்டிக் கொள்கிறாள். நீயும் அவ்வாறே வேண்டிக்கொள் எனென்றால் உனக்கு பிறக்கும் ஆண்பிள்ளைக்கு தான் பரம்பரை சொத்து முழுவதும் சேரும் என்றும், அப்போது தான் அதை அனுபவிக்கும் பாக்கியதை உனக்கு இருக்கும் என்றும் ஏற்கனவே வக்கீல் வைத்து உயில் எழுதி வைத்து விட்டாள். நீ வேண்டுமானால் சொத்து வேண்டாம் என்று வீட்டை விட்டு போயிருக்கலாம், ஆனால் உனக்கு மூத்த குழந்தை ஆணாக பிறக்கும் பட்சத்தில் அவன் தான் இந்த சொத்துக்கெல்லாம் அதிபதி"
சுகந்தியை கைப்பிடித்த பொழுதில் இந்த மாதிரி ஒரு கடிதத்தைப்பார்த்தால் அதை அப்போதே கிழித்து எறிந்திருப்பான். ஆனால் காதல் வாழ்க்கையின் நிஜம் இப்போது
காசியை வேறு விதமாக யோசிக்க வைத்தது. "உன்ன ராணிய போல வச்சிருப்பேன்..." காதலிக்கும்போது காசியின் வசீகர வார்த்தைகள்..."பெரிய எலிசபெத்து ராணியா உம்பொண்டாட்டி" சற்று முன் கேட்ட யதார்த்த வார்த்தைகள்.
"முடியாது...என்னால் முடியாது.....இனிமேல் இந்த வாழ்க்கை வாழ என்னால் முடியாது... எனக்கு என் சொத்து வேண்டும்.. நமக்கு பணம் வேண்டும்... சுகந்தி எப்படியாவது ஒரு ஆண் வாரிசை கொடுத்துவிடு" சுகந்தியோடு சேர்த்து கடவுளையும் வேண்டினான்.
மழை சற்று விட்டிருந்தது, காசி அப்போது தான் தன்னை சுற்றி இருப்பவற்றை பார்த்தான். ஆரம்ப சுகாதர நிலையத்தின் தின்னையின் ஒரு ஓரத்தில் ஒருவன் மிக
வித்தியாசமாய் காட்சியளித்தான். வாய் நிறைய வெற்றிலையை குதைத்தபடியே கிழே தரையில் படுத்திருந்த ஒருத்தியுடன் பேசிக்கொண்டிருந்தான். அடிக்கடி வெற்றிலை
எச்சியை துப்பியபடியே இருந்தான். அவன் அருகில் படுத்திருப்பவளுக்கு நடுத்திர வயது இருக்கும், பக்கத்தில் சில ஆண்கள் இருந்தும், அவள் அதையெல்லாம் சட்டைசெய்யாமல் தன் முந்தானையை தரையில் விரித்து படுத்திருந்ததை பார்த்தபோது காசிக்கு என்னவோ போல் இருந்தது. எண்ணெய் படாத தலை, அழுக்கான துனியென ஏழைத்தனம்
அவர்களிடம் தாண்டவமாடியது.
"அடுத்த வேளை சோத்துக்கே வழி இருப்பதாய் தெரியவில்லை.. இவங்க எல்லாம் புள்ள பெத்துக்கலன்னு எவன் அழுதான்" காசி தனக்குள்ளே முனகி கொண்டிருந்தான்.
பின்னர் தன் நிலையை உணர்ந்து, தான் அப்படி அவர்கள் பற்றி யோசித்ததற்கு தன்னைத்தானே நொந்துகொண்டான்.
நேரம் நடுநிசியை தாண்டி ஓடிக்கொண்டிருந்தது, களைப்பாய் இருந்த காசி சற்று கண் அயர்ந்தவனாய் தூங்கிக்கொண்டு இருந்தான். சில நேரம் கழித்து, குழந்தை அழும் சத்தம் அவனை எழுப்பியது. உள்ளேயிருந்து அந்த நர்ஸ் வெளியே வந்தாள்.
"சுகந்தி புருஷன் நீயா...போ உள்ள போயி உன் குழந்தைய பாரு...எங்க அந்த காத்தாயி புருஷன்... அதாம்பா இங்க உக்காந்து இருந்தானே"
காசி அந்த எழை ஜீவன்கள் இருந்த இடத்தை பார்த்தான், ஒரு பழைய மஞ்சள் பை மட்டும் அவர்கள் அங்கே இருந்ததற்கு அத்தாட்சியாய் இருந்தது. அவர்களை கானோம். காசி அதை பொருட்படுத்தாமல் உள்ளே சுகந்தியை பார்க்க சென்றான். உள்ளே சுகந்தி மயக்க நிலையில் இருந்தால், பக்கத்தில் வெள்ளைதுணி போர்த்தியிருக்க ஒரு பிஞ்சு. காசி மெல்ல சென்று, தன் மகராணிக்கு நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்
"சுகந்தி, நம்ம கஷ்டமெல்லாம் போக போகுது...உன்ன நிஜமாகவே ராணி போல வச்சிருக்க போறேன்" அவள் காதில் மெல்ல கிசுகிசுத்தான். திரும்பி தன் குழந்தையை
பார்த்தான், அந்த நொடியில் தன்னையே மறந்தான், கண்ணில் நீர் முட்டியது.
"என் ராஜகுமாரா...என் செல்லம்" தன் இஷ்ட தெய்வத்தை வேண்டியபடி குழந்தையை தூக்கினான். மெல்ல குழந்தையின் துணியை விலக்கிப்பார்த்தான். வெளியே ஒரு மின்னல் வெட்டு, அதன் வெளிச்சம் காசியின் மேல் பட்டு தெறிக்க, அதிர்ச்சியில் காசி நின்றுகொண்டிருந்தான். ஆம், காசியின் இஷ்ட தெய்வத்தின் வரம் வேறாய் இருந்தது. காசியின் கையில் பால்வன்னம் மாறாத அழகான பெண் தேவதை. மீண்டும் ஒண்டி குடுத்தனம், ரேஷன் க்யூ, வாடகை கட்ட முடியாமல் வீட்டுக்காரனின் ஏச்சு. காசியின் முன்
ஒவ்வொன்றாய் வந்து கொண்டிருந்தது. சற்றுமுன் அவன் கட்டிய கனவு கோட்டை சிதறிக் கொண்டிருந்தது. அப்போது தான் அவன் கவனித்தான், சுகந்தியின் பக்கத்தில் காத்தாயி, அவள் அருகில் அழகான ஆண் குழந்தை. காத்தாயி சுகந்தி போலவே மயக்க நிலையில் இருந்தாள். காசிக்கு இப்போது என்ன செய்வது என்று புரிந்துவிட்டது,
நல்லது கெட்டது அவன் யோசிக்கவில்லை, சுகந்தியை பற்றியும் அவன் யோசிக்கவில்லை. தன் குழந்தையை சுகந்தி அருகே வைத்து திரும்பி யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தான். வெளியே அந்த நர்ஸ் எங்கயோ போய்க்கொண்டிருந்தாள், உள்ளே இருந்த இன்னொரு நர்சும் இப்போது இல்லை. கன நேரத்தில் காசி அந்த காரியத்தை செய்தான், அவன் பெண் குழந்தை இப்போது காத்தாயி பக்கத்தில், இப்போது கண்ணை திறந்து காசியை பார்த்தது, அதை பார்க்க கூட திரானியற்றவனாய் காசி
திரும்பி கொண்டான். சுகந்திக்கு நினைவு வந்தது, தன் குழந்தையை பார்த்தாள், அருகில் இருந்த காசியை பார்த்து லேசாய் சிரித்தாள் அவள் கண்ணில் நீர்.
நேரம் விடியலை நெருங்கி கொண்டிருந்தது. காசி வெளியே உட்கார்ந்திருந்தான். உள்ளேயிருந்து நேற்று அவன் பார்த்த அந்த ஏழை ஜீவனில் ஒருத்தி காத்தாயியை கைத்தாங்கலாய் வெளியே நடத்தி கொண்டு வந்திருந்தாள், அவர்கள் பின்னே அந்த வெற்றிலை மனிதன் குழந்தையை ஏந்தி வந்தான். அவன் முகத்தில் ஒருவித மகிழ்ச்சி. காசிக்கு கடைசியாய் தன் குழந்தையை பார்க்கும் ஆசை வந்தது.
"ஐயா ஒரு நிமிஷம்"
வெற்றிலை மனிதன் நின்றான், காசி அவன் அருகே வந்து குழந்தையை வாங்கினான். குழந்தை தூங்கிகொண்டிருந்தது
"என்ன மன்னிச்சிடுமா... நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்ப...நீ கண்டிப்பா நல்லா வருவ....பெரிய படிப்பெல்லாம் படிப்ப.." காசியின் மனசாட்சி குழந்தையிடம் பேசியது. குழந்தையை அவனிடம் கொடுத்து தன் சட்டைபையில் கைவிட்டு பார்த்தான், நேற்று இருந்த இருபது ருபாயும் சுகந்தியின் மருந்திற்கு செலவானதை மறந்தவனாய். அவனிடம் இருந்தது அவன் மாமா எழுதிய அந்த கடிதம் மட்டுமே, அது வேறு அவன் மனதை மேலும் கிழித்தது.
"ஆண்டவா...." தன் கழுத்தை தொட்டான், கையில் அவன் சிறுவயதிலிருந்து போட்டு கொண்டிருக்கும் தங்க செயின் பட்டது. அதை எடுத்து குழந்தையின் கழுத்தில் போட்டான்.
"ஐயோ சாமி.. என்ன சாமி இதெல்லாம்... வேண்டாம் சாமி"
"இல்லைங்க... பரவாயில்ல என் குழந்தை பிறந்த நேரம் பிறந்திருக்கா..அந்த ஞாபகத்துக்கு இருக்கட்டும்... இதான் உங்க முதல் குழந்தையா"
"ஆமா சாமி... இது என் ரெண்டாவது சம்சாரத்துக்கு பொறந்தது...அதோ என் சம்சாரத்த கூட்டிக்கிட்டு போறாளே அவதான் என் மொத சம்சாரம்...அவளுக்கு கொழந்த இல்லாததால....நான் தவமா தவம் கிடந்து பெத்ததுங்க இது"
"முதல் குழந்தயா.. ஆம்பிள்ளையா இருந்தா நல்லா இருந்திருக்கும்"
"ஐயோ என்ன சாமி அப்படி சொல்லிட்டீங்க... எங்க தொழிலுக்கு பொம்பள குழந்த பொறந்தா..தாங்க நல்லது"
காசி பேச்சற்றவனாய் நின்றான்...குழந்தையுடன் தூரத்தில் காத்தாயியும் அவர்களும் போய்க்கொன்டிருந்தனர்.
"எங்க தொழிலுக்கு பொம்பள குழந்த பொறந்தா..தாங்க நல்லது"
அவன் கடைசியாய் சொன்ன அந்த வார்த்தைகள் காசியின் வாழ்நாள் முழுவதும் வலித்தது.
Wednesday, November 09, 2005
கொஞ்ச நேரம்...
வலைப் பதிவித்து பல நாள் ஆகிவிட்டது. முதற் காரணம் வேலைச் சுமை, இரண்டாவது காரணம் தீபாவளிக்கு வந்த தமிழ் படங்கள் எல்லாம் கண்டிப்பாய் பார்த்தாக வேண்டிய கடமை. சிவகாசி, மஜா, அது ஒரு கனாக் காலம் எல்லாம் பார்த்தாகி விட்டது. நான் மிகவும் எதிர்ப் பார்த்த தவமாய் தவமிருந்து வராதது கொஞ்சம் ஏமாற்றமே. பார்த்த படங்களில் என்னைக் கேட்டால் வர்த்தக ரீதியாக சிவகாசி தான் ஜெயிப்பார் என்று தோன்றுகிறது. வழக்கமான விஜய் மார்க் மசாலா தான் ஆனால் போர் அடிக்கவில்லை. அதிக பஞ்ச் டயலாக்குகள் இல்லாதது படத்திற்கு பலம். கஜினியைப் போலவே இதிலும் அசின் அடிக்கும் லூட்டிகள் 'ஜொள்ள'ப்பட வேண்டியவை. அந்நியனுக்கு பிறகு மஜாவாக விக்ரமை பார்க்க உட்கார்ந்தால், கொஞ்சம் எமாற்றமே. மலையாளப் படத்தை, மலையாளப் படமாகவே எடுத்திருக்கிறார்கள். அசின் வந்து போகிறார். "ஐயார் எட்டு நாட்டுக்கட்டை..." என்னும் குட்டுப்பாடல் மட்டுமே ரசிக்கும்படி இருக்கிறது. பார்த்த மூன்று படங்களிலே எனக்கு மிகவும் பிடித்தது பாலு மகேந்திராவின் அது ஒரு கனாக்காலம். தனுஷ், ப்ரியாமணியிடம் யதார்த்த நடிப்பை அழகாய் வாங்கியிருக்கிறார் இயக்குநர். சமீபத்தில் எங்கேயோ ஒரு வலையத்தின் விமர்சனத்தில், இந்தப் படம் ஏற்கனவே பாலு மகேந்திரா எடுத்த யாத்ரா என்னும் மலையாளப் படத்தின் அச்சு அசல் copy என்று படித்தேன். அதில் மோகன்லால் மற்றும் ஷோபா நடித்தார்களாம். இந்த யாத்ராவைப் பற்றி மெலும் அறிய (google) கூகிலிடும் போது, கமல் & மோகன்லாலின் நடிப்பை பற்றி, சென்னையில் வளர்ந்த மலையாள மற்றும் தமிழ் படம் பார்க்கும் ஒருத்தர் எழுதிய rediff article ஒன்றை படித்தேன். அதில் கமல் மோகன்லால் இவர்களின் முத்தான முன்று படங்களாய் (அனைத்தும் அவர்களுக்கு தேசிய விருது வாங்கி கொடுத்த படம்) மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன், கிரீடம், பரதம், வானப்ரஸ்தம் இவற்றை சொல்லியிருந்தார். இதில் ஒரு சோறு பதமாய் நாயகனில் மகனின் சடலத்தை பார்த்து கமல் அழுவதும், பரதம் படத்தில் தன் அண்ணனின் சடலத்தை பார்த்து மோகன்லால் அழுவதையும் compare செய்து, அவர்களின் நடிப்பை பிரமித்து எழுதியிருக்கிறார். இதை படித்தலிருந்து மோகன்லாலின் அந்த படங்களை பார்க்க ஆவலாய் இருக்கிறது.
Friday, October 28, 2005
Sunday, October 23, 2005
தீபாவளி
தீபாவளி நெருங்குகிறது, இந்த வருடம் தீபாவளி ஷாப்பிங்கை நேற்று சிக்காகோ சென்று முடித்து திரும்பினேன். அமேரிக்காவில் இந்த வருடம் தான் உண்மையான தீபாவளி கொண்டாட போகிறேன் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நான் இந்த வருடம் என் அண்ணன் அண்ணியோடு ('ஜெய்'யும் அவர் மனைவியும்) தீபாவளி கொண்டாட
ஒஹாயோவிற்கு (ohio) அடுத்த வாரம் செல்கிறேன். 2002லிருந்து நான் அமேரிக்காவில் இருப்பதால் கடந்த மூன்று வருடம் தீபாவளிக்கு என் குடும்பத்துடன் இருக்க
முடியவில்லை. நான் இல்லாததால் என் வீட்டாரும் அவ்வளவாக இப்போதெல்லாம் தீபாவளி கொண்டாடுவதில்லை.
தீபாவளி என்றால் எனக்கு பல ஞாபகங்கள். சிறுவயதில் தீபாவளியென்றால் ஒரு மாதம் முன்பாகவே நானும் என் அண்ணனும் பரபரப்பாகி விடுவோம். எப்போதும் கண்டிப்போடு இருக்கும் எங்கள் தந்தை, தீபாவளி பட்டாசில் மட்டும் அதை தளர்த்திவிடுவார். பத்து பதினைந்து வருடத்திற்கு முன்பே, அப்போது இருந்த விலைவாசி திண்டாட்டிலும் எங்களுக்கு ஆயிரம் இரண்டாயிரம் ருபாய்க்கெல்லாம் பட்டாசு வாங்கி தந்திருக்கிறார். ஒரு முறை, எனக்கு நன்றாய் ஞாபகம் இருக்கிறது, பலத்த மழையிலும் எங்களை பாரீஸ் கார்னர் கூட்டிச்சென்று எங்கள் விருப்பத்திற்கு பெரிய அட்டைப் பெட்டி நிறைய பட்டாசு வாங்கி அதை தன் தலையில் சுமந்தபடியே ஆட்டோ பிடித்து வீட்டிற்கு கொண்டு வந்தார். கட்டு கட்டாக அந்த பட்டாசுகளை பார்ப்பதே எனக்குக் கொள்ளை இன்பம், பல சமயம் அதை வெடிப்பதற்கே மனசு இருக்காது. பட்டாசு வாங்கியவுடன், முதல் வேலையாக நானும் என் அண்ணனும், அந்த பட்டாசுகளை தீபாவளி மற்றும் கார்த்திகை தீபத்திற்கு பிரித்து வைத்துவிடுவோம். முக்கால்வாசி தீபாவளிக்கு எங்கள் தந்தை எங்களை குடும்பத்துடன் திருவாரூரிற்கு பக்கத்திலிருக்கும் எங்கள் சொந்த ஊரிற்கு கூட்டிச் சென்றுவிடுவார். ஊரில்தான் பெருன்பான்மையான தீபாவளிகளை கொண்டாடுவோம். ஊர் சென்றவுடனே என் அம்மா, பாட்டி மற்றும் சின்னம்மாவுடன் பலகார ப்ரோக்ராம்களை ஆரம்பித்துவிடுவார். சமயத்தில் அம்மாவிற்கு தலைவலி எடுத்துவிடும், அதனால் தலையைப் பிடித்து ஓய்வு எடுத்துகொண்டிருப்பார், அப்போதெல்லாம் நான் "அம்மா எழுந்திரு...போய் பலகாரம் செய்" என்று தொல்லைப்படுத்த்வேன். என் தொல்லை தாங்காமலே என் அம்மா எல்லா பலகாரமும் செய்து விடுவார். அம்மா பலகாரம் செய்யும்போதெல்லாம் கண்டிப்பாய் யாரையும் சமையற்கட்டு பக்கம் அனுமதிக்க மாட்டார். பலகாரத்தை யாரும் சாமிக்கு படைக்கும் முன் எச்சில் படுத்த கூடாது என்பார். ஆனால் நான் மட்டும் திருட்டுதனமாய் அங்கு நுழைந்து சிலவற்றை எடுத்து சாப்பிட்டு விடுவேன். பலநேரம் இதை கண்டும் கானாததை போல் விட்டுவிடுவாள் அம்மா. ஊரில் தீபாவளியன்று விடியற் காலை நான்கு மனிக்கே எழுப்பிவிடுவர். என் தந்தை எல்லோர் தலையிலும் எண்ணெய் வைத்து
விடுவார். பாட்டி கொல்லைப்புறத்தில் பெரிய அண்டாவில் எல்லோருக்கும் வெந்நீர் போட்டுக் கொண்டிருப்பாள். குளிர் எடுத்தால் நான் வெந்நீர் வேண்டுவேன், அவ்வளவு குளிர் இல்லையென்றால் நான் சித்தப்பா மற்றும் என் அண்ணனும், எங்கள் ஊரில் உள்ள ஐயனார் குளத்தில் போய் ஒரு முங்கு முங்குவோம். ஆஹா, அந்த விடியற் நேரத்தில், கதிரவன் எட்டிப்பார்க்கும் வேளையில் குளத்தில் நீராடுவது எவ்வளவு ஆனந்தம். குளித்தவுடன் வீட்டிற்கு போய், அப்பா மஞ்சள் இட்டு கொடுக்கும் புது துணிமனியை வாங்கி
போட்டுக்கொண்டு எல்லோரும் சாமி கும்பிடுவோம். உடனே தலைவாழை இலை போட்டு திபாவளி விருந்து. எப்படியும் இலையில் 20 ஐயிட்டம் இருக்கும். அப்பாவிற்கு தெரியாமல் சிலவற்றை இலையிலெ வைத்து மடித்து எழுவேன். எழுந்தவுடன் வாங்கிய பட்டாசுகளை பிரித்து நானும் அண்ணனும் வெடித்துத் தள்ளுவோம். காலை மணி எட்டு ஒன்பதுக்குள் தீபாவளி முடிந்துவிடும். இப்போது இதை நினைக்கும் நேரம், விருமாண்டி படத்தில் கமல் சொல்லும் ஒரு வசனம் தான் ஞாபத்திற்கு வருகிறது "சந்தோஷம்னா என்னன்னு அத அனுபவிக்கும்போது மனுஷனுக்கு தெரியர்தில்ல".....
ஒஹாயோவிற்கு (ohio) அடுத்த வாரம் செல்கிறேன். 2002லிருந்து நான் அமேரிக்காவில் இருப்பதால் கடந்த மூன்று வருடம் தீபாவளிக்கு என் குடும்பத்துடன் இருக்க
முடியவில்லை. நான் இல்லாததால் என் வீட்டாரும் அவ்வளவாக இப்போதெல்லாம் தீபாவளி கொண்டாடுவதில்லை.
தீபாவளி என்றால் எனக்கு பல ஞாபகங்கள். சிறுவயதில் தீபாவளியென்றால் ஒரு மாதம் முன்பாகவே நானும் என் அண்ணனும் பரபரப்பாகி விடுவோம். எப்போதும் கண்டிப்போடு இருக்கும் எங்கள் தந்தை, தீபாவளி பட்டாசில் மட்டும் அதை தளர்த்திவிடுவார். பத்து பதினைந்து வருடத்திற்கு முன்பே, அப்போது இருந்த விலைவாசி திண்டாட்டிலும் எங்களுக்கு ஆயிரம் இரண்டாயிரம் ருபாய்க்கெல்லாம் பட்டாசு வாங்கி தந்திருக்கிறார். ஒரு முறை, எனக்கு நன்றாய் ஞாபகம் இருக்கிறது, பலத்த மழையிலும் எங்களை பாரீஸ் கார்னர் கூட்டிச்சென்று எங்கள் விருப்பத்திற்கு பெரிய அட்டைப் பெட்டி நிறைய பட்டாசு வாங்கி அதை தன் தலையில் சுமந்தபடியே ஆட்டோ பிடித்து வீட்டிற்கு கொண்டு வந்தார். கட்டு கட்டாக அந்த பட்டாசுகளை பார்ப்பதே எனக்குக் கொள்ளை இன்பம், பல சமயம் அதை வெடிப்பதற்கே மனசு இருக்காது. பட்டாசு வாங்கியவுடன், முதல் வேலையாக நானும் என் அண்ணனும், அந்த பட்டாசுகளை தீபாவளி மற்றும் கார்த்திகை தீபத்திற்கு பிரித்து வைத்துவிடுவோம். முக்கால்வாசி தீபாவளிக்கு எங்கள் தந்தை எங்களை குடும்பத்துடன் திருவாரூரிற்கு பக்கத்திலிருக்கும் எங்கள் சொந்த ஊரிற்கு கூட்டிச் சென்றுவிடுவார். ஊரில்தான் பெருன்பான்மையான தீபாவளிகளை கொண்டாடுவோம். ஊர் சென்றவுடனே என் அம்மா, பாட்டி மற்றும் சின்னம்மாவுடன் பலகார ப்ரோக்ராம்களை ஆரம்பித்துவிடுவார். சமயத்தில் அம்மாவிற்கு தலைவலி எடுத்துவிடும், அதனால் தலையைப் பிடித்து ஓய்வு எடுத்துகொண்டிருப்பார், அப்போதெல்லாம் நான் "அம்மா எழுந்திரு...போய் பலகாரம் செய்" என்று தொல்லைப்படுத்த்வேன். என் தொல்லை தாங்காமலே என் அம்மா எல்லா பலகாரமும் செய்து விடுவார். அம்மா பலகாரம் செய்யும்போதெல்லாம் கண்டிப்பாய் யாரையும் சமையற்கட்டு பக்கம் அனுமதிக்க மாட்டார். பலகாரத்தை யாரும் சாமிக்கு படைக்கும் முன் எச்சில் படுத்த கூடாது என்பார். ஆனால் நான் மட்டும் திருட்டுதனமாய் அங்கு நுழைந்து சிலவற்றை எடுத்து சாப்பிட்டு விடுவேன். பலநேரம் இதை கண்டும் கானாததை போல் விட்டுவிடுவாள் அம்மா. ஊரில் தீபாவளியன்று விடியற் காலை நான்கு மனிக்கே எழுப்பிவிடுவர். என் தந்தை எல்லோர் தலையிலும் எண்ணெய் வைத்து
விடுவார். பாட்டி கொல்லைப்புறத்தில் பெரிய அண்டாவில் எல்லோருக்கும் வெந்நீர் போட்டுக் கொண்டிருப்பாள். குளிர் எடுத்தால் நான் வெந்நீர் வேண்டுவேன், அவ்வளவு குளிர் இல்லையென்றால் நான் சித்தப்பா மற்றும் என் அண்ணனும், எங்கள் ஊரில் உள்ள ஐயனார் குளத்தில் போய் ஒரு முங்கு முங்குவோம். ஆஹா, அந்த விடியற் நேரத்தில், கதிரவன் எட்டிப்பார்க்கும் வேளையில் குளத்தில் நீராடுவது எவ்வளவு ஆனந்தம். குளித்தவுடன் வீட்டிற்கு போய், அப்பா மஞ்சள் இட்டு கொடுக்கும் புது துணிமனியை வாங்கி
போட்டுக்கொண்டு எல்லோரும் சாமி கும்பிடுவோம். உடனே தலைவாழை இலை போட்டு திபாவளி விருந்து. எப்படியும் இலையில் 20 ஐயிட்டம் இருக்கும். அப்பாவிற்கு தெரியாமல் சிலவற்றை இலையிலெ வைத்து மடித்து எழுவேன். எழுந்தவுடன் வாங்கிய பட்டாசுகளை பிரித்து நானும் அண்ணனும் வெடித்துத் தள்ளுவோம். காலை மணி எட்டு ஒன்பதுக்குள் தீபாவளி முடிந்துவிடும். இப்போது இதை நினைக்கும் நேரம், விருமாண்டி படத்தில் கமல் சொல்லும் ஒரு வசனம் தான் ஞாபத்திற்கு வருகிறது "சந்தோஷம்னா என்னன்னு அத அனுபவிக்கும்போது மனுஷனுக்கு தெரியர்தில்ல".....
Tuesday, October 11, 2005
சில நேரங்கள் சில ஞாபகங்கள் நாடக மேடை 2
பள்ளியில் அதன் பிறகு எனக்கு மேடையேறும் வாய்ப்புகள் ஏதும் வரவில்லை. கல்லூரியிலும் கூட நான் மேடை ஏறவில்லை. பல வருடங்கள் கழித்து, நான் வேலையில் சேர்ந்த பிறகு, எங்கள் நிறுவனத்தில் வருடா வருடம் நடக்கும் cultural dayஇல் (Rendezvous என்று அழைப்பார்கள்) தான் மேடை ஏறினேன். எங்கள்
டிபார்ட்மெண்டில் நந்து என்ற சீனியர் தான் rendevous வருடா வருடம் organize செய்வார். ஒரு
பார்ட்டியில் நான் ஏதோ பொழுது போக்கிற்கு மிமிக்ரி செய்ய, அது அவருக்கு பிடித்துபோய் எனக்கு ஒரு slot கொடுத்தார். நானும் என்னுடன் வேலை பார்த்த ராமசுப்புவும் சேர்ந்து 1999 வருடம் ம்யூசிக் அகாடமியில் எங்கள் முதல் நிகழ்ச்சியை செய்தோம். அப்போது கிரிக்கெட் world cup நடைபெற்றதால், நடிகர்கள் கிரிக்கெட் விளையாடுவது போல மிமிக்ரியும், விளம்பர spoofவும், அங்கில பட ட்ரெயிலர் ஒன்றும் செய்தோம். அதில் DTSஉடன் நாங்கள் செய்த ஆங்கிலப்பட ட்ரெய்லரும், விளம்பர spoofவும் நல்ல
ஹிட்டானது. உதாரணத்திற்கு ஒரு விளம்பரம்
நான்: (கயில் ஒரு கோப்பை வைத்துகொண்டு) "இந்த டீயில் நிறமில்லை, இந்த டீயில் மனமில்லை, இந்த டீயில் திடமில்லை...எந்த டீயில் இந்த மூனு குணமும் இருக்கு"
ராமசுப்பு: "டேய் முண்டம்... நீ குடிக்கிறது காபிடா"...
அதற்கு அடுத்த வருடம், எங்கள் டீம் பெரிதானது. நான், ராமசுப்பு, அருண் மற்றும் பாலா நால்வரும் சேர்ந்து மிமிக்ரி செய்தோம். ஆனால் எங்கள் மிமிக்ரி அவ்வளவு
சோபிக்கவில்லை. நல்ல வேளையாக மிமிக்ரியோடு மணிரத்னம் பட clicheக்களை spoof செய்தோம், அது நல்ல ஹிட்டானது. உதாரணத்திற்கு, மேடையில் இருட்டாக்கி, பாலா ஒரு பக்கமும், ராமசுப்பு மறு பக்கமும் மேடையின் நடுவே வருவார்கள், எதிரெதிர் வந்து அவர்கள் முகத்தில் டார்ச் அடிப்பார்கள்
பாலா: (மெல்லிய குரலில்) "...விட்டுது....எல்லாத்தையும் விட்டுது..."
ராமசுப்பு: (மெல்லிய குரலில்) "...முடியாது...என்னால முடியாது.." இது மட்டும் பேசி வந்து விடுவார்கள், பிறகு பாம்பே பட BGM ஒலிக்கும், மேடை ஒரு பக்கத்திலிருந்து அருண், பாலா, ராமசுப்பு மூவரும் ஆளுக்கொரு தடியை வத்து யாரையோ துரத்துவது போல் மேடையின் ஒரு மூலையில் இருந்து மறு மூலைக்கு ஓடிவார்கள், ஓடும்போது அருண் ஒரு சிகரெட் துண்டை பற்றவைத்து கீழே போட்டுவிட்டு ஓடுவார், அப்போது ரோஜா படத்தில் வரும் தமிழா தமிழா பாடலில் "இது பாரதம், நம் பாரதம்" இசை ஒலிக்கும் உடனே ஒரு சிகப்பு ஷ்வெட்டர் போட்டு, கயை கயிறால் கட்டி நான் தேச பக்தியோடு அந்த சிகரெட் துண்டை அனைப்பேன். அனைத்து அந்த பக்கம் வந்தபின், அலைப்பாயுதேவில் வரும் "என்றென்றும் புன்னகை" பாடல் ஒலிக்கும், அப்போது அருண் ஒரு கருப்பு sunglass மாட்டி காதில் walkman போட்டு ஒரு சின்ன tobu சைக்கிளில் மேடையை சுற்றி வருவார், அரங்கில் கரகோஷம்.
2001 வருடம் rendezvous தான் நான் கடைசியாக பங்கேற்ற மேடை அனுபவம். இந்தமுறை நான் மேடையில் தோன்றவில்லை, ஆனால் ஒரு முழுநீல நகைச்சுவை
நாடகத்தை எழுதி இயக்கினேன். செந்தில், ராஜ்குமார், மீனா, அம்மு, ஷபி, அருண், ஹரி, ஜெகதீஷ் என பெரிய டீம் வொர்க் அது, சூப்பர் ஹிட்டானது. எங்கள் IT company கோடம்பாக்கத்தில் சினிமா எடுத்தால் என்னென்ன ஆகும் என்ற வேடிக்கையான கற்பனை தான் கரு. HR, Admin, Finance என அனைவரையும் ஓட்டு ஓட்டு என ஓட்டினோம். செந்தில் தான் கதாநாயகன், சினிமா டைரக்டராக நடித்தான், அருணுக்கு ஆந்திர சினிமா ஹீரோ வேடம், அதற்கு ஏற்றார் போல் ஒரு கண்ணைகூசும் காஸ்ட்யூமில் வந்து கலக்கினார். எனக்கு மிகவும் திருப்தியளித்த நாடகத்திலிருந்து சில காட்சிகள்...
முதல் காட்சி: செந்தில் இரண்டு கைகளாலயும், சினிமா டைரக்டர் போல் angle பார்த்தபடியே மேடைக்கு வருவான், கூடவே அசிஸ்டெண்ட் டைரக்டராக ஷபி
செந்தில்: (மேடையின் எல்லா பக்கமும் திரும்பி angle பார்க்கிறான்)
ஷபி: (டைரக்டரை பார்த்து புல்லரித்தபடியே அவர் காலில் விழுகிறான்)
செந்தில் :ஏய் அசிஸ்டெண்ட் எழுந்திரு... எதுக்கு கால்ல விழர
ஷபி: சார்.. நீங்க டைரக்டர் தெய்வம் சார்... சும்மா நிக்கும்போதே எல்லா directionலயும் எப்படி angle பாக்குறீங்க
செந்தில்: நீ வேற....அவசரமா எனக்கு அது வருது...எந்த பக்கம் ரெஸ்ட் ரூம்னு பாத்துகிட்டு இருக்கேன்..
.....
கதாநாயகி தேர்விற்கு மும்பை மாடலாக மீனா டைரக்டரை பார்க்க வருவார்.
மீனா: வன்க்கம் சார்
செந்தில்: வணக்கம்மா...உனக்கு தமிழ் பேச தெரியுமா..
மீனா: குஞ்சம் குஞ்சம் தெர்யும் சார்
ஷபி: சார்...என்ன சார் தமிழ் தடுமாறுது
செந்தில்: இது போதுமே...இது போதுமே...இத வச்சு அவார்டே வாங்கலாம்
ஷபி: சரிம்மா..உனக்கு பாட தெரியுமா... ஒரு பாட்டு பாடு
மீனா: என்க்கு prayer song தான் தெர்யும்
ஷபி: என்னது prayer ஸாங்கா...
செந்தில்: டேய் விடுடா..பாப்பாவோட prayer தான் கேப்போமே..நீ பாடும்மா
மீனா: (தொண்டையய் செருமி, கைகளை கூப்பி, கண்கள் மூடி) மல ...மல மருத மல...
............
கதாசிரியராக ராஜ்குமார், டைரக்டரிடம் கதை சொல்ல வருகிறான்.
செந்தில்: இதோ பாருப்பா...இது ஒரு மெகா பட்ஜெட் படம்.. அதுக்கேத்த மாதிரி கதையச்சொல்லு
ராஜ்: சார்..ஒரு அருமையான கிராமத்து சப்ஜெக்ட் சார்
செந்தில்: அடடா...மெகா பட்ஜெட் படம்னாலும், கிராமத்து கதையா சொல்றான்டா..மண்வாசனைய காமிக்கிறாண்டா.. நோட் பன்னிகோடா
(ஷபி தன் கூடவே வைத்திருக்கும் ஒரு பேப்பர் பேடில் எதையோ எழுதுகிறான்.அடிக்கடி செந்தில் சொல்ல சொல்ல அவன் எதையோ கிறுக்குகிறான்)
ராஜ்: சார் கதப்படி நம்ம ஹீரோ..பாரப்பட்டிங்கிற கிராமத்துல விவசாயம் செய்யிற விவசாயி..
செந்தில்: யோவ் என்னய்யா....மெகா பட்ஜெட் படம்னு சொல்றன்..நீ பாரப்பட்டி..பஞ்சப்பட்டின்னு...எனக்கு விஷ்வல் முக்கியம்யா..பேசாம சுவிட்சர்லாந்துல ஏர் உழுவுரதா
வச்சிக்கோ
ஷபி: சார் சுவிட்சர்லாந்துல ஏர் பிடிக்கிறது எல்லாம் கொஞ்சம் ஓவர் சார்... பெர்மிஷன் கிடைக்காது..
செந்தில்: அப்படின்னா சொல்ற... சரி.. பேசாம தாஜ்மஹால் பக்கத்துல உழுவரதா வச்சிக்கலாம்..
ராஜ்: தாஜ்மஹால்ல விவசாயமா...லாஜிக் உதைக்குதே சார்
செந்தில்:(கூட்டத்தை பார்த்து கைகாட்டி) எழுதுற codeலேயே நாங்க லாஜிக் பாக்க மாட்டோம்...(சரியான applause)
ராஜ்: ஒகே சார்... கதைய கண்டின்யூ பன்றேன்...நம்ம ஹீரோ இருக்கிற ஊர்ல ஒரு பன்னையார்...
செந்தில்: என்ன...அந்த பன்னையார் பொன்ன நம்ம ஹீரோ லவ் பன்னி கல்யானம் பன்னிப்பார்...இதான கதை
ராஜ்:(ஆச்சர்யத்தோடு)...சார் உங்களுக்கு எப்படி சார் இது தெரியும்..
செந்தில்: இதான் ஊருக்கே தெரியுமேயா...இத வச்சி நானே நாலு படம் பன்னிட்டேன்....
ராஜ்: சார்...
செந்தில்: என்னய்யா நீ... இது ஒரு IT கம்பேனியோட படம்யா..இங்க நிறைய இருக்கு...java, oracle, database இது மாதிரி நிறைய விஷயம் இருக்கு.. இத வச்சி இவங்க தான்(கூட்டத்தை பார்த்து கைகாட்டி) ஒன்னும் பன்றதில்ல...நீயாவது நல்ல கத பன்னேயா..
ராஜ்: ஒகே சார்...ITக்கு ஏத்த கத ஒன்னு சொல்றேன் சார்..டைட்டிலே ரொம்ப வித்தியாசமா இருக்கும் சார்
செந்தில்: என்ன சொல்லு
ராஜ்: 12G இது தான் சார் டைட்டில்
செந்தில்: 12G...அப்படின்னா
ராஜ்: 12 gigabytes
செந்தில்: ஆஹா..டைட்டில்லெ கலக்குறாண்டா.. நோட் பன்னிகோடா (ஷபி எதையோ கிறுக்குகிறான்)..நீ சொல்லு
ராஜ்: நம்ம ஹீரோ உங்க IT கம்பேனியில வொர்க் பன்றார் சார்...கம்பேனியோட CEOவோட hard disk 12 GB சைஸ் சார்..
செந்தில்: கொஞ்சம் இரு (ஷபி பக்கம் திரும்பி)...டேய் CEO வச்சி கதைடா...அப்ரைஸல்ல (appraisal) நல்லா தேத்தலாம்.
ராஜ்: அந்த hard disk ஒரு நாள் க்ராஷ் ஆகுது...அத நம்ம ஹீரோ restore செய்தா அவன் நெலம என்ன...அவன் restore செய்யலேனா அவன் நெலம என்ன.. ரெண்டையும் மாத்தி மாத்தி காமிக்கிறோம் சார்..காட்சிக்கு காட்சி வித்தியாசம் சார்..
செந்தில்: சூப்பர் story ரெடி..ஸ்டெரெய்ட்டா நாம சூட்டிங் போயிடலாம்.
...........
சூட்டிங் ஸ்பாட்டில், டைரக்டர் ஹீரோ அருணுக்கு காட்சியை விளக்கி கொண்டிருகிறான், பக்கத்தில் அசிஸ்டெண்ட் கதாநாயகியோடு அரட்டை அடித்துகொண்டிருக்கிறான்
செந்தில்: சார்..இது தான் சார் சீன்..மல மேல டூயட் பாடுறீங்க..பாடி முடிச்சடும் ஹீரேயின கட்டி புடிச்சு கீழே விழறீங்க...கட்டி புடிச்சு உருள்ற சீன டூப் போட்டு எடுத்தடலாம்..
அருண்: ஏமி..ஹீரொயினோட சீனா...நேனே சேஸ்தானு....நேனே சேஸ்தானு
செந்தில்: சைக்கிள்ள இருந்து விழற சீனுக்கெல்லாம் டூப் கேக்கறான்...ஹீரோயினோட சீன் சொன்னா...அவனே செய்யனும்னு சொல்றான்...கொடுமைடா..
அருண்: ஏமி....
செந்தில்: ஒத்து சார்..
(செந்தில் திரும்ப, அங்கே அசிஸ்டெண்ட் ஹீரோயினுடன் அரட்டை அடிப்பதை பார்த்து டென்ஷன் ஆகிறான்)
செந்தில்: ஏய் நீ இங்க என்ன செஞ்சிகிட்டு இருக்கிற...ஹீரோயினுக்கு சீன் சொல்லதான சொன்னேன் (அவனிடம் இருக்கும் நோட் பேடை வாங்குகிறான் அதைப் பார்த்து பயங்கர அதிர்ச்சி ஆகிறான்) டேய் என்னடா பூனப்படம் வரைஞ்சி இருக்குற..
ஷபி:(தலை சொரிந்தபடி) சார்..சாரி சார்...எனக்கு எழுத படிக்க எல்லாம் தெரியாது..
செந்தில்: அடப்பாவி...ஆரம்பத்திலிருந்து....நோட் பன்னுடா...நோட் பன்னுடான்னு சொன்னேனே...இத தான் செஞ்சிகிட்டு இருந்தியா... நீ நம்ம HR recruit செஞ்ச ஆளா....
ஷபி: ஆமா சார்...
செந்தில்: இப்ப புரியுது (பயங்கர applause)
.....
டிபார்ட்மெண்டில் நந்து என்ற சீனியர் தான் rendevous வருடா வருடம் organize செய்வார். ஒரு
பார்ட்டியில் நான் ஏதோ பொழுது போக்கிற்கு மிமிக்ரி செய்ய, அது அவருக்கு பிடித்துபோய் எனக்கு ஒரு slot கொடுத்தார். நானும் என்னுடன் வேலை பார்த்த ராமசுப்புவும் சேர்ந்து 1999 வருடம் ம்யூசிக் அகாடமியில் எங்கள் முதல் நிகழ்ச்சியை செய்தோம். அப்போது கிரிக்கெட் world cup நடைபெற்றதால், நடிகர்கள் கிரிக்கெட் விளையாடுவது போல மிமிக்ரியும், விளம்பர spoofவும், அங்கில பட ட்ரெயிலர் ஒன்றும் செய்தோம். அதில் DTSஉடன் நாங்கள் செய்த ஆங்கிலப்பட ட்ரெய்லரும், விளம்பர spoofவும் நல்ல
ஹிட்டானது. உதாரணத்திற்கு ஒரு விளம்பரம்
நான்: (கயில் ஒரு கோப்பை வைத்துகொண்டு) "இந்த டீயில் நிறமில்லை, இந்த டீயில் மனமில்லை, இந்த டீயில் திடமில்லை...எந்த டீயில் இந்த மூனு குணமும் இருக்கு"
ராமசுப்பு: "டேய் முண்டம்... நீ குடிக்கிறது காபிடா"...
அதற்கு அடுத்த வருடம், எங்கள் டீம் பெரிதானது. நான், ராமசுப்பு, அருண் மற்றும் பாலா நால்வரும் சேர்ந்து மிமிக்ரி செய்தோம். ஆனால் எங்கள் மிமிக்ரி அவ்வளவு
சோபிக்கவில்லை. நல்ல வேளையாக மிமிக்ரியோடு மணிரத்னம் பட clicheக்களை spoof செய்தோம், அது நல்ல ஹிட்டானது. உதாரணத்திற்கு, மேடையில் இருட்டாக்கி, பாலா ஒரு பக்கமும், ராமசுப்பு மறு பக்கமும் மேடையின் நடுவே வருவார்கள், எதிரெதிர் வந்து அவர்கள் முகத்தில் டார்ச் அடிப்பார்கள்
பாலா: (மெல்லிய குரலில்) "...விட்டுது....எல்லாத்தையும் விட்டுது..."
ராமசுப்பு: (மெல்லிய குரலில்) "...முடியாது...என்னால முடியாது.." இது மட்டும் பேசி வந்து விடுவார்கள், பிறகு பாம்பே பட BGM ஒலிக்கும், மேடை ஒரு பக்கத்திலிருந்து அருண், பாலா, ராமசுப்பு மூவரும் ஆளுக்கொரு தடியை வத்து யாரையோ துரத்துவது போல் மேடையின் ஒரு மூலையில் இருந்து மறு மூலைக்கு ஓடிவார்கள், ஓடும்போது அருண் ஒரு சிகரெட் துண்டை பற்றவைத்து கீழே போட்டுவிட்டு ஓடுவார், அப்போது ரோஜா படத்தில் வரும் தமிழா தமிழா பாடலில் "இது பாரதம், நம் பாரதம்" இசை ஒலிக்கும் உடனே ஒரு சிகப்பு ஷ்வெட்டர் போட்டு, கயை கயிறால் கட்டி நான் தேச பக்தியோடு அந்த சிகரெட் துண்டை அனைப்பேன். அனைத்து அந்த பக்கம் வந்தபின், அலைப்பாயுதேவில் வரும் "என்றென்றும் புன்னகை" பாடல் ஒலிக்கும், அப்போது அருண் ஒரு கருப்பு sunglass மாட்டி காதில் walkman போட்டு ஒரு சின்ன tobu சைக்கிளில் மேடையை சுற்றி வருவார், அரங்கில் கரகோஷம்.
2001 வருடம் rendezvous தான் நான் கடைசியாக பங்கேற்ற மேடை அனுபவம். இந்தமுறை நான் மேடையில் தோன்றவில்லை, ஆனால் ஒரு முழுநீல நகைச்சுவை
நாடகத்தை எழுதி இயக்கினேன். செந்தில், ராஜ்குமார், மீனா, அம்மு, ஷபி, அருண், ஹரி, ஜெகதீஷ் என பெரிய டீம் வொர்க் அது, சூப்பர் ஹிட்டானது. எங்கள் IT company கோடம்பாக்கத்தில் சினிமா எடுத்தால் என்னென்ன ஆகும் என்ற வேடிக்கையான கற்பனை தான் கரு. HR, Admin, Finance என அனைவரையும் ஓட்டு ஓட்டு என ஓட்டினோம். செந்தில் தான் கதாநாயகன், சினிமா டைரக்டராக நடித்தான், அருணுக்கு ஆந்திர சினிமா ஹீரோ வேடம், அதற்கு ஏற்றார் போல் ஒரு கண்ணைகூசும் காஸ்ட்யூமில் வந்து கலக்கினார். எனக்கு மிகவும் திருப்தியளித்த நாடகத்திலிருந்து சில காட்சிகள்...
முதல் காட்சி: செந்தில் இரண்டு கைகளாலயும், சினிமா டைரக்டர் போல் angle பார்த்தபடியே மேடைக்கு வருவான், கூடவே அசிஸ்டெண்ட் டைரக்டராக ஷபி
செந்தில்: (மேடையின் எல்லா பக்கமும் திரும்பி angle பார்க்கிறான்)
ஷபி: (டைரக்டரை பார்த்து புல்லரித்தபடியே அவர் காலில் விழுகிறான்)
செந்தில் :ஏய் அசிஸ்டெண்ட் எழுந்திரு... எதுக்கு கால்ல விழர
ஷபி: சார்.. நீங்க டைரக்டர் தெய்வம் சார்... சும்மா நிக்கும்போதே எல்லா directionலயும் எப்படி angle பாக்குறீங்க
செந்தில்: நீ வேற....அவசரமா எனக்கு அது வருது...எந்த பக்கம் ரெஸ்ட் ரூம்னு பாத்துகிட்டு இருக்கேன்..
.....
கதாநாயகி தேர்விற்கு மும்பை மாடலாக மீனா டைரக்டரை பார்க்க வருவார்.
மீனா: வன்க்கம் சார்
செந்தில்: வணக்கம்மா...உனக்கு தமிழ் பேச தெரியுமா..
மீனா: குஞ்சம் குஞ்சம் தெர்யும் சார்
ஷபி: சார்...என்ன சார் தமிழ் தடுமாறுது
செந்தில்: இது போதுமே...இது போதுமே...இத வச்சு அவார்டே வாங்கலாம்
ஷபி: சரிம்மா..உனக்கு பாட தெரியுமா... ஒரு பாட்டு பாடு
மீனா: என்க்கு prayer song தான் தெர்யும்
ஷபி: என்னது prayer ஸாங்கா...
செந்தில்: டேய் விடுடா..பாப்பாவோட prayer தான் கேப்போமே..நீ பாடும்மா
மீனா: (தொண்டையய் செருமி, கைகளை கூப்பி, கண்கள் மூடி) மல ...மல மருத மல...
............
கதாசிரியராக ராஜ்குமார், டைரக்டரிடம் கதை சொல்ல வருகிறான்.
செந்தில்: இதோ பாருப்பா...இது ஒரு மெகா பட்ஜெட் படம்.. அதுக்கேத்த மாதிரி கதையச்சொல்லு
ராஜ்: சார்..ஒரு அருமையான கிராமத்து சப்ஜெக்ட் சார்
செந்தில்: அடடா...மெகா பட்ஜெட் படம்னாலும், கிராமத்து கதையா சொல்றான்டா..மண்வாசனைய காமிக்கிறாண்டா.. நோட் பன்னிகோடா
(ஷபி தன் கூடவே வைத்திருக்கும் ஒரு பேப்பர் பேடில் எதையோ எழுதுகிறான்.அடிக்கடி செந்தில் சொல்ல சொல்ல அவன் எதையோ கிறுக்குகிறான்)
ராஜ்: சார் கதப்படி நம்ம ஹீரோ..பாரப்பட்டிங்கிற கிராமத்துல விவசாயம் செய்யிற விவசாயி..
செந்தில்: யோவ் என்னய்யா....மெகா பட்ஜெட் படம்னு சொல்றன்..நீ பாரப்பட்டி..பஞ்சப்பட்டின்னு...எனக்கு விஷ்வல் முக்கியம்யா..பேசாம சுவிட்சர்லாந்துல ஏர் உழுவுரதா
வச்சிக்கோ
ஷபி: சார் சுவிட்சர்லாந்துல ஏர் பிடிக்கிறது எல்லாம் கொஞ்சம் ஓவர் சார்... பெர்மிஷன் கிடைக்காது..
செந்தில்: அப்படின்னா சொல்ற... சரி.. பேசாம தாஜ்மஹால் பக்கத்துல உழுவரதா வச்சிக்கலாம்..
ராஜ்: தாஜ்மஹால்ல விவசாயமா...லாஜிக் உதைக்குதே சார்
செந்தில்:(கூட்டத்தை பார்த்து கைகாட்டி) எழுதுற codeலேயே நாங்க லாஜிக் பாக்க மாட்டோம்...(சரியான applause)
ராஜ்: ஒகே சார்... கதைய கண்டின்யூ பன்றேன்...நம்ம ஹீரோ இருக்கிற ஊர்ல ஒரு பன்னையார்...
செந்தில்: என்ன...அந்த பன்னையார் பொன்ன நம்ம ஹீரோ லவ் பன்னி கல்யானம் பன்னிப்பார்...இதான கதை
ராஜ்:(ஆச்சர்யத்தோடு)...சார் உங்களுக்கு எப்படி சார் இது தெரியும்..
செந்தில்: இதான் ஊருக்கே தெரியுமேயா...இத வச்சி நானே நாலு படம் பன்னிட்டேன்....
ராஜ்: சார்...
செந்தில்: என்னய்யா நீ... இது ஒரு IT கம்பேனியோட படம்யா..இங்க நிறைய இருக்கு...java, oracle, database இது மாதிரி நிறைய விஷயம் இருக்கு.. இத வச்சி இவங்க தான்(கூட்டத்தை பார்த்து கைகாட்டி) ஒன்னும் பன்றதில்ல...நீயாவது நல்ல கத பன்னேயா..
ராஜ்: ஒகே சார்...ITக்கு ஏத்த கத ஒன்னு சொல்றேன் சார்..டைட்டிலே ரொம்ப வித்தியாசமா இருக்கும் சார்
செந்தில்: என்ன சொல்லு
ராஜ்: 12G இது தான் சார் டைட்டில்
செந்தில்: 12G...அப்படின்னா
ராஜ்: 12 gigabytes
செந்தில்: ஆஹா..டைட்டில்லெ கலக்குறாண்டா.. நோட் பன்னிகோடா (ஷபி எதையோ கிறுக்குகிறான்)..நீ சொல்லு
ராஜ்: நம்ம ஹீரோ உங்க IT கம்பேனியில வொர்க் பன்றார் சார்...கம்பேனியோட CEOவோட hard disk 12 GB சைஸ் சார்..
செந்தில்: கொஞ்சம் இரு (ஷபி பக்கம் திரும்பி)...டேய் CEO வச்சி கதைடா...அப்ரைஸல்ல (appraisal) நல்லா தேத்தலாம்.
ராஜ்: அந்த hard disk ஒரு நாள் க்ராஷ் ஆகுது...அத நம்ம ஹீரோ restore செய்தா அவன் நெலம என்ன...அவன் restore செய்யலேனா அவன் நெலம என்ன.. ரெண்டையும் மாத்தி மாத்தி காமிக்கிறோம் சார்..காட்சிக்கு காட்சி வித்தியாசம் சார்..
செந்தில்: சூப்பர் story ரெடி..ஸ்டெரெய்ட்டா நாம சூட்டிங் போயிடலாம்.
...........
சூட்டிங் ஸ்பாட்டில், டைரக்டர் ஹீரோ அருணுக்கு காட்சியை விளக்கி கொண்டிருகிறான், பக்கத்தில் அசிஸ்டெண்ட் கதாநாயகியோடு அரட்டை அடித்துகொண்டிருக்கிறான்
செந்தில்: சார்..இது தான் சார் சீன்..மல மேல டூயட் பாடுறீங்க..பாடி முடிச்சடும் ஹீரேயின கட்டி புடிச்சு கீழே விழறீங்க...கட்டி புடிச்சு உருள்ற சீன டூப் போட்டு எடுத்தடலாம்..
அருண்: ஏமி..ஹீரொயினோட சீனா...நேனே சேஸ்தானு....நேனே சேஸ்தானு
செந்தில்: சைக்கிள்ள இருந்து விழற சீனுக்கெல்லாம் டூப் கேக்கறான்...ஹீரோயினோட சீன் சொன்னா...அவனே செய்யனும்னு சொல்றான்...கொடுமைடா..
அருண்: ஏமி....
செந்தில்: ஒத்து சார்..
(செந்தில் திரும்ப, அங்கே அசிஸ்டெண்ட் ஹீரோயினுடன் அரட்டை அடிப்பதை பார்த்து டென்ஷன் ஆகிறான்)
செந்தில்: ஏய் நீ இங்க என்ன செஞ்சிகிட்டு இருக்கிற...ஹீரோயினுக்கு சீன் சொல்லதான சொன்னேன் (அவனிடம் இருக்கும் நோட் பேடை வாங்குகிறான் அதைப் பார்த்து பயங்கர அதிர்ச்சி ஆகிறான்) டேய் என்னடா பூனப்படம் வரைஞ்சி இருக்குற..
ஷபி:(தலை சொரிந்தபடி) சார்..சாரி சார்...எனக்கு எழுத படிக்க எல்லாம் தெரியாது..
செந்தில்: அடப்பாவி...ஆரம்பத்திலிருந்து....நோட் பன்னுடா...நோட் பன்னுடான்னு சொன்னேனே...இத தான் செஞ்சிகிட்டு இருந்தியா... நீ நம்ம HR recruit செஞ்ச ஆளா....
ஷபி: ஆமா சார்...
செந்தில்: இப்ப புரியுது (பயங்கர applause)
.....
Sunday, October 09, 2005
சில நேரங்கள் சில ஞாபகங்கள் (நாடக மேடை 1)
"உலகமே ஒரு நாடக மேடை - அதில்
நாமெல்லாம் நடிகர்கள்" - ஆங்கில அமர கவி ஷேக்ஸ்பியரின் அற்புதமான் வார்த்தைகள். உலகம் என்னும் நாடக மேடையில் நடிப்பது இயல்பு தான், ஆனால் நாடக மேடை என்னும் உலகத்தில் நடிப்பது என்பது கொஞ்சம் கஷ்டம். நான் எங்கு முதலில் மேடையில் தோன்றினேன்? யோசித்து பார்க்கிறேன், அட நான் தோன்றிய மேடை அனுபவங்களும் கொஞ்சம் சுவையாகவே இருக்கிறதே...
நாடக மேடை என்றவுடன், எனக்கு சென்ற வருடம் நடந்த ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. சென்ற வருடம் என் மேலாளர் மற்றும் நெருங்கிய நன்பரான ஜெய் மற்றும் அவர் மனைவியுடன் (நான் அண்ணி என்று அழைப்பேன்) நயாகரா அருவிக்கு என் வீட்டிலிருந்து காரினில் சென்று கொண்டிருந்தோம். அப்போது வெகு தூரம் ஒட்டும் பயண களைப்பு மறக்க கொஞ்சம் "பாட்டுக்கு பாட்டு" நடத்தலாமே என்று எனக்கு தோன்றியது. "யாராவது பாடுங்களேன்" என்று நான் ஜெய்யிடம் கேட்டேன். அவர் "உங்க அண்ணிய பாட சொல்லு, காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல எல்லாம் நிறைய பாடியிருக்கா" என்றார், நான் உடனே ஆச்சர்யமாக அண்ணியிடம் "அப்படியா அண்ணி...கல்ச்சுரல்ஸ் எல்லாம் பாடியிருக்கீங்களா..எப்படி stage fear இல்லாம் பாடினீங்க" உடனே அண்ணி அலட்டாமல் "சே..சே..மேடையில யாரோ பாடுவாங்க ரஞ்சித்...
நான் கீழே பாடிக்கிட்டு இருப்பேன்" என்றாரே பார்க்கலாம். இப்பவும் அதை நினைத்து சிரித்துக் கொள்வேன்.
நான் முதன் முதலில் மேடை ஏறியது என் ஆறாம் வகுப்பில். பள்ளியில் கிறிஸ்த்துமஸ் விழா, அதற்கு இயேசு பிரான் வாழ்க்கையில் நடந்த சில பகுதியை நாடகமாக்கினார்கள். என்னை நடிப்பதற்கு கூப்பிட்டார்கள். எனக்கு எப்படியும் இயேசு கிறிஸ்து வேடம் தரமாட்டார்கள், atleast ஒரு சீடன், இல்லை மன்னர் வேடமாவது தருவார்கள் என்ற
ஆசையில் ஒத்திகைக்கு சென்றேன். ஒரு காட்சியில், ஒரு செல்வந்தன் ஏழைகளை இம்சித்து பணம் பறிப்பான், ஏழைகள் அழுவார்கள், அவ்வழியே வரும் இயேசு அந்த செல்வந்தனை திறுத்துவார், இந்த காட்சியை விளக்கினார்கள். பரவாயில்லை, வில்லத்தனத்திற்கு scope இருக்கும் ஒரு செல்வந்தன் வேடமாவது கிடைக்கிறதே என்று என்னை நானே தேற்றினேன். ஆனால் அங்கேயும் 'அல்வா'... எனக்கு அவர்கள் கொடுத்ததோ, செல்வந்தனிடம் அடிப்பட்டு அழுகின்ற ஏழைகளில் ஒருவன். நல்ல வேடம் தருவார்கள்,நன்பர்களிடம் எல்லாம் சொல்லி பிரமாதப்படுத்தலாம் என என்னியிருந்தேன்...கடைசியில் என்னை atmosphere artist ஆக்கிவிட்டார்கள். சரி தொலைகிறது என்று ஒத்திகைக்கு சென்றேன், நாடகத்திற்கு முதல் நாள் எல்லோருக்கும் ஆடை உடுத்தி ஒத்திகை பார்த்தார்கள், எங்களை (ஏழைகள்) தவிர. நாங்கள் என்ன உடுத்துவது என்று டீச்சரிடம் கேட்டோம், டீச்சர் "நீங்க சும்மா பேண்ட் ஷர்ட் போட்டுட்டு வாங்கப்பா" என்றார். நான் உடனே "இல்ல டீச்சர், இயேசு காலத்துல பேண்ட் ஷர்ட் எல்லாம் இல்ல"
"சரி இப்ப என்ன செய்யலாம்னு சொல்ற"
"பேசாம வேஷ்டி,சட்டை போட்டுகிட்டு, தலையில துண்டு போட்டு, அத ரிப்பன் போட்டு தலைய சுத்தி கட்டினா, அரேபியர் மாதிரி இருக்கும் டீச்சர்...கொஞ்சம் நெச்சுரலா இருக்கும் டீச்சர்" என்றேன்...டீச்சருக்கு இந்த idea ரொம்ப பிடித்து விட்டது, அப்படியே வர சொன்னார், எனக்கு கொஞ்சம் பெருமை...ஆனால் நாடகத்தின் அன்று, அந்த காஸ்ட்யூமுடன் எங்களுக்கு முகத்தில் ரோஸ் பவுடரை அப்பிவிட்டனர்...கொஞ்சம் பனக்கார, அரேபிய, ஏழையாக கண்ணை கசக்கி அழுது தொலைத்துவிட்டு வந்தேன்..
(தொடரும்)
நாமெல்லாம் நடிகர்கள்" - ஆங்கில அமர கவி ஷேக்ஸ்பியரின் அற்புதமான் வார்த்தைகள். உலகம் என்னும் நாடக மேடையில் நடிப்பது இயல்பு தான், ஆனால் நாடக மேடை என்னும் உலகத்தில் நடிப்பது என்பது கொஞ்சம் கஷ்டம். நான் எங்கு முதலில் மேடையில் தோன்றினேன்? யோசித்து பார்க்கிறேன், அட நான் தோன்றிய மேடை அனுபவங்களும் கொஞ்சம் சுவையாகவே இருக்கிறதே...
நாடக மேடை என்றவுடன், எனக்கு சென்ற வருடம் நடந்த ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. சென்ற வருடம் என் மேலாளர் மற்றும் நெருங்கிய நன்பரான ஜெய் மற்றும் அவர் மனைவியுடன் (நான் அண்ணி என்று அழைப்பேன்) நயாகரா அருவிக்கு என் வீட்டிலிருந்து காரினில் சென்று கொண்டிருந்தோம். அப்போது வெகு தூரம் ஒட்டும் பயண களைப்பு மறக்க கொஞ்சம் "பாட்டுக்கு பாட்டு" நடத்தலாமே என்று எனக்கு தோன்றியது. "யாராவது பாடுங்களேன்" என்று நான் ஜெய்யிடம் கேட்டேன். அவர் "உங்க அண்ணிய பாட சொல்லு, காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல எல்லாம் நிறைய பாடியிருக்கா" என்றார், நான் உடனே ஆச்சர்யமாக அண்ணியிடம் "அப்படியா அண்ணி...கல்ச்சுரல்ஸ் எல்லாம் பாடியிருக்கீங்களா..எப்படி stage fear இல்லாம் பாடினீங்க" உடனே அண்ணி அலட்டாமல் "சே..சே..மேடையில யாரோ பாடுவாங்க ரஞ்சித்...
நான் கீழே பாடிக்கிட்டு இருப்பேன்" என்றாரே பார்க்கலாம். இப்பவும் அதை நினைத்து சிரித்துக் கொள்வேன்.
நான் முதன் முதலில் மேடை ஏறியது என் ஆறாம் வகுப்பில். பள்ளியில் கிறிஸ்த்துமஸ் விழா, அதற்கு இயேசு பிரான் வாழ்க்கையில் நடந்த சில பகுதியை நாடகமாக்கினார்கள். என்னை நடிப்பதற்கு கூப்பிட்டார்கள். எனக்கு எப்படியும் இயேசு கிறிஸ்து வேடம் தரமாட்டார்கள், atleast ஒரு சீடன், இல்லை மன்னர் வேடமாவது தருவார்கள் என்ற
ஆசையில் ஒத்திகைக்கு சென்றேன். ஒரு காட்சியில், ஒரு செல்வந்தன் ஏழைகளை இம்சித்து பணம் பறிப்பான், ஏழைகள் அழுவார்கள், அவ்வழியே வரும் இயேசு அந்த செல்வந்தனை திறுத்துவார், இந்த காட்சியை விளக்கினார்கள். பரவாயில்லை, வில்லத்தனத்திற்கு scope இருக்கும் ஒரு செல்வந்தன் வேடமாவது கிடைக்கிறதே என்று என்னை நானே தேற்றினேன். ஆனால் அங்கேயும் 'அல்வா'... எனக்கு அவர்கள் கொடுத்ததோ, செல்வந்தனிடம் அடிப்பட்டு அழுகின்ற ஏழைகளில் ஒருவன். நல்ல வேடம் தருவார்கள்,நன்பர்களிடம் எல்லாம் சொல்லி பிரமாதப்படுத்தலாம் என என்னியிருந்தேன்...கடைசியில் என்னை atmosphere artist ஆக்கிவிட்டார்கள். சரி தொலைகிறது என்று ஒத்திகைக்கு சென்றேன், நாடகத்திற்கு முதல் நாள் எல்லோருக்கும் ஆடை உடுத்தி ஒத்திகை பார்த்தார்கள், எங்களை (ஏழைகள்) தவிர. நாங்கள் என்ன உடுத்துவது என்று டீச்சரிடம் கேட்டோம், டீச்சர் "நீங்க சும்மா பேண்ட் ஷர்ட் போட்டுட்டு வாங்கப்பா" என்றார். நான் உடனே "இல்ல டீச்சர், இயேசு காலத்துல பேண்ட் ஷர்ட் எல்லாம் இல்ல"
"சரி இப்ப என்ன செய்யலாம்னு சொல்ற"
"பேசாம வேஷ்டி,சட்டை போட்டுகிட்டு, தலையில துண்டு போட்டு, அத ரிப்பன் போட்டு தலைய சுத்தி கட்டினா, அரேபியர் மாதிரி இருக்கும் டீச்சர்...கொஞ்சம் நெச்சுரலா இருக்கும் டீச்சர்" என்றேன்...டீச்சருக்கு இந்த idea ரொம்ப பிடித்து விட்டது, அப்படியே வர சொன்னார், எனக்கு கொஞ்சம் பெருமை...ஆனால் நாடகத்தின் அன்று, அந்த காஸ்ட்யூமுடன் எங்களுக்கு முகத்தில் ரோஸ் பவுடரை அப்பிவிட்டனர்...கொஞ்சம் பனக்கார, அரேபிய, ஏழையாக கண்ணை கசக்கி அழுது தொலைத்துவிட்டு வந்தேன்..
(தொடரும்)
Monday, September 26, 2005
Lyric (payanam)
சமீபத்தில் என் தோழி நளினா, அவள் தோழி ஒருவர் சோகமாய் இருக்கும்போது ஒரு கவிதை எழுதியதாக என்னிடம் ஒரு கவிதை கொடுத்தாள். அவள் கொடுத்த
கவிதையை அவள் அனுமதியுடன் பாடல் வடிவில் இங்கே கொடுத்திருக்கிறேன்.
பல்லவி
------
சிரித்திடும் போது சிரி
அழுதிடும் போது அழு
வாழ்க்கை ஒரு பயணம் தோழா
காலம் என்னும் கப்பல் மேலே
வாழ்க்கை ஒரு பயணம் தோழா
சரணம்
-------
கடந்து போன நிமிடம் நினைத்து
இந்த நொடி தான் இழக்கின்றோம்
கடந்து வந்த பாதை மட்டும்
காண என்றும் மறுக்கின்றோம்
நெடுந்தூரப் பயணம் இது
தொடங்குமிடம் தெரியும்
முடியுமிடமும் புரியும்
பாதை என்ன, பயணம் என்ன
யாருக்கிங்கே தெரியும்
பயணம் நெடுவே
பயணிகள் பலரே
பயணம் சுமையை குறைப்பார்
பாதை திசையை
பயணம் விசையை
யார் இங்கே திரிப்பார்
காலத்தை வென்று
திசையை மாற்ற முயல்கின்றோம் - ஆனால்
அடிக்கும் புயலில்
சிக்கிய சருகாய் தவிக்கின்றோம்
புயலை எதிர்கொள்ள
புறப்படு தோழா - இல்லை
சிக்கிய புயலில்
சிரித்திடு தோழா
கவிதையை அவள் அனுமதியுடன் பாடல் வடிவில் இங்கே கொடுத்திருக்கிறேன்.
பல்லவி
------
சிரித்திடும் போது சிரி
அழுதிடும் போது அழு
வாழ்க்கை ஒரு பயணம் தோழா
காலம் என்னும் கப்பல் மேலே
வாழ்க்கை ஒரு பயணம் தோழா
சரணம்
-------
கடந்து போன நிமிடம் நினைத்து
இந்த நொடி தான் இழக்கின்றோம்
கடந்து வந்த பாதை மட்டும்
காண என்றும் மறுக்கின்றோம்
நெடுந்தூரப் பயணம் இது
தொடங்குமிடம் தெரியும்
முடியுமிடமும் புரியும்
பாதை என்ன, பயணம் என்ன
யாருக்கிங்கே தெரியும்
பயணம் நெடுவே
பயணிகள் பலரே
பயணம் சுமையை குறைப்பார்
பாதை திசையை
பயணம் விசையை
யார் இங்கே திரிப்பார்
காலத்தை வென்று
திசையை மாற்ற முயல்கின்றோம் - ஆனால்
அடிக்கும் புயலில்
சிக்கிய சருகாய் தவிக்கின்றோம்
புயலை எதிர்கொள்ள
புறப்படு தோழா - இல்லை
சிக்கிய புயலில்
சிரித்திடு தோழா
Friday, September 23, 2005
ஹாலிவுட்டில் கலைஞர்
நான் கலைஞரின் தீவிர ரசிகன். இலக்கியவாதியாக, கலைஞர் நமக்கு கிடைத்த மிகப்பெரும் சொத்து. நான் பத்தாவது படிக்கும்போது எங்கள் பாடத்தில், கொடி தினத்தை பற்றி ஒரு பாடம் உள்ளது அதில் வரும் ஒரு உரையாடல்:
"முன்னேறு முன்னேறு நீ என முரசொலித்து
எஞ்சிய வீரர்களை நெஞ்சுரம் கொள்ளச் செய்து
சாவு முகட்டிலே நொடிகளை கணக்குப் பார்ப்பது
வீரர்களுக்கு அழகில்லை - என்ற போர்க்காலத்து
அரிச்சுவடியை தவறியும் மறந்து விடாமல்..."
இது இன்றைக்கும் எனக்கு ஞாபகம் உள்ளது. பராசக்தி, மந்திரிகுமாரி, மனோகரா போன்ற திரைப்படங்களுக்கு கலைஞர் எழுதிய புரட்சிகரமான வசனங்கள், காலத்தால்
அழிக்க முடியாத காவிய வடிவங்கள் என்றே சொல்லலாம். இங்கே பல ஆங்கில திரைப்படங்கள் பார்க்கும்போது அதிலும் குறிப்பாக கோர்ட் காட்சிகள் வரும் படங்களை
பார்க்கும்போது, எனக்கு பராசக்தியின் வசனங்கள்தான் உடனே ஞாபகத்திற்கு வரும். இந்த வகை படங்களிலே நான் மிகவும் ரசித்தது "A few good men" என்ற படமாகும். டாம் க்ரூஸ், டெமி மூர், ஜாக் நிக்கல்ஸன் என திறமைகள் போட்டி போடும் ஒரு கதை களம். அதிலும் ரானுவ உயரதிகாரியாக வரும் ஜாக் நிக்கல்ஸன் தன் அபார நடிப்பாற்றல், மற்றும் வசன உச்சரிப்பால் நம்மை வெகுவாக் கவர்வார். அதில் கடைசியில் வரும் ஒரு காட்சி; இரு சிப்பாய்களுக்காக வாதாடும் டாம் க்ரூஸ், அந்த சிப்பாய்கள் தங்கள் உயரதிகாரி கொடுக்கும் உத்தரவால் இன்னொரு சிப்பாய் இறக்க காரணமாகிறார்கள், உயரதிகாரியாக வரும் ஜாக் நிக்கல்ஸன் அந்த உத்தரவை கொடுத்ததாக உன்மையை சொல்ல வைக்கும் ஒரு காட்சி. இந்த காட்சியில் ஜாக் நிக்கல்ஸன் பேசும் வசனம் மிக பிரபலமானது, ஹாலிவுட்டில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய வசனக் காட்சிகளில் ஒன்று. அந்த வசனத்தை கலைஞரின் பேனா தீட்டியிருந்தால் எப்படி இருக்கும் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. அதை இப்போது முயற்சி செய்திருக்கிறேன்.
முதலில் ஆங்கிலத்தில் வரும் வசனம்:
Jack Nicholson: You want Answers?
Tom Cruise: I think I am entitled to them!
Jack Nicholson: You want answers...
Tom Cruise: I WANT THE TRUTH!!!
Jack Nicholson: YOU CAN'T HANDLE THE TRUTH!!! Son we live in a world that has walls, and those walls have to be guarded by men with guns. Whose gonna do it? You? You, Lieutenant Wienburg? I have more responsilbility here than you could possibly fathom.In places you don't want to talk about at parties, you want me on that wall...you need me on that wall. We use words like honour, code, loyalty...we use these words as the backbone to a life spent defending something. You use 'm as a punchline! I have neither the time nor the inclination to explain myself to a man who rises and sleeps under the blanket of the very freedom I provide, then questions the manner in which I provide it! I'd prefer you just said thank you and went on your way. Otherwise, I suggest you pick up a weapon and stand a post. Either way, I don't give a damn what you think you're entitled to!
இந்த காட்சி கலைஞரின் கைவண்ணத்தில் (என் கற்பனை):
ஜாக் நிக்கல்ஸன்: உனக்கு பதில் வேண்டுமா
டாம் க்ரூஸ்: அதை தேரிந்துகொள்ளும் உரிமை உள்ளது
ஜாக் நிக்கல்ஸன்: உனக்கு பதில் வேண்டுமா
டாம் க்ரூஸ்: எனக்கு உன்மை வேண்டும்
ஜாக் நிக்கல்ஸன்:
உன்னால் உன்மையை கையால முடியாது, கேள் இதை...
நாம் வாழும் இந்த உலகம் வேலிகளால் தடுக்கப்பட்டுள்ளது
அந்த வேலிகளை வாள்களால் காவல் செய்யவேண்டும்
யார் செய்வார்கள் அதை
கோர்ட்டிலே கோட்டும் சூட்டும் மாட்டி
பொய்யையும் புரட்டையும் விலைப் பேசும்
நீ செய்வாயா அதை...
உன்னை விட அதிகமாய் பொறுப்புகளும் கடமைகளும் எனக்குள்ளன
நீ கேளிக்கையாய் வாழ்க்கையை மகிழ்விக்க
வாடிக்கையாய் தினமும் தூங்கி எழ..
காக்க வேண்டும் அந்த வேலியை...
பகைவனின் துப்பாக்கிகளுக்கு துவண்டுவிடாமலும்,
எதிரியின் தோட்டாக்களுக்கு தளர்ந்துவிடாமலும்
நான் காக்க வேண்டும் அந்த வேலியை...
எங்கள் அகராதியில் நேர்மை, நானயம், பற்று என வார்த்தைகள் பல உள்ளன
அந்த வார்த்தைகள்தாம் எங்கள் வாழ்க்கையில்,
உயிர் காக்க, உயிர் விடும் எங்கள் யாக்கையில்
ஊறிய வேதமந்திரம்...
எங்களின் வேதமந்திரம் இங்கே உன் வாதத் திறமையின்
வாய்மால வித்தையின் போக பொருளாய் உள்ளது...
நான் கொடுக்கும் இந்த சுதந்திரக் காற்றை சுவாசிக்கும்
நான் படைக்கும் இந்த சுதந்திர வானத்தில் சிறகடித்து பறக்கும்
உன்னை போன்ற கருப்பு அங்கி போட்ட காக்கைக்கு
பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை
அதை கேட்கின்ற அருகதையும் உனக்கில்லை
இதை கேட்பதற்கு பதில்,
இந்த சுதந்திரத்தை உனக்கு பரிசளித்த
எனக்கு நன்றி கூறி உன் வேலையை செய்
இல்லையேல், என்னோடு சேர்ந்து வாள் ஏந்தி காவல் செய்
எப்படியாயினும் உன் உரிமையை பற்றியோ,
உன்மையை கண்டறியும் உன் கடமையை பற்றியோ
எனக்கு ஒருபோதும் கவலை இல்லை
"முன்னேறு முன்னேறு நீ என முரசொலித்து
எஞ்சிய வீரர்களை நெஞ்சுரம் கொள்ளச் செய்து
சாவு முகட்டிலே நொடிகளை கணக்குப் பார்ப்பது
வீரர்களுக்கு அழகில்லை - என்ற போர்க்காலத்து
அரிச்சுவடியை தவறியும் மறந்து விடாமல்..."
இது இன்றைக்கும் எனக்கு ஞாபகம் உள்ளது. பராசக்தி, மந்திரிகுமாரி, மனோகரா போன்ற திரைப்படங்களுக்கு கலைஞர் எழுதிய புரட்சிகரமான வசனங்கள், காலத்தால்
அழிக்க முடியாத காவிய வடிவங்கள் என்றே சொல்லலாம். இங்கே பல ஆங்கில திரைப்படங்கள் பார்க்கும்போது அதிலும் குறிப்பாக கோர்ட் காட்சிகள் வரும் படங்களை
பார்க்கும்போது, எனக்கு பராசக்தியின் வசனங்கள்தான் உடனே ஞாபகத்திற்கு வரும். இந்த வகை படங்களிலே நான் மிகவும் ரசித்தது "A few good men" என்ற படமாகும். டாம் க்ரூஸ், டெமி மூர், ஜாக் நிக்கல்ஸன் என திறமைகள் போட்டி போடும் ஒரு கதை களம். அதிலும் ரானுவ உயரதிகாரியாக வரும் ஜாக் நிக்கல்ஸன் தன் அபார நடிப்பாற்றல், மற்றும் வசன உச்சரிப்பால் நம்மை வெகுவாக் கவர்வார். அதில் கடைசியில் வரும் ஒரு காட்சி; இரு சிப்பாய்களுக்காக வாதாடும் டாம் க்ரூஸ், அந்த சிப்பாய்கள் தங்கள் உயரதிகாரி கொடுக்கும் உத்தரவால் இன்னொரு சிப்பாய் இறக்க காரணமாகிறார்கள், உயரதிகாரியாக வரும் ஜாக் நிக்கல்ஸன் அந்த உத்தரவை கொடுத்ததாக உன்மையை சொல்ல வைக்கும் ஒரு காட்சி. இந்த காட்சியில் ஜாக் நிக்கல்ஸன் பேசும் வசனம் மிக பிரபலமானது, ஹாலிவுட்டில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய வசனக் காட்சிகளில் ஒன்று. அந்த வசனத்தை கலைஞரின் பேனா தீட்டியிருந்தால் எப்படி இருக்கும் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. அதை இப்போது முயற்சி செய்திருக்கிறேன்.
முதலில் ஆங்கிலத்தில் வரும் வசனம்:
Jack Nicholson: You want Answers?
Tom Cruise: I think I am entitled to them!
Jack Nicholson: You want answers...
Tom Cruise: I WANT THE TRUTH!!!
Jack Nicholson: YOU CAN'T HANDLE THE TRUTH!!! Son we live in a world that has walls, and those walls have to be guarded by men with guns. Whose gonna do it? You? You, Lieutenant Wienburg? I have more responsilbility here than you could possibly fathom.In places you don't want to talk about at parties, you want me on that wall...you need me on that wall. We use words like honour, code, loyalty...we use these words as the backbone to a life spent defending something. You use 'm as a punchline! I have neither the time nor the inclination to explain myself to a man who rises and sleeps under the blanket of the very freedom I provide, then questions the manner in which I provide it! I'd prefer you just said thank you and went on your way. Otherwise, I suggest you pick up a weapon and stand a post. Either way, I don't give a damn what you think you're entitled to!
இந்த காட்சி கலைஞரின் கைவண்ணத்தில் (என் கற்பனை):
ஜாக் நிக்கல்ஸன்: உனக்கு பதில் வேண்டுமா
டாம் க்ரூஸ்: அதை தேரிந்துகொள்ளும் உரிமை உள்ளது
ஜாக் நிக்கல்ஸன்: உனக்கு பதில் வேண்டுமா
டாம் க்ரூஸ்: எனக்கு உன்மை வேண்டும்
ஜாக் நிக்கல்ஸன்:
உன்னால் உன்மையை கையால முடியாது, கேள் இதை...
நாம் வாழும் இந்த உலகம் வேலிகளால் தடுக்கப்பட்டுள்ளது
அந்த வேலிகளை வாள்களால் காவல் செய்யவேண்டும்
யார் செய்வார்கள் அதை
கோர்ட்டிலே கோட்டும் சூட்டும் மாட்டி
பொய்யையும் புரட்டையும் விலைப் பேசும்
நீ செய்வாயா அதை...
உன்னை விட அதிகமாய் பொறுப்புகளும் கடமைகளும் எனக்குள்ளன
நீ கேளிக்கையாய் வாழ்க்கையை மகிழ்விக்க
வாடிக்கையாய் தினமும் தூங்கி எழ..
காக்க வேண்டும் அந்த வேலியை...
பகைவனின் துப்பாக்கிகளுக்கு துவண்டுவிடாமலும்,
எதிரியின் தோட்டாக்களுக்கு தளர்ந்துவிடாமலும்
நான் காக்க வேண்டும் அந்த வேலியை...
எங்கள் அகராதியில் நேர்மை, நானயம், பற்று என வார்த்தைகள் பல உள்ளன
அந்த வார்த்தைகள்தாம் எங்கள் வாழ்க்கையில்,
உயிர் காக்க, உயிர் விடும் எங்கள் யாக்கையில்
ஊறிய வேதமந்திரம்...
எங்களின் வேதமந்திரம் இங்கே உன் வாதத் திறமையின்
வாய்மால வித்தையின் போக பொருளாய் உள்ளது...
நான் கொடுக்கும் இந்த சுதந்திரக் காற்றை சுவாசிக்கும்
நான் படைக்கும் இந்த சுதந்திர வானத்தில் சிறகடித்து பறக்கும்
உன்னை போன்ற கருப்பு அங்கி போட்ட காக்கைக்கு
பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை
அதை கேட்கின்ற அருகதையும் உனக்கில்லை
இதை கேட்பதற்கு பதில்,
இந்த சுதந்திரத்தை உனக்கு பரிசளித்த
எனக்கு நன்றி கூறி உன் வேலையை செய்
இல்லையேல், என்னோடு சேர்ந்து வாள் ஏந்தி காவல் செய்
எப்படியாயினும் உன் உரிமையை பற்றியோ,
உன்மையை கண்டறியும் உன் கடமையை பற்றியோ
எனக்கு ஒருபோதும் கவலை இல்லை
Wednesday, September 21, 2005
சில நேரங்கள் சில ஞாபகங்கள் (வகுப்பு வெட்டிகள்)
தலைப்பை பார்த்ததும் ஏதோ நான் வகுப்பில் எப்படி வெட்டி பொழுதை கழித்தது பற்றி எழுத போகிறேன் என நினைத்து விட வேண்டாம். classஐ கட் அடித்து ஊர் சுற்றுவது பற்றி தான் பேச போகிறேன், class கட் அடிப்பதன் தூய தமிழாக்கம் தான் 'வகுப்பு வெட்டி' (ஏதோ டாக்டர் ராமதாஸின் தமிழ் அகராதி சேர்ப்புக்கு என்னால் முடிந்த சேவை).
கல்லூரி காலத்தில், வகுப்பை வெட்டி ஊர் சுற்றுவதை எங்களின் கல்லூரி கடமைகளில் ஒன்றே என நினைத்து வந்தோம். சில விரிவுரையாளர்களின் அ'று'வுரையை தவறவிடுவதே பல சமயம் நமக்கும், நம் அறிவுக்கும் சாலச் சிறந்தது. மேலும் நாங்கள், கல்லூரியின் கூரையின் கீழ் பயில்வதை விட, வானம் என்னும் பொதி மரத்தடியில் உலகம்
பயில்வதையே விரும்பினோம் (கவியரசுக்கு நன்றி....வகுப்பை வெட்டி சினிமா பார்த்ததை இப்படியெல்லாம் சொல்லி சமாளிக்க முடிகிறது). இப்படியெல்லாம் வகுப்பு வெட்டுவதன் பயனை நான் கல்லூரியில் தான் கண்டறிந்தேன் என நீங்கள் நினைத்தால், மன்னிக்கவும் அதற்கு பிள்ளையார் சுழி போட்டது என் பள்ளிப் பருவத்தில்.
நான் ஒன்பதாவது படித்து கொண்டிருந்த சமயம், ஒரு நாள் எங்கள் தமிழாசிரியர், ஆசிரியர் ஓய்வறைக்கு வரச்சொல்லி ஓலை அனுப்பினார். ஓய்வறைக்கு வரச்சொல்லி உதைக்க நான் அப்படி என்ன தவறு செய்தேன் என யோசித்தபடியே அங்கு சென்றேன். அங்கு ஆசிறியருடன் ப.ஜெயக்குமார் மற்றும் ஜே.ஜெயக்குமார் (மற்ற செக்ஷனில் படிக்கும் பையன்கள்) நின்று கொண்டிருந்தனர்.
"நாளக்கு இன்னொரு பள்ளியில் பாரதியார் நினைவு பேச்சு போட்டி இருக்கிறது, அதற்கு உங்கள் மூவரையும் தேர்வு செய்து இருக்கிறோம், உன்னால் போய் பேச முடியுமா"
ஆசிரியர் என்னிடம் கேட்டார். நான் அப்படி ஒன்றும் பெரிய பேச்சாளன் இல்லை, எங்கள் வகுப்பிலிருந்து எப்போதும் இளங்கோவை தான் இது மாதிரியெல்லாம் அனுப்புவார்கள். அந்த பள்ளிக்கே தெரியும் அவன்தான் மிக நன்றாக் பேசுவான் என்று. ஆசிரியர் என்னிடம் கேட்டபோது எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது, கண்டிப்பாய் இளங்கோவை
கேட்டிருப்பார்கள், அவன் மறுத்திருப்பான். இருந்தாலும் இவ்வளவு தூரம் அவர் அழைத்து கேட்டது எனக்கு பெருமையாகவே இருந்தது. உடனே ஒப்புக் கொண்டேன்.
"நாளைக்குள்ள தயார் செஞ்சுடுவீங்களா" நாங்கள் மூவரும் ஒருசேர தலையாட்டினோம்.
"சரி அப்ப நாளைக்கு காலையில AHM கிட்ட அனுமதி கடிதம் வாங்கி தரேன், அத வாங்கிட்டு நீங்களே போயிடுங்க, அரசினர் தொட்டம் உள்ள ஒரு பாலர் பள்ளியிலே தான் போட்டி"
"சரி சார்"
"நல்லா பேசுங்கபா.. நம்ம பள்ளி பேர காப்பாத்துங்க"
"கண்டிப்பா சார், பரிசோட திரும்பி வரோம்" ப.ஜெயக்குமார் நம்பிக்க பொங்க சொன்னான். எனக்கு ஒரெயொரு ஆச்சர்யம், அப்படி ஒன்றும் நான் பேச்சுப் போட்டியில்
ஜெயிக்கவில்லையேனும் (அது ஒரு தனி கதை. அடுத்த சி.நே.சி.ஞா'வில் சொல்கிறேன்) , அடிக்கடி கலந்து கொள்வதால் என்னை தேர்வினார்கள், ஜெ.ஜெயக்குமார்
உன்மையிலே தமிழார்வன், ஒன்பதாவது வரை எங்களோடு ஆங்கில மீடியத்தில் படித்து, தமிழ்ப் பற்றினால் பத்தாவதில் தமிழ் மீடியம் சேர்ந்தவன், மேலும் பாரதி வெறியன், எல்லா மாறுவேட போட்டியுலும் பாரதி வேடம் தான் போடுவான் (ஒரு சமயம், கடைசி நொடியில் போட்டியில் அவசரமாய் நுழைந்து, ஒட்டிய மீசை பாதி தொங்கியும், கட்டிய வேட்டி பாதி அவிழ்ந்ததயும் பாராமல் உனர்ச்சிமயமாக பேசி முதல் பரிசை தட்டிச் சென்றான்), ஆக அவன் தேர்வானதிலும் ஐயமில்லை. ஆனால் இந்த ப.ஜெயக்குமார் எந்த இட ஒதுக்கீட்டில் தேர்வானான் என்பது தான் எனக்கு இன்று வரை விளங்காத மர்மம். அவனுக்கு நன்றாய் பேச வராது என நான் சொல்லவில்லை, இன்று அரசியல்
மேடையில் பேசும் பேச்சாளர்கள் அளவுக்கு நன்றாய் பேசக்கூடியவன் ஏனென்றால் தமிழின் அனைத்து கெட்ட வார்த்தைகளையும் பொழிப்புரையுடன் அறிந்தவன், ஆனால் தூய தமிழ் பேச்சுப் போட்டிக்கும் அவனுக்கும் வெகுதூரம். என்ன செய்ய, ஆசிரியர் தேர்வு செய்துவிட்டார் அவனோடு பேச்சு போட்டிக்கு போய்தான் ஆகனும்.
மாலை வீட்டிற்கு வந்து, மறுநாள் போட்டிக்கான குறிப்புகள் எடுத்துக்கொண்டேன், எல்லாம் எழுதி முடிக்க மணியாகிவிட்டது, மறுநாள் நன்றாய் தயார் படுத்திக் கொள்ளலாம் என்று தூங்க போய்விட்டேன். மறுநாள், மதிய உணவு முடித்து, எங்கள் ஆசிரியரிடம் அனுமதி கடிதம் வாங்கி நாங்கள் மூவரும் கிளம்ப தயாரானோம்.
"ரஞ்சித் நல்லா ப்ராக்டீஸ் பன்னிட்டீயா" ஜே.ஜே கேட்டான்
"நோட்ஸ் எடுத்துட்டேன், எல்லாம் அங்க போய் பாத்துக்கெல்லாம், என்ன ஒரு பத்து பேரு வருவாங்களா, இதுக்கெல்லாம் போய் அலட்டிகிட்டு, சரி நீ எப்படி?"
"நானும் ஒன்னும் ப்ராக்டீஸ் பன்னல, என்னடா நீ ப்ராக்டீஸ் செஞ்சியா?" அவன் ப.ஜெ'விடம் கேட்டான்
"இன்னாத்த ப்ராக்டீஸ் பன்ன, அங்க போய் கீசிடலாம்" வழக்கமான ப.ஜே...
ஆக எல்லோரும் கையில் கொஞ்சம்,
தலையில் அதிகம் (தலைக்கணத்தை தான் சொன்னேன்) சரக்கு வைத்துக்கொண்டு நேரே அரசினர் தோட்டம் சென்றோம்.
ஒரு வழியாய் போட்டி நடக்கும் பள்ளியை கண்டு பிடித்து அங்கு சென்றோம். அங்கே எங்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. நாங்கள் நினைத்துபோல் வெறும் பத்து பேர் வரவில்லை, குறைந்தது நூற்று ஐம்பது பேராவது வந்து இருப்பார்கள், முக்கால்வாசி பெண்கள். எல்லோர் கையிலும் பக்கம் பக்கமாக காகிதங்கள், பாரதி கண்ட புதுமை பெண்கள் எல்லோரும் உயிரை கொடுத்து, கொண்டு வந்த காகிதங்களை மனப்பாடம் செய்து கொண்டிருந்தார்கள் (ஆண்களை விட, மனப்பாடம் செய்வதில் பெண்களே கெட்டிகாரர்கள் என்பது என் தாழ்மையான என்னம்). இன்னும் போட்டிக்கு சில மணித்துளிகளே இருக்கையில், இந்த காட்சியை கண்டு நாங்கள் கொஞ்சம் அல்ல, நிறையவே அதிர்ச்சியில் இருந்தோம். பாரதியே வந்தாலும் பயந்துதான் போயிருப்பார். அங்கே ஒலிபெருக்கியில் எல்லா மாணவர்களையும் பதிவு செய்ய விளித்து
கொண்டிருந்தார்கள். என் ஞாபகம் சரியாய் இருப்பின், எங்களைப் போல் இரண்டு, மூன்று கோஷ்டிகள் அதிர்ச்சியுடன் காட்சியளித்தனர்.
"மச்சி இப்ப இன்னாடா பன்றது" ப.ஜே ஒன்றும் 'கீசிட'ப் போவதாக பேசவில்லை
"தெரியலடா என்னடா செய்றது... பதிவு செய்ய கூப்பிடறாங்க" ஜெ.ஜெ என்னிடம் கேட்டான்
"சத்தியமா எனக்கு நம்பிக்கை இல்ல, பேசாம ஸ்கூலுக்கு போலாம்" நான் சொன்னேன்.
"ஸ்கூலுக்கு போய் இன்னா சொல்வ... பயந்துகின்னு வந்துட்டோம்னு சொல்லுவியா"
"சரி என்ன செய்யலாம்" நான் ப.ஜெவிடம் கேட்டேன்
"பேசாம ஸ்கூல கட் அடிச்சிகிட்டு இங்க எங்காச்சும் சுத்தலாம்.. நாளைக்கு ஏதாவது சொல்லி சமாளிக்கலாம்" ப.ஜெ யோசனை கூறினான். அவன் எங்கள் இருவரையும் கொஞ்சம் யோசிக்க வைத்தான். பள்ளிக்குச் சென்றாலும், அவன் சொல்வதை போல் ஆசிரியர் எங்களை மெச்சப் போவதில்லை, அப்படியே போனாலும் ஒன்னும்
சொல்லும்படியான வகுப்புகள் இல்லை, சரி வெட்டிவிடுவோம் என்ற முடிவுக்கு வந்தோம்.
"இப்ப எங்க சுத்த போறது" ஜெ.ஜெ ப.ஜெவிடம் கேட்டான்.
"உன் கையில காசு இருக்குதா, எதனா படத்துக்கு போவோம்" என் கையில் என் அம்மா பேருந்துக்கு கொடுத்த சில்லறைகள் தான் இருந்தது, அவர்களிடமும் ஒன்றும்
தேறவில்லை. அப்படியே கால் போன போக்கில் அரசினர் தோட்டத்தை சுற்றி வந்தோம், தூரே எம்ஏசி கிரிக்கெட் மைதானம் தெரிந்தது. யாரும் அதற்கு முன்னே கிரிக்கெட் ஸ்டேடியம் பார்த்தது இல்லை, நேரே அதை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். உள்ளே மகளிர் கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு மாநிலமும், மற்றொரு மாநிலமும் மோதிக் கொண்டிருந்தன. பார்வையாளர்கள் வரிசையில் எங்களை தவிர ஒரு ஈ காக்கா இல்லை (மகளிருக்கு 33 சதவிகிதம் ஏன் கிடைக்கவில்லயென்று இப்போது தெரிகிறது). ஒரு வழியாய் ஸ்டேடியத்தை நன்றாய் சுற்றி, சுற்றி வந்து, மதிய பொழுதை கழித்து மாலையில் வீடு வந்து சேர்ந்தோம்.
மறுநாள் எங்களை பார்த்து தமிழாசிரியர் ஆர்வத்தோடு ஓடி வந்தார்
"என்னப்பா என்ன ஆச்சு, நல்லா பேசுனீங்களா... முடிவு என்னாச்சு"
"நல்லா பேசுனோம் சார், மூன்று சுற்று வரை வந்தோம், அப்புறம் தோற்றுவிட்டோம் சார்" சொல்லி வைத்தபடியே எல்லோரும் சொன்னோம்.
"அப்படியா.... பரவாயில்லப்பா, ஜெயிக்கிறது முக்கியம் இல்ல கலந்துகிடறது தான் முக்கியம்...கவலைப்படாதீங்க" எங்களை தேற்றினார்.
அவர் மறையும் வரை கவலை தோய்ந்த முகத்தை மாற்றவில்லை, அவர் அறைக்குள் சென்ற பின் எங்களிடம் ஒரு சின்ன சிரிப்பு.
கல்லூரி காலத்தில், வகுப்பை வெட்டி ஊர் சுற்றுவதை எங்களின் கல்லூரி கடமைகளில் ஒன்றே என நினைத்து வந்தோம். சில விரிவுரையாளர்களின் அ'று'வுரையை தவறவிடுவதே பல சமயம் நமக்கும், நம் அறிவுக்கும் சாலச் சிறந்தது. மேலும் நாங்கள், கல்லூரியின் கூரையின் கீழ் பயில்வதை விட, வானம் என்னும் பொதி மரத்தடியில் உலகம்
பயில்வதையே விரும்பினோம் (கவியரசுக்கு நன்றி....வகுப்பை வெட்டி சினிமா பார்த்ததை இப்படியெல்லாம் சொல்லி சமாளிக்க முடிகிறது). இப்படியெல்லாம் வகுப்பு வெட்டுவதன் பயனை நான் கல்லூரியில் தான் கண்டறிந்தேன் என நீங்கள் நினைத்தால், மன்னிக்கவும் அதற்கு பிள்ளையார் சுழி போட்டது என் பள்ளிப் பருவத்தில்.
நான் ஒன்பதாவது படித்து கொண்டிருந்த சமயம், ஒரு நாள் எங்கள் தமிழாசிரியர், ஆசிரியர் ஓய்வறைக்கு வரச்சொல்லி ஓலை அனுப்பினார். ஓய்வறைக்கு வரச்சொல்லி உதைக்க நான் அப்படி என்ன தவறு செய்தேன் என யோசித்தபடியே அங்கு சென்றேன். அங்கு ஆசிறியருடன் ப.ஜெயக்குமார் மற்றும் ஜே.ஜெயக்குமார் (மற்ற செக்ஷனில் படிக்கும் பையன்கள்) நின்று கொண்டிருந்தனர்.
"நாளக்கு இன்னொரு பள்ளியில் பாரதியார் நினைவு பேச்சு போட்டி இருக்கிறது, அதற்கு உங்கள் மூவரையும் தேர்வு செய்து இருக்கிறோம், உன்னால் போய் பேச முடியுமா"
ஆசிரியர் என்னிடம் கேட்டார். நான் அப்படி ஒன்றும் பெரிய பேச்சாளன் இல்லை, எங்கள் வகுப்பிலிருந்து எப்போதும் இளங்கோவை தான் இது மாதிரியெல்லாம் அனுப்புவார்கள். அந்த பள்ளிக்கே தெரியும் அவன்தான் மிக நன்றாக் பேசுவான் என்று. ஆசிரியர் என்னிடம் கேட்டபோது எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது, கண்டிப்பாய் இளங்கோவை
கேட்டிருப்பார்கள், அவன் மறுத்திருப்பான். இருந்தாலும் இவ்வளவு தூரம் அவர் அழைத்து கேட்டது எனக்கு பெருமையாகவே இருந்தது. உடனே ஒப்புக் கொண்டேன்.
"நாளைக்குள்ள தயார் செஞ்சுடுவீங்களா" நாங்கள் மூவரும் ஒருசேர தலையாட்டினோம்.
"சரி அப்ப நாளைக்கு காலையில AHM கிட்ட அனுமதி கடிதம் வாங்கி தரேன், அத வாங்கிட்டு நீங்களே போயிடுங்க, அரசினர் தொட்டம் உள்ள ஒரு பாலர் பள்ளியிலே தான் போட்டி"
"சரி சார்"
"நல்லா பேசுங்கபா.. நம்ம பள்ளி பேர காப்பாத்துங்க"
"கண்டிப்பா சார், பரிசோட திரும்பி வரோம்" ப.ஜெயக்குமார் நம்பிக்க பொங்க சொன்னான். எனக்கு ஒரெயொரு ஆச்சர்யம், அப்படி ஒன்றும் நான் பேச்சுப் போட்டியில்
ஜெயிக்கவில்லையேனும் (அது ஒரு தனி கதை. அடுத்த சி.நே.சி.ஞா'வில் சொல்கிறேன்) , அடிக்கடி கலந்து கொள்வதால் என்னை தேர்வினார்கள், ஜெ.ஜெயக்குமார்
உன்மையிலே தமிழார்வன், ஒன்பதாவது வரை எங்களோடு ஆங்கில மீடியத்தில் படித்து, தமிழ்ப் பற்றினால் பத்தாவதில் தமிழ் மீடியம் சேர்ந்தவன், மேலும் பாரதி வெறியன், எல்லா மாறுவேட போட்டியுலும் பாரதி வேடம் தான் போடுவான் (ஒரு சமயம், கடைசி நொடியில் போட்டியில் அவசரமாய் நுழைந்து, ஒட்டிய மீசை பாதி தொங்கியும், கட்டிய வேட்டி பாதி அவிழ்ந்ததயும் பாராமல் உனர்ச்சிமயமாக பேசி முதல் பரிசை தட்டிச் சென்றான்), ஆக அவன் தேர்வானதிலும் ஐயமில்லை. ஆனால் இந்த ப.ஜெயக்குமார் எந்த இட ஒதுக்கீட்டில் தேர்வானான் என்பது தான் எனக்கு இன்று வரை விளங்காத மர்மம். அவனுக்கு நன்றாய் பேச வராது என நான் சொல்லவில்லை, இன்று அரசியல்
மேடையில் பேசும் பேச்சாளர்கள் அளவுக்கு நன்றாய் பேசக்கூடியவன் ஏனென்றால் தமிழின் அனைத்து கெட்ட வார்த்தைகளையும் பொழிப்புரையுடன் அறிந்தவன், ஆனால் தூய தமிழ் பேச்சுப் போட்டிக்கும் அவனுக்கும் வெகுதூரம். என்ன செய்ய, ஆசிரியர் தேர்வு செய்துவிட்டார் அவனோடு பேச்சு போட்டிக்கு போய்தான் ஆகனும்.
மாலை வீட்டிற்கு வந்து, மறுநாள் போட்டிக்கான குறிப்புகள் எடுத்துக்கொண்டேன், எல்லாம் எழுதி முடிக்க மணியாகிவிட்டது, மறுநாள் நன்றாய் தயார் படுத்திக் கொள்ளலாம் என்று தூங்க போய்விட்டேன். மறுநாள், மதிய உணவு முடித்து, எங்கள் ஆசிரியரிடம் அனுமதி கடிதம் வாங்கி நாங்கள் மூவரும் கிளம்ப தயாரானோம்.
"ரஞ்சித் நல்லா ப்ராக்டீஸ் பன்னிட்டீயா" ஜே.ஜே கேட்டான்
"நோட்ஸ் எடுத்துட்டேன், எல்லாம் அங்க போய் பாத்துக்கெல்லாம், என்ன ஒரு பத்து பேரு வருவாங்களா, இதுக்கெல்லாம் போய் அலட்டிகிட்டு, சரி நீ எப்படி?"
"நானும் ஒன்னும் ப்ராக்டீஸ் பன்னல, என்னடா நீ ப்ராக்டீஸ் செஞ்சியா?" அவன் ப.ஜெ'விடம் கேட்டான்
"இன்னாத்த ப்ராக்டீஸ் பன்ன, அங்க போய் கீசிடலாம்" வழக்கமான ப.ஜே...
ஆக எல்லோரும் கையில் கொஞ்சம்,
தலையில் அதிகம் (தலைக்கணத்தை தான் சொன்னேன்) சரக்கு வைத்துக்கொண்டு நேரே அரசினர் தோட்டம் சென்றோம்.
ஒரு வழியாய் போட்டி நடக்கும் பள்ளியை கண்டு பிடித்து அங்கு சென்றோம். அங்கே எங்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. நாங்கள் நினைத்துபோல் வெறும் பத்து பேர் வரவில்லை, குறைந்தது நூற்று ஐம்பது பேராவது வந்து இருப்பார்கள், முக்கால்வாசி பெண்கள். எல்லோர் கையிலும் பக்கம் பக்கமாக காகிதங்கள், பாரதி கண்ட புதுமை பெண்கள் எல்லோரும் உயிரை கொடுத்து, கொண்டு வந்த காகிதங்களை மனப்பாடம் செய்து கொண்டிருந்தார்கள் (ஆண்களை விட, மனப்பாடம் செய்வதில் பெண்களே கெட்டிகாரர்கள் என்பது என் தாழ்மையான என்னம்). இன்னும் போட்டிக்கு சில மணித்துளிகளே இருக்கையில், இந்த காட்சியை கண்டு நாங்கள் கொஞ்சம் அல்ல, நிறையவே அதிர்ச்சியில் இருந்தோம். பாரதியே வந்தாலும் பயந்துதான் போயிருப்பார். அங்கே ஒலிபெருக்கியில் எல்லா மாணவர்களையும் பதிவு செய்ய விளித்து
கொண்டிருந்தார்கள். என் ஞாபகம் சரியாய் இருப்பின், எங்களைப் போல் இரண்டு, மூன்று கோஷ்டிகள் அதிர்ச்சியுடன் காட்சியளித்தனர்.
"மச்சி இப்ப இன்னாடா பன்றது" ப.ஜே ஒன்றும் 'கீசிட'ப் போவதாக பேசவில்லை
"தெரியலடா என்னடா செய்றது... பதிவு செய்ய கூப்பிடறாங்க" ஜெ.ஜெ என்னிடம் கேட்டான்
"சத்தியமா எனக்கு நம்பிக்கை இல்ல, பேசாம ஸ்கூலுக்கு போலாம்" நான் சொன்னேன்.
"ஸ்கூலுக்கு போய் இன்னா சொல்வ... பயந்துகின்னு வந்துட்டோம்னு சொல்லுவியா"
"சரி என்ன செய்யலாம்" நான் ப.ஜெவிடம் கேட்டேன்
"பேசாம ஸ்கூல கட் அடிச்சிகிட்டு இங்க எங்காச்சும் சுத்தலாம்.. நாளைக்கு ஏதாவது சொல்லி சமாளிக்கலாம்" ப.ஜெ யோசனை கூறினான். அவன் எங்கள் இருவரையும் கொஞ்சம் யோசிக்க வைத்தான். பள்ளிக்குச் சென்றாலும், அவன் சொல்வதை போல் ஆசிரியர் எங்களை மெச்சப் போவதில்லை, அப்படியே போனாலும் ஒன்னும்
சொல்லும்படியான வகுப்புகள் இல்லை, சரி வெட்டிவிடுவோம் என்ற முடிவுக்கு வந்தோம்.
"இப்ப எங்க சுத்த போறது" ஜெ.ஜெ ப.ஜெவிடம் கேட்டான்.
"உன் கையில காசு இருக்குதா, எதனா படத்துக்கு போவோம்" என் கையில் என் அம்மா பேருந்துக்கு கொடுத்த சில்லறைகள் தான் இருந்தது, அவர்களிடமும் ஒன்றும்
தேறவில்லை. அப்படியே கால் போன போக்கில் அரசினர் தோட்டத்தை சுற்றி வந்தோம், தூரே எம்ஏசி கிரிக்கெட் மைதானம் தெரிந்தது. யாரும் அதற்கு முன்னே கிரிக்கெட் ஸ்டேடியம் பார்த்தது இல்லை, நேரே அதை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். உள்ளே மகளிர் கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு மாநிலமும், மற்றொரு மாநிலமும் மோதிக் கொண்டிருந்தன. பார்வையாளர்கள் வரிசையில் எங்களை தவிர ஒரு ஈ காக்கா இல்லை (மகளிருக்கு 33 சதவிகிதம் ஏன் கிடைக்கவில்லயென்று இப்போது தெரிகிறது). ஒரு வழியாய் ஸ்டேடியத்தை நன்றாய் சுற்றி, சுற்றி வந்து, மதிய பொழுதை கழித்து மாலையில் வீடு வந்து சேர்ந்தோம்.
மறுநாள் எங்களை பார்த்து தமிழாசிரியர் ஆர்வத்தோடு ஓடி வந்தார்
"என்னப்பா என்ன ஆச்சு, நல்லா பேசுனீங்களா... முடிவு என்னாச்சு"
"நல்லா பேசுனோம் சார், மூன்று சுற்று வரை வந்தோம், அப்புறம் தோற்றுவிட்டோம் சார்" சொல்லி வைத்தபடியே எல்லோரும் சொன்னோம்.
"அப்படியா.... பரவாயில்லப்பா, ஜெயிக்கிறது முக்கியம் இல்ல கலந்துகிடறது தான் முக்கியம்...கவலைப்படாதீங்க" எங்களை தேற்றினார்.
அவர் மறையும் வரை கவலை தோய்ந்த முகத்தை மாற்றவில்லை, அவர் அறைக்குள் சென்ற பின் எங்களிடம் ஒரு சின்ன சிரிப்பு.
Sunday, September 18, 2005
சில நேரங்கள் சில ஞாபகங்கள் (Part time rowdy)
சில வருடங்களுக்கு முன், ஒரு சத்யராஜ் படத்தில் நம் கவுண்டர் ஒரு லேடீஸ் ஹாஸ்டல் வாட்ச்மேனிடம் ஒரு டயலாக் விடுவார் "டேய் என்னை பத்தி சாதாரனமா நெனக்காத... நான் பார்ட் டைமா ஒரு ரௌடிடா".. நான் மிகவும் ரசித்த ஒரு காமெடி சீன். இன்று நிறைய திரைப்படத்தில் (முக்கால்வாசி ஆங்கில படத்தில்) பள்ளி மற்றும் கல்லூரிகளில் இரண்டு கோஷ்டிகள் அடித்து கொள்வதுபோல், ஒரு பையன் சண்டித்தனம் செய்வது போலவும் நிறைய காட்சிகள் காண்கிறேன். இவற்றை பார்க்கும்போது, எனக்கு சில
ஞாபகங்கள், நான் பள்ளியில் அது போல ஏதேனும் வீரதீர சாகஸம் ஏதேனும் செய்துள்ளேனா? நான் சத்தியமாக பள்ளிக்கு படிக்க தான் சென்றேன். இருந்தாலும் ஒரு சம்பவத்தை நினைத்து அடிக்கடி சிரித்துக்கொள்வேன்.
நான் எழாவது படிக்கும்போது, என் வகுப்பில் கங்கை அமரன் படித்தான். இந்த கங்கை அமரனை இரு விஷயங்களுக்காக என்னால் மறக்க முடியாது, ஒன்று இந்த சம்பவம் மற்றொன்று, அவன் தான் எனக்கு ஆங்கிலத்தில் உலகம் எல்லாம் உச்சரிக்கப்படும் அந்த நாலு எழுத்து கெட்ட வார்த்தையை அறிமுகப்படுத்தியவன். நான் என் பள்ளி வகுப்பில் எல்லாம், முதல் பென்ஞ்சில் தான் உட்காருவேன். உயரம் ஒரு காரணம், இன்னொரு காரணம், பின் பென்ஞ்சில் எல்லாம் சற்றே உயரமான "ரௌடி" பையன்களும், படிக்கவே படிக்காத மேதைகளும் உட்காருவார்கள். எனக்கு சற்றும் லாயக்குபடாதவர்கள். ஒரு சமயம் எங்கள் வகுப்பு முதன்மை ஆசிரியர் (class teacher) நான் எதோ குறும்பு செய்த காரணத்தால் என்னை கடைசி
பென்ஞ்சில் சில நாட்கள் உட்காரச் சொன்னார், அங்கே கங்கை அமரன். நான் ஒரு தர்மசங்கடத்துடனே அங்கே போனேன். கங்கை அமரன் என்னை சற்று நேரம் முறைத்து
பார்த்தான் கூடவே அவனது மூன்று அடிபொடிகளும் (பெயர் மறந்து விட்டது). "நீ எங்க gangல சேர்ரியா?" அவண் என்னிடம் கேட்ட முதல் கேள்வி,
"என்ன gang? அதுல என்ன செய்வீங்க?"
"எல்லாம் அடிதடி தான், நம்ம பசங்களுக்கு ஏதாவது ப்ராப்ளம்னா நாம போய் பசங்கள ரெண்டு தட்டு தட்டனும். உனக்கு ஏதாவது பிரச்சனைனா கூட நாங்க வருவோம்"
நான் சற்று யோசித்தேன், அவன் சொன்னது எனக்கு கொஞ்சம் interestingஆ தான் இருந்தது, இருந்தாலும் டீச்சருக்கு தெரிந்தால் என்ன செய்வார்கள் என்று யோசித்தேன்.
அவன் என் அருகில் வந்து "வெளியே நீ என் ஆளுன்னு சொன்னா ஒரு பய உன்ன தொட மாட்டான்"
நான் உடனே சரியென்றேன், ஒரு மாறுதலுக்கு படிப்பதுபதில் அடிக்கலாமே...
உடனே அவனும் மற்றவர்களும் நானும் கை குலுக்கிக்கொண்டோம். "திடீர்ன்னு வேல வரும், எப்போதும் ரெடியா இரு" சினிமா தாதாவை மிஞ்சும் அளவு அவன் சொன்னான்.
இது நடந்து ஒரு இரண்டு நாள் இருக்கும், மதிய இடைவெளியில் வழக்கம் போல் என் அம்மா கட்டி தந்த இட்லி பொடியை, வழக்கம் போல் வாழ்க்கையை நொந்து
சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன், அப்போ என்னை யாரோ முதுகில் தட்டியதுபோல் இருந்தது, திரும்பினால் கங்கை அமரன், கூட அவன் அடிபொடிகள் இரண்டு பேர்.
"கிளம்பி வா, ஒருத்தன அடிக்கனும்"
எனக்கு ஒரே பரபரப்பாய் இருந்தது, முதன் முதலாய் ஒருத்தனை அட்களோடு சேர்ந்து அடிக்கபோகிறோம், அனேகமாய் அது மற்ற செக்ஷனில் படிக்கும் பயன்களாய் இருக்க வேண்டும், இல்லையேல் ஏதாவது ஒரு நோஞ்சான் சீனியராய் இருக்க வேண்டும். எப்படி இருந்தாலும் நாளைக்கு பள்ளி முழுவதும் இது தலைப்புச் செய்தியாக போகிறது.
நல்ல வேளையாய் கையில் ஆயுதம் ஏதும் எடுக்காமல் சென்றோம். அப்போது என் பள்ளியில், ஒரு உள் விளையாட்டு அரங்கம் கட்டிக்கொண்டு இருந்தார்கள். அந்த பக்கம் கங்கை அமரன் சென்றான். நிறைய பையன்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் எங்களை போல் தோன்றும் பையன்களை பார்த்து "இவனா...இல்லை இவனா" என ஆள் பார்த்துக்கொண்டே கங்கை அமரனை பின் தொடர்ந்து கொண்டே இருந்தேன்.
"அதோ அங்க இருக்கான்" திடீரென கங்கை அமரன் ஒரு பக்கம் பார்த்து சொன்னான். அங்கே எங்களை போல யாரும் இல்லை. யாரை சொல்கிறான், எனக்கு ஒரே குழப்பம். அவனை பின்னே சென்று கொண்டிருந்தேன், அங்கே நாலாவது படிக்கும் இரு சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். எங்களை பார்த்தடும் இரண்டு பேரும் ஒட்டம் பிடித்தனர். அதில் ஒருவனை எங்கள் "gang leader" விரட்டிப்பிடித்தான்.
"ஏண்டா ஜான்சன் தம்பிய அடிச்ச"
அவன் அழுதுகொண்டே "விடு என்ன, நான் டீச்சர் கிட்ட சொல்லுவேன்"
அவன் கன்னத்தில் லேசாய் கங்கை அமரன் அடித்தான். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
"ரஞ்தித், நீயும் ஒன்னு போடு". நான் அவன் மற்ற கன்னத்தை அறைந்தேன்.
"கமான், சீக்கிரம் க்ளாசுக்கு ஓடு, யாராவது பார்க்க போறாங்க" கங்கை அமரன் ஓட ஆரம்பித்தான், அவன் பின்னே நான். தூரத்தில் அந்த சிறுவன் கீழே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தான். அவனை பார்த்தபடியே நான் வகுப்புக்குள் ஒட்டம் பிடித்தேன்.
அதற்கு பிறகு நான் gang வேலைகள் எதுவும் செய்யவில்லை, ஒரு வாரம் பிறகு என் டீச்சர் என்னை திரும்பவும் முதல் பென்ஞ்சிற்கு மாற்றினார்கள்.
ஞாபகங்கள், நான் பள்ளியில் அது போல ஏதேனும் வீரதீர சாகஸம் ஏதேனும் செய்துள்ளேனா? நான் சத்தியமாக பள்ளிக்கு படிக்க தான் சென்றேன். இருந்தாலும் ஒரு சம்பவத்தை நினைத்து அடிக்கடி சிரித்துக்கொள்வேன்.
நான் எழாவது படிக்கும்போது, என் வகுப்பில் கங்கை அமரன் படித்தான். இந்த கங்கை அமரனை இரு விஷயங்களுக்காக என்னால் மறக்க முடியாது, ஒன்று இந்த சம்பவம் மற்றொன்று, அவன் தான் எனக்கு ஆங்கிலத்தில் உலகம் எல்லாம் உச்சரிக்கப்படும் அந்த நாலு எழுத்து கெட்ட வார்த்தையை அறிமுகப்படுத்தியவன். நான் என் பள்ளி வகுப்பில் எல்லாம், முதல் பென்ஞ்சில் தான் உட்காருவேன். உயரம் ஒரு காரணம், இன்னொரு காரணம், பின் பென்ஞ்சில் எல்லாம் சற்றே உயரமான "ரௌடி" பையன்களும், படிக்கவே படிக்காத மேதைகளும் உட்காருவார்கள். எனக்கு சற்றும் லாயக்குபடாதவர்கள். ஒரு சமயம் எங்கள் வகுப்பு முதன்மை ஆசிரியர் (class teacher) நான் எதோ குறும்பு செய்த காரணத்தால் என்னை கடைசி
பென்ஞ்சில் சில நாட்கள் உட்காரச் சொன்னார், அங்கே கங்கை அமரன். நான் ஒரு தர்மசங்கடத்துடனே அங்கே போனேன். கங்கை அமரன் என்னை சற்று நேரம் முறைத்து
பார்த்தான் கூடவே அவனது மூன்று அடிபொடிகளும் (பெயர் மறந்து விட்டது). "நீ எங்க gangல சேர்ரியா?" அவண் என்னிடம் கேட்ட முதல் கேள்வி,
"என்ன gang? அதுல என்ன செய்வீங்க?"
"எல்லாம் அடிதடி தான், நம்ம பசங்களுக்கு ஏதாவது ப்ராப்ளம்னா நாம போய் பசங்கள ரெண்டு தட்டு தட்டனும். உனக்கு ஏதாவது பிரச்சனைனா கூட நாங்க வருவோம்"
நான் சற்று யோசித்தேன், அவன் சொன்னது எனக்கு கொஞ்சம் interestingஆ தான் இருந்தது, இருந்தாலும் டீச்சருக்கு தெரிந்தால் என்ன செய்வார்கள் என்று யோசித்தேன்.
அவன் என் அருகில் வந்து "வெளியே நீ என் ஆளுன்னு சொன்னா ஒரு பய உன்ன தொட மாட்டான்"
நான் உடனே சரியென்றேன், ஒரு மாறுதலுக்கு படிப்பதுபதில் அடிக்கலாமே...
உடனே அவனும் மற்றவர்களும் நானும் கை குலுக்கிக்கொண்டோம். "திடீர்ன்னு வேல வரும், எப்போதும் ரெடியா இரு" சினிமா தாதாவை மிஞ்சும் அளவு அவன் சொன்னான்.
இது நடந்து ஒரு இரண்டு நாள் இருக்கும், மதிய இடைவெளியில் வழக்கம் போல் என் அம்மா கட்டி தந்த இட்லி பொடியை, வழக்கம் போல் வாழ்க்கையை நொந்து
சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன், அப்போ என்னை யாரோ முதுகில் தட்டியதுபோல் இருந்தது, திரும்பினால் கங்கை அமரன், கூட அவன் அடிபொடிகள் இரண்டு பேர்.
"கிளம்பி வா, ஒருத்தன அடிக்கனும்"
எனக்கு ஒரே பரபரப்பாய் இருந்தது, முதன் முதலாய் ஒருத்தனை அட்களோடு சேர்ந்து அடிக்கபோகிறோம், அனேகமாய் அது மற்ற செக்ஷனில் படிக்கும் பயன்களாய் இருக்க வேண்டும், இல்லையேல் ஏதாவது ஒரு நோஞ்சான் சீனியராய் இருக்க வேண்டும். எப்படி இருந்தாலும் நாளைக்கு பள்ளி முழுவதும் இது தலைப்புச் செய்தியாக போகிறது.
நல்ல வேளையாய் கையில் ஆயுதம் ஏதும் எடுக்காமல் சென்றோம். அப்போது என் பள்ளியில், ஒரு உள் விளையாட்டு அரங்கம் கட்டிக்கொண்டு இருந்தார்கள். அந்த பக்கம் கங்கை அமரன் சென்றான். நிறைய பையன்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் எங்களை போல் தோன்றும் பையன்களை பார்த்து "இவனா...இல்லை இவனா" என ஆள் பார்த்துக்கொண்டே கங்கை அமரனை பின் தொடர்ந்து கொண்டே இருந்தேன்.
"அதோ அங்க இருக்கான்" திடீரென கங்கை அமரன் ஒரு பக்கம் பார்த்து சொன்னான். அங்கே எங்களை போல யாரும் இல்லை. யாரை சொல்கிறான், எனக்கு ஒரே குழப்பம். அவனை பின்னே சென்று கொண்டிருந்தேன், அங்கே நாலாவது படிக்கும் இரு சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். எங்களை பார்த்தடும் இரண்டு பேரும் ஒட்டம் பிடித்தனர். அதில் ஒருவனை எங்கள் "gang leader" விரட்டிப்பிடித்தான்.
"ஏண்டா ஜான்சன் தம்பிய அடிச்ச"
அவன் அழுதுகொண்டே "விடு என்ன, நான் டீச்சர் கிட்ட சொல்லுவேன்"
அவன் கன்னத்தில் லேசாய் கங்கை அமரன் அடித்தான். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
"ரஞ்தித், நீயும் ஒன்னு போடு". நான் அவன் மற்ற கன்னத்தை அறைந்தேன்.
"கமான், சீக்கிரம் க்ளாசுக்கு ஓடு, யாராவது பார்க்க போறாங்க" கங்கை அமரன் ஓட ஆரம்பித்தான், அவன் பின்னே நான். தூரத்தில் அந்த சிறுவன் கீழே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தான். அவனை பார்த்தபடியே நான் வகுப்புக்குள் ஒட்டம் பிடித்தேன்.
அதற்கு பிறகு நான் gang வேலைகள் எதுவும் செய்யவில்லை, ஒரு வாரம் பிறகு என் டீச்சர் என்னை திரும்பவும் முதல் பென்ஞ்சிற்கு மாற்றினார்கள்.
சில நேரங்கள் சில ஞாபகங்கள் (சிலப்பதிகாரத்தில் ஆங்கிலம்)
நான் ஒன்பதாவது படிக்கும் போது, தமிழில் சிலப்பதிகாரப் பாடல் ஒன்று (கண்ணகி நீதி கேட்கும் படலம்) உண்டு. பலர் அதை படித்திருக்கலாம்,
'தேரா மன்னா செப்புவடுதையேன்...' எனத் தொடங்கும் பாடல்.
அப்பொழுது எனக்கு திரு.ராஜரத்தினம் என்பவர் தமிழ் ஆசிரியராக இருந்தார். மிக வேடிக்கையான மனிதர், கொஞ்சம் கண்டிப்பானவரும் கூட. அவர் தமிழ் சொல்லிக்
கொடுக்கும் அழகே ஒரு அழகு. அவர் இந்த
பாடலை பாடம் நடத்தும்போது ஒரு சம்பவம்.
அதில் கண்ணகி உன்மையைக் கூறி காற்சிலம்பினை உடைத்து அதில்
மாணிக்க கற்கள் தெறிப்பதை கண்ட பாண்டிய மன்னன்
'மண்பதைக் காக்கும் தென்புதற்க் காவல்
என்முதற் பிழைத்தது யானோ அரசன் யானே கள்வன்' என்று கூறி உயிர் துறப்பான்.
இதன் பொருள், 'இந்த உலகத்தை காக்கும் தென்னகத்து பாண்டிய அரசு என்னால் பிழை செய்தது, இனி நான் அரசன் அல்ல நான் ஒரு கள்வன்',
இது தான் கடைசியில் வரும் 'யானோ அரசன் யானே கள்வன்'. இதை சொல்லும்போது, எங்கள் ஆசிரியர், இந்த அடியில் இளங்கோவடிகள் ஆங்கிலத்தை கயாள்கிறார் என்றார். எங்களுக்கோ ஒரே ஆச்சர்யம் 'அது எப்படி சார்' என நான் கேட்டேன். அவர் நேரே சென்று கரும்பலகையில்
'யான்NO அரசன் யான்A கள்வன்' என ஒளிந்திருப்பதை பாருங்கள் என்றார். எங்களுக்கு ஒரே சிரிப்பு, கூட அவரும் சிரித்தார்.
அவர் சாதரணமாக அந்த செய்யுளை நடத்தி இருந்தால் எனக்கு அன்றே சிலப்பதிகாரம் மறந்திருக்கும். ஆனால் இந்த சம்பவத்தால் இன்றும் அந்த பாடல் ஞாபகம் இருக்கிறது.
'தேரா மன்னா செப்புவடுதையேன்...' எனத் தொடங்கும் பாடல்.
அப்பொழுது எனக்கு திரு.ராஜரத்தினம் என்பவர் தமிழ் ஆசிரியராக இருந்தார். மிக வேடிக்கையான மனிதர், கொஞ்சம் கண்டிப்பானவரும் கூட. அவர் தமிழ் சொல்லிக்
கொடுக்கும் அழகே ஒரு அழகு. அவர் இந்த
பாடலை பாடம் நடத்தும்போது ஒரு சம்பவம்.
அதில் கண்ணகி உன்மையைக் கூறி காற்சிலம்பினை உடைத்து அதில்
மாணிக்க கற்கள் தெறிப்பதை கண்ட பாண்டிய மன்னன்
'மண்பதைக் காக்கும் தென்புதற்க் காவல்
என்முதற் பிழைத்தது யானோ அரசன் யானே கள்வன்' என்று கூறி உயிர் துறப்பான்.
இதன் பொருள், 'இந்த உலகத்தை காக்கும் தென்னகத்து பாண்டிய அரசு என்னால் பிழை செய்தது, இனி நான் அரசன் அல்ல நான் ஒரு கள்வன்',
இது தான் கடைசியில் வரும் 'யானோ அரசன் யானே கள்வன்'. இதை சொல்லும்போது, எங்கள் ஆசிரியர், இந்த அடியில் இளங்கோவடிகள் ஆங்கிலத்தை கயாள்கிறார் என்றார். எங்களுக்கோ ஒரே ஆச்சர்யம் 'அது எப்படி சார்' என நான் கேட்டேன். அவர் நேரே சென்று கரும்பலகையில்
'யான்NO அரசன் யான்A கள்வன்' என ஒளிந்திருப்பதை பாருங்கள் என்றார். எங்களுக்கு ஒரே சிரிப்பு, கூட அவரும் சிரித்தார்.
அவர் சாதரணமாக அந்த செய்யுளை நடத்தி இருந்தால் எனக்கு அன்றே சிலப்பதிகாரம் மறந்திருக்கும். ஆனால் இந்த சம்பவத்தால் இன்றும் அந்த பாடல் ஞாபகம் இருக்கிறது.
சில நேரங்கள் சில ஞாபகங்கள்
நான் சில நேரம் என் சிறு வயது ஞாபகங்களை நினைத்து பார்ப்பதுண்டு. பல வேடிக்கைகள், வேதனைகள், சில்மிஷகங்கள் மற்றும் சிந்தனைகள். இவற்றை சுவாரஸ்யமாக ஒரு 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' போல என்னால் தொகுக்க முடியும்.
இதோ என்னால் மறக்க முடியாத என் பள்ளி பருவ நிகழ்ச்சிகளின் சில பதிவுகள். இப்படி சொல்வதன் மூலம் இது ஏதோ என் காதல் சோகங்கள் பாடும் முராரியாகவும், என் தோல்விகளை சொல்லி அழுதிடும் ஒப்பாரியாகவும் நினைத்திட வேண்டாம். முடிந்த மட்டும் சுவாரஸ்யமாக தொகுக்க முயற்சி செய்கிறேன்.
இதோ என்னால் மறக்க முடியாத என் பள்ளி பருவ நிகழ்ச்சிகளின் சில பதிவுகள். இப்படி சொல்வதன் மூலம் இது ஏதோ என் காதல் சோகங்கள் பாடும் முராரியாகவும், என் தோல்விகளை சொல்லி அழுதிடும் ஒப்பாரியாகவும் நினைத்திட வேண்டாம். முடிந்த மட்டும் சுவாரஸ்யமாக தொகுக்க முயற்சி செய்கிறேன்.
Friday, September 16, 2005
Non-deserving awards for deserving persons..
Sometime I wonder how the awards were chosen for the deserved, both in films and science. Well I am going to discuss more about films, the only point i could make for science is the Nobel prize given for Einstein. We know his famous theory is theory of relativity, but guess on what subject he got his first Nobel, it is the theory of photoelectic effect in 1905 (though I know a little about relativity, I know much about photoelectic effect).
Now lets talk about oscars, the first one should be worth discussed is the oscars for 2002, the best actor went to denzel washington for training day, now denzel is of course without doubt one of the best actors. But I was so surprised he got his first oscar for best actor in training day. I would say this film is one of his worst. The deserving actors for that year would be either sean penn for 'I am sam' or russell crowe for 'the beautiful mind'. Actually it should've been sean penn, his acting was extraordinary as a retarded man fighting for custody of his child. On the contrary denzel should have won his oscar for 'the hurricane' in 1999 (but it went to kevin spacey for 'american beauty'). It was said that denzel won the award because of the severe lobby to recognize african american actors. (halle berry, another african american actress won her best actress for 'monsters ball', truely a deserved performance)
Russell crowe too fall in the same line, he got his first oscar for 'the gladiator' in 2001. I agree gladiator is a good film and russell's acting was good, but not that extraordinary that compared to his 'the beautiful mind'. The deserving person for that year would be our own tom hanks in 'cast away'. Likewise sean penn won his first oscar for 'mystic river' in 2004. When I saw the film after the oscars I was heavily disappointed. On compared to 'I am sam' this film is no where. (I looked at the other contenders: it is johnny depp for pirates, bill murray in lost in translation, ben kingsley for house of sand and fog and jude law for cold mountain. I haven't seen house of sand and fog, but I can't see any other performance is noteworthy).
I beleive this happens every now and then. A fine example would be the case of al pacino. Many of us know his pinacle of performance would be the great 'godfather' series, but did you know he never any won oscars for godfather films (marlon won for best actor for godfather Ist part and Robert de Nero won supporting actor for IInd part). After being nominated for 11 times including god father, he finally won his only oscar for 'Scent of a woman' ( I liked this movie, al's acting in the climax school scene is too good).
Sometime it also happens at our national film awards. This year you'd known saif ali khan has won for some stupid movie. I liked his acting in 'dil chahta hai', but I seriously doubt that there is no serious acting for last year. I heard there was a tough competition between hrithik roshan and vikram, last year between 'koi mil gaya' and 'pithamagan'. What a joke, I haven't seen 'koi mil gaya' (though I have seen some songs and trailer even when I felt so hard seeing him in such role) but how come they still have him in competition after seeing pithamagan. Nowadays our national award are too politically biased. Remember anil kapoor and ravina winning national awards some year back.
Now lets talk about oscars, the first one should be worth discussed is the oscars for 2002, the best actor went to denzel washington for training day, now denzel is of course without doubt one of the best actors. But I was so surprised he got his first oscar for best actor in training day. I would say this film is one of his worst. The deserving actors for that year would be either sean penn for 'I am sam' or russell crowe for 'the beautiful mind'. Actually it should've been sean penn, his acting was extraordinary as a retarded man fighting for custody of his child. On the contrary denzel should have won his oscar for 'the hurricane' in 1999 (but it went to kevin spacey for 'american beauty'). It was said that denzel won the award because of the severe lobby to recognize african american actors. (halle berry, another african american actress won her best actress for 'monsters ball', truely a deserved performance)
Russell crowe too fall in the same line, he got his first oscar for 'the gladiator' in 2001. I agree gladiator is a good film and russell's acting was good, but not that extraordinary that compared to his 'the beautiful mind'. The deserving person for that year would be our own tom hanks in 'cast away'. Likewise sean penn won his first oscar for 'mystic river' in 2004. When I saw the film after the oscars I was heavily disappointed. On compared to 'I am sam' this film is no where. (I looked at the other contenders: it is johnny depp for pirates, bill murray in lost in translation, ben kingsley for house of sand and fog and jude law for cold mountain. I haven't seen house of sand and fog, but I can't see any other performance is noteworthy).
I beleive this happens every now and then. A fine example would be the case of al pacino. Many of us know his pinacle of performance would be the great 'godfather' series, but did you know he never any won oscars for godfather films (marlon won for best actor for godfather Ist part and Robert de Nero won supporting actor for IInd part). After being nominated for 11 times including god father, he finally won his only oscar for 'Scent of a woman' ( I liked this movie, al's acting in the climax school scene is too good).
Sometime it also happens at our national film awards. This year you'd known saif ali khan has won for some stupid movie. I liked his acting in 'dil chahta hai', but I seriously doubt that there is no serious acting for last year. I heard there was a tough competition between hrithik roshan and vikram, last year between 'koi mil gaya' and 'pithamagan'. What a joke, I haven't seen 'koi mil gaya' (though I have seen some songs and trailer even when I felt so hard seeing him in such role) but how come they still have him in competition after seeing pithamagan. Nowadays our national award are too politically biased. Remember anil kapoor and ravina winning national awards some year back.
Friday, September 09, 2005
My lyrics - 1
I love tamil film lyrics. Though i may not call myself a so called "kavinjar", at times i try to write lyrics asking my friends to suggest a situation. I am going to post those lyrics in my blogspot. You can also suggest me a situation if you'd like.
(Situation: a love duet when the lovers find themselves in a love for first time.)
(Situation: a love duet when the lovers find themselves in a love for first time.)
Tamil lyrics by vairamuthu
I am a great fan of kaviyarasu vairamuthu... he is definitely one of tamilnadu's precious. Though at times he need to succumb to commercialism of tamil cinema, he never failed to give some wonderful meaningful lyrics at chances. You can take his last lyric that won national award "Vidai kodu engal naadae" -
"udhathil punnagai pudhaithom..
uyrinai udambukkul pudaithom..
verum koodugal mattum oorvalam poginrom" what a line....
"thalayil konjam..
nenjil adhigam..
sumaigaludan selginrom" - nothing could be best for that situation...
Another classic piece of lyric i enjoyed is from the film ratchakan
"kayil midakkum kanavaa nee
kai kaal mulaitha kaatraa nee
kaiyil yaendhiyum ganakavillaiyae
..
nuraiyaal seitha silaiyaa nee" - I wonder how this man could come up with such comparisons.
In the same song, if written by another lyricist, he might have told nothing is weightless in love, but our kavinjar adds
"kaadhal thaaimai irandu mattum
baaram yenbadai ariyaadu" (Only love and motherhood doesn't know the weight)...
In the film "Indian", on telling about "anandam"s of life our kavinjar adds
"un kannaal pirarkazhudaal..
kanneerum aanandhamae" what a line.. I wonder why this lyric didn't win a national.
"udhathil punnagai pudhaithom..
uyrinai udambukkul pudaithom..
verum koodugal mattum oorvalam poginrom" what a line....
"thalayil konjam..
nenjil adhigam..
sumaigaludan selginrom" - nothing could be best for that situation...
Another classic piece of lyric i enjoyed is from the film ratchakan
"kayil midakkum kanavaa nee
kai kaal mulaitha kaatraa nee
kaiyil yaendhiyum ganakavillaiyae
..
nuraiyaal seitha silaiyaa nee" - I wonder how this man could come up with such comparisons.
In the same song, if written by another lyricist, he might have told nothing is weightless in love, but our kavinjar adds
"kaadhal thaaimai irandu mattum
baaram yenbadai ariyaadu" (Only love and motherhood doesn't know the weight)...
In the film "Indian", on telling about "anandam"s of life our kavinjar adds
"un kannaal pirarkazhudaal..
kanneerum aanandhamae" what a line.. I wonder why this lyric didn't win a national.
Subscribe to:
Posts (Atom)